வியாழன், 13 ஆகஸ்ட், 2026

நபி நேசமே நம் சுவாசம்

 


நபி நேசமே நம் சுவாசம் 


الْحَمْدُ لِلَّهِ الَّذِي هَدَانَا لِهَذَا وَمَا كُنَّا لِنَهْتَدِيَ لَوْلَا أَنْ هَدَانَا اللَّهُ،

وَالصَّلَاةُ وَالسَّلَامُ عَلَى سَيِّدِنَا وَنَبِيِّنَا مُحَمَّدٍ الَّذِي أَرْسَلَهُ اللَّهُ رَحْمَةً لِلْعَالَمِينَ،

وَبَشِيرًا وَنَذِيرًا، وَدَاعِيًا إِلَى اللَّهِ بِإِذْنِهِ وَسِرَاجًا مُنِيرًا،

وَعَلَى آلِهِ وَأَصْحَابِهِ الَّذِينَ جَعَلُوا حُبَّهُ شِعَارَهُمْ وَسُنَّتَهُ دِثَارَهُمْ


أَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ - بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

قُلْ إِن كَانَ آبَاؤُكُمْ وَأَبْنَاؤُكُمْ وَإِخْوَانُكُمْ وَأَزْوَاجُكُمْ وَعَشِيرَتُكُمْ وَأَمْوَالٌ اقْتَرَفْتُمُوهَا وَتِجَارَةٌ تَخْشَوْنَ كَسَادَهَا وَمَسَاكِنُ تَرْضَوْنَهَا أَحَبَّ إِلَيْكُم مِّنَ اللَّهِ وَرَسُولِهِ وَجِهَادٍ فِي سَبِيلِهِ فَتَرَبَّصُوا حَتَّىٰ يَأْتِيَ اللَّهُ بِأَمْرِهِ

  

أَدِّبُوا أَوْلَادَكُمْ عَلَى ثَلَاثِ خِصَالٍ: حُبِّ نَبِيِّكُمْ، وَحُبِّ أَهْلِ بَيْتِهِ، وَقِرَاءَةِ الْقُرْآنِ


அல்லாஹ்வின் பேரருளால், நம் அனைவரின் இதயங்களுக்கும் மகிழ்ச்சியளிக்கும் "ரபீஉல் அவ்வல்" எனும் வசந்த காலம் நம் வாசற்படியில் வந்து நின்றிருக்கிறது!


இன்ஷா அல்லாஹ் இன்று இரவு முதல் ரபீஉல் அவ்வல் பிறை 1 


ரபீஉல் அவ்வல் என்றாலே அகிலத்திற்கு அருட்கொடையாக வந்த அண்ணல் நபியின் நினைவுகள் பூக்கும் காலம்!


இறைநம்பிக்கையாளர்களின் இதயங்களில் ஈமானிய உணர்வு பீறிட்டெழும் காலம்!


சுவாசம் நின்றுபோனால் இந்த உடலுக்கு மரணம்!

நபி நேசம் குறைந்துபோனால் நம் ஈமானுக்கு (இறைநம்பிக்கைக்கு) மரணம்!


காற்று இல்லாமல் இந்த உடலால் வாழ முடியாது; பெருமானாரின் சுன்னத்தும் வழிகாட்டுதலும் இல்லாமல் ஒரு மூஃமினான மனிதனால் மார்க்கத்தில் வாழ முடியாது!


மரங்களின் இலைகள் உதிர்ந்து, மீண்டும் புதிய பூக்களும் தளிர்களும் மலரும் காலத்தை வசந்த காலம் என்பார்கள். அதுபோல, பாவங்களாலும் உலக ஆசைகளாலும் வரண்டுபோன நம் இதயங்களுக்கு, அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நினைவுகளும் சுன்னத்துகளும் புது உயிரையும் ஈமானிய புத்துணர்ச்சியையும் தருகின்றன.


அல்லாஹு தஆலா திருக்குர்ஆனில் மிக அழகாகக் கூறுகிறான்:

وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا رَحْمَةً لِّلْعَالَمِينَ

(நபியே!) உம்மை அகிலத்தார் அனைவருக்கும் அருட்கொடையாகவே அன்றி நாம் அனுப்பவில்லை. (சூரா அல்-அன்பியா: 107)


"வசந்தங்கள் பல உண்டு இந்த மண்ணில்… ஆனால், அகிலத்தையே ஒளிமயமாக்கிய உன்னத வசந்தம் இந்த ரபீஉல் அவ்வல்!"


"காற்றை நாம் சுவாசிப்பது உடலுக்கு வாழ்வு...

நபிகளாரின் வழியை நாம் சுவாசிப்பது நம் ஈமானுக்கு வாழ்வு!”


قُلْ إِن كُنتُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللَّهُ

நிச்சயமாக நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பீர்களானால், என்னை பின்பற்றுங்கள்; அல்லாஹ் உங்களை நேசிப்பான்…”



لايُؤْمِنُ أَحَدُكُمْ حَتَّى أَكُونَ أَحَبَّ إِلَيْهِ مِنْ وَالِدِهِ وَوَلَدِهِ وَالنَّاسِ أَجْمَعِينَ

"உங்களில் ஒருவருக்கு அவருடைய தந்தை, அவருடைய பிள்ளைகள் மற்றும் உலக மக்கள் அனைவரையும் விட நான் மிகவும் அன்பானவராக ஆகும் வரை அவர் முழுமையான மூஃமினாக (இறைநம்பிக்கையாளராக) ஆக முடியாது. (நூல்: புகாரி, முஸ்லிம்)


ஸஹாபாக்கள் அந்த அளவு நேசம் வைத்து இருந்தார்கள் 


உயிரை நபியை நேசித்த ஸஹாபாக்கள் 

உஹுத் போரில் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைக் காப்பதற்காகச் சான்றோர்களான நபித்தோழர்கள் புரிந்த வீரமும் தியாகமும் மனித வரலாற்றில் ஈடற்ற ஒன்றாகும். 


ஹிஜ்ரி 3-ஆம் ஆண்டு உஹுத் மலையடிவாரத்தில் நடைபெற்ற இந்தப் போரில், தொடக்கத்தில் முஸ்லிம்களுக்கே வெற்றி சாத்தியமானது. ஆனால், மலையிடுக்கில் அமைக்கப்பட்டிருந்த அம்பெய்யும் படையினர் நபிகளாரின் கட்டளையை மறந்துத் தங்களின் இடங்களை விட்டு நகர்ந்ததால், எதிரிகளின் குதிரைப்படை பின்புறமாக வந்து திடீர் தாக்குதல் நடத்தியது.


முஸ்லிம் படையில் பெரும் குழப்பம் நிலவியது. "நபிகளார் ஷஹீதாக்கப்பட்டு விட்டார்கள்" என்ற வதந்தியும் பரவியது. ஆனால், அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வெகுசில தோழர்களுடன் களத்தில் உறுதியாக நின்று கொண்டிருந்தார்கள். இதையறிந்த எதிரிப்படை, நபிகளாரைக் குறிவைத்து அனைத்துக் கோணங்களிலிருந்தும் தங்களின் தாக்குதலைத் தீவிரப்படுத்தியது.


உடலையே கேடயமாக்கிய அபூ துஜானா (ரலி)


எதிரிகள் எய்த அம்புகளும் வீசிய ஈட்டிகளும் நபிகளாரின் மீது பாய முற்பட்ட அந்த இக்கட்டான தருணத்தில், ஹழ்ரத் அபூ துஜானா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் நபிகளாருக்கு முன்னால் வந்து நின்றார்கள்.

 * அவர் அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குச் சிறு காயமும் பட கூடாது என்பதற்காகத் தம் உடலையே ஒரு கேடயமாக வளைத்து நபிகளாரைக் கட்டிப்பிடித்துக் கொண்டார்.

 * எதிரிகளின் அம்புகள் அனைத்தும் அவரின் முதுகில் ஒவ்வொன்றாக வந்து தைத்தன.

 * வலி தாங்க முடியாமல் உடல் துடித்தபோதிலும், தான் சிறிதேனும் நகர்ந்தால் அம்பு நபிகளாரின் மீது பட்டுவிடுமே என்ற அச்சத்தால், அவர் அசையாமல் அப்படியே நின்றார்.

 

பார்வைத் திறனை மீட்டுத் தந்த கத்தாதா பின் நுஃமான் (ரலி)


போர் உச்சக்கட்டத்தில் இருந்தபோது, நபிகளாரைப் பாதுகாக்கும் அரணாக நின்றவர்களில் ஹழ்ரத் கத்தாதா பின் நுஃமான் ரலியல்லாஹு அன்ஹு அவர்களும் ஒருவர்.

 * எதிரிகள் எய்த கொடூரமான அம்பு ஒன்று கத்தாதா (ரலி) அவர்களின் முகத்தைத் துளைத்தது. அதில் அவரின் ஒரு கண் பிதுங்கி, கன்னத்தின் மீது தொங்கும் நிலைக்கு வந்தது.

 * கடும் வலியிலும் இரத்த வெள்ளத்திலும் இருந்த அவர், தன் கண்ணைப் கையில் தாங்கியபடி அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் வந்தார்.

 * அதைப் பார்த்த நபிகளாரின் கண்கள் கலங்கின. அண்ணலார் (ஸல்) அவர்கள் தம் கரங்களால் பிதுங்கித் தொங்கிய அந்த கண்ணை எடுத்து, அதன் சரியான இடத்தில் மீண்டும் பொருத்தி, வல்ல இறைவனிடம் துஆ (பிரார்த்தனை) செய்தார்கள்.

 * அதிசயம் நிகழ்ந்தது! அந்த கண் உடனடியாகக் குணமடைந்ததோடு, அவருடைய மற்றொரு இயல்பான கண்ணை விடவும் அழகாகவும், கூர்மையான பார்வைத் திறன் கொண்டதாகவும் மாறியது. பிற்காலத்தில் அவர்கள் "கண் அழகர் கத்தாதா" என்றே அழைக்கப்பட்டார்கள்.


தல்ஹா பின் உபைதில்லாஹ் (ரலி)-ன் கர அர்ப்பணிப்பு

நபிகளாரை நோக்கி எய்யப்பட்ட கூர்மையான அம்பை, ஹழ்ரத் தல்ஹா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தம் வெறும் கையால் தடுத்துக் கொண்டார்கள்.

 * அம்பு பாய்ந்து அவர்களின் கை நரம்புகள் துண்டிக்கப்பட்டு, கை முற்றிலும் செயலற்றுப்போனது (ஊனமுற்றது).

 * உடல் முழுவதும் 80-க்கும் மேற்பட்ட வெட்டுக் காயங்களும் அம்புத் தழும்புகளும் ஏற்பட்ட நிலையிலும், நபிகளாரைத் தோளில் சுமந்து கொண்டு பாதுகாப்பான குன்றின் மீது ஏற்றினார்கள்.

 * இதைப் பார்த்த நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், "பூமியில் நடமாடும் ஒரு ஷஹீதைப் (தியாகியை) பார்க்க விரும்புபவர் தல்ஹாவைப் பார்க்கட்டும்" என்று புகழாரம் சூட்டினார்கள்.


 ரஃபிஆ பின்த் கஅப் - ரலி) பெண்மணியின் வீரம்


ஆண்களுக்கு நிகராகப் பெண்களும் நபி நேசத்தில் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபித்தார் நஸீபா (உம்மு உம்மாரா - ரலி) எனும் பெண்மணி.

 * தோழர்கள் சிதறி ஓடிய அந்த ஆபத்தான வேளையில், வாளையும் கேடயத்தையும் ஏந்திக்கொண்டு நபிகளாருக்குப் பாதுகாப்பாகப் போரிட்டார்.

 * நபிகளாரைத் தாக்க வந்த எதிரியான இப்னு கமிஆ என்பவனைத் தடுத்து நிறுத்திப் போரிட்டதில், அவரின் தோள்பட்டையில் ஆழமான காயம் ஏற்பட்டது.

 * நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: "உஹத் போரின் போது நான் வலப்பக்கம் திரும்பினாலும், இடப்பக்கம் திரும்பினாலும் உம்மு உம்மாராஹ் என்னை நோக்கி வரும் எதிரிகளைத் தடுத்துப் போரிடுவதையே கண்டேன்!"


இரத்தமும் சதையுமாய், தங்களின் உறுப்புகளை இழந்து, உயிரைப் பணயம் வைத்து ஸஹாபாக்கள் காட்டிய அந்த ஈடு இணையற்ற அன்புதான் இன்றளவும் நமது ஈமானுக்கு உத்வேகம் தருகிறது."


என் உயிரே போனாலும் நபியின் காலில் ஒரு சிறிய முள் 

தைப்பது கூட விருப்பம் இல்லை!”


ஹிஜ்ரி 4-ஆம் ஆண்டு, 'அளல்' மற்றும் 'காரா' ஆகிய கோத்திரங்களைச் சேர்ந்த சிலர் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து, "எங்கள் மக்களுக்கு இஸ்லாத்தைக் கற்றுத் தர சில தோழர்களை அனுப்புங்கள்" என்று வேண்டினர்.


அவர்களின் கோரிக்கையை ஏற்று, நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆஸிம் பின் தாபித் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் தலைமையில் 10 சீர்மிகு ஸஹாபாக்களைக் கொண்ட குழுவை அனுப்பி வைத்தார்கள்.


ஆனால், 'ரஜீஃ' என்ற நீர்நிலைக்கு அருகில் சென்றபோது, அக்குழுவினரை அக்கோத்திரத்தார் வஞ்சகமாகச் சூழ்ந்துகொண்டனர். எதிர்த்துப் போரிட்டவர்களில் 7 தோழர்கள் ஷஹீதாக்கப்பட்டனர். குபைப் பின் அதீ ரலியல்லாஹு அன்ஹு மற்றும் ஸைத் பின் தஸின்னாஹ் ரலியல்லாஹு அன்ஹு உள்ளிட்ட மூவர் உயிருடன் சிறைபிடிக்கப்பட்டனர் (வழியில் ஒருவர் கொல்லப்பட்டார்).


மக்கத்து இணைவைப்பாளர்கள் (குரைஷிகள்) குபைப் ரலியல்லாஹு அன்ஹு அவர்களைக் கைதியாகக் கொண்டு சென்று மக்காவில் விற்றார்கள். பத்ருப் போரில் குபைப் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் கரங்களால் கொல்லப்பட்ட ஹாரித் பின் ஆமிர் என்பவனின் குடும்பத்தார், பழிவாங்கும் நோக்கத்தோடு இவரை பெரும் தொகைக் கொடுத்து விலைக்கு வாங்கினர்.

அவர்கள் குபைப் ரலியல்லாஹு அன்ஹு அவர்களைப் பல மாதங்கள் சங்கிலிகளால் பிணைத்துச் சிறையில் அடைத்து வைத்தனர்.


குபைப் ரலியல்லாஹு அன்ஹு சிறைபிடிக்கப்பட்டிருந்த வீட்டிலிருந்த பெண் (பிற்காலத்தில் இஸ்லாத்தைத் தழுவியவர்) கூறுகிறார்:

"அல்லாஹ்வின் மீது ஆணையாக! குபைப் கைவிலங்கிடப்பட்டுச் சிறையில் இருந்தபோது, அவரின் கையில் திராட்சைக் குலைகள் இருப்பதை நான் என் கண்களால் பார்த்தேன். அக்காலத்தில் மக்காவில் திராட்சைப் பருவமே இல்லை! அல்லாஹ்வே அவருக்கு அந்த உணவை வழங்கினான். அவரை விடச் சிறந்த ஒரு கைதியை நான் பார்த்ததே இல்லை."


புனித மாதங்கள் முடிந்ததும், குரைஷிகள் குபைப் ரலியல்லாஹு அன்ஹு அவர்களை மரண தண்டனை நிறைவேற்றுவதற்காக மக்காவின் எல்லைப் பகுதியான 'தன்யீம்' (Tan'im) என்ற இடத்திற்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரை மரத்தில் கட்டி கொலை செய்யத் திட்டமிட்டனர்.


அப்போது குபைப் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் எதிரிகளிடம் ஒரு கோரிக்கை வைத்தார்:

"என்னைச் சாகடிப்பதற்கு முன் இரண்டு ரக்அத்கள் தொழுவதற்கு எனக்கு அனுமதி தாருங்கள்!"

எதிரிகளும் அனுமதித்தனர். குபைப் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் மிக அமைதியாகவும், அழகாகவும் இரண்டு ரக்அத்கள் தொழுது முடித்தார். தொழுது முடித்தவுடன் குரைஷிகளைப் பார்த்து வீரத்தோடு கூறினார்:


"அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான் மரணத்திற்குப் பயந்துதான் தொழுகையை நீட்டுகிறேன் என்று நீங்கள் நினைத்துவிடக் கூடாது என்பதால் தான் விரைவாகத் தொழுது முடித்தேன். இல்லையெனில் இன்னும் நீண்ட நேரம் தொழுதிருப்பேன்!"

(மரண தண்டனைக்கு முன்பாக இரண்டு ரக்அத்கள் தொழும் இந்த முன்மாதிரி சுன்னத்தை முதன்முதலில் தோற்றுவித்தவர் குபைப் ரலி அவர்களே!)


குபைப் ரலியல்லாஹு அன்ஹு அவர்களை மரத்தில் ஏற்றிக் கட்டியபோது, குரைஷிகளின் தலைவர்களில் ஒருவனான அபு ஸுஃப்யான் (அப்போது அவர் முஸ்லிமாகவில்லை) முன்னால் வந்து நின்றார்.


அவர் குபைப் ரலியல்லாஹு அன்ஹு -ன் உணர்ச்சிகளைச் சோதிப்பதற்காகக் கேட்டார்: "குபைப்பே! உண்மையைக் கூறு... இப்போது உனக்குப் பதிலாக முஹம்மது இந்த இடத்திலிருந்து இந்தத் தண்டனையை அனுபவிக்க வேண்டும்; நீ விடுதலை செய்யப்பட்டு, உனது குடும்பத்தோடு சௌக்கியமாக, பாதுகாப்பாக வீட்டில் இருக்க வேண்டும் என்று விரும்புகிறாயா?"


உடலெல்லாம் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டு, சில வினாடிகளில் மரணத்தைச் சந்திக்கப்போகும் அந்த நிலையிலும், குபைப் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் முகத்தில் எள்ளளவும் பயமில்லை!

அவர் எதிரிகளின் முகத்தைப் பார்த்து உரத்தக் குரலில் ஆணித்தரமாகக் கூறினார்:

"அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான் என் குடும்பத்தோடும் பிள்ளைகளோடும் சௌக்கியமாக வீட்டில் இருப்பவதும்... அதற்குப் பதிலாக என் அன்பிற்குரிய நபி முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலில் ஒரு சிறிய முள் தைப்பது கூட எனக்குச் விருப்பம் இல்லை!"


இந்த வார்த்தைகளைக் கேட்ட அபு ஸுஃப்யான் வியப்பின் எல்லைக்கே சென்று அதிர்ந்துபோய் நின்றார். அவர் தன் தலையிலடித்துக் கொண்டு ஒப்புக்கொண்டார்:

"முஹம்மதின் தோழர்கள் அவர் மீது காட்டும் அன்பைப் போல, உலகத்தில் வேறு எந்த ஒரு தலைவர் மீதும் அவருடைய தொண்டர்கள் அன்பு காட்டி நான் பார்த்ததே இல்லை!"


இதன் பின்னர், எதிரிகள் ஈட்டிகளால் குபைப் (ரலி) அவர்களின் உடலைத் துளைத்தெடுத்தனர். அவர் மரணிக்கும் தருவாயில் இறைவனிடம் இறுதியாகச் செய்த பிரார்த்தனை:


"யா அல்லாஹ்! இங்கு உன்னுடைய தூதருக்கு என் நிலைமையைக் கூற யாருமே இல்லை. என் ஸலாமை என் அன்ப நபியிடம் நீ சேர்த்தருள்வாய்!"

அதே நேரத்தில், மதீனாவில் அமர்ந்திருந்த அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு அல்லாஹ் வஹீ மூலம் இந்தச் செய்தியைத் தெரிவித்தான். நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் திடீரென "வஅலைஹிஸ் ஸலாம்" (அவர் மீதும் அல்லாஹ்வின் சாந்தி உண்டாகட்டும்) என்று கூறி, "குபைப் குரைஷிகளால் ஷஹீதாக்கப்பட்டு விட்டார்" என்ற செய்தியைச் சோகத்துடன் தோழர்களுக்கு அறிவித்தார்கள்.


அவர்களை உங்களால் ஒருபோதும் வீழ்த்த முடியாது!”


ஹிஜ்ரி 6-ஆம் ஆண்டு, அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் 1,400-க்கும் மேற்பட்ட தோழர்களுடன் உம்ரா நிறைவேற்றுவதற்காக மக்கா நோக்கிப் புறப்பட்டார்கள். அவர்கள் எந்தவொரு போர்க் கருவிகளையும் ஏந்தி வரவில்லை; மாறாக இஹ்ராம் ஆடை அணிந்து, குர்பானி ஆடுகளை மட்டுமே அழைத்து வந்தனர்.

ஆனால், மக்கத்துப் பெருமக்கள் முஸ்லிம்களை எல்லைப் பகுதியான 'ஹுதைபிய்யா' என்ற இடத்திலேயே தடுத்து நிறுத்தினர். முஸ்லிம்களின் எண்ணம் என்ன என்பதை அறிவதற்காகவும், அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காகவும் மக்காவிலிருந்து வரிசையாகப் பல தூதர்கள் அனுப்பப்பட்டனர்.


அப்போது மக்காவின் தாயிஃப் நகரின் தலைவராகவும், பெரும் மதிப்புமிக்க ஆளுமையாகவும் திகழ்ந்த உர்வா பின் மஸ்வூத் அஸ்-ஸகஃபீ என்பவர் குரைஷிகளிடம், "நான் சென்று முஹம்மதிடம் பேசி வருகிறேன்" என்று கூறி ஹுதைபிய்யாவிற்கு வந்தார்.

அவர் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். அரேபியர்களின் வழக்கப்படி பேசும்போது நபிகளாரின் தாடியைத் தொட்டுப் பேச முயன்றார். ஆனால், நபிகளாரைக் காவலராக நின்று கொண்டிருந்த தோழர் முகீரா பின் ஷுஃபா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தம் வாளின் உறையால் உர்வாவின் கையைக் தட்டி, "உன் கையை அல்லாஹ்வின் தூதரின் தாடியிலிருந்து அப்புறப்படுத்து!" என்று கம்பீரமாகக் எச்சரித்தார்கள்.


பேச்சுவார்த்தையின் இடையே, உர்வா பின் மஸ்வூத் அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களையும், அவர்களைச் சுற்றியிருந்த ஸஹாபாக்களின் (தோழர்களின்) செயல்பாடுகளையும் கூர்ந்து கவனித்தார்.


அங்கு அவர் கண்ட காட்சிகள் அவரைப் பிரமிப்பில் ஆழ்த்தின:

நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எப்போதெல்லாம் உமிழ்நீர் துப்புகிறார்களோ, அது தரைபடுவதற்கு முன்பே ஏதேனும் ஒரு தோழரின் கையில் விழுகிறது. அதை அவர் தம் முகத்திலும் மேனியிலும் தேய்த்துக் கொள்கிறார்!


நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உளுச் செய்து முடித்ததும், அவர்தம் மேனியிலிருந்து சொட்டும் அந்தப் புனிதமான தண்ணீரைத் தங்கள் கரங்களில் ஏந்துவதற்குத் தோழர்கள் ஒருவரோடு ஒருவர் போட்டியிடுகிறார்கள்!


நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பேசத் தொடங்கினால், அவையிலிருந்த அனைவரும் தங்கள் தலைகளில் பறவைகள் அமர்ந்திருப்பது போல (சிறிதும் அசையாமல்) அத்தனை அமைதியாகக் கேட்கிறார்கள்!


நபிகளார் மீது வைத்திருந்த பேரன்பினாலும் மரியாதையினாலும், தோழர்கள் யாரும் அவர்களின் முகத்தை நிமிர்ந்து நேரடிப் பார்வையால் பார்ப்பது கூட இல்லை!


பேச்சுவார்த்தை முடிந்ததும் உர்வா பின் மஸ்வூத் மக்கா திரும்பினார். அங்கே காத்துக் கொண்டிருந்த குரைஷித் தலைவர்களிடம் அவர் கூறினார்:-

"எனது குலத்தவர்களே! அல்லாஹ்வின் மீது ஆணையாகச் சொல்கிறேன்... நான் உலகத்தின் பெரும் பேரரசர்களான பாரசீகத்தின் 'கிஸ்ரா', ரோமாபுரியின் 'கைஸர்', அபிசீனியாவின் 'நஜாஷி' ஆகியோரின் அரசவைகளுக்கெல்லாம் தூதராகச் சென்றிருக்கிறேன்!


ஆனால், முஹம்மதின் தோழர்கள் அவர் மீது காட்டும் அன்பையும் மரியாதையையும் போல எந்த ஒரு மன்னனின் தொண்டர்களும் தங்கள் மன்னர் மீது காட்டி நான் பார்த்ததே இல்லை!


அவர் உமிழ்நீர் துப்பினால் அதைத் தரை படாமல் கைகளில் ஏந்தி மேனியில் பூசிக் கொள்கிறார்கள்; அவர் உளுச் செய்தால் அந்தத் தண்ணீரைப் பெறப் போட்டியிடுகிறார்கள்; அவர் கட்டளையிட்டால் அதைச் செய்யப் பறக்கிறார்கள்; அவர் பேசினால் அமைதியாகிறார்கள். அத்தகைய ஒரு கூட்டத்தை அவர் பெற்றிருக்கிறார்! எனவே, அவர்களை உங்களால் ஒருபோதும் வீழ்த்த முடியாது!" (நூல்: ஸஹீஹ் அல்-புகாரி)


மதினாவில் கடும் வறட்சி 


மதீனா நகரில் ஒருமுறை கடுமையான வறட்சி ஏற்பட்டது. மக்கள் மழையின்றிப் பெரிதும் தவித்தனர். பஞ்சம் மேலோங்கிய நிலையில், மக்கள் அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்களிடம் வந்து தங்கள் துயரத்தைக் கூறி நிவாரணம் வேண்டினர்.அப்போது அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் மக்களுக்கு ஒரு வழிகாட்டுதலை வழங்கினார்கள்:


"நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அடக்கஸ்தலத்தைப் (கப்ரு ஷரீஃப்) பாருங்கள். அதற்கு மேலே உள்ள கூரையில் வானத்தை நோக்கியவாறு ஒரு துவாரத்தை (திறப்பை) ஏற்படுத்துங்கள். நபிகளாரின் கப்ருக்கும் வானத்திற்கும் இடையே எந்தவொரு கூரையோ தடுப்போ இல்லாதவாறு செய்யுங்கள்."


மக்கள் அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்களின் அறிவுரைப்படி, நபிகளாரின் வீட்டின் கூரையில் (அடக்கஸ்தலத்திற்கு நேர் மேலே) வானம் தெரியுமாறு ஒரு துவாரத்தை உண்டாக்கினார்கள்.


உடனடியாக வானில் மேகங்கள் திரண்டு பெருமழை பொழிந்தது. எவ்வளவு மழை பெய்ததென்றால், வரண்ட நிலங்கள் செழிப்படைந்தன; ஒட்டகங்கள் புற்களை மேய்ந்து கொழுத்து, அவற்றின் தோல்கள் கொழுப்பினால் வெடிக்கும் அளவுக்குப் பொலிவுற்றன. அந்த ஆண்டு "ஆமுல் ஃஃபதக்" (மிகுந்த செழிப்புமிக்க ஆண்டு) என்று மக்களால் அழைக்கப்பட்டது. 

நூல்: இமாம் அத்-தாரிமீ (ரஹ்) அவர்கள் தமது நூலில் (ஹதீஸ் எண்: 92) 



அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் ஏன் அந்தத் துவாரத்தை ஏற்படுத்தச் சொன்னார்கள் என்பதை மார்க்க அறிஞர்கள் மிக அழகாக விளக்குகிறார்கள்:

அகிலத்தின் அருட்கொடையாக விளங்கும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஜஸத் (முபாரக்கான உடல்) அடக்கம் செய்யப்பட்டுள்ள அந்தப் புனித இடத்தின் மீது இறைவனின் அருள் எப்போதும் இறங்கிக் கொண்டே இருக்கிறது. வானத்திற்கும் அந்த அடக்கஸ்தலத்திற்கும் இடையே உள்ள தடையை நீக்கும் போது, அண்ணலாரின் பரக்கத்தால் இறைவனின் அருள் மழை பொழியும் என்பதை அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அறிந்திருந்தார்கள்.


நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உயிரோடு இருந்த காலத்தில் மக்கள் அவர்களிடம் வந்து மழைக்காகத் துஆ செய்யக் கோருவார்கள். அண்ணலார் மறைந்த பிறகும், அவர்களின் முபாரக்கான உடலின் பரக்கத்தைக் கொண்டு (வஸீலாவாக வைத்து) அல்லாஹ்விடம் கையேந்துவது நன்மையளிக்கும் என்பதை இந்தச் சம்பவம் காட்டுகிறது.

நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:

مَا مِنْ أَحَدٍ يُسَلِّمُ عَلَيَّ إِلاَّ رَدَّ اللَّهُ عَلَيَّ رُوحِي حَتَّى أَرُدَّ عَلَيْهِ السَّلاَمَ

"யாராவது ஒருவர் எனக்கு ஸலாம் கூறினால், அவருடைய ஸலாமுக்கு நான் பதிலளிக்கும் பொருட்டு அல்லாஹ் என் உயிரை எனக்கு மீட்டுத் தருகிறான்." (நூல்: அபூதாவுத்).

إِنَّ اللَّهَ حَرَّمَ عَلَى الأَرْضِ أَنْ تَأْكُلَ أَجْسَادَ الأَنْبِيَاءِ

"நிச்சயமாக அல்லாஹு தஆலா இறைத்தூதர்களின் உடல்களைப் பூமி தின்பதை (சேதப்படுத்துவதை) ஹராமாக்கி (தடைசெய்து) விட்டான்." (நூல்: அபூதாவுத், நஸாயீ).


இமாம் மாலிக் பின் அனஸ் (ரஹ்) 


இஸ்லாமிய மார்க்கச் சட்ட அறிஞரான இமாம் மாலிக் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் மதீனா நகரத்திலேயே பிறந்து, வளர்ந்து, அங்கேயே வாழ்ந்து மறைந்தவர். 

இமாம் மாலிக் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் தம் வாழ்நாளில் மதீனா எல்லைக்குள் ஒருபோதும் செருப்பு (காலணி) அணிந்தோ, குதிரை மற்றும் கழுதைகள் மீது ஏறியோ பயணித்ததில்லை.


"அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் புனிதமான உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள மதீனாவின் மண்ணை, செருப்பு அணிந்த கால்களால் மிதிப்பதற்கு என் மனம் ஒப்பவில்லை! இறைத்தூதர் நடந்த ஒரு மண்ணில் நான் வாகனத்தின் மீதேறி மிதிப்பதா?"


இமாம் மாலிக் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஹதீஸ்களை (பொன்மொழிகளை) மக்களுக்குப் போதிக்கும் போது ஹதீஸ் வகுப்பு தொடங்குவதற்கு முன் குளித்து, தூய்மையான ஆடை அணிந்து, நறுமணம் பூசிக் கொள்வார்கள்.


ஒருமுறை ஹதீஸ் வகுப்பின் போது, அவர்களை தேள் ஒன்று 16 முறை கொட்டியது. வலியால் அவர்களின் முகம் கருத்துப்போனதே தவிர, அண்ணலாரின் ஹதீஸைக் கூறிக்கொண்டிருந்ததால் தன் உரையை நிறுத்தவோ அல்லது உடலை அசைக்கவோ இல்லை!


வகுப்பு முடிந்ததும் கேட்கப்பட்டபோது: "நபிகளாரின் ஹதீஸுக்குக் கொடுக்கும் மரியாதைக் குறைந்துவிடக் கூடாது என்பதற்காகவே நான் அந்த வலியைப் பொறுத்துக் கொண்டேன்" என்று கூறினார்கள்.


