திங்கள், 9 பிப்ரவரி, 2026

உன்னுடைய எதிரியைத் தெரிந்து கொள்.

 


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு.


நஹ்மதுஹு வநுஸல்லி அலா ரசூலிஹில் கரீம் அம்மா பஃத். பகத் காலல்லாஹு தஆலா ஃபில்குர்ஆனில் அழீம். வல்ஃபுர்கானில் மஜீத். அவூதுபில்லாஹி மினஷ் ஷெய்தானிர் ரஜீம். பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.



எல்லா புகழும் அல்லாஹ் ஒருவன் மீதே நிலவட்டுமாக. நபிகள் நாயகம் நற்குணத்தின் தாயகம் கண்மணி நாயகம் ஸல் அவர்கள் மீதும் அவர்களின் தோழர்கள் மீதும் நாதாக்கள் நல்லோர்கள் மீதும் குறிப்பாக இவ்விழாவிற்கு வருகை தந்திருக்கும் நம் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் அன்பும் அருளும் என்றும் நின்று நிலவட்டுமாக. ஆமீன்.


எனது பெயர் ................................................


நான் இங்கு ஷைத்தானின் பழக்கவழக்கங்களைப் பற்றி பேச வந்துள்ளேன்.

10. காரணம்.

 


இமாம் இப்ராஹீம் இப்னு அத்ஹம்.


பஸராவின் கடைவீதியை கடந்து சென்றபோது மக்கள் எல்லோரும் அவரிடம் ஒன்றுகூடி அபூ இஸ்ஹாக் அவர்களே! நாங்கள் துஆ செய்கிறோம் ஆனால் எங்களுக்கு பதில் கிடைப்பதில்லயே ஏன்.?! என வினவினார்கள்.


அதற்கு இமாம் அவர்கள் கூறினார்கள் :  


உங்களது உள்ளங்கள் 10 காரணங்களால் மரணித்து விட்டது. 


அதுவவென்ன என்று மக்கள் கேட்டனர்.?!

சனி, 7 பிப்ரவரி, 2026

பழிக்கு பழி.

 


தென் ஆப்பிரிக்க முன்னாள் அதிபர் திரு.நெல்சன் மண்டேலா கூறியது:

நீண்ட நெடிய போராட்டத்திற்குப் பிறகு, நான் ஜனாதிபதியான பின் ஒருநாள் நான் எனது முதல் கட்ட பாதுகாப்புப் படையினருடன் நகரத்தில் உள்ள ஒரு உணவகத்துக்குச் சென்றிருந்தேன். 

அங்கு ஒரு உணவகத்தில் எல்லோரும் அமர்ந்தோம். அவரவர் தமக்கு விரும்பிய உணவுக்கு ஆர்டர் கொடுத்து விட்டு அமர்ந்திருந்தோம். அப்போது எனக்கு எதிர் மேசையை கவனித்தேன். ஒருவர் தனியாக உணவுக்காகக் காத்திருந்தார்.. எனது படைவீரனை அனுப்பி, அவரை எம்முடன் வந்து ஒன்றாக உணவருந்தும் படி சொன்னேன். அவரும் தனது உணவுடன் எமது வட்டத்தில் வந்து அமர்ந்து கொண்டார்.. எல்லோரும் உண்டு முடிய அவரும் புறப்பட்டார்.

வியாழன், 5 பிப்ரவரி, 2026

தாய், தந்தை வசிக்கும் இல்லம்

 


 

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி தஆலா வபரக்காத்துஹூ...

எனது பெயர்.......

நமது தாய் தந்தை இருக்கும் இல்லத்தின் அருமையை சொல்ல நான் இங்கு வந்துள்ளேன்.

நமது தாய் தந்தை இருக்கும் இல்லம் என்பது எப்படிப்பட்டது என்று உங்களுக்குத் தெரியுமா...?


அழைக்கப்படாமலேயே நீங்கள் பல முறை செல்லக்கூடிய ஒரே இல்லம் இது.


  கதவைத் திறந்து கொண்டு எவ்வித தயக்கமின்றி உள்ளே செல்லக்கூடிய ஒரே இல்லம்.


உங்களைப் பார்க்கும் வரை வாசலையே பார்க்கும் அன்பான கண்கள் கொண்ட இல்லம்.

வியாழன், 20 பிப்ரவரி, 2025

ரமளானை திட்டமிடுவோம்.

 


🌹🌹🌹꧁༼ ﷽ ༽ ꧂🌹🌹🌹

﴿یَـٰۤأَیُّهَا ٱلَّذِینَ ءَامَنُوا۟ كُتِبَ عَلَیۡكُمُ ٱلصِّیَامُ كَمَا كُتِبَ عَلَى ٱلَّذِینَ مِن قَبۡلِكُمۡ لَعَلَّكُمۡ تَتَّقُونَ﴾ 


[البقرة ١٨٣]


ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது; (அதன் மூலம்) நீங்கள் இறையச்சமுடையோர் ஆகலாம்

(அல்குர்ஆன் : 2:183)

எந்த ஒரு செயலையும் திட்டமிட்டு செயல்பட்டால் அந்த காரியம் நல்லபடியாக முடியும் என்ற அடிப்படையில் வருகிற ரமளான் மாதத்தில் நாம் திட்டமிட்டு அமல்களை செய்வோம். நம்முடைய முன்னோர்கள் ரமளான் மாதத்தை எப்படி பயன்படுத்தினார்களோ அதே போன்று நாமும் பயன்படுத்த வேண்டும். 

புதன், 19 பிப்ரவரி, 2025

அல்லாஹ்.


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

எனது பெயர்.......

நான் இங்கு அல்லாஹ் யார் அவன் எப்படிப்பட்டவன் என்பதை பற்றி சொல்ல இங்கு வந்துள்ளேன்.

அன்பிற்கினிய அல்லாஹ்வின் நல்லடியார்களே....

அல்லாஹ் ஒருவன், 

அவன் தனித்தவன், 

அல்லாஹ் மட்டுமே வணக்கத்திற்குத் தகுதியானவன்.

அல்லாஹ்வுக்கு எந்த கூட்டாளியும் இல்லை.

அல்லாஹ் எங்கும் எப்பொழுதும் இருக்கின்றான்.

அல்லாஹ் எல்லாவற்றையும் அறிகின்றான்.

அல்லாஹ் எந்தக் குறையும் இல்லாதவன்.

அல்லாஹ் பரிசுத்தமானவன்.

அல்லாஹ் நம்மைப் படைத்து, உயிர் கொடுத்து, வாழச் செய்கிறவன்.

அவனே நம்மை மரணிக்கச் செய்கிறான்.

அல்லாஹ் உண்ணுவதோ, குடிப்பதோ,உறங்குவதோ இல்லை.

அல்லாஹ்வுக்கு தாய் தந்தை,மனைவி, குழந்தை இல்லை.

அல்லாஹ்வுக்கு எந்த தேவையுமில்லை.

நாம்தான் அவனிடம் தேவை உள்ளவர்கள் 

உருவம் இல்லா ஒப்பற்ற இறைவன் அவன்தான் அல்லாஹ்.


அப்படிப்பட்ட அல்லாஹ்வை என்றும் எங்கும் எப்போதும் மறக்காதவர்களாக நம் அனைவர் களையும் அல்லாஹ் வாழச் செய்வானாக.


பழைய குறிப்புகள் வாசிக்க 👇🏻 கிளிக் செய்யவும்.

மதரஸா மாணவர்களுக்கான மேடை நிகழ்ச்சிகள்.