புதன், 25 நவம்பர், 2015

அல்லாஹ்வும் நம்மோடு இருக்கிறான்.







சிறுவனை அழைத்துக்கொண்டு அவனது தந்தை ஒரு காட்டிற்குச் சென்றார். அப்போது மகனுக்கு ஒரு சவாலை முன்வைத்தார். ''மகனே, இப்போது உனக்கு முன் ஒரு பெரிய சவால் உள்ளது. அதில் வெற்றி பெற்றால், நீ பெரிய வீரனாகி விடுவாய். இன்று இரவு முழுவதும் நீ தனியாக இந்தக் காட்டிலேயே இருக்க வேண்டும். உன் கண்கள் கட்டப்படும். ஆனாலும் நீ பயப்படக்கூடாது;
ஒரு ஊரில் ஒரு நிலச்சுவான்தார் இருக்கிறார் அவரிடம் ஏரளாமான செல்வம், பணம், பொருள் இருக்கிறது அந்த ஊரில் நிலங்களுக்கு சொந்தக்காரார், அந்த ஊரில் கிட்டத்தட்ட முக்கால் வாசிப்பேர் இவருடைய பண்ணையில் தான் வேலை பார்க்கிறார்கள் இவரிடம் கூலி வாங்கி தான் ஜீவனம் செய்கிறார்கள்.
ஆனால் இப்படிபட்ட செல்வந்தருக்கு மனதில் நிம்மதியில்லை

உலகில் வாழும் தேவதை.


பிரசவிக்கப் போகும் ஒரு பெண்ணின் பிரசவத்திற்கான ஏற்பாடுகள் நடந்துக் கொண்டிருந்தன.
உறவினர்கள் எல்லாம் காத்திருக்க அந்த தாய் வலியில் கதறிக் கொண்டிருந்தாள்.


வயிற்றிலிருக்கும் குழந்தைக்கு வழக்கத்திற்கு மாறன சத்தம் ஏதேதோ கேட்டது நமக்கு என்ன நடக்கப் போகிறதோ என்ற குழப்பம் குழந்தையின் மனதில் ஓடியது,

திங்கள், 23 நவம்பர், 2015

திருக்குர்ஆன் கேள்வி பதில்கள்





1) திருக்குர்ஆன் ஓதத் துவங்கும் போது என்ன கூற வேண்டும்?
அஊது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம் என்றும் (16:98) மற்றும் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர்ரஹீம் என்றும் (96:1...) கூற வேண்டும்.


2) திருக்குர்ஆன் யாரிடமிருந்து இறங்கியது?
அல்லாஹ்விடமிருந்து இறங்கியது




3) திருக்குர்ஆன் யார் மூலம் இறங்கியது?
ஹழ்ரத் ஜிப்ரயீல் (அலை) மூலம் இறங்கியது.


4) திருக்குர்ஆன் யாருக்கு இறங்கியது?
ஹழ்ரத்முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு இறங்கியது


5) திருக்குர்ஆன் எந்த இடத்தில் இறங்கியது?
ஹிரா என்னும் மலைக் குகையில் இறங்கியது


6) திருக்குர்ஆன் எந்த மொழியில் இறங்கியது?
அரபி மொழியில் இறங்கியது.


7) திருக்குர்ஆனில் முதன்முதலாக இறங்கிய வசனம் எது?
இக்ரஹ் என்னும் வசனம் ஆகும்.


8) திருக்குர்ஆன் எதற்காக வேண்டி இறங்கியது?
மனித, ஜின் வர்க்கத்திற்கு நேர்வழி காட்டுவதற்காகஇறங்கியது.


9) திருக்குர்ஆனின் திருப்பணி என்ன?
நன்மையை ஏவுவதும், தீமையை தடுப்பதும் ஆகும்.


10) திருக்குர்ஆனில் அல்லாஹ் என்ற வார்த்தை எத்தனை இடங்களில் வருகிறது?.
2698 இடங்களில்


திங்கள், 16 நவம்பர், 2015

பேசுவதில் கவனம்





فَقُوْلَا لَهٗ قَوْلًا لَّيِّنًا لَّعَلَّهٗ يَتَذَكَّرُ اَوْ يَخْشٰى‏ 

20:44. நீங்கள் இருவரும் அவனிடம் (சாந்தமாக) மென்மையான சொல்லால் சொல்லுங்கள்; அதனால், அவன் நல்லுபதேசம் பெறலாம்; அல்லது அச்சம் கொள்ளலாம்.