இமாம் அஹ்மத் பின் ஹன்பல் (ரஹ்)


ஹதீஸ்களின் பெருந்தொகுப்பான 'முஸ்னத் அஹ்மத்' நூலைத் தொகுத்த இமாம் அஹ்மத் பின் ஹன்பல் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள், நபிகளாரின் அசல் பொருட்கள் (ஆஸாருன் நபிய்யா) மீது அளப்பரிய நம்பிக்கையும் அன்பும் கொண்டிருந்தார்கள்.

இமாம் அஹ்மத் பின் ஹன்பல் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களிடம் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மூன்று திருமுடிகள் (தலைமுடிகள்) இருந்தன.


அவர்கள் அந்தத் திருமுடிகளைத் தங்கள் ஆடையில் மிகச் கவனமாகப் பத்திரப்படுத்தி வைத்திருந்தார்கள்.


அவர்களுக்கோ அல்லது குடும்பத்தினருக்கோ நோய் ஏற்படும் போது, அந்தத் திருமுடியைத் தூய்மையான தண்ணீரில் நனைத்து, அந்தத் தண்ணீரைக் குடித்து நோய் நிவாரணம் (ஷிஃபா) பெறுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள்.


இமாம் அஹ்மத் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் மரணிக்கும் தருவாயில், தம் மகனிடம்: "என் மரணத்திற்குப் பின், இந்தத் திருமுடிகளில் இரண்டை என் இரு கண்களின் மீதும், ஒன்றை என் நாவின் மீதும் வைத்து என்னை அடக்கம் செய்யுங்கள்" என்று மரண சாஸனம் (வஸிய்யத்) செய்தார்கள். அவ்வாறே செய்யப்பட்டது.


அவர்களிடம் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பயன்படுத்தியதாகக் கருதப்பட்ட மரப் பாத்திரம் ஒன்றும் இருந்தது. அதை அவர்கள் தண்ணீரில் நனைத்து, அந்தத் நீரைக் குடித்துப் பரக்கத் அடைவார்கள்.

நூல்: ஸியார் அஃலாமின் நுபலா


பிரிவைத் தாங்க முடியாத பேரன்பு


ஒருநாள், ஹழ்ரத் ஸவ்பான் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சமூகத்திற்கு வந்தார்கள். வழக்கமாகப் பொலிவுடன் இருக்கும் அவர்களின் முகம் அன்று முற்றிலுமாக மாறியிருந்தது:முகம் வெளுத்துப்போய், மஞ்சள் நிறமாக மாறியிருந்தது.

உடல் மெலிந்து, கண்கள் சோகத்தில் மூழ்கியிருந்தன.


அவர்களின் இந்த மாற்றத்தைக் கண்ட நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கவலையோடு கேட்டார்கள்:

"ஸவ்பானே! உமக்கு என்ன நேர்ந்தது? உடலுக்கு ஏதேனும் சுகவீனமா? ஏன் உமது முகம் இப்படி மாறியிருக்கிறது?"


அதற்கு ஸவ்பான் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் உணர்ச்சிவசப்பட்டுக் கண்ணீருடன் பதில் கூறினார்கள்:"அல்லாஹ்வின் தூதரே! எனக்கு உடம்பில் எந்த நோயும் இல்லை; எந்த வலியும் இல்லை! ஆனால்... உங்களை என் கண்ணால் பார்க்காமல் என்னால் சிறிது நேரம் கூட இருக்க முடிவதில்லை!


நான் வீட்டில் இருக்கும் போது உங்களின் நினைவு வந்தால், உடனே ஓடிவந்து உங்களைப் பார்த்துவிட்டுத்தான் என் மனம் அமைதியடைகிறது.


நான் வீட்டில் இருக்கும் போது உங்களின் நினைவு வந்தால், உடனே ஓடிவந்து உங்களைப் பார்த்துவிட்டுத்தான் என் மனம் அமைதியடைகிறது.

ஆனால் இன்று எனக்குள் ஒரு அச்சம் வந்துவிட்டது. நான் மரணத்தைப் பற்றியும், மறுமையைப் பற்றியும் சிந்தித்தேன்... சுவர்க்கத்தில் நீங்கள் நபிமார்களோடு மிக உயர்ந்த அந்தஸ்தில் இருப்பீர்கள். நானோ சாமானியன்; நான் ஒருவேளை சுவர்க்கம் சென்றாலும் உங்கள் அளவிற்கு உயர்ந்த இடத்தைப் பெற முடியாது! ஒருவேளை நான் நரகத்திற்குச் சென்றுவிட்டால்... உங்களை வாழ்நாளில் மீண்டும் பார்க்கவே முடியாது!

மறுமையில் உங்களைப் பார்க்க முடியாது என்ற அந்தப் பிரிவின் கவலைதான் என் உடலை இப்படி உருக்கி, என் முகத்தின் நிறத்தையே மாற்றிவிட்டது யா ரஸூலல்லாஹ்!"


ஒரு சாமானியத் தோழனின் இந்த உண்மையான அன்பு, அகிலத்தின் இறைவனான அல்லாஹ்வையே நெகிழ வைத்தது! உடனடி நிவாரணமாக அல்லாஹு தஆலா திருக்குர்ஆனின் இந்த அழகிய வசனத்தை ஜிப்ரீல் (அலை) மூலம் இறக்கி வைத்தான்:

وَمَنْ يُّطِعِ اللّٰهَ وَالرَّسُوْلَ فَاُولٰٓٮِٕكَ مَعَ الَّذِيْنَ اَنْعَمَ اللّٰهُ عَلَيْهِمْ مِّنَ النَّبِيّٖنَ وَالصِّدِّيْقِيْنَ وَالشُّهَدَآءِ وَالصّٰلِحِيْنَ‌ وَحَسُنَ اُولٰٓٮِٕكَ رَفِيْقًا ‏

யார் அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும் கீழ்படிந்து நடக்கிறார்களோ அவர்கள் அல்லாஹ்வின் அருளைப்பெற்ற நபிமார்கள், ஸித்தீகீன்கள் (சத்தியவான்கள்) ஷுஹதாக்கள் (உயிர்த்தியாகிகள்) ஸாலிஹீன்கள் (நற்கருமங்களுடையவர்கள்) ஆகியவர்களுடன் இருப்பார்கள் - இவர்கள் தாம் மிக்க அழகான தோழர்கள் ஆவார்கள்.(அல்குர்ஆன் : 4:69)


"இந்த வசனத்தை நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஓதிக் காட்டியதும், ஸவ்பான் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் முகத்தில் பேரானந்தம் மலர்ந்தது!


சிறுவர்கள் பாசம் 

ஒருநாள், அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் லுஹர் தொழுகையை முடித்துவிட்டுத் தம் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்கள். சிறுவனான ஜாபிர் பின் ஸமுரா ரலியல்லாஹு அன்ஹு அவர்களும் நபிகளாருக்குப் பின்னால் ஓடிச் சென்றார்.

வழியில் மற்ற சிறுவர்களும் நபிகளாரைச் சூழ்ந்துகொண்டனர். நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அன்போடு ஒவ்வொரு சிறுவனின் கன்னத்தையும் மென்மையாகத் தடவிக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.


ஜாபிர் ரலியல்லாஹு அன்ஹு கூறுகிறார்கள்:"அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என் கன்னத்தையும் தடவிக் கொடுத்தார்கள். அப்போது அவர்களின் கரம் என் கன்னத்தில் பட்டபோது, ஒரு அத்தர் (நறுமணப் பொருள்) வியாபாரியின் பெட்டியிலிருந்து எடுக்கப்பட்டக் கையைப் போல அவ்வளவு நறுமணம் வீசியது! அதுமட்டுமல்லாமல், பனித்துளியைப் போல அவ்வளவு குளிர்ச்சியாகவும் மென்மையாகவும் இருந்தது."


ஜாபிர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் பெரியவரான பிறகும், அண்ணலாரின் அந்தக் கரத்தின் தொடுதலையும் அதன் நறுமணத்தையும் மறக்கவே இல்லை. நபிகளார் மீது அவர்கள் கொண்ட பேரன்பினால், தம் வாழ்நாளில் எப்போதெல்லாம் நபிகளாரின் நினைவு வருகிறதோ, அப்போதெல்லாம் தன் கன்னத்தைத் தொட்டுப் பார்த்துக்கொண்டு அண்ணலாரின் நினைவில் மூழ்கிவிடுவார்கள்!



நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:-

مَنْ أَحْيَا سُنَّتِي فَقَدْ أَحَبَّنِي ، وَمَنْ أَحَبَّنِي كَانَ مَعِي فِي الْجَنَّةِ

"யார் என்னுடைய சுன்னத்தை (வழிகாட்டுதலை) உயிர்ப்பிக்கிறாரோ, அவர் என்னை நேசித்துவிட்டார். யார் என்னை நேசித்துவிட்டாரோ, அவர் மறுமையில் என்னுடன் சுவர்க்கத்தில் இருப்பார்."— (நூல்: திர்மிதி)


ரபீஉல் அவ்வல் மாதம் என்பது வெறும் கொண்டாட்டத்திற்கான மாதம் மட்டுமல்ல; அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சுன்னத்துகளை (வழிகாட்டுதல்களை) நம் வாழ்க்கையில் மீண்டும் உயிர்ப்பிப்பதற்கான ஒரு பொன்னான வாய்ப்பு!


இந்த மாதத்தில் நாம் சிறப்பாகக் கடைப்பிடித்து, நம் அன்றாட சுவாசமாக மாற்ற வேண்டிய முக்கிய சுன்னத்துகள் இதோ:


நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மீது அன்பு செலுத்துவதன் முதல் அடையாளம் அவர்களின் மீது அதிகளவில் ஸலவாத் சொல்வதாகும்.

اِنَّ اللّٰهَ وَمَلٰٓٮِٕكَتَهٗ يُصَلُّوْنَ عَلَى النَّبِىِّ يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا صَلُّوْا عَلَيْهِ وَسَلِّمُوْا تَسْلِيْمًا‏

இந்த நபியின் மீது அல்லாஹ் அருள் புரிகிறான். மலக்குகளும் அவருக்காக அருளைத் தேடுகின்றனர். முஃமின்களே நீங்களும் அவர் மீது ஸலவாத்து சொல்லி அவர் மீது ஸலாமும் சொல்லுங்கள்.(அல்குர்ஆன் : 33:56)


தினமும் குறிப்பிட்ட எண்ணிக்கையை இலக்காகக் கொள்ளாமல், நடக்கும் போதும், ஓய்வு நேரங்களிலும், வாகனங்களில் செல்லும்போதும் "அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மத்" என்று ஓதிக்கொண்டே இருப்பது.


நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் திங்கள்கிழமைகளில் நோன்பு நோற்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். அவர்களிடம் திங்கள்கிழமை நோன்பு குறித்துக் கேட்கப்பட்டபோது, "அந்நாளில் தான் நான் பிறந்தேன்; அந்நாளில் தான் எனக்கு முதன்முதலில் வஹீ (இறைச்செய்தி) இறங்கியது" என்று கூறினார்கள் (நூல்: முஸ்லிம்).


இந்த ரபீஉல் அவ்வல் மாதத்திலிருந்து தொடங்கும் வகையில், திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் சுன்னத்தான நோன்புகளை நோற்கப் பழகலாம்.


நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தோற்றம் மட்டுமல்ல, அவர்களின் நற்குணங்களும் சுன்னத் தான்!


பிறரைப் பார்த்துப் புன்னகைப்பதைக் தர்மம் (ஸதகா) என்று கூறினார்கள்.


கோபத்தைக் கட்டுப்படுத்துதல்: கோபம் வரும்போது அமைதி காப்பது நபிவழி.


இன்சொல் பேசுதல்: நாவினால் பிறர் மனம் புண்படாமல் பேசுவது.


நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: "உங்களில் சிறந்தவர் தன் குடும்பத்தாரிடம் சிறந்த முறையில் நடந்துகொள்பவரே!"


மனைவியிடமும் பிள்ளைகளிடமும் அன்பாகவும் கனிவாகவும் நடப்பது.


வீட்டில் உள்ளவர்களுடன் சேர்ந்து உணவருந்துவது (ஒரே தட்டில் அல்லது சேர்ந்து உண்பது சுன்னத்).


பிள்ளைகளுக்கு அண்ணல் நபியின் சீறா (வரலாறு) மற்றும் ஸஹாபாக்களின் தியாகங்களை சிறுகதைகளாகக் கூறி வளர்ப்பது.


கடமையான ஐந்து நேரத் தொழுகைகளுடன் சேர்த்து, நபிகளார் தவறாமல் தொழுத "ஸுனனுல் முஅக்கதா" (உறுதிளிக்கப்பட்ட சுன்னத்) தொழுகைகளைப் பேணித் தொழுவது.


முன் சுன்னத் மற்றும் பின் சுன்னத் தொழுகைகளை ஆர்வத்துடன் தொழுவது.

இரவு நேரத் தொழுகையான தஹஜ்ஜுத் தொழுகையைத் தொழ முயல்வது.


நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்களின் வாழ்நாள் முழுதும் ஏழைகளுக்கும், அனாதைகளுக்கும், கைம்பெண்களுக்கும் உதவி செய்பவராகவே திகழ்ந்தார்கள்.


இந்த ரபீஉல் அவ்வல் மாதத்தில் ஏழை எளியவர்களுக்கு உணவு அளிப்பது, அனாதைகளின் கல்விக்கு உதவுவது, நோயாளிகளை நலம் விசாரிப்பது போன்ற நற்செயல்களில் ஈடுபடுவது.


நபி நேசம் என்பது வெறும் பேச்சு அல்ல; அது நம் ஒவ்வொருவரின் அன்றாட வாழ்வியல் சுவாசம்!


ஸஹாபாக்கள் தங்கள் உயிரைக் கொடுத்து நபி நேசத்தைக் காத்தார்கள்!

தாபியீன்களும் இமாம்களும் தங்கள் செயலால் நபி நேசத்தை வாழ்ந்து காட்டினார்கள்!


இன்று நம்மிடம் இரத்தம் சிந்துமாறு மார்க்கம் கேட்கவில்லை; மாறாக, அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சுன்னத்துகளை நம் வீடுகளிலும், வணிகத்திலும், அன்றாட வாழ்க்கையிலும் உயிர்ப்பிக்க வேண்டும் என்றுதான் கேட்கிறது.


இந்த ரபீஉல் அவ்வல் வசந்த காலத்தில் நாம் அனைவரும் ஒரு நல்முடிவு எடுப்போம்: "இன்று முதல்...நபிகளாரின் சுன்னத் என் வீட்டுக்குள் நுழையும்!

நபிகளாரின் அக்லாக் (நற்குணம்) என் பேச்சில் மிளிரும்!

நபிகளாரின் பொன்னான நெறிமுறை என் வாழ்க்கையின் சுவாசமாகும்!"


யா அல்லாஹ்! எங்கள் இதயங்களில் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மீது உண்மையான, ஆழமான நேசத்தை ஏற்படுத்தி அருள்வாயாக!


அவர்களின் சுன்னத்துகளைப் பேணி வாழும் தவ்ஃபீக்கை நம் அனைவருக்கும் தந்தருள்வாயாக!


பெருமானாரின் வழியில் வாழும் பாக்கியத்தையும், அவர்தம் நற்குணங்களைப் பின்பற்றும் மனப்பக்குவத்தையும் தந்தருள்வாயாக!


நாளை மறுமை நாளில், அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கரங்களால் 'கவ்ஸர்' தடாகத்து நீரைப் பருகும் பாக்கியத்தையும், அவர்களின் ஷஃபாஅத்தைப் (பரிந்துரையை) பெற்று சுவர்க்கத்தில் அவரோடு ஒன்றாக இருக்கும் பாக்கியத்தையும் நம் அனைவருக்கும் தந்தருள்வாயாக! ஆமீன் யா ரப்பல் ஆலமீன்.


தொகுத்தவர்.

மவ்லவி B.முஹம்மது ராஃபி ரஷீதி.

தலைமை இமாம். மஸ்ஜிதே முபாரக் கிருஷ்ணாம்பேட்டை அரக்கோணம்.

Cell : +91 90949 86824.


முந்தைய பதிவுகள் வாசிக்க 👇 கிளிக் செய்யவும்.

ஜும்மா பயான்கள்.



செவ்வாய், 11 ஆகஸ்ட், 2026

ஒடுக்கத்துப்புதன்.

 


ஒடுக்கத்துப்புதன்


 என்றால் என்ன?*

அன்று நாம் செய்யவேண்டியதென்ன 


ஒடுக்கத்து புதன் என்பது ஸபர் மாதத்தின் இறுதிப் புதன் கிழமையைக் குறிக்கும். இந்நாளில் தான் முன் சென்ற சமுதாயம் பல சோதனைகளையும் வேதனைகளையும் சந்தித்தது என்பது குர்ஆன், ஹதீஸ் வழியே ஊர்ஜிதப்படுத்தப்பட்ட தகவலாகும். 


*குளித்தல், குடித்தல், தொழுதல்*

வியாழன், 6 ஆகஸ்ட், 2026

“பேச்சில் வேண்டும் கவனம்”

 


“பேச்சில் வேண்டும் கவனம்”


الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ، وَبِهِ نَسْتَعِينُ عَلَى أُمُورِ الدُّنْيَا وَالدِّينِ، وَالصَّلاَةُ وَالسَّلاَمُ عَلَى أَشْرَفِ الأَنْبِيَاءِ وَالْمُرْسَلِينَ، سَيِّدِنَا وَنَبِيِّنَا مُحَمَّدٍ، وَعَلَى آلِهِ وَأَصْحَابِهِ أَجْمَعِينَ، وَمَنْ تَبِعَهُمْ بِإِحْسَانٍ إِلَى يَوْمِ الدِّينِ.

أَمَّا بَعْدُ:

مَا يَلْفِظُ مِن قَوْلٍ إِلَّا لَدَيْهِ رَقِيبٌ عَتِيدٌ:


وَلَا يَغْتَب بَّعْضُكُم بَعْضًا ۚ أَيُحِبُّ أَحَدُكُمْ أَن يَأْكُلَ لَحْمَ أَخِيهِ مَيْتًا فَكَرِهْتُمُوهُ ۚ وَاتَّقُوا اللَّهَ ۚ


قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:

مَنْ يَضْمَنْ لِي مَا بَيْنَ لَحْيَيْهِ وَمَا بَيْنَ رِجْلَيْهِ أَضْمَنْ لَهُ الْجَنَّةَ


مَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ فَلْيَقُلْ خَيْرًا أَوْ لِيَصْمُتْ


நாம் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் வானவர்களால் பதிவு செய்யப்படுகிறது


நாவு அளவால் சிறியது; ஆனால் அதன் செயல்பாடும் விளைவும் மிகப்பெரியது.


ஒரே ஒரு வார்த்தை ('லா இலாஹ இல்லல்லாஹ்') மனிதனை முஸ்லிமாக மாற்றுகிறது.


ஒரே ஒரு வார்த்தை ('கபில்து') அந்நியப் பெண்ணை வாழ்நாள் மனைவியாக்குகிறது.


ஒரே ஒரு வார்த்தை ('அஸ்தஃபிருல்லாஹ்') வாழ்நாள் முழுதும் செய்த பாவங்களை அழித்து மன்னிப்பைப் பெற்றுத் தருகிறது.


ஒரே ஒரு வார்த்தை ('சுப்ஹானல்லாஹ்') மீசானுடைய தராசில் நன்மையின் எடையை மலையளவு உயர்த்துகிறது.


அதே நாவு சொல்லும் தவறான ஒரு வார்த்தை மனிதனை நரகத்தில் கொண்டு சேர்க்கிறது.


நாம் நினைக்கிற கருத்தைப் பிறருக்கு உணர்த்த அல்லாஹ் தந்த மாபெரும் பாக்கியம் நாவு.


பேச முடியாதவர்களைப் பார்க்கும்போதுதான் நாவின் அருமை நமக்குத் புரிகிறது.


அதே நாவு சொல்லும் ஒரே ஒரு பொய்யான வார்த்தை, செய்த நன்மைகள் அனைத்தையும் சாம்பலாக மாற்றிவிடுகிறது.


கத்தியால் ஏற்பட்ட காயம் காலப்போக்கில் ஆறிவிடும்; ஆனால், நாவினால் ஏற்பட்ட காயம் ஆயுள் முழுதும் ஆறவே ஆறாது.


இறைவனின் படைப்பில் நாவிற்கு எலும்புகள் கிடையாது; ஆனால், இதயங்களை உடைக்கும் சக்தி அதற்கு உண்டு.


பற்கள் கடினமானவை — அதனால் அவை வயது முதிரும்போது உதிர்ந்து விடுகின்றன; நாவு மிருதுவானது — அதனால் அது மரணம் வரை நிலைத்து நிற்கிறது.


மென்மையும் மிருதுவுமே மனிதனை நெடுங்காலம் வாழவைக்கும் என்பதை இறைவன் நாவின் மூலமாக உணர்த்துகிறான்.


கூர்மையான வாளை விடக் கூர்மையானது மனிதனின் நாவு; வாள் உடலைக் காயப்படுத்தும், நாவு உள்ளத்தைக் காயப்படுத்தும்.


யோசிக்காமல் பேசும் வார்த்தை, அம்பறாத்தூணியிலிருந்து புறப்பட்ட அம்பைப் போன்றது; அதை மீண்டும் பெறவே முடியாது.


பேசுவதற்கு முன் வார்த்தைகள் உனக்கு அடிமை; பேசிய பிறகு நீ அந்த வார்த்தைகளுக்கு அடிமை.


சிந்திக்காமல் பேசப்படும் ஒரு கெட்ட வார்த்தை, அல்லாஹ்வின் பெருங்கோபத்தை சம்பாதித்து நரகத்தின் ஆழத்தில் தள்ளிவிடும்.


சிந்தனையோடு பேசப்படும் ஒரு நல்ல வார்த்தை, இறைவனின் திருப்தியைப் பெற்றுத் தந்து சொர்க்கத்தின் கதவுகளைத் திறக்கும்.


இமாம் கஸ்ஸாலி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் கூறினார்கள்:-

"உன் எண்ணங்களில் கவனம் செலுத்து; ஏனெனில் அவை உனது சொற்களாகும்.

உன் சொற்களில் கவனம் செலுத்து; ஏனெனில் அவை உனது செயல்களாகும்.

உன் செயல்களில் கவனம் செலுத்து; ஏனெனில் அவை உனது பழக்க வழக்கங்களாகும்.

உன் பழக்க வழக்கங்களில் கவனம் செலுத்து; ஏனெனில் அவை உனது குணநலன்களாகும்.

உனது குணநலன்களில் கவனம் செலுத்து; ஏனெனில் அதுவே உனது வாழ்க்கையைத் தீர்மானிக்கிறது!”


தன் வாயால் அழிந்த ஃபிர்அவ்ன் 


நதியில் மிதந்து வந்த குழந்தை மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை எடுத்து வளர்க்க ஆசியா அம்மா ஆசைப்படுகிறார். அதை ஃபிர்அவ்ன் அந்த குழந்தையைக் கொல்ல ஓடிவந்தபோது, ஆசியா அம்மா அக்குழந்தையைத் தன் நெஞ்சோடு அணைத்து பாதுகாத்து, "இந்தக் குழந்தை எனக்கும் உனக்கும் கண் குளிர்ச்சியாக இருக்கக்கூடும்; இதைக் கொல்லாதீர்கள், இது நமக்கு பயனளிக்கலாம் அல்லது நம் குழந்தையாக வளர்க்கலாம்" என வேண்டுகிறார்கள்.

وَقَالَتِ امْرَاَتُ فِرْعَوْنَ قُرَّتُ عَيْنٍ لِّىْ وَلَكَ‌ لَا تَقْتُلُوْهُ ‌ عَسٰٓى اَنْ يَّـنْفَعَنَاۤ اَوْ نَـتَّخِذَهٗ وَلَدًا وَّهُمْ لَا يَشْعُرُوْنَ‏

(குழந்தையைக் கண்ட) ஃபிர்அவ்னின் மனைவி (“இக்குழந்தை) எனக்கும் உங்களுக்கும் கண் குளிர்ச்சியாக இருக்கிறது - இதை நீங்கள் கொன்று விடாதீர்கள்; நமக்கு இவர் பயன் அளிக்கக்கூடும்; அல்லது நாம் இவரை நம் புதல்வராக்கிக் கொள்ளலாம்” என்று சொன்னார்; இன்னும் அவர்கள் (இதன் விளைவு என்னவாகும் என்பதை) உணர்ந்து கொள்ளவில்லை.(அல்குர்ஆன் : 28:9)


இப்னு கதீர் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் குறிப்பிட்டுப் பேசுகையில், ஃபிர்அவ்ன் அப்போது, "இது உனக்குக் கண் குளிர்ச்சியாக இருக்கட்டும் (ஐனீ லக்), எனக்கு வேண்டாம் (ஃபலீ)" என்று அலட்சியமாக உரைத்தான்.  


"வல் பலாஉ முஅக்கலும் பில் மந்திக்" — மனிதனுக்கு வரும் சோதனைகளும் விதிகளும் அவனது நாவிலிருந்து வெளிப்படும் வார்த்தைகளுடனே பிணைக்கப்பட்டுள்ளன.


ஃபிர்அவ்ன் அன்று அமைதியாக இருந்திருந்தால் அல்லது நல்ல வார்த்தை கூறியிருந்தால் அவனுக்கும் நேர்வழி (ஹிதாயத்) கிடைத்திருக்கக் கூடும். ஆனால் அவன் கூறிய எதிர்மறையான வார்த்தையே அவனது அழிவுக்குக் காரணமாக அமைந்தது.

அழிவைத் தீர்மானித்த வார்த்தைகள் 


ஃபிர்அவ்னிடம் ஒருவர் ஒருமுறை விளையாட்டாக, "எகிப்து நாடு எனக்குச் சொந்தம் என்று யாராவது சொன்னால் என்ன செய்வது?" என்று கேட்டபோது, "அப்படிச் சொல்பவனைத் தண்ணீரில் மூழ்கடித்துக் கொல்ல வேண்டும்" என்றான்.


பிற்காலத்தில் தானே இறைவன் ("அன ரப்புகுமுல் அஃலா") எனக் கூறியபோது, அவன் தன் நாவால் சொன்ன அதே தண்டனையான தண்ணீரில் மூழ்கடிக்கப்பட்டு அழிவதை அல்லாஹ் அவனுக்கு வழங்கினான்.


நாம் பேசும் ஒவ்வொரு வார்த்தையிலும் கவனமாக இருக்க வேண்டும் கோபம், அதிகாரம், செல்வம் அல்லது அறியாமையின் காரணத்தால் தவறான, ஆபத்தான வார்த்தைகளைப் பேசிவிடக் கூடாது.


நமது நாவிலிருந்து வெளிப்படும் வார்த்தைகளே நமக்கான நன்மையையோ அல்லது சோதனையையோ தீர்மானிக்கின்றன.


நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் எச்சரிக்கை 


إِنَّ الْعَبْدَ لَيَتَكَلَّمُ بِالْكَلِمَةِ مِنْ رِضْوَانِ اللَّهِ، لاَ يُلْقِي لَهَا بَالاً، يَرْفَعُهُ اللَّهُ بِهَا دَرَجَاتٍ، وَإِنَّ الْعَبْدَ لَيَتَكَلَّمُ بِالْكَلِمَةِ مِنْ سَخَطِ اللَّهِ، لاَ يُلْقِي لَهَا بَالاً، يَهْوِي بِهَا فِي جَهَنَّمَ

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: "ஒரு அடியான் இறைவனின் திருப்திக்குரிய ஒரு வார்த்தையை, அதன் முக்கியத்துவத்தைச் பெரிதாக எண்ணாமல் பேசுகிறான்; அதன் காரணமாக அல்லாஹ் அவனது அந்தஸ்துகளை உயர்த்தி விடுகிறான்.

அவ்வாறே, ஒரு அடியான் இறைவனின் பெருங்கோபத்திற்குரிய ஒரு வார்த்தையை, அதன் விளைவைப் பற்றி யோசிக்காமல் பேசுகிறான்; அதன் காரணமாக அவன் நரகத்தில் வீழ்ந்து விடுகிறான்."நூல்: ஸஹீஹ் அல்-புகாரி


பற்களும் நாவும் – ஒரு தத்துவப் பாடம் 

ஒரு பெரியவரிடம் உபதேசம் கேட்டபோது, அவர் வாயைத் திறந்து காட்டினார்.

மனித உடலில் கடினமான பற்கள் வயது முதிரும்போது உதிர்ந்து விடுகின்றன; ஆனால் மென்மையான நாவு வாழ்நாள் இறுதி வரை நிலைத்து நிற்கிறது மென்மை, நளினம் மற்றும் மிருதுவான தன்மையே காலத்தைக் கடந்து நிற்கும் என்பதை இது உணர்த்துகிறது.


ஹுதைபிய்யா உடன்படிக்கை

ஹிஜ்ரி 6-ஆம் ஆண்டு, இறைத்தூதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் முஸ்லிம்களும் உம்ரா செய்வதற்காக மக்கா நோக்கிச் சென்றபோது, குரைஷிகள் அவர்களை மக்காவிற்குள் நுழைய விடாமல் 'ஹுதைபிய்யா' என்னுமிடத்தில் தடுத்தனர். அங்கு இரு தரப்பிற்கும் இடையே ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது.


குரைஷிகளின் சார்பாக வந்த சுஹைல் இப்னு அம்ரு என்பவனின் வற்புறுத்தலால், ஒப்பந்தத்தின் ஷரத்துகள் (விதிகள்) மிகவும் கண்டிப்பானவையாக எழுதப்பட்டன. அதில் ஒரு முக்கியமான ஷரத்து

"மக்காவிலிருந்து யாராவது தப்பித்து மதீனாவிற்கு (முஸ்லிம்களிடம்) வந்தால், அவர் முஸ்லிமாக மாறியிருந்தாலும் சரி, அவரை குரைஷிகளிடமே திருப்பி அனுப்ப வேண்டும்."


இந்த ஒப்பந்தப் பத்திரம் எழுதப்படும்போது, சுஹைல் இப்னு அம்ரு அரபி மொழியில் "ரஜுல்" (رَجُلٌ - ஆண் / மனிதன்) என்ற வார்த்தையைப் பயன்படுத்தியிருந்தான்.

அரபியில் 'ரஜுல்' என்றால் குறிப்பான ஆண் மகனையே குறிக்கும். (பெண்ணைக் குறிக்க 'இம்ரஅதுன்' - اِمْرَأَةٌ என்ற சொல் பயன்படும்).


ஒப்பந்தத்தில் "மக்காவிலிருந்து ஒரு ஆண் (ரஜுல்) வந்தால் திருப்பி அனுப்ப வேண்டும்" என்றே பொறிக்கப்பட்டது.


ஒப்பந்தம் முடிந்த சில நாட்களில், அபூ ஜந்தல் ரலியல்லாஹு அன்ஹு அபூ கதாதா ரலியல்லாஹு அன்ஹு போன்ற ஆண்கள் மக்காவிலிருந்து தப்பி வந்தபோது, ஒப்பந்தத்தின்படி நபிகளார் அவர்களைக் கணத்த இதயத்தோடு குரைஷிகளிடம் திருப்பி அனுப்பினார்கள்.


ஒப்பந்தம் நடைமுறையில் இருந்தபோது, மக்காவிலிருந்து உம்மு குல்தூம் பின்த் உக்பா ரலியல்லாஹு அன்ஹா என்ற மூமினான பெண்மணி, தன் மார்க்கத்தைப் பாதுகாப்பதற்காகப் பெருத்த சிரமங்களுக்கு இடையே மக்காவிலிருந்து மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்து வந்தார்.


அவரைத் தொடர்ந்து தேடிவந்த அவருடைய சகோதரர்கள் (அமாரா மற்றும் வலீத்), "ஒப்பந்தத்தின்படி எங்கள் சகோதரியை எங்களிடம் திருப்பித் தர வேண்டும்" என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கோரினார்கள்.

அப்போது அல்லாஹ் குர்ஆனின் 60-வது சூராவான சூரா அல்-மும்தஹினாவின் 10-வது வசனத்தை இறக்கினான்:


يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا جَاءَكُمُ الْمُؤْمِنَاتُ مُهَاجِرَاتٍ فَامْتَحِنُوهُنَّ...

"நம்பிக்கை கொண்டோரே! நம்பிக்கை கொண்ட பெண்கள் ஹிஜ்ரத் செய்து உங்களிடம் வந்தால், அவர்களைச் சோதித்துப் பார்த்துக் கொள்ளுங்கள்... அவர்கள் உண்மையான மூஃமின்கள் என நீங்கள் அறிந்தால், அவர்களை நிராகரிப்பாளர்களிடம் திருப்பி அனுப்பாதீர்கள்!"(சூரா அல்-மும்தஹினா 60:10)


இங்குதான் எழுதப்பட்ட சொற்களின் வலிமையும், மார்க்கத்தின் நுட்பமும் வெளிப்படுகிறது:


நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எக்காலத்திலும் கொடுத்த வாக்கையோ, ஒப்பந்தத்தையோ மீறியதே இல்லை.

ஒப்பந்தத்தில் எழுதப்பட்டது "ரஜுல்" (ஆண்) என்ற சொல் மட்டுமே. அதில் "பெண்கள்" (நிஸாஅ) என்ற சொல் இடம்பெறவில்லை.


குரைஷிகள் தங்களின் அறியாமையினாலும், ஆண்களை மட்டுமே முதன்மையாகக் கருதும் மனப்பான்மையினாலும் 'ரஜுல்' என்ற சொல்லைப் பயன்படுத்தினர். ஆனால், இறைவன் அந்தச் சொல்லின் சட்ட ரீதியான எல்லையைப் பயன்படுத்தி, மூஃமினான பெண்களுக்குப் பாதுகாப்பை வழங்கினான்.


குரைஷிகளால் நபிகளார் மீது "நீங்கள் ஒப்பந்தத்தை மீறிவிட்டீர்கள்" என்று குற்றம் சாட்ட முடியவில்லை. ஏனென்றால், அவர்களின் சொந்த ஆவணத்தில் 'ஆண்' என்ற வார்த்தை மட்டுமே இருந்தது.


ஒரு ஒப்பந்தத்திலோ அல்லது வழக்கிலோ நாம் பயன்படுத்தும் ஒரு சிறிய வார்த்தை கூட ஒருவரின் வாழ்வையோ அல்லது உரிமையையோ தீர்மானிக்கும்.


உபாதா இப்னு அஸ்-ஸாமித் ரலியல்லாஹு அன்ஹு கூறினார்கள்:-


 عَنْ عُبَادَةَ بْنِ الصَّامِتِ رَضِيَ اللَّهُ عَنْهُ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَكِبَ يَوْمًا، وَاتَّبَعَهُ أَصْحَابُهُ، فَجَعَلَ لا يَمُرُّ بِشَيْءٍ إِلا صَدَقَهُ، وَلا يَسْبِقُهُ أَحَدٌ، فَقَالَ مُعَاذُ بْنُ جَبَلٍ: يَا رَسُولَ اللَّهِ، ادْعُ اللَّهَ لِي أَنْ لا أَرَاكَ بَعْدَ يَوْمِي هَذَا، وَأَنْ يَجْعَلَ يَوْمِي قَبْلَ يَوْمِكَ، وَاللَّهِ لَئِنْ مِتَّ قَبْلَنَا لَنَرَيَنَّ بَعْدَكَ مَا لا نُحِبُّ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ أَفْضَلَ الأَعْمَالِ الْجِهَادُ فِي سَبِيلِ اللَّهِ، وَلَكِنَّ لِلنَّاسِ سَاعَاتٍ وَأَحْوَالاً، وَلَكِنْ شَيْءٌ يُكْفَى بِهِ الْعَبْدُ، الشَّدِيدُ عَلَى النَّفْسِ»، فَقَالَ مُعَاذٌ: يَا رَسُولَ اللَّهِ، الصِّيَامُ وَالصَّدَقَةُ؟ قَالَ: «إِنَّ الصِّيَامَ وَالصَّدَقَةَ لَحَسَنٌ، وَلَكِنَّ لِلنَّاسِ فِيهِ سَاعَاتٍ، وَشَيْءٌ يُكْفَى بِهِ الْعَبْدُ، وَهُوَ شَدِيدٌ عَلَى النَّفْسِ»، فَمَا تَرَكَ مُعَاذٌ شَيْئًا مِنْ أَعْمَالِ الْبِرِّ إِلا ذَكَرَهُ، وَرَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «حَسَنٌ، وَلَكِنَّ لِلنَّاسِ فِيهِ سَاعَاتٍ، وَشَيْءٌ يُكْفَى بِهِ الْعَبْدُ، وَهُوَ شَدِيدٌ عَلَى النَّفْسِ»، ثُمَّ أَشَارَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى لِسَانِهِ، فَقَالَ: «الصَّمْتُ إِلا مِنْ خَيْرٍ»، فَقَالَ مُعَاذٌ: وَإِنَّا لَمُؤَاخَذُونَ بِمَا نَتَكَلَّمُ بِهِ؟ فَضَرَبَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَخِذَ مُعَاذٍ، ثُمَّ قَالَ: «ثَكِلَتْكَ أُمُّكَ يَا مُعَاذُ! وَهَلْ يَكُبُّ النَّاسَ فِي النَّارِ عَلَى وُجُوهِهِمْ - أَوْ عَلَى مَنَاخِرِهِمْ - إِلا حَصَائِدُ أَلْسِنَتِهِمْ؟ فَمَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الآخِرِ فَلْيَقُلْ خَيْرًا أَوْ لِيَسْكُتْ عَنْ شَرٍّ، قُولُوا خَيْرًا تَغْنَمُوا، وَاكْفُفُوا عَنْ شَرٍّ تَسْلَمُوا».


உபாதா இப்னு அஸ்-ஸாமித் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்:

ஒருமுறை அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (தம் வாகனத்தில்) ஏறிச் சென்றார்கள். அவர்களுடன் சஹாபாக்களும் பின் தொடர்ந்து சென்றார்கள். (வழியில்) நபியவர்கள் கடந்து செல்லும் ஒவ்வொரு பொருளும் அவர்களை உண்மையாளராக ஏற்றுக்கொண்டன (சாட்சி கூறின). மேலும், யாரும் நபியவர்களை முந்திச் செல்லவில்லை.


அப்போது முஆத் இப்னு ஜபல் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! இந்த நாளுக்குப் பிறகு தங்களை (இழந்து) நான் பார்க்காமல் இருக்கவும், எனது மரணத்தை தங்களது மரணத்திற்கு முன் ஆக்கவும் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யுங்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக! தங்களுக்குப் பிறகு நாங்கள் வாழ நேரிட்டால், நாங்கள் விரும்பாத பலவற்றை பார்க்க நேரிடும்" என்று கூறினார்கள்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்:

"நிச்சயமாக அமல்களில் மிகச் சிறந்தது அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத் செய்வதாகும். ஆனால், மக்களுக்கு அதற்கென குறிப்பிட்ட நேரங்களும் சூழ்நிலைகளும் இருக்கின்றன. ஆனால், அடியானுக்குப் போதுமான, நஃப்ஸுக்கு (மனதிற்கு) மிகவும் பாரமான ஒரு விஷயம் உள்ளது" என்றார்கள்.


உடனே முஆத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்: "அல்லாஹ்வின் தூதரே! நோன்பும் தர்மமுமா?" என்று கேட்டார்கள்.

அதற்கு நபியவர்கள்: "நிச்சயமாக நோன்பும் தர்மமும் நல்லவைதான். ஆனால், மக்களுக்கு அதிலும் சில குறிப்பிட்ட நேரங்கள் மட்டுமே உள்ளன. அடியானுக்குப் போதுமான, மனதிற்கு மிகவும் பாரமான ஒரு விஷயம் இருக்கிறது" என்றார்கள்.


முஆத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் நன்மைகளில் எதையும் விடாமல் ஒவ்வொன்றாகக் கேட்டுக் கொண்டே இருந்தார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்: "நல்லதுதான், ஆனால் மக்களுக்கு அதிலும் குறிப்பிட்ட நேரங்களே உள்ளன. அடியானுக்குப் போதுமான, மனதிற்கு மிகவும் பாரமான ஒரு விஷயம் இருக்கிறது" என்றே கூறிவந்தார்கள்.


பிறகு, அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தன்னுடைய நாவை சுட்டிக்காட்டி: "நன்மையான விஷயங்களைத் தவிர மற்றவற்றில் மௌனமாக இருப்பதுதான் அது!" என்று கூறினார்கள்.


உடனே முஆத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்: "(அல்லாஹ்வின் தூதரே!) நாங்கள் பேசுவதற்காகவுமா விசாரிக்கப்பட்டு தண்டிக்கப்படுவோம்?" என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் முஆத் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் தொடையில் தட்டி:


"முஆதே! உன்னைப் பெற்றவள் இழக்கட்டும்! மனிதர்களை நரகத்தில் முகங்குப்புற (அல்லது மூக்கின் மீது) விழ வைப்பது அவர்களின் நாவுகள் அறுவடை செய்த (தீய) பேச்சுகளைத் தவிர வேறு என்ன? எனவே, அல்லாஹ்வையும் மறுமை நாளையும் ஈமான் கொண்டவர் நன்மையானதையே பேசட்டும் அல்லது தீமையானதை விட்டு மௌனமாக இருக்கட்டும்! நீங்கள் நல்லவற்றைப் பேசுங்கள்; லாபமடைவீர்கள். 


தீயவற்றைப் பேசாமல் தவிர்ந்து கொள்ளுங்கள்; ஈருலக ஆபத்துகளிலிருந்தும் பாதுகாப்பு பெறுவீர்கள்" என்று கூறினார்கள். நூல்: அல்-முஃஜமுல் கபீர் - இமாம் அத்-தப்ரானீ)


عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: تُوُفِّيَ رَجُلٌ مِنْ أَصْحَابِهِ يَوْمَ أُحُدٍ، فَوُجِدَ عَلَى بَطْنِهِ حَجَرٌ مَرْبُوطٌ مِنَ الْجُوعِ، فَمَسَحَتْ أُمُّهُ الترَابَ عَنْ وَجْهِهِ، وَقَالَتْ: أَبْشِرْ يَا بُنَيَّ بِالْجَنَّةِ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «وَمَا يُدْرِيكِ؟ لَعَلَّهُ كَانَ يَتَكَلَّمُ بِمَا لا يَعْنِيهِ، أَوْ يَمْنَعُ مَا لا يُنْقِصُهُ».

(مسند أبي يعلى الموصلي)

அனஸ் இப்னு மாலிக் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்:

உஹுதுப் போரின் போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தோழர்களில் ஒருவர் ஷஹீதானார் (கொல்லப்பட்டார்). பசியின் காரணத்தால் அவருடைய வயிற்றில் கல் கட்டப்பட்டிருந்தது. அவருடைய தாயார் (அருகில் வந்து) அவருடைய முகத்திலிருந்து மண்ணைத் துடைத்தவாறு, "என் அருமை மகனே! உனக்குச் சொர்க்கத்தைக் கொண்டு நற்செய்தி பெறுக!" என்று கூறினார்.


அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அப்பெண்ணை நோக்கி:"உனக்கு எவ்வாறு தெரியும்? ஒருவேளை அவர் தனக்குச் சம்பந்தமில்லாத (தேவையற்ற) விஷயங்களைப் பேசியிருக்கலாம்; அல்லது தன்னிடம் இருக்கும் பொருள் குறைந்துவிடாது என்னும் நிலையிலும் (பிறருக்குக் கொடுக்காமல்) கஞ்சத்தனம் செய்திருக்கலாம் அல்லவா?" என்று கூறினார்கள். நூல்: முஸ்னத் அபீ யஃலா


நாவினால் ஏற்படக்கூடிய 5 முக்கிய பாவங்கள்,


நாவினால் நிகழும் 'ஷிர்க்' 

இஸ்லாத்தில் இணைவைப்பு இரு வகைப்படும்:

ஷிர்க் அக்பர் (பெரிய இணைவைப்பு): மனிதனை இஸ்லாத்தை விட்டே வெளியேற்றி, நரகத்தில் நிரந்தரமாக்கும் பாவம்.ஷிர்க் அஸ்கர் (சிறிய இணைவைப்பு): ஈமானைப் பலவீனப்படுத்தி, நன்மைகளை அழித்துவிடும் பாவம். நாவினால் பேசப்படும் பல வார்த்தைகள் அறியாமையினாலும், நிதானமின்மையினாலும் இந்த இரு வகைகளுள் ஒன்றைச் சார்ந்ததாக அமைந்துவிடுகின்றன.


 "அல்லாஹ்வையன்றி உனக்குப் பலனுமளிக்காத, உனக்கு நஷ்டமுமேற்படுத்தாத எதனையும் நீர் பிரார்த்திக்க வேண்டாம்; (அவ்வாறு) செய்வீராயின் நிச்சயமாக நீர் அநியாயக்காரர்களில் ஒருவராகி விடுவீர்!" (சூரா யூனுஸ் 10:106).


அல்லாஹ்வின் விதியை (கத்ர்) நிந்தித்தல் & குறை கூறுதல்:

வாழ்க்கையில் கஷ்டங்கள், இழப்புகள் வரும்போது கோபத்தில் "கடவுளுக்குக் கண்ணே இல்லை", "அல்லாஹ் என்னை மட்டும் ஏன் இப்படிச் சோதிக்கிறான்?", "நான் என்ன பாவம் செய்தேன் என்று எனக்கு இப்படித் தண்டனை தருகிறான்?" என்று கூறுவது. இது அல்லாஹ்வின் நீதி, ஞானம் மற்றும் அவனது ஆற்றல் மீது சந்தேகம் கொள்வதாகும். படைப்பாளனை நோக்கிப் படைப்பு கேட்கும் இத்தகைய கேள்விகள் ஈமானை அசைத்துப் பார்க்கக்கூடியவை.


அல்லாஹ்வின் பெயரைத் தவிர்த்துப் பெற்றோர் மீது, பிள்ளைகள் மீது, தலை மீது, அல்லது தொழில் மீது சத்தியம் செய்வது.


நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: "யார் அல்லாஹ் அல்லாதவர்கள் மீது சத்தியம் செய்கிறாரோ, அவர் இணைவைத்து விட்டார்." நூல்: அபூ தாவூத் 


 ஒரே ஒரு வார்த்தையால் அழிந்தவனும், சொர்க்கம் சென்றவனும்

அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்:-

நாவினால் வெளிப்படும் ஒரு வார்த்தை மனிதனின் முடிவை எப்படித் தீர்மானிக்கிறது நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:-

பனீ இஸ்ரவேல் சமுதாயத்தில் இரு மனிதர்கள் இருந்தனர். ஒருவர் எப்போதும் வணக்க வழிபாடுகளில் ஈடுபடக்கூடியவராக இருந்தார்; மற்றொருவர் பாவங்களில் ஈடுபடுபவராக இருந்தார்.

வணக்கசாளி, அந்தப் பாவியைக் காணும்போதெல்லாம் "பாவங்களை விட்டு விலகு!" என்று உபதேசம் செய்துகொண்டே இருந்தார். ஒருநாள், அந்தப் பாவி ஒரு மிகப்பெரிய பாவத்தைச் செய்துகொண்டிருந்தபோது, வணக்கசாளி அவரிடம் சென்று, "அல்லாஹ்வை அஞ்சிக்கொள்! இந்த நிலையை விட்டு விலகு!" என்றார்.

அதற்கு அந்தப் பாவி, "என்னை என் இறைவனின் போக்கிலேயே விட்டுவிடு! என்னை உளவு பார்ப்பவனாகவா அல்லாஹ் உன்னை அனுப்பினான்?" என்று கோபமாகக் கேட்டார்.


அப்போது, அந்த வணக்கவாளி நிதானமிழந்து, தன் நாவினால் பின்வரும் வார்த்தையைக் கூறினார்:

"அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அல்லாஹ் உன்னை ஒருபோதும் மன்னிக்க மாட்டான்! அல்லது உன்னைச் சொர்க்கத்தில் சேர்க்கவே மாட்டான்!"


இருவரும் மரணித்த பிறகு, அல்லாஹ் இவ்விருவரையும் தன் முன்னிலையில் நிறுத்தினான். அல்லாஹ் அந்த வணக்கசாளியைப் பார்த்து, "என் ஆற்றலை நீ அறிந்துகொண்டாயா? அல்லது என் கையில் இருக்கும் அதிகாரத்தைக் கட்டுப்படுத்த உன்னால் முடியுமா?" என்று கேட்டுவிட்டு, வானவர்களை நோக்கி, "இவனை (வணக்கசாளியை) நரகத்தில் தூக்கி எறியுங்கள்!" என்று கட்டளையிட்டான்.


பின்னர், அந்தப் பாவியைப் பார்த்து, "என்னுடைய அருளினாலும் கருணையினாலும் நீ சொர்க்கத்தில் நுழைவாயாக!" என்று தீர்ப்பளித்தான்.

(நூல்: சுனன் அபூ தாவூத் 4901, அஹ்மத் 


அந்த வணக்கவாளி காலமெல்லாம் தொழுது, இபாதத் செய்தவராக இருந்தாலும், "அல்லாஹ் உன்னை மன்னிக்க மாட்டான்" என்று அல்லாஹ்வின் அதிகாரத்திலும் ரஹ்மத்திலும் (கருணையிலும்) தலையிட்டு நாவினால் பேசிய ஒரு வார்த்தை, அவரது அனைத்து நன்மைகளையும் அழித்து நரகத்தில் தள்ளியது.


இந்த ஹதீஸை அறிவித்த நபித்தோழர் அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுவார்கள்: "அந்த மனிதர் தன் நாவினால் பேசிய ஒரே ஒரு வார்த்தை, அவருடைய இம்மையையும் மறுமையையும் அப்படியே பாழ்படுத்திவிட்டது!"


எத்தகைய அமல்கள் செய்திருந்தாலும், நாவைக் கட்டுப்படுத்தத் தவறினால், அறியாமையிலோ அல்லது கோபத்திலோ வெளிப்படும் வார்த்தைகள் நம்மை இறைவனின் கோபத்திற்கு ஆளாக்கிவிடும் என்பதை உணர்ந்து வாழ வேண்டும்.


மார்க்க அடையாளங்களைக் கேலி செய்வதன் ஆபத்து 


மார்க்கத்தையும், மார்க்கக் கட்டளைகளைப் பின்பற்றுபவர்களையும் கேலி செய்வது என்பது ஒரு மனிதனை அறியாமலேயே அவனை இஸ்லாத்தின் எல்லையை விட்டு வெளியேற்றக்கூடிய (குஃப்ரில் தள்ளக்கூடிய) கொடிய பாவமாகும்.


ஒரு மனிதனின் இயல்பான நடத்தை, உலகியல் சார்ந்த பலவீனம் அல்லது தனிப்பட்ட குறைபாட்டிற்காக அவரைக் கேலி செய்வது பெரும் பாவமாகும் (ஹராம்). ஆனால், ஒருவர் வைத்துள்ள தாடி, அணியும் சுன்னா உடை, ஹிஜாப் (பர்தா), ஓதும் குர்ஆன், தொழுகை அல்லது அவரது மார்க்கப் பேணலைக் கண்டு கிண்டல் செய்தால், அது அந்த தனிநபரை நோக்கிய கேலி அல்ல. மாறாக, அவர் பின்பற்றும் மார்க்கக் கட்டளையையும், அதை நமக்கு வழிகாட்டிய அல்லாஹ்வையும் அவனது தூதரையும் கேலி செய்வதாகும்.


ஷஆஇருல்லாஹ் (அல்லாஹ்வின் அடையாளங்கள்):

அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்:"எவர் அல்லாஹ்வின் அடையாளங்களைக் கண்ணியப்படுத்துகிறாரோ, நிச்சயமாக அது உள்ளங்களின் இறையச்சத்தினால் ஏற்படுவதாகும்."(சூரா அல்-ஹஜ் 22:32)


அல்லாஹ்வின் அடையாளங்களை மதிப்பது ஈமானின் அடையாளம் எனும்போது, அதை ஏளனம் செய்வதும் கேலி பேசுவதும் ஈமானற்ற தன்மையின் (நயவஞ்சகத்தின்) வெளிப்பாடாகும்.


குர்ஆனின் சூரா அத்-தவ்பா (9:65-66) வசனங்கள் இறங்குவதற்குக் காரணமான வரலாற்று நிகழ்வு மார்க்க அடையாளங்களைக் கேலி செய்பவர்களுக்கு ஒரு மிகப்பெரிய எச்சரிக்கையாகும்.


ஹிஜ்ரி 9-ஆம் ஆண்டு, கடும் கோடைக் காலத்தில், மிக நீண்ட தொலைவிலுள்ள தபூக் பகுதிக்கு நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தலைமையிலான முஸ்லிம்களின் படை புறப்பட்டுச் சென்றது.


அந்தப் பயணத்தின் போது, நயவஞ்சகர்களில் (முனாஃபிக்கீன்களில்) ஒருவன் ஒரு சபையில் அமர்ந்து, இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களையும், குர்ஆன் மனனம் செய்த ஹாஃபிழிகளான நபித்தோழர்களையும் சுட்டிக்காட்டி பின்வருமாறு கேலியாகப் பேசினான்:


"இவர்களைப் (ஹாஃபிழ்கள் மற்றும் அறிஞர்களைப்) போல அதிகமான சாப்பாட்டு ராமர்களையும், பேசுவதில் பெரும் பொய்யர்களையும், போர்க்களத்தில் அதிக பயந்தாங்கொள்ளிகளையும் நாம் கண்டதே இல்லை!"


அங்கே அமர்ந்திருந்த அவ்ஃப் இப்னு மாலிக் ரலியல்லாஹு அன்ஹு என்ற உண்மையாளரான நபித்தோழர் இதைக் கேட்டு கடும் கோபமடைந்து, "நீ பொய் சொல்கிறாய்! நீ ஒரு நயவஞ்சகன். நிச்சயமாக நான் இதை அல்லாஹ்வின் தூதரிடம் தெரிவிப்பேன்" என்று கூறிவிட்டு நபிகளாரிடம் சென்றார். ஆனால், அதற்குள்ளாகவே ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மூலமாக அல்லாஹ் நபிகளாருக்கு அந்தச் செய்தியையும், அதற்கான குர்ஆன் வசனத்தையும் இறக்கிவிட்டான்.


செய்தி தெரிந்ததும், கேலி பேசிய வதீஆ இப்னு ஃபஜாம் என்பவன் ஓடோடி வந்து, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஒட்டகத்தின் கயிற்றைப் பிடித்துக்கொண்டு, "அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் சும்மா தமாஷாகப் பேசினோம். நீண்ட பயணத்தின் சலிப்பைப் போக்குவதற்காக விளையாட்டாகப் பேசிய வார்த்தைகள்தான் இவை" என்று சாக்குப்போக்குக் கூறினான்.


அவன் ஒட்டகத்தின் கடிவாளத்தைப் பிடித்துக் கொண்டு கற்களில் கால் இடறி ஓடிவரும் நிலையில், நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனைக் திரும்பிப் பார்க்காமல், அல்லாஹ் இறக்கிய வசனத்தை மட்டுமே ஓதிக்காட்டினார்கள்:


وَلَئِن سَأَلْتَهُمْ لَيَقُولُنَّ إِنَّمَا كُنَّا نَخُوضُ وَنَلْعَبُ ۚ قُلْ أَبِاللَّهِ وَآيَاتِهِ وَرَسُولِهِ كُنتُمْ تَسْتَهْزِئُونَ ۝ لَا تَعْتَذِرُوا قَدْ كَفَرْتُم بَعْدَ إِيمَانِكُمْ

"நீர் அவர்களிடம் (இதைக் குறித்துக்) கேட்டால், 'நாங்கள் சும்மா விளையாட்டாகவும் தமாஷாகவும் உரையாடிக் கொண்டிருந்தோம்' என்றுதான் கூறுவார்கள். (அதற்கு நீர்) 'அல்லாஹ்வையும், அவனுடைய வசனங்களையும், அவனுடைய தூதரையா நீங்கள் கேலி செய்து கொண்டிருந்தீர்கள்?' என்று கேளும். சாக்குப்போக்குக் கூறாதீர்கள்! நம்பிக்கை கொண்ட பின் நிச்சயமாக நீங்கள் நிராகரித்து விட்டீர்கள் (காஃபிராகிவிட்டீர்கள்)."(சூரா அத்-தவ்பா 9:65-66)


'தமாஷ்' என்ற சாக்குப்போக்கு செல்லாது: மார்க்க விஷயங்களிலும், நல்லோர்களின் அடையாளங்களிலும் நகைச்சுவை (Jokes) என்ற பெயரில் கேலி செய்யவே கூடாது. அல்லாஹ் "விளையாட்டாகப் பேசினோம்" என்ற அவர்களின் சாக்குப்போக்கை ஏற்க மறுத்துவிட்டான்.


"நம்பிக்கை கொண்ட பின் நிராகரித்து விட்டீர்கள்" என்ற இறைவசனம், மார்க்கக் கேலி மனிதனை இஸ்லாத்தை விட்டே வெளியேற்றிவிடும் என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. உலமாக்கள், ஹாஃபிழ்கள் அல்லது மார்க்கத்தைப் பேணுபவர்களிடம் ஏதேனும் மனித பலவீனங்களைக் கண்டால் கூட, அவர்களின் மார்க்கப் பேணலையும் உடைகளையும் சுட்டிக்காட்டி ஏளனம் செய்யக் கூடாது.


3) புறம் பேசுதல் (ஃகீபத்)

மனித உறவுகளையும், சமூக ஒற்றுமையையும் அடியோடு அறுத்து எறியக்கூடிய கொடிய நோய் புறம் பேசுதல் ஆகும்.


ஒருமுறை அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தோழர்களைப் பார்த்து, "புறம் பேசுதல் (கிஃபத்) என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா?" எனக் கேட்டார்கள். அதற்குத் தோழர்கள், "அல்லாஹ்வும் அவனது தூதருமே நன்கறிவர்" என்றனர்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:

"உன் சகோதரன் வெறுப்பதை அவனில்லாத நேரத்தில் நீ பேசுவதாகும்."

அப்போது கேட்கப்பட்டது: "அல்லாஹ்வின் தூதரே! நான் சொல்லும் குறை என் சகோதரனிடம் உண்மையிலேயே இருந்தால் என்ன செய்வது?"

அதற்கு நபிகளார் கூறினார்கள்:

"நீ சொல்லும் குறை அவனிடம் உண்மையிலேயே இருந்தால் நீ அவனைப் பற்றிப் புறம் பேசிவிட்டாய்! நீ சொல்லும் குறை அவனிடம் இல்லை என்றால், அவன் மீது நீ அவதூறு சுமத்திவிட்டாய்!"(நூல்: ஸஹீஹ் முஸ்லிம் 2589)


அல்லாஹ் குர்ஆனில் புறம் பேசுவதை மிக அருவருப்பான ஒரு செயலோடு ஒப்பிட்டுக் காட்டுகிறான்:

وَلَا يَغْتَب بَّعْضُكُم بَعْضًا ۚ أَيُحِبُّ أَحَدُكُمْ أَن يَأْكُلَ لَحْمَ أَخِيهِ مَيْتًا فَكَرِهْتُمُوهُ

"...உங்களில் சிலர் சிலரைப் பற்றிப் புறம் பேச வேண்டாம். உங்களில் எவராவது தம்முடைய இறந்த சகோதரனின் மாமிசத்தைப் புசிக்க விரும்புவாரா? அதனை நீங்கள் அருவருப்பீர்கள்!"(சூரா அல்-ஹுஜுராத் 49:12)


இறந்த மனிதன் தன் உடலிலிருந்து மாமிசம் பிய்க்கப்படுவதைத் தடுக்க முடியாது; அதேபோலத் தான் இல்லாத இடத்தில் தன்னைப் பற்றிப் பேசப்படும் புறத்தைப் தற்காத்துக் கொள்ள அந்த மனிதனால் முடியாது. எனவேதான் அல்லாஹ் அதைச் செத்த சகோதரனின் மாமிசத்தைச் சாப்பிடுவதற்குச் சமமாகக் கூறுகிறான்.


இமாம் அப்துல்லாஹ் இப்னு வஹ்ப் அல்-மிஸ்ரி (ரஹ்) 


இமாம் அப்துல்லாஹ் இப்னு வஹ்ப் அல்-மிஸ்ரி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் (ஹிஜ்ரி 125 – 197) அவர்கள் எகிப்தைச் சேர்ந்த மாபெரும் ஹதீஸ் கலை வல்லுநராகவும், ஃபிக்ஹ் (மார்க்கச் சட்ட) மேதையாகவும் திகழ்ந்தவர். இமாம் மாலிக் ரஹ்மத்துல்லாஹி அலைஹி மற்றும் இமாம் லைஸ் இப்னு ஸாத் ரஹ்மத்துல்லாஹி அலைஹி ஆகிய இமாம்களின் முதன்மைச் சீடராக விளங்கியவர். கல்வியிலும், பேணுதலிலும் (தக்வா) உச்சத்திலிருந்த இவர், தன் நாவைப் பேணுவதற்காகக் கையாண்ட வழிமுறைதான்


அப்துல்லாஹ் இப்னு வஹ்ப் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் கூறுகிறார்கள்:- "நான் யாரைப் பற்றியாவது புறம் பேசினால் (கிஃபத் செய்தால்), அதற்காக ஒரு நாள் நோன்பு நோற்பேன் என்று எனக்குத்தானே நேர்ச்சை (நத்ர்) செய்து கொண்டேன். ஆனால், நான் புறம் பேசுவதும், அதற்காக நோன்பு நோற்பதுமாகவே இருந்தது. நோன்பு நோற்பது எனக்கு எளிதாகிவிட்டதால், புறம் பேசுவது முற்றிலும் நிற்கவில்லை."


"பின்னர், நான் யாரைப் பற்றியாவது புறம் பேசினால், ஒரு திர்ஹம் (வெள்ளி நாணயம்) தர்மம் செய்வேன் என்று நேர்ச்சை செய்தேன். பணத்தின் மீது மனித இயல்பாக இருக்கும் பற்றின் காரணமாக, ஒரு திர்ஹம் தர்மம் செய்வது எனக்குக் கடினமாக இருந்தது. அதன் பிறகுதான் புறம் பேசுவதை நான் முற்றிலுமாக விட்டுவிட்டேன்.”


தீய பழக்கங்களிலிருந்து விடுபட விரும்புபவர்கள், தங்களுக்கு மிகவும் விருப்பமான ஒன்றை இழக்கும்படியான சுயதண்டனையை விதித்துக்கொண்டால் மட்டுமே அந்தப் பழக்கத்திலிருந்து முழுமையாக மீள முடியும்.


நாம் பொதுவாகத் தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ் போன்ற கடமைகளை மட்டுமே 'இபாதத்' என்று நினைக்கிறோம். ஆனால், முன்னோர்களான சலஃபுகளின் பார்வையில், பிற முஸ்லிம்களின் உரிமைகளையும் கண்ணியத்தையும் பாதுகாப்பதும், நாவைக் கட்டுப்படுத்துவதும் மாபெரும் இபாதத்தாகும்.


ஒரு முறை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், "உங்களில் உண்மையிலேயே ஏழை (முஃப்லிஸ்) யார் தெரியுமா?" எனக் கேட்டார்கள். தோழர்கள், "காசு பணம் இல்லாதவர்" என்றனர். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், "மறுமை நாளில் தொழுகை, நோன்பு, ஜகாத்துடன் வரும் ஒருவன், ஒருவனைத் திட்டியிருப்பான்; மற்றொருவனைப் பற்றிப் புறம் பேசியிருப்பான்; இன்னொருவனின் பொருளைச் சாப்பிட்டிருப்பான். அவனது நன்மைகள் எல்லாம் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பிரித்துக் கொடுக்கப்படும். நன்மைகள் தீர்ந்த பிறகு, அவர்களின் பாவங்கள் இவன் மீது சுமத்தப்பட்டு, இவன் நரகத்தில் தூக்கி எறியப்படுவான். இவனே ஏழை" என்றார்கள் நூல்: முஸ்லிம்.


கோள் சொல்லுதல் (நமீமத்)

இரு மனிதர்கள், குடும்பங்கள் அல்லது நண்பர்களுக்கு இடையே பகையையும் சண்டையையும் மூட்டிவிடும் நோக்கத்தில், ஒருவர் பேசியதை அப்படியே இன்னோருவரிடம் கொண்டு சென்று பேசுவது கோள் சொல்லுதல் (நமீமத்) எனப்படும்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:

لَا يَدْخُلُ الْجَنَّةَ قَتَّاتٌ نَمَّامٌ

"கோள் சொல்பவன் (நம்மாம்) சொர்க்கத்தில் நுழைய மாட்டான்."

