செவ்வாய், 30 டிசம்பர், 2014

அண்ணல் நபி ஸல் அவர்களின் அழகிய பதில்.







அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் அடிமையாயிருந்த ஸவ்கான் (ரலி) அவர்கள் கூறியதாவது.


ஒரு நாள் நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அருகில் நின்று கொண்டிருந்தேன். அப்போது யூத அறிஞர் ஒருவர் வந்து முஹம்மதே...! அஸ்ஸலாமு அலைக்க..! என்று கூறினார். உடனே நான் அவரை பிடித்து ஒரு தள்ளு தள்ளினேன். அவர் நிலை தடுமாறி விழப்போனார். அவர் ஏன் என்னை தள்ளுகிறாய்..? என்று கேட்டார்.

வியாழன், 25 டிசம்பர், 2014

சமுதாய காவலர் சர்தார் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்



لقد جاءكم رسول من انفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رءوف رحيم




இறை நம்பிக்கையாளர்களே... நிச்சயமாக உஙகளிலிருந்தே ஒரு தூதர் உங்களிடம் வந்திருக்கிறார். நீங்கள் துன்பத்திற்குள்ளாகி விட்டால் அது அவருக்கு மிக்க வருத்தத்தை கொடுக்கிறது. அன்றி உங் (கள் நன்மைக) ளையே பெரிதும் விரும்புகிறார். இன்னும் இறை நம்பிக்கையாளார்கள் மீது மிக்க அன்பும், இரக்கமும் உடையோராகவும் இருக்கிறார்.
                                         ( திருக்குர்ஆன். 9-128.)

செவ்வாய், 9 டிசம்பர், 2014

ஆடை அழுக்கிலும் பாடம் அறியலாம்





ஆடைகளில் அழுக்கு படியும். சிலர் அன்றாடம் தூய்மை செய்து அணிவர் , சிலர் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை தூய்மை செய்வர் , சிலர் வாரம் ஒருமுறை தூய்மை செய்வர்.

 
அன்றாடம் தூய்மை செய்யும் ஆடையில் அழுக்கு எளிதில் நீங்கிவிடும் . இரண்டு நாட்களுக்கு ஒருமுறை சலவை செய்கிற துணியில் அழுக்கு நீங்க சற்று கூடுதல் முயற்சி செய்ய வேண்டும் , வாரம் ஒருமுறை துவைத்தால் மிகவும் சிரமப்பட்டே அழுக்கை நீக்க முடியும் அளவுக்கு மீறி முயற்சி செய்தால் ஆடை கிழி யுமே தவிர அழுக்கு நீங்காது.

வெள்ளி, 21 நவம்பர், 2014

கடனில் பேணுதல்







ஹழ்ரத் அபூஹுரைரா ரலி அவர்கள் கூறுகிறார்கள்.
பனூ இஸ்ராயிலின் சந்ததியினரில் ஒருவர் மற்றொருவரிடம் ஆயிரம் பொற்காசுகள் கடன் கேட்டார். அதற்கு அவர் சாட்சிக்காக எவரையாவது அழைத்து வாரும். நான் அவரை சாட்சியாக்கி பணமே தருகிறேன் எனக்கூறினார். அதற்கு (கடன் கேட்பவர்) அல்லாஹ் சாட்சியாக போதுமானவன் என்று கூறினார்.

வியாழன், 18 செப்டம்பர், 2014

பகட்டு வாழ்க்கை...





இரண்டு பெண் நண்டுகள். நல்ல தோழிகள். ஆனால், இரண்டு பேரில் யார் சிறந்தவர் என்ற மனோபாவம் இருவருக்குமே உண்டு. அதில் ஒரு நண்டு அழகான, பலமான, திறமையான ஒரு ஆண் நண்டை காதலித்துக் கல்யாணம் செய்து கொண்டது. தன் தோழியை விட சிறப்பான ஒருவரை தேர்வு செய்து திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்பது இன்னொரு நண்டின் ஆசை.

வெள்ளி, 12 செப்டம்பர், 2014

இப்படி சொன்னா கல்யாணமாகி ஆறுமாதம் என்று அர்த்தம்.