பேசாதீங்க!! பேச்சில் பலவிதம்………. சிலர் சிரிக்க சிரிக்க பேசுவர்! சிலர் மற்றவர்களை சிரிக்க வைக்க பேசுவர்! சிலர் சிந்தித்து பேசுவர்! சிலர் சிந்திக்க வைக்க பேசுவர்! சிலர் பேசினால் காதில் இரத்தம் கசியும்! சிலர் பேசினால் காதில் தேனும் பாயும்! சிலர் அன்பாக பேசுவர்! சிலர் பண்பாக பேசுவர்! சிலர் பாசமாக பேசுவர்! சிலர் கவிதையாய் பேசுவர்! சிலர் கோபமாக பேசுவர்! சிலர் வெறுப்பாக பேசுவர்! சிலர் வியாக்கியானம் பேசுவர்! சிலர் ரகசியம் பேசுவர்! சிலர் கதை பேசுவர்! சிலர் காரியத்துக்காக பேசுவர்! சிலர் உண்மையாக பேசுவர்! சிலர் பொய் மட்டுமே பேசுவர்! சிலர் புறம் பேசுவர்! சிலர் நேர்மையாக பேசுவர்! சிலர் வெகுளித்தனமாக பேசுவர்! சிலர் தற்புகழ்ச்சி பேசுவர்! சிலர் வியாபாரத்திற்காக பேசுவர்! சிலர் அடுத்தவரின் மகிழ்ச்சிக்காக பேசுவர்! சிலர் தன் மகிழ்ச்சிக்காக மற்றவர்களை பேசியே புண்படுத்துவார்கள்! சிலர் பேசுவது அவர்களுக்கும் புரியாது, மற்றவர்களுக்கும் புரியாது! எது எப்படியோ பேச வேண்டும்! பேசாமல் இருக்க முடியாது! இப்படி பேச்சும், பேசுபவர்களும் பலவிதம் இருக்க; சிலர் எந்த நேரத்தில், எந்த இடத்தில் யாரிடம் எப்படி பேசுவது என்று தெரியாமல் பேசி, பிரச்சனைகளில் சிக்கி விடுவர்! சிலர் அதே பேச்சால் எவ்வளவு பெரிய சிக்கலில் இருந்தும் கூட சுலபமாக விடுபடுவர்! ஆனால், ஒன்று மட்டும் நிச்சயம்! பேசுவது எப்படி என்று தெரியாமல், அதைக் கற்காமல், சபை நாகரிகம் அறியாமல் பேசுவோரின் பேச்சை நாம் ரசிப்போம்! அது யாரென்றால், குழந்தைதான்! மழலை பேச்சுக்கு மயங்காதோர் இவ்வுலகில் இல்லை! ஒரு குழந்தை பேசுவதைக் கேட்டால் போதும், அனைத்து துன்பங்களும் பறந்து விடும், குழந்தைகளுக்கு மட்டுமே அந்த சக்தி உண்டு. அவர்கள் பேச்சு கேட்க கேட்க தெவிட்டாத இன்பம் பயக்கும்! பேசும் கலை மிகச்சிறந்த கலை! அதைக் கற்றுணர்ந்து, எந்த இடத்தில் எப்படி பேச வேண்டும் என்று அறிந்து பேச வேண்டும்! சூழ்நிலை உணர்ந்து புத்திசாலித்தனமாக பேசுவதே சிறந்தது!
ஆகையால் பேசுங்க! பேசுவதற்கு முன் யோசித்து பேசுங்க! புத்திசாலித்தனமாக விழிப்புணர்வோடு சூழ்நிலை அறிந்து பேசுங்க! பேசுவதற்கு முன் எத்தனை முறை வேண்டுமானாலும் யோசிக்கலாம், பேசிய பிறகு ஒன்றும் செய்ய முடியாது! கொட்டிய வார்த்தைகள் என்றுமே குப்பைகள் தான்! அதை மறவாமல் அளவோடு பேசி, ஆனந்தமாக வாழுங்கள்! உங்கள் பேச்சு மற்றவர்களை வாழ வைப்பதாக மட்டுமே இருக்க வேண்டும்!! இல்லையேல்……………….!!!

புதன், 11 நவம்பர், 2015

அவர்கள் உங்களுக்கு ஆடை களைப் போன்றவர்கள்,





கணவன் மனைவி உறவு மனித வாழ்க்கையின் மற்றெல்லா உறவுகளையும் விட மிக ஆச்சர்யம் தரத்தக்க உறவு எனலாம். யார் யாருக்கோ பிறந்தவர்கள் திருமணத்திற்குப் பிறகு திடீரென்று இணைந்த பின்னர் இருவரது உள்ளங்களிலும் பெருக்கெடுக்கும் காதல், பிரியம், நெருக்கம், தாம்பத்யம், கருணை, கனிவு, பரிவு, விட்டுக் கொடுத்தல் முதலானவற்றிற்கு நிகரில்லை. அதற்கான காரணம் என்ன என்றும் நாம் அறிய முனைவதில்லை.


செவ்வாய், 3 நவம்பர், 2015

" மகிழ வைத்து மகிழுங்கள் "




எப்படி என் மகிழ்ச்சி ஒரு கதை வடிவில் சொல்கிறேன் :
ஒரு அழகான பெரிய பணக்காரியான அதிக மதிப்புள்ள உடை உடுத்தி ஆடம்பரத்தில் வாழும் ஒரு பெண்.
ஒரு கவுன்சிலிங் செய்பவரை காணச்ச்சென்றாள்