ஞாயிறு, 22 பிப்ரவரி, 2026

நீதியே தக்வாவின் அடையாளம்

 


‌தராவீஹ் பயான் பிறை – 5


தலைப்பு : “நீதியே தக்வாவின் அடையாளம்” 

ஹிஜ்ரி 1447. 

بسم الله الرحمن الرحيم

الحمد لله رب العالمين عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته الصلاة والسلام على رسول الله صلى الله عليه وسلم وعلى آله وأصحابه وأهل بيته أجمعين أما بعد


يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا كُوْنُوْا قَوَّا امِيْنَ لِلّٰهِ شُهَدَآءَ بِالْقِسْطِ‌ وَلَا يَجْرِمَنَّكُمْ شَنَاٰنُ قَوْمٍ عَلٰٓى اَ لَّا تَعْدِلُوْا‌ اِعْدِلُوْا هُوَ اَقْرَبُ لِلتَّقْوٰى‌ وَاتَّقُوا اللّٰهَ‌ اِنَّ اللّٰهَ خَبِيْرٌ بِمَا تَعْمَلُوْنَ‏


முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள், எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள்; இதுவே (தக்வாவுக்கு) - பயபக்திக்கு மிக நெருக்கமாகும்; அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் நீங்கள்

செய்பவற்றை(யெல்லாம் நன்கு) அறிந்தவனாக இருக்கின்றான். அல்குர்ஆன்

சனி, 21 பிப்ரவரி, 2026

மரணம் முடிவல்ல தொடக்கம்

 


‌தராவீஹ் பயான் பிறை – 4


தலைப்பு : மரணம் முடிவல்ல தொடக்கம் 

ஹிஜ்ரி 1447. 

بسم الله الرحمن الرحيم

الحمد لله رب العالمين عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته الصلاة والسلام على رسول الله صلى الله عليه وسلم وعلى آله وأصحابه وأهل بيته أجمعين أما بعد


أَيْنَمَا تَكُونُوا يُدْرِككُّمُ الْمَوْتُ وَلَوْ كُنتُمْ فِي بُرُوجٍ مُّشَيَّدَةٍ ۗ 


நீங்கள் எங்கிருந்தபோதிலும் உங்களை மரணம் அடைந்தே தீரும்; நீங்கள் மிகவும் உறுதியாகக் கட்டப்பட்ட கோட்டைகளில் இருந்த போதிலும் சரியே!”அல்குர்ஆன் 4:78

நோன்பு & பிறை.



 கடமைகளில் அல்லாஹ் வழங்கிய சலுகைகளை மூன்று வகையாகப் பிரிக்கலாம். 1. சில கட்டளைகள் கடமையாக்கப்பட்டு அவை நடைமுறைக்கு வரும் முன்பே மாற்றியமைக்கப் பட்டன. இதற்கு உதாரணம் தொழுகை. முதலில் 50 நேரங்கள் கடமையாக்கப் பட்டு பின்பு நடைமுறைக்கும் வரும் முன்பே ஐந்தாக குறைக்கப்பட்டது.                                                                       


 2.சில கட்டளைகள் கடமையாக்கப்பட்டு அவை நடைமுறைக்கு வந்த பின்பு ஒரே ஒரு நபர் மட்டும் அதை செயல் படுத்திய நிலையில் மாற்றியமைக்கப் பட்டன. இதற்கு உதாரணமாக பின்வரும் வசனத்தைக் கூறலாம்.                                          

வெள்ளி, 20 பிப்ரவரி, 2026

நோன்பின் பலன்கள்.



அல்லாஹுத்தஆலா நமக்கு ஏற்படுத்தியிருக்கிற கட்டளைகள்,தொழுகை, நோன்பு,ஜகாத்,ஹஜ் இதுமாதிரி மனிதர்கள் கட்டாயமாக செய்தாக வேண்டும் என்று அல்லாஹ் சொல்லியிருக்கிற எந்தக் கடமையாக இருந்தாலும் - அது சின்ன விஷயமா இருந்தாலும் சரி,இல்ல பெரிய காரியமாக இருந்தாலும் சரி அது வெறும் வணக்கமாக மட்டும் இல்லாது செய்யக் கூடிய மக்களுக்கு அதில் நிறைய பிரயோஜனங்களும் இருப்பதை நாம் பாக்கலாம்.