1.கணவன்: என்னம்மா இத்தன தொட்டுக்க இருக்கும்போது இப்ப போய் சின்ன வெங்காயம் வெட்டி ஆம்லெட் போட்டுகிட்டு இருக்க வாம்மா வந்து உட்கார்.எவ்ளோதான் நீ செய்வ, வா சேர்ந்து சாப்பிடலாம்! 

ஞாயிறு, 10 ஆகஸ்ட், 2014

" காந்தமும் நெருப்பும் வழங்கும் பாடம் "





ஒரு சிலர் தான் எங்கு சேர்ந்து பழகுகிறார்களோ அதே இயல்பிற்கு ஏற்ப அப்படியே மாறிவிடுகின்றனர் . சிலர் தன்னைப் போல் பிறரை மாற்றுவார்களே ஒழிய பிறரைப் போல் தான் மாற மாட்டார்கள் . எந்த சூழலில் வாழ்ந்தாலும் எப்படிப் பட்டவர்களுடன் பழகினாலும் தன் இயல்பிலிருந்து சிறிதும் மாறாமல் அவர் அவராகவே இருப்பார் .

ஞாயிறு, 3 ஆகஸ்ட், 2014

அர்த்தமுள்ள கேள்விகளும்...... அற்புதமான பதில்களும்...




ஒரு கிராமவாசி நபி (ஸல்) அவர்களிடம் வந்து கேட்டார்கள். யாரசூல்ல்லாஹ் தங்களிடம் சில கேள்விகள் கேட்கலாமா ? என்றவுடன் நபியவர்கள் கேளுங்கள்என்றார்கள்.

வியாழன், 24 ஜூலை, 2014

மனித நேயம் வாழ்கிறது....!



அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி தஆலா வபரகாத்துஹு.
ஆரம்பமாக மின்னல் F.M நேயர்களாகிய உங்கள் அனைவருக்கும் ஈகை திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதில் மிகவும் மகிழ்சியடைகிறேன்.

புதன், 9 ஜூலை, 2014

குருவுக்கே போதித்த குதிரைக்காரன்



ஒரு குரு இருந்தார். முற்றும் துறந்தவர். எல்லாம் கற்றவர். அவரை பிரசங்கம் செய்ய ஒரு ஊரில் கூப்பிட்டிருந்தார்கள். கூட்டத்திற்கு ஆயிரம் பேர் வருவார்கள் எனச் சொன்னார்கள். குறிப்பிட்ட தேதியில் குருவும் அவ்வூருக்கு வந்தார்.அன்று நல்ல மழை. கூட்டத்திற்கு வந்தவர்களும் கலைந்து சென்று விட்டார்கள்.

புதன், 2 ஜூலை, 2014

பிரச்னைகளை ஆராயாமல் பயப்படக் கூடாது!



ஒரு பஸ் கண்டக்டர் இருந்தார்.. தினமும் அவருக்கு ஒரே ரூட் தான்.
ஒரு நாள் வழக்கமான பாதையில் பஸ் பயணித்துக் கொண்டிருந்தது.
நிறுத்தங்களில் நிறுத்தி பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்றது.. ஒரு நிறுத்தத்தில் முரட்டுத்தனமான மனிதன் ஒருவன் ஏறினான். பெரிய மீசையும் தடித்த உருவமுமாய் இருந்தவனைப் பார்த்த எல்லோரு க்குமே கொஞ்சம் அச்சமாய் தான் இருந்தது.
கண்டக்டர் அவனிடம் சென்று, “டிக்கெட்என்று கேட்டார். அவன் உடனே, “எனக்கு டிக்கெட் வேண்டாம்என்று சொல்லி சட்டென்று முகத்தை ஜன்னல் பக்கம் திருப்பிக் கொண்டான்.
ஏன் டிக்கெட் வேண்டாம்என்று கேட்க கண்டக்டருக்கு பயம், தள்ளி வந்து விட்டார்.
மறுநாளும் இதே கதை. எனக்கு டிக்கெட் வேண்டாம்என்று முறைத்தக் கொண்டோ சொல்லக் கண்டக்டர் வந்து விட்டார். இப்படியே ஒரு வாரம் கழிந்தது..
கண்டக்டருக்கு எரிச்சல் அதிகரித்தக் கொண்டே இருந்தது.. இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று எண்ணினார்.

