வெள்ளி, 2 டிசம்பர், 2022

துஆவின் வலிமை.

 

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

நஹ்மதுஹு வநுஸல்லி அலா ரசூலிஹில் கரீம் அம்மா பஃத்.

ஃபகத் காலல்லாலாஹு தஆலா ஃபில் குர்ஆனில் மஜீத் வல் ஃபுர்கானில் மஜீத் அவூது பில்லாஹி மினஷ் ஷெய்தானிர் ரஜீம். பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

يَسْأَلُهُ مَنْ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ ۚ كُلَّ يَوْمٍ هُوَ فِي شَأْنٍ

 

நமது உயிரினும் கண்மணி நாயகம் ஸல் அவர்கள் மீதும் அவர்களின் தோழர்கள் மீதும் நாதாக்கள் நல்லோர்கள் அனைவரின் மீதும் குறிப்பாக இந்த மீலாது /  எங்கள் மதரஸாவின் ஆண்டு விழா நிகழ்வில் பங்கொண்டு அல்லாஹ்வையும் ரசூலையும் நினைவு கூர்ந்து நன்மையை அடைந்து கொள்ள இங்கு வந்திருக்கும் நம் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் அன்பும் அருளும் என்றும் நின்று நிலவட்டுமாக. ஆமீன்.

எனது பெயர் .................................................

நான் இங்கு துஆவின் வலிமை.தலைப்பில் பேச வந்திருக்கிறேன்.

 

அல்லாஹ்வின் நல்லடியாரகளே...

துஆ செய்வது என்பது ஒரு உலகலாவிய பழக்கம். உலகில் வாழும் ஒவ்வொரு உயிரினமும் அல்லாஹ்விடம் துஆ கேட்கின்றன.

 

குர்ஆனில் சூரா ரஹ்மானில் அல்லாஹ் கூறுகிறான்.

يَسْأَلُهُ مَنْ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ ۚ كُلَّ يَوْمٍ هُوَ فِي شَأْنٍ

"வானங்களிலும் பூமியிலும் வாழும் ஒவ்வொன்றும் அல்லாஹ்விடம் துஆ கேட்கின்றன அல்லாஹ்விடமே உதவி கேட்கின்றன அல்லாஹ்வை துதிக்கின்றன அல்லாஹ்விடமே தன் தேவைகளை கேட்கின்றன". என்று அல்லாஹ் கூறுகிறான்.