ஆன்மீக ரீதியாகவும், வணக்க ரீதியாகவும்,உளவியல் ரீதியாகவும், உடல் ரீதியாகவும் ஆய்வு செய்து பார்த்த அறிவியல் மேதைகள், மருத்துவ நிபுணர்கள் எல்லோருமே சொல்லக் கூடிய விஷயம் என்ன தெரியுமா? இஸ்லாத்தில் இருக்கக்கூடிய எல்லா கடமைகளுமே மனித சமுதாயத்திற்கு நன்மையாகத்தான் இருக்கிறது, அதில் ஆரோக்கியம் கிடைக்கிறது, அறிவுக்குப் பொருத்தமாக இருக்கிறது என்று தான்.

சஹர் - இஃப்தார்


وَكُلُوا وَاشْرَبُوا حَتَّى يَتَبَيَّنَ لَكُمُ الْخَيْطُ الْأَبْيَضُ مِنَ الْخَيْطِ الْأَسْوَدِ مِنَ الْفَجْرِ ثُمَّ أَتِمُّوا الصِّيَامَ إِلَى اللَّيْلِ


இருள் விலகி விடியலின் வெளிச்சம் உங்களுக்கு தெளிவாக தெரியும் வரை (ஃபஜ்ரு வரை) உண்ணங்கள்; பருகுங்கள். பின்னர் இரவு (தொடங்கும்) வரை நோன்பை முழுமைப்படுத்துங்கள். திருக்குர்ஆன்:-2:187


இஸ்லாமிய மார்க்கம் ஒவ்வொரு வழிபாட்டுக்கும் சில ஒழுக்க நெறிகளை கற்றுத்தந்துள்ளது. அதன் வரிசையில் நோன்பு நோற்பதற்கும் சில சட்ட வரம்புகள் உண்டு. நோன்பின் தொடக்கமும், முடிவுமான சஹர் - இஃப்தார் உடைய சிறப்புகள் மற்றும் சட்டங்கள் சிலவற்றை அறிந்து கொள்வது அவசியமாகும்.

நமக்கு கிடைத்த வரமும் நேரமும்...!



அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ 

கண்ணியம் நிறைந்த அல்லாஹ்வின் நல்லடியார்களே நாம் எதிர்பார்த்துக் கொண்டிருந்த ரமலான் ஆரம்பமாக இருக்கின்றது. நாளை இரவு ஷக்குடைய இரவாகவும் இருக்கின்றது. 

நாளை பிறை தெரிந்து விட்டால் அல்ஹம்துலில்லாஹ் ரமலான் ஆரம்பமாகிவிடும் எல்லா பள்ளிவாசல்களிலும் தராவீஹ் தொழுகையும் நடைபெற்று விடும். 


كلوا وشربوا حتى يتبين لكم الخيط الابيض من الخيط الاسود من الفجر ثم اتموا الصيام الى الليل 2:187


பஜ்ரின் கருப்பு கயிற்றிலிருந்து வெள்ளை கயிறு வெளித் தோன்றும் வரையிலும் அதாவது கிழக்கு வெளுக்கும் வரையிலும் நீங்கள் சாப்பிடுங்கள் குடியுங்கள் பிறகு இரவு வரை நோன்பை பூர்த்தி செய்யுங்கள். 

தர்மம்.


 ‌தராவீஹ் பயான் பிறை – 3


தலைப்பு : தர்மம் 

ஹிஜ்ரி 1447. 

بسم الله الرحمن الرحيم

الحمد لله رب العالمين عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته الصلاة والسلام على رسول الله صلى الله عليه وسلم وعلى آله وأصحابه وأهل بيته أجمعين أما بعد


لَنْ تَنَالُوا الْبِرَّ حَتّٰى تُنْفِقُوْا مِمَّا تُحِبُّوْنَ   وَمَا تُنْفِقُوْا مِنْ شَىْءٍ فَاِنَّ اللّٰهَ بِهٖ عَلِيْمٌ‏


நீங்கள் நேசிக்கும் பொருள்களிலிருந்து தானம் செய்யாதவரை நீங்கள் நன்மை அடைய மாட்டீர்கள்; எந்தப் பொருளை நீங்கள் செலவு செய்தாலும், நிச்சயமாக அல்லாஹ் அதை நன்கறிந்தவனாக இருக்கின்றான். (அல்குர்ஆன் : 3:92)