திங்கள், 23 ஜூன், 2014

இந்த உலகம் ஒரு கண்ணாடி போன்றது.





தெருவிலே சுற்றிக் கொண்டிருந்த நாய் ஒன்று தவறிப் போய் அரண்மனைக்குள் நுழைந்தது.
அந்த அறைக்குள் நுழைந்த நாய்க்கு அதிரிச்சி ஏனெனில் சுற்றியும் நூற்றுக் கணக்கான நாய்கள் இருந்தன.
சற்று எரிச்சலடைந்து "உர்ர்.. உர்ர்.." என்றது, அந்த நூறு நாய்களும் பதிலுக்கு "உர்ர்.. உர்ர்.." என்றது.

வெள்ளி, 13 ஜூன், 2014

ஈருடல் ஓருயிர்.....!





இஸ்லாத்தை FAMILY ORIENTED RELIGION என்று கூறுவார்கள் . இஸ்லாத்தில் குடும்பங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன பின்னர்தான் இஸ்லாத்தை   COMMUNITY RELIGION என்பார்கள். குடும்பங்கள் என்பது வீடுகளில் தானே உருவாகும்..... வீடுகள் தான் நமது நம்பிக்கைகள். அவை தகர்ந்தால்..... இஸ்லாமிய எழுச்சி என்பது இன்னும் பலகாலம் கானல் நீராகவே இருக்கும்.

சனி, 7 ஜூன், 2014

இருக்காதா பின்னே....!


எல்லா ராணுவத்திலும் ஷார்ப் சூட்டர் ( அதாவது குறி தவறாமல் சுடுபவர்கள் ) என்ற பிரிவினர் இருப்பார்கள் இவர்களது வேலை மறைந்திருந்து எதிர் தரப்பை சேர்ந்த முக்கியமானவர்களை சுட்டுதள்ளுவது.

ஞாயிறு, 9 பிப்ரவரி, 2014

அற்புதமான ஆறு காரியங்கள்.




ஒ............ஆதமுடைய மகனே... உன்னிடமிருந்து ஆறு காரியங்கள் ஏற்பட்டால் என்னிடமிருந்து ஆறு காரியங்கள் உண்டாகும். என்று கூறுகிறான்.

வியாழன், 6 பிப்ரவரி, 2014

வலிமார்களின் வழிகாட்டுதல்



இப்ராஹிம் இப்னு அத்ஹம் ரஹ் அறிவிக்கிறார்கள்.


நான் காடு வனங்களில் சுற்றித் திரிகையில் ஜபல் லுப்னா என்ற மலையில் இருந்த வலிமார்களை கண்டு அவர்களுடன் சேர்ந்திருந்தேன். அந்த வலிமார்கள் என்னிடம் நான்கு உபதேசம் செய்து அந்நான்கினையும் மக்களுக்கு அறிவிக்கும் படி சொன்னார்கள்.

சனி, 1 பிப்ரவரி, 2014

அழகு



                       
கருப்பாயிருந்தாள்.

அதனால் அழகாயில்லை.

கருப்பாயிருந்தாள்.

வெள்ளி, 24 ஜனவரி, 2014

மணியான 12 விஷயங்கள்.




ஹஜ்ரத் கஃபுல் அஹ்பார் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.
நான் “தவ்ராத்-ஜபூர்-இன்ஜில்-குர்ஆன் ஆகிய நான்கு வேதங்களையும் கற்றுணர்ந்துள்ளேன். அவ் வேதங்களிலிருந்து மணியான 12 விஷயங்களை அணியாக தேர்ந்தெடுத்து அவைகளை ஒரு காகிதத்தில் எழுதி என் கழுத்தில் தொங்கவிட்டு கொண்டேன்.

ஞாயிறு, 12 ஜனவரி, 2014

ஏழைகளோடு எழுப்புவாய் இறைவா!


வயிறார உண்ண உணவில்லை. விதவிதமாக உடுத்த நல்ல ஆடைகள் இல்லை. ஆனாலும் ராஜா அவர்! ஏழையாகவே இறப்பதற்கு வித்தியாசமான பிரார்த்தனை செய்தவர்! வெறும் தலையணை, மண்பாத்திரங்களை மகளுக்குச் சீதனமாகக் கொடுத்தவர்! யார் அவர்?