நூல்: ஸஹீஹ் அல்-புகாரி 


நரக வேதனையைக் கண்ட நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் 

ஒருமுறை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இரு கப்ருகளைக் கடந்து சென்றபோது நிறுத்தி, "இந்தக் கப்ருகளில் இருப்பவர்கள் இருவரும் வேதனை செய்யப்படுகிறார்கள். அவர்கள் இருவரும் பெரிய விஷயம் என்று நினைக்காத ஒன்றிற்காக வேதனை செய்யப்படுகிறார்கள்" என்றார்கள்.

பின்னர் அதற்கான காரணத்தைக் கூறினார்கள்:

"ஒருவர் தான் சிறுநீர் கழிக்கும் போது (சுத்தம் பேணாமல்) மறைக்காமல் இருந்தார்."

"மற்றொருவன் மனிதர்களிடையே கோள் சொல்லி (நமீமத் பேசி)த் திரிந்துகொண்டிருந்தான்."நூல்: ஸஹீஹ் அல்-புகாரி 


அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறினார்கள்:

நான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் நபிகளாரின் மற்றொரு மனைவியான ஸஃபிய்யா ரலியல்லாஹு அன்ஹா அவர்களைப் பற்றி, "அவர் குள்ளமானவர் என்பது உங்களுக்குப் போதுமான சான்றாக இருக்கிறதே" என்று தன் கையால் சைகை செய்து கூறினேன்.


அதைக் கேட்ட நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் முகம் மாறிப் பின்வருமாறு கூறினார்கள்:

"ஆயிஷாவே! நீ இப்போது ஒரு வார்த்தையைப் பேசிவிட்டாய். அந்த வார்த்தையைக் கடலின் தண்ணீரில் கலந்தால், அது கடல் முழுவதையும் (அதன் சுவையையும் நிறத்தையும்) மாற்றிவிடக்கூடிய அளவிற்கு ஆபத்தானது!"

நூல்: சுனன் அபூ தாவூத் 


ஒருவரின் உயரத்தைக் குறித்துக் கூறிய ஒரு சிறிய வார்த்தையே கடலையே மாசுபடுத்தும் அளவு பாவமானது என்றால், நாம் அன்றாடம் பேசும் புறங்களின் நிலை என்ன என்பதைச் சிந்திக்க வேண்டும்.


மிஃராஜ் (விண்ணுலகப் பயணம்) இரவில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நரகத்தைக் கடந்து சென்றபோது ஒரு கூட்டத்தினரைக் கண்டார்கள்.

அவர்களுக்கு செம்பு நகங்கள் இருந்தன. அந்த நகங்களால் அவர்கள் தங்களின் முகங்களையும் நெஞ்சுகளையும் தாங்களே கிழித்துக் காயப்படுத்திக் கொண்டிருந்தனர்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம், "இவர்கள் யார்?" எனக் கேட்டதற்கு, ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் "இவர்கள் மனிதர்களின் மாமிசத்தைச் சாப்பிட்டவர்கள்; அதாவது புறம் பேசித் திரிந்தவர்கள் மற்றும் மனிதர்களின் கண்ணியத்தில் கை வைத்தவர்கள்" என்று பதிலளித்தார்கள்.நூல்: சுனன் அபூ தாவூத்


அனுமதிக்கப்பட்ட 6 பிரத்யேக சூழ்நிலைகள்

மார்க்கச் சட்டப்படி அனைத்து இடங்களிலும் புறம் பேசுவது ஹராம் என்றாலும், மக்களின் நலன் கருதி 6 குறிப்பிட்ட இடங்களில் மட்டும் ஒருவரைப் பற்றிய குறையைக் கூறுவது அனுமதிக்கப்பட்டுள்ளது (இமாம் நவவீ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் 'ரியாலுஸ் ஸாலிஹீன் கிதாபில் கூறுகிறார்கள்.


அநீதிக்கு எதிராக முறையிடுதல் (அல்-மழ்லூம்): பாதிக்கப்பட்ட ஒருவர் ஆட்சியாளரிடமோ அல்லது நீதிபதியிடமோ சென்று அநீதி இழைத்தவரைப் பற்றிக் கூறுவது.


தீமையைத் தடுக்க உதவி கோருதல்: ஒருவரின் தீய பழக்கத்தை மாற்றத் தகுதியுள்ளவரிடம் சென்று உதவி கோருவது.


மார்க்கத் தீர்ப்பு (ஃபத்வா) கேட்டல்: ஒருவர் முஃப்தியிடம் சென்று, "என் கணவர்/சகோதரர் எனக்கு இந்த அநீதியைச் செய்கிறார், இதற்கு மார்க்கத் தீர்ப்பு என்ன?" என்று கேட்பது (ஹிந்த் பின்த் உக்பா ரலி அவர்களின் சம்பவம் போல).


முஸ்லிம்களை எச்சரித்தல் (நஸீஹத்): வியாபாரத்தில் ஏமாற்றுபவரைப் பற்றி எச்சரிப்பது. திருமணப் பேச்சுவார்த்தையின் போது பெண்/மாப்பிள்ளையின் குறையை உண்மையாகவும் நேர்மையாகவும் தெரிவிப்பது.தவறான கொள்கையுடைய வழிகேடர்களைப் பற்றி மக்களை எச்சரிப்பது.


அடையாளத்திற்காகக் கூறுவது: ஒருவர் குருடர், நொண்டி அல்லது செவடன் என்ற அடைமொழியால் மட்டுமே அறியப்பட்டால், அவரைக் குறைத்து மதிப்பிடும் நோக்கமின்றி அடையாளத்திற்காக மட்டும் கூறுவது.


வெளிப்படையாகப் பாவம் செய்பவர்: பகிரங்கமாகப் பாவம் செய்யும் பாவியைப் பற்றிப் பேசுவது.


4) பொய் பேசுதலின் ஆபத்து 

இஸ்லாமிய நெறிமுறைகளில் பொய் என்பது மனிதனின் ஈமானை (நம்பிக்கையை) அடியோடு அரித்து அழிக்கும் ஒரு கொடிய நஞ்சாகும்.


பொய் பேசும் பழக்கம் உள்ளவனிடம் மற்ற எல்லாத் தீய குணங்களும் தானாகவே குடியேறிவிடும். ஒரு பொய்யை மறைக்க நூறு பொய்களைப் பேச வேண்டிய சூழல் உருவாகிறது.


நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:

 عَبْدِ اللَّهِ بنِ مَسْعُودٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:

«إِنَّ الصِّدْقَ يَهْدِي إِلَى الْبِرِّ، وَإِنَّ الْبِرَّ يَهْدِي إِلَى الْجَنَّةِ، وَإِنَّ الرَّجُلَ لَيَصْدُقُ حَتَّى يُكْتَبَ صِدِّيقًا، وَإِنَّ الْكَذِبَ يَهْدِي إِلَى الْفُجُورِ، وَإِنَّ الْفُجُورَ يَهْدِي إِلَى النَّارِ، وَإِنَّ الرَّجُلَ لَيَكْذِبُ حَتَّى يُكْتَبَ كَذَّابًا»

"நிச்சயமாக உண்மை நன்மைக்கு வழிகாட்டுகிறது; நன்மை சொர்க்கத்திற்கு வழிகாட்டுகிறது. ஒரு மனிதன் உண்மை பேசிக்கொண்டே இருக்கிறான்; இறுதியில் அவன் அல்லாஹ்விடம் 'உண்மையாளன்' (ஸித்தீக்) எனப் பதியப்படுகிறான்.

நிச்சயமாக பொய் தீமைக்கு வழிகாட்டுகிறது; தீமை நரகத்திற்கு வழிகாட்டுகிறது. ஒரு மனிதன் பொய் பேசிக்கொண்டே இருக்கிறான்; இறுதியில் அவன் அல்லாஹ்விடம் 'பொய்யன்' (கத்தாப்) எனப் பதியப்படுகிறான்."நூல் : ஸஹீஹ் அல்-புகாரி 

செய்திகளை ஆராயாமல் பரப்புவது 

இன்றைய நவீன உலகில் வாட்ஸ்அப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் உறுதிப்படுத்தப்படாத செய்திகளை ஆராயாமல் ஷேர் செய்வதும், "நான் கேள்விப்பட்டதைத்தானே சொன்னேன்" என்று அலட்சியமாகப் பேசுவதும் பொய்யின் ஒரு வடிவமே ஆகும்.

நபிகளாரின் எச்சரிக்கை:

كَفَى بِالْمَرْءِ كَذِبًا أَنْ يُحَدِّثَ بِكُلِّ مَا سَمِعَ

"தான் கேள்விப்பட்ட எல்லாவற்றையும் (உறுதிப்படுத்தாமல்) பேசுவதே ஒரு மனிதன் பொய்யன் என்பதற்குப் போதுமானதாகும்."நூல்: ஸஹீஹ் முஸ்லிம்.


"يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اِنْ جَآءَكُمْ فَاسِقٌ بِنَبَاٍ فَتَبَيَّنُوْۤا اَنْ تُصِيْبُوْا قَوْمًا بِجَهَالَةٍ فَتُصْبِحُوْا عَلٰى مَا فَعَلْتُمْ نٰدِمِيْنَ‏

முஃமின்களே! ஃபாஸிக் (தீயவன்) எவனும் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால், அதைத் தீர்க்க விசாரித்துக் கொள்ளுங்கள்; (இல்லையேல்) அறியாமையினால் (குற்ற மற்ற) ஒரு சமூகத்தாருக்கு நீங்கள் தீங்கு செய்து விடலாம்; பின்னர் நீங்கள் செய்தவை பற்றி நீங்களே கைசேதப் படுபவர்களாக (கவலைப்படுபவர்களாக) ஆவீர்கள். (அல்குர்ஆன் : 49:6)


சிரிப்பூட்டுவதற்காக தமாஷாகப் பொய் சொல்வது

இன்றைய காலத்தில் மேடைப் பேச்சாளர்கள், நகைச்சுவையாளர்கள் மற்றும் நண்பர்கள் கூட்டத்தில் பிறரைச் சிரிக்க வைப்பதற்காகக் கற்பனையாகவும், பொய்யாகவும் கதைகளை அளப்பது சாதாரணமாகிவிட்டது. அல்லது 'ஏப்ரல் ஃபூல்' (April Fool) என்ற பெயரில் பொய் சொல்லி ஏமாற்றுவதும் நடக்கிறது.


நகைச்சுவைக்காகப் பொய் பேசுபவனுக்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மூன்று முறை 'கேடுதான்' என்று சாபமிட்டுக் கூறியுள்ளார்கள்:

وَيْلٌ لِلَّذِي يُحَدِّثُ فَيَكْذِبُ لِيُضْحِكَ بِهِ الْقَوْمَ وَيْلٌ لَهُ وَيْلٌ لَهُ

"மக்களைச் சிரிப்பூட்டுவதற்காகப் பொய் பேசுபவனுக்குக் கேடுதான்! அவனுக்குக் கேடுதான்!! அவனுக்குக் கேடுதான்!!"நூல்: சுனன் அபூ தாவூத் 


நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் தன் தோழர்களுடன் நகைச்சுவையாகப் பேசியுள்ளார்கள். ஆனால், அந்த நகைச்சுவையில் ஒரு துளி கூட பொய் இருக்காது.

ஒரு முதிய பெண்மணி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! நான் சொர்க்கம் செல்ல துஆ செய்யுங்கள்" என்றார். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், "முதிய பெண்கள் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்கள்" என்றார்கள். அந்தப் பெண்மணி வருத்தத்துடன் அழத் தொடங்கினார்.


உடனே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் புன்னகைத்து, "வயதான நிலையில் யாரும் சொர்க்கம் செல்ல மாட்டார்கள்; அல்லாஹ் அனைவரையும் இளமையாகவும் அழகாகவும் மாற்றியே சொர்க்கத்தில் நுழைவிப்பான்" என்று விளக்கமளித்தார்கள் (சூரா அல்-வாகிஆ 56:35-37 சுட்டிக்காட்டி).நூல்: ஷமாயில் அத்-திர்மிதி)

இங்கே நபிகளார் நகைச்சுவை செய்தார்கள், ஆனால் அதில் உண்மை மட்டுமே இருந்தது.


அப்துல்லாஹ் இப்னு ஆமிர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள்:

நான் சிறுவனாக இருந்தபோது, நபிகளார் எங்கள் வீட்டிற்கு வந்திருந்தார்கள். நான் விளையாடச் செல்ல முயன்றபோது, என் தாய் என்னை அழைத்து, "இங்கே வா, உனக்கு ஒரு பொருள் தருகிறேன்" என்றார்.

அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என் தாயைப் பார்த்து, "அவனுக்கு என்ன கொடுக்க எண்ணினாய்?" எனக் கேட்டார்கள். என் தாய், "அவனுக்குக் கொடுப்பதற்காகப் பேரீச்சம்பழம் வைத்திருந்தேன்" என்றார்.

அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:

"நீ அவனுக்கு எதையும் கொடுக்காமல் ஏமாற்றியிருந்தால், உன் கணக்கில் ஒரு 'பொய்' எழுதப்பட்டிருக்கும்!"நூல்: சுனன் அபூ தாவூத் 


சிறு குழந்தையைத்தானே ஏமாற்றுகிறோம் என்று கூட அலட்சியமாக இருக்கக் கூடாது; அதுவும் இறைவனிடம் பொய்யாகப் பதியப்படும் என்பதை இந்தச் சம்பவம் உணர்த்துகிறது.


நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மிஃராஜ் (விண்ணுலகப் பயணம்) அல்லது கனவில் கண்ட காட்சியை விவரிக்கும் போது பின்வருமாறு கூறினார்கள்:

நான் இரண்டு மனிதர்களைக் கண்டேன். அங்கு ஒருவன் உட்கார்ந்திருந்தான்; மற்றொருவன் தன் கையில் வளைந்த இரும்பு கொக்கியைப் பிடித்துக்கொண்டு நின்றிருந்தான்.

நின்றுகொண்டிருந்தவன், உட்கார்ந்திருப்பவனின் ஒரு பக்கக் தாடையிலும், மூக்கிலும், கண்ணிலும் அந்த இரும்புக் கொக்கியைச் செலுத்தி பிடரி வரை கிழித்தான். பின்னர் மறுபக்கம் சென்று அதேபோல் கிழித்தான். ஒரு பக்கம் கிழித்து முடிப்பதற்குள் மறுபக்கம் பழையபடி சரியாகிவிடும். மீண்டும் மீண்டும் அவன் அதைச் செய்துகொண்டே இருந்தான்.


ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் "இவர் யார்?" எனக் கேட்டதற்கு, ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம், "இவர் காலையில் தன் வீட்டிலிருந்து புறப்பட்டுச் சென்று உலகம் முழுவதும் பரவும்படியான பொய்களைப் பேசிய பொய்யர் ஆவார்" என்று பதிலளித்தார்.நூல்: ஸஹீஹ் அல்-புகாரி


பொய் பேச அனுமதி அளிக்கப்பட்ட 3 பிரத்யேக இடங்கள்

அனைத்து இடங்களிலும் பொய் ஹராம் என்றாலும், மாபெரும் நன்மைகளுக்காக 3 சூழ்நிலைகளில் மட்டும் பொய் பேசுவதற்கு அல்லது வார்த்தைகளைச் சுற்றி வளைத்துப் பேசுவதற்கு (தவ்ரியா) மார்க்கத்தில் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது:


1)இரு மனிதர்கள் / குடும்பங்களைச் சேர்த்து வைப்பதற்கு: சண்டையிட்டுப் பிரிந்த இருவரிடம் சென்று, "அவர் உங்களைப் பற்றி நல்லபடியாகப் பேசினார்" என்று கூறி சமாதானம் செய்வது.


2)எதிரிகளிடமிருந்து நாட்டின் மற்றும் முஸ்லிம்களின் பாதுகாப்பைப் பேணுவதற்காகத் தந்திரமாகப் பேசுவது.


3)கணவன் - மனைவி இடையே குடும்ப அன்பையும் பந்தத்தையும் நீடிக்கச் செய்வதற்காக பரஸ்பரம் தாஜா செய்து பேசுவது.நூல்: ஸஹீஹ் முஸ்லிம் 


5) சபிப்பது (லாஅனத்) என்பதன் மார்க்க விளக்கம்

அரபி மொழியில் 'லாஅனத்' (اللَّعْنَة) என்றால் "ஒருவரை அல்லாஹ்வின் ரஹ்மத் என்னும் பேரருளிலிருந்தும், கருணையிலிருந்தும் தூரமாக்குதல்" என்று பொருளாகும்.


ஒரு முஸ்லிமை நோக்கி "அல்லாஹ் உன்னைச் சபிப்பானாக" என்றோ, "நாசமாகப் போவாய்" என்றோ கூறுவது, அந்த மனிதன் இறைவனின் அருளிலிருந்து முற்றிலுமாக துண்டிக்கப்பட வேண்டும் என்று பிரார்த்திப்பதற்குச் சமமாகும்.


நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் எச்சரிக்கை:

عَنْ ثَابِتِ بْنِ الضَّحَّاكِ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:

«وَلَعْنُ الْمُؤْمِنِ كَقَتْلِهِ»

"ஒரு மூஃமினைக் (இறைநம்பிக்கையாளரைச்) சபிப்பது அவனைக் கொலை செய்வதற்குச் சமமாகும்."நூல்: ஸஹீஹ் அல்-புகாரி 


 சாபம் தன்னிடம் திரும்பும் ஆபத்து:

நாம் பிறரைச் சபிக்கும்போது, அந்தச் சாபம் காற்றில் மிதந்து சென்று வானத்தின் கதவுகளை அடைகிறது. வானத்தின் கதவுகள் அடைக்கப்படவே, பூமிக்குத் திரும்பி வந்து, நாம் சபித்த நபரை அடைகிறது. அந்த நபர் சாபத்திற்குத் தகுதியானவராக இருந்தால் அவர் மீது விழுகிறது; இல்லையென்றால், அதைச் சொன்னவர் மீதே அந்தச் சாபம் திரும்பி வந்து விழுகிறது.நூல்: சுனன் அபூ தாவூத் 



 மறுமையில் பரிந்துரைக்கும் (ஷஃபாஅத்) பாக்கியம் பறிபோகுதல்:

நாவு தடிப்பாகப் பேசுவதையும், பிறரைச் சபிப்பதையும் வழக்கமாகக் கொண்டவர்கள் மறுமை நாளில் பெரும் பாக்கியங்களை இழப்பார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

لَا يَكُونُ اللَّعَّانُونَ شُفَعَاءَ وَلَا شُهِدَاءَ يَوْمَ الْقِيَامَةِ

"அதிகமாகச் சபிப்பவர்கள் மறுமை நாளில் (நல்லோர்களுக்குச் சாதகமாகச்) சாட்சி கூறுபவர்களாகவோ, பரிந்துரை (ஷஃபாஅத்) செய்பவர்களாகவோ இருக்க மாட்டார்கள்."நூல்: ஸஹீஹ் முஸ்லிம் 

தாய்மார்களுக்கான எச்சரிக்கை: பிள்ளைகளைச் சபித்தல்

கோபத்திலோ, சகிப்புத்தன்மையின்மையிலோ அல்லது பழக்க தோஷத்திலோ தாய்மார்களும் பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளின் சேட்டைகளைக் கண்டு சபிப்பது மிகவும் ஆபத்தானது.


நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:

"உங்களுக்கு எதிராகவோ, உங்கள் பிள்ளைகளுக்கு எதிராகவோ, உங்கள் பணியாளர்களுக்கு எதிராகவோ, அல்லது உங்கள் செல்வங்களுக்கு எதிராகவோ சாபமிட்டுப் பிரார்த்திக்காதீர்கள்! ஏனெனில், அல்லாஹ்விடம் கேட்கப்படும் பிரார்த்தனைகள் ஏற்றுக் கொள்ளப்படும் அந்த நேரத்தில் உங்களின் சாபம் அமைந்துவிட்டால், அல்லாஹ் அதை அப்படியே ஏற்று நிறைவேற்றி விடுவான்!"

நூல்: ஸஹீஹ் முஸ்லிம் 


பெற்றோர்கள் கோபத்தில் சொல்லும் "நாசமாப் போவாய்", "உருப்படாமல் போவாய்" போன்ற சொற்கள் இறைவனின் ஏற்கும் நேரத்தில் (இஜபாத்தின் நேரம்) அமைந்துவிட்டால், பிள்ளைகளின் வாழ்க்கையும் எதிர்காலமும் பாழ்பட்டுவிடும்.


ஷேக் சுதைஸ் அவர்களின் தாயார் 

இன்றைய உலகில் உலகப் புகழ்பெற்ற இஸ்லாமிய அறிஞரும், மக்கா ஹரம் ஷரீஃப் (கஃபத்துல்லாஹ்) மஸ்ஜிதுல் ஹராமின் தலைமை இமாமுமான ஷேக் அப்துர் ரஹ்மான் அஸ்-சுதைஸ் அவர்களின் சிறுவயது நிகழ்வு:


ஷேக் சுதைஸ் சிறுவனாக இருந்தபோது, ஒரு நாள் வீட்டிற்கு விருந்தினர்கள் வரவிருந்தனர். அவருடைய தாயார் மிகவும் சிரமப்பட்டு விருந்தினர்களுக்காக உணவைத் தயாரித்து வைத்திருந்தார். சிறுவன் சுதைஸ் விளையாட்டாக வந்து, அந்த உணவின் மீது ஒரு கைப்பிடி மண்ணை அள்ளிப்போட்டு அதை பாழாக்கிவிட்டான்.


எந்த ஒரு தாய்க்கும் இயல்பாகவே கடும் கோபம் வரக்கூடிய சூழல் இது. ஆனால், அவருடைய தாய் தன் நாவைக் கட்டுப்படுத்தி, கோபத்திலும் சாபமிடுவதற்குப் பதிலாக, நேர்மறையான நல்ல வார்த்தையைக் கூறி துஆ செய்தார்:

"அல்லாஹ் உனக்கு நேர்வழி காட்டட்டும்! உன்னை ஹரம் ஷரீஃபின் இமாமாக ஆக்கட்டும்!"


தாயார் கோபத்தின் உச்சக்கட்டத்திலும் சபிப்பதைத் தவிர்த்து, தன் பிள்ளைக்கு நல்வாழ்த்துக் கூறியதால், அல்லாஹ் அந்தத் தாயின் துஆவை அப்படியே ஏற்றுக்கொண்டான். இன்று ஷேக் சுதைஸ் அவர்கள் அகில உலக முஸ்லிம்களும் பின்பற்றித் தொழும் ஹரம் ஷரீஃபின் தலைமை இமாமாக உயர்ந்துள்ளார்கள்.


ஒட்டகத்தைச் சபித்த பெண்மணிக்கு நபிகளார் தந்த தண்டனை

ஒரு பயணத்தின் போது, அன்சாரிகளைச் சேர்ந்த ஒரு பெண்மணி தான் ஏறி வந்த ஒட்டகம் மெதுவாகச் சென்றதால் கோபமடைந்து, "அல்லாஹ் உன்னைச் சபிப்பானாக!" என்று அந்த ஒட்டகத்தைச் சபித்துவிட்டார்.

இதைக் கேட்ட நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உடனடியாகக் கூறினார்கள்:

"அந்த ஒட்டகத்தின் மீதிருக்கும் பொருள்களை இறக்குங்கள்; அதை அவிழ்த்து விட்டு விடுங்கள். ஏனெனில், அது சாபம் இடப்பட்ட பொருளாகிவிட்டது!"

அந்த ஒட்டகம் சாபமிடப்பட்டதால், அதன் மீது பயணிக்கவோ, அதன் பொருள்களைப் பயன்படுத்தவோ நபிகளார் அனுமதிக்கவில்லை. அந்த ஒட்டகம் மக்களிடையே தனியாக உலா வந்ததையும், அதை யாரும் தொடக்கூட அஞ்சியதையும் நபித்தோழர்கள் கண்டார்கள்.நூல்: ஸஹீஹ் முஸ்லிம் 


கோபம் வரும்போது அமைதி காப்பது மற்றும் உடனே 'அஊது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம்' ஓதுவது.

கோபத்திலும் சாப வார்த்தைகளுக்குப் பதிலாக "அல்லாஹ் உனக்கு நேர்வழி காட்டட்டும் (ஹதாயக்கல்லாஹ்)", "அல்லாஹ் உன்னைச் சீராக்கட்டும்" போன்ற நல்வார்த்தைகளைப் பேசிப் பழகுவது.

இதுவரை அறியாமல் சபித்திருந்தால், அல்லாஹ்விடம் மன்னிப்புக் கேட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்காக நல்வாழ்த்துக் கூறி துஆ செய்வது.


அருட்கொடை. அதே நேரத்தில் நம்மை நரகத்தில் வீழ்த்தக்கூடிய மாபெரும் சோதனையும்கூட! நாம் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் வானவர்களால் பதியப்படுகிறது என்பதை உணர்வோம்.நம் நாவைப் பொய், புறம், கோள் சொல்லுதல், கேலி பேசுதல், சபித்தல் போன்ற பாவங்களிலிருந்து பாதுகாத்துக் கொள்வோம்.


பேசுவது வெள்ளியென்றால், சரியான இடத்தில் அமைதியாக இருப்பது தங்கம்.

நாவைக் கட்டுப்படுத்த தெரிந்தவன் தன் வாழ்க்கையைக் கட்டுப்படுத்தத் தெரிந்தவன் ஆகிறான்.

தேவையில்லாத பேச்சைக் குறைப்பவன், தன் வாழ்வில் ஏற்படும் பாதிக்கும் மேற்பட்ட பிரச்சனைகளைக் குறைத்துக் கொள்கிறான்.

நாவைப் பூட்டி வைப்பவனுக்கு, சோதனைகளின் கதவுகள் தானாகவே பூட்டிக்கொள்கின்றன


"நல்லதைப் பேசுவோம்; அல்லது அமைதியாக இருப்போம்" என்ற நபிகளாரின் பொன்மொழியை நம் வாழ்க்கையின் தாரக மந்திரமாக ஏற்று நடப்போம்.


நம் நாவை எப்போதும் குர்ஆன் ஓதுவதிலும், அல்லாஹ்வின் திக்ரிலும், நல்ல வார்த்தைகளைப் பேசுவதிலும் பசுமையாக வைத்திருப்போம்.

நாவைக் கட்டுப்படுத்தும் நற்பாக்கியத்தை அல்லாஹ் நம் அனைவருக்கும் தந்தருள்வானாக!


யா ரப்பல் ஆலமீன்! நீ எங்களுக்கு அளித்த நாவெனும் அருட்கொடையை உனக்கு விருப்பமான வழியில் பயன்படுத்தும் பாக்கியத்தைத் தருவாயாக! எங்கள் நாவுகளிலிருந்து வெளிப்படும் பொய், புறம், கோள் சொல்லுதல், அவதூறு, பிறரைக் காயப்படுத்தும் சொற்கள் மற்றும் அனைத்துத் தீய பேச்சுகளிலிருந்தும் எங்களைப் பாதுகாப்பாயாக!


யா அல்லாஹ்! கோபத்திலும் சோதனைகளிலும் எங்கள் நாவைக் கட்டுப்படுத்தும் நிதானத்தையும், சகிப்புத்தன்மையையும் எங்கள் அனைவருக்கும் தந்தருள்வாயாக! அறியாமையினாலும், உணர்ச்சிவசப்பட்டும் எங்கள் நாவினால் யாரையேனும் காயப்படுத்தியிருந்தால் அல்லது சபித்திருந்தால், அந்தப் பாவங்களை மன்னித்து, அவர்களிடம் நன்முறையில் மன்னிப்புக் கேட்கும் மனப்பக்வத்தை எங்களுக்குத் தருவாயாக!


யா அல்லாஹ்! எங்கள் நாவுகளை எப்போதும் உன்னுடைய திக்ரினாலும், குர்ஆன் திலாவத்தினாலும், ஸலவாத்தினாலும், இன்சொற்களினாலும் பசுமையாக வைத்திருப்பாயாக!


தொகுத்தவர்.

மவ்லவி B.முஹம்மது ராஃபி ரஷீதி.

தலைமை இமாம். மஸ்ஜிதே முபாரக் கிருஷ்ணாம்பேட்டை அரக்கோணம்.

Cell : +91 90949 86824.


முந்தைய பதிவுகள் வாசிக்க 👇 கிளிக் செய்யவும்.


ஜும்மா பயான்கள்.


சனி, 1 ஆகஸ்ட், 2026

மஸ்லஹி ஆலிம்களின் சங்கமம். 2026

 















































































































தலைமை

மௌலவி, அல்ஹாஜ். N.M.K.நூருல்லாஹ் பாகவீ

(கௌரவ இமாம்: மஸ்ஜிதே நூர் ஜும்ஆ பள்ளிவாசல், ஹார்பர், தூத்துக்குடி)

மக்தப் மதரஸா நிகழ்ச்சி

நேரம்: சுபுஹ் தொழுகைக்குப் பின்

இடம்: மன்பவுல் கைராத் மக்தப் மதரஸா,

முஹைதீன் ஆண்டவர் ஜும்ஆ பள்ளிவாசல், கூமாப்பட்டி.

மக்தப் மாணவர்களின் எழுச்சி ஊர்வலத்தை துவக்கி வைத்து அவர்களுக்கு ஊக்கப் பரிசுகளை வழங்கி சிறப்புரை:

மௌலவி, அல்ஹாஜ். M.இம்தாதுல்லாஹ் ஃபாஜில் பாகவீ M.A.

(முதல்வர்: மன்பவுஸ்ஸலாஹ் அரபிக்கல்லூரி, தூத்துக்குடி)

(தலைவர்: தூத்துக்குடி மாநகர ஜமாஅத்துல் உலமா சபை)






















சமூக நல்லிணக்க நலத்திட்ட உதவிகள் வழங்குதல்

நேரம்: காலை 8.30 மணியளவில்

நலத்திட்டங்களை வழங்குபவர்: மௌலவி, அல்ஹாஃபிழ், அல்ஹாஜ், காஜி.

S.முஜீபுர் ரஹ்மான் மஸ்லஹி ஃபாஜில் காஸிமி M.A.

(துணை முதல்வர்: மன்பவுஸ்ஸலாஹ் அரபிக்கல்லூரி, தூத்துக்குடி)

(பொருளாளர்: தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபை)

அரசு நூலகத்திற்கு புத்தகங்கள் வழங்குதல்

நேரம்: காலை 9.00 மணியளவில்

இடம்: அரசு நூலகம், கூமாப்பட்டி

புத்தகங்களை வழங்குபவர்: கீரனூர் மௌலவி.

S.N.R.ஷவ்கத் அலி மஸ்லஹி

(பேராசிரியர்:இர்ஃபானுல் ஹுதா அரபிக்கல்லூரி, தாராபுரம்)

(தலைவர்: மஸ்லஹிகள் பேரவை)

























மஸ்லஹிகள் பேரவை தேர்தல் & கலந்துரையாடல்

நேரம்: காலை 10 மணியளவில்

இடம் : ஹாஜி மர்ஹும் M.N.முஹம்மது அப்பாஸ் ராவுத்தர் நினைவு அரங்கம், ஜாமிஆ தாருர் ரஹ்மா அரபிக்கல்லூரி, கூமாப்பட்டி - பிளவக்கள் டேம்.
































I.M.S மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் மரக்கன்று வழங்கும் நிகழ்ச்சி.











சமூக விழிப்புணர்வு பயான் நிகழ்ச்சி

நேரம்: மக்ரிப் தொழுகையை தொடர்ந்து

இடம் : I.M.S மெட்ரிகுலேஷன் பள்ளி, கூமாப்பட்டி

பள்ளி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் அல்இர்ஷாத் நிஸ்வான் மதரஸா மாணவியருக்கு கிதாபுகள் வழங்குபவர்

மௌலவி, அல்ஹாஜ்.N.M.தீன் முஹம்மது பாகவி

(நிறுவனர்: தாருர் ரஹ்மா அறக்கட்டளை, கூமாப்பட்டி)

(முதல்வர்:ஜாமிஆ தாருர் ரஹ்மா அரபிக்கல்லூரி, கூமாப்பட்டி)

சிறப்புரை

மௌலவி, அல்ஹாஃபிழ், அல்ஹாஜ். S.S.அஹ்மது ஃபாஜில் பாகவி

(தலைமை இமாம்: குராஸானீ பீர் மஸ்ஜித், அடையாறு)

(முதல்வர்: ஜாமிஆ அல்ஹுதா அரபிக்கல்லூரி, அடையாறு)