வியாழன், 30 ஏப்ரல், 2020

18 விதமான சிறப்புகள்.


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு..

எனது பெயர்...................................................


*தர்மம் செய்பவருக்கு அல்லாஹ் கொடுக்கும் பதினெட்டு விதமான சிறப்புகளைப் பற்றி கூற வந்துள்ளேன்.


தர்மம் செய்பவருக்கு அல்லாஹ் கொடுக்கும் பதினெட்டு விதமான நன்மைகளை கொடுக்கிறான்.

1 *அவர் நோய் வாய்ப்பட்டு இருந்தால் அந்த நோயில் இருந்து நிவாரணம் கொடுக்கப்படும்*

2 *அவர் செய்த சிறு பாவங்கள் மன்னிக்கப்படும்*

3 *கஷ்டங்கள், முஸீபத்கள் இருந்தால் அவை நீங்கிவிடும்*

4 *அவருடைய செல்வத்தை ஷைத்தானுடைய சூழ்ச்சியிலிருந்து அல்லாஹ் பாதுகாத்துவிட்டான் எனவே தான் தர்மம் கொடுக்கும் வாய்ப்பு கிடைத்தது*

5 *அவருக்காக ஒரு மலக்கு துஆ செய்கிறார்.*

6 *கெட்ட மரணத்தை விட்டும் அவர் பாதுகாக்கப்படுவார்.*

7 *கப்ருடைய உஷ்னம் (அதாவது: வேதனை) முற்றிலும் நீக்கப்படும்.*

8 *அவருடைய ஏதேனும் ஒரு பாவம் அல்லாஹ்வை கோபம் அடைய செய்து இருந்தால் அவரின் தர்மம் அந்த கோபத்தை அறவே தனித்துவிடும்.*

9 *திடுக்கிட செய்யும் மறுமை நாளில் அவர் எந்த பயமும் கவலையும் இல்லாமல் மிகவும் நிம்மதியான நிலையில் இருப்பார்.*

10 *ரகசியமாக தர்மம் செய்தால் நிழலே இல்லாத அந்த மறுமை நாளில் அல்லாஹுடைய அர்ஷ் அந்த நல்லடியாருக்கு நிழல் கொடுக்கும்*

11 *அவருக்கு நரகிலிருந்து விடுதலை கிடைக்கிறது.*

12 *ஒரே விதமாக இருக்கும் பொருட்களிலிருந்து இரண்டு பொருளை*  *(உதாரணமாக இரண்டு ஆடை) தர்மம் செய்தால் அவர் சொர்க்கத்தில் விசேஷ வாசல் வழியாக உள்ளே செல்வார்.*

13 *அவருக்கு மகத்தான நன்மை கொடுக்கப்படும்.*

14 *அந்த நன்மைகளும் பல மடங்காