திங்கள், 20 ஏப்ரல், 2020

ஆண் குழந்தை தான் பிறக்க வேண்டும்


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு...

அன்பிற்கினிய அல்லாஹ்வின் நல்லடியார்களே.....

நிறைமாத கர்பிணியான ஒரு பெண்ணை அக்கம் பக்கத்தினரால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது. உடனே... அவளின் கணவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
 அவனும் உடனே வேலையை முடித்து விட்டு வேக வேகமாக இறைவனிடம் பிரார்த்தனை செய்வதற்கு  ஓடினான்.

இறைவனிடம்  மனமுருகி வேண்டினான். இறைவன் அவன் முன் தோன்றி உன் பிரார்த்தனை என்ன என்னவென்று என்னிடம் சொல் நான் நிறைவேற்றி வைக்கிறேன். ஆனால் ஒரு கண்டீசன். அதற்கு கைமாறாக நீ நான் சொல்வதை கேட்க வேண்டும் என்றான் இறைவன்.


இறைவனின் கட்டளையை ஏற்றுக்கொண்டு அவன் தன் மனதில் உள்ள வேண்டுதலை இறைவனிடம் கூறினான். அது என்ன வேண்டுதல் என்றால் " என் மனைவிக்கு ஆண் குழந்தை தான் பிறக்க வேண்டும் பெண் குழந்தை வேண்டாம் " என்று வேண்டிக் கொண்டான்.இறைவனும் அவனின் வேண்டுகோளை நிறைவேற்றினான்.

இறைவா.... இப்போது உனது  வேண்டுகோள் என்னவென்று என்னிடம் கூறு என அவன் கேட்டான். எனது வேண்டுகோளை காலம் வரும்பொழுது கேட்கிறேன் என்றான் இறைவன்.


சுமார் இருபத்து ஐந்து வருடங்கள் கழித்து அவனின் கனவில் இறைவன் தோன்றி தன் வேண்டுகோளை வைத்தான். இறைவன் கேட்ட வேண்டுகோள் என்னவென்றால். அவனுடைய மகன் திருமணத்தின் பொழுதுபெண் வீட்டாரிடம் இருந்து எந்த வரதட்சனையும் கேட்கக் கூடாது அந்த பெண்ணுக்கு நீ வரதட்சணை கொடுத்து உன் மருமகளாக ஏற்றுகொள்ள வேண்டும் என்றான் இறைவன்

இதை கேட்டு அதிர்ந்து போனான் அவன். பெண் பிள்ளை பிறந்தால் வரதட்சணை தரவேண்டுமே என்று தான் உன்னிடம் ஆண் பிள்ளை கேட்டேன்கேட்டது போல் ஆண் பிள்ளையை கொடுத்துவிட்டு இப்படி ஒரு பாரத்தை என் தலையில் சுமத்துகிறாயே இறைவா என்று கதறினான். 

அன்பிற்கினிய அல்லாஹ்வின் நல்லடியார்களே....

உன்னை சுமக்க ஒரு பெண் வேண்டும்
நீ திருமணம் செய்துகொள்ள ஒரு பெண் வேண்டும்
உன்னை அரவணைக்க ஒரு பெண் வேண்டும்
உன்னை நினைத்தே உனக்காக உருக ஒரு பெண் வேண்டும்
உன் மகனுக்கு திருமணம் செய்து வைக்க ஒரு பெண் வேண்டும்
" உன் வாழ்க்கையில் பங்கு கொண்ட இத்தனை பெண்களும் உனக்கு பாரமாக தெரியவில்லை ஆனால் ஒன்றும் அறியா அந்த பெண் சிசு மட்டும் எப்படி உனக்கு பாரமானது ?


நீ எவளவு வரதட்சணை கேட்டாலும் பெண்ணை பெற்றவர்கள் தரவேண்டும் ஆனால் உன்னிடம் யாரும் கேட்கக் கூடாது என்று நீ நினைப்பது எந்த விதத்தில் நியாயம் ?

அன்பிற்குறியவர்களே.......

"வரதட்சணை கேட்பதை நிறுத்தினாலே போதும் பெண் பிள்ளை யாருக்கும்  பாரமாகத் தெரியாது.

எனக்கு இங்கு பேச வாய்ப்பளித்த எனது ஹஸ்ரத் அவர்களுக்கும் ஜமாத்தார்களுக்கும் நன்று கூறி விடை பெறுகிறேன்

அஸ்ஸலாமு அலைக்கும். வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு.

மேலும் விபரங்களுக்கு.

A.காதிர் மீரான் மஸ்லஹி. 
ஜாமிஆ பள்ளிவாசல்.
அசநெல்லி குப்பம்.
அரக்கோணம்.
9952129706.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக