சனி, 25 ஜூன், 2016

சொர்கத்தை தரும் நோன்பு.









நோன்பு இருப்பதன் மூலம் பசியுடன் இருக்க வேண்டும் என்று சொல்லி இஸ்லாம் மனிதர்களை சிரமப்படுத்தவில்லை, அடிமைப்படுத்தவும் இல்லை. இஸ்லாம் எதை சொன்னாலும் அதில் ஓர் அழகிய அர்த்தம் இருக்கும்.

புதன், 22 ஜூன், 2016

ஏற்றம் தரும் ஏழை வரி...









وَمَا آتَيْتُم مِّن رِّبًا لِّيَرْبُوَ فِي أَمْوَالِ النَّاسِ فَلَا يَرْبُو عِندَ اللَّهِ ۖ وَمَا آتَيْتُم مِّن زَكَاةٍ تُرِيدُونَ وَجْهَ اللَّهِ فَأُولَٰئِكَ هُمُ الْمُضْعِفُونَ
30:39. (மற்ற) மனிதர்களுடைய முதல்களுடன் சேர்ந்து (உங்கள் செல்வம்) பெருகும் பொருட்டு நீங்கள் வட்டிக்கு விடுவீர்களானால், அது அல்லாஹ்விடம் பெருகுவதில்லை; ஆனால் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி ஜகாத்தாக எதை நீங்கள் கொடுக்கிறீர்களோ, (அது அல்லாஹ்விடத்தில் பெருகும். அவ்வாறு கொடுப்போர் தாம் (தம் நற்கூலியை) இரட்டிப்பாக்கிக் கொண்டவர்களாவார்கள்.

திங்கள், 20 ஜூன், 2016

கூடி இருந்தால் கோடி நன்மை.










ஜமாத் - எனும் கூட்டமைப்புடன் செயல்படுவதை இஸ்லாம் மிகவும் விரும்புகிறது, வலியுறுத்துகிறது. கூட்டுத் தொழுகை, கூட்டு சஹர், கூட்டு இப்தார், கூட்டுத் தராவீஹ், கூட்டுக் குர்பானி, ஜகாத் கூட்டு, கூட்டு ஹஜ், கூட்டுத் துஆ... என எங்கு திரும்பினாலும் அங்கு கூட்டமைப்பு இருப்பது நம்மை மெய்சிலிக்க வைக்கிறது.

வெள்ளி, 17 ஜூன், 2016

சோதனைகளை தடுக்கும் பிரார்த்தனை.









மனிதனுக்கு மிகமிக அவசியமான ஒன்று துஆ எனும் பிரார்த்தனை. துன்பங்களை துடைத்தெறியும் மகாசக்தி நமது பிரார்த்தனைகளுக்கு உண்டு. அதற்கு மிகச் சரியான காலம் தான் இந்த ரமலான்.
சஹர் நேரம், ஐங்காலத் தொழுகைகளின் நேரம், லுஹா (முன்பகல்) தொழுகை நேரம், தஹஜ்ஜத் தொழுகை என ஒரு நோன்பாளிக்கு முழு நேரமும் பிரார்த்தனை ஏற்கப்படும் நேரம் தான். எனவே இந்த நேரங்களை நாம் ஒரு போதும் வீணாக்கழித்து விடக் கூடாது.

சனி, 11 ஜூன், 2016

உடலும் உள்ளமும் நலம் பெற...








فَمَن شَهِدَ مِنكُمُ الشَّهْرَ فَلْيَصُمْهُ ۖ وَمَن كَانَ مَرِيضًا أَوْ عَلَىٰ سَفَرٍ فَعِدَّةٌ مِّنْ أَيَّامٍ أُخَرَ ۗ يُرِيدُ اللَّهُ بِكُمُ الْيُسْرَ وَلَا يُرِيدُ بِكُمُ الْعُسْرَ

ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும்; எனினும் எவர் நோயாளியாகவோ அல்லது பயணத்திலோ இருக்கிறாரோ (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) பின்வரும் நாட்களில் நோற்க வேண்டும்; அல்லாஹ் உங்களுக்கு இலகுவானதை நாடுகிறானே தவிர, உங்களுக்கு சிரமமானதை அவன் நாடவில்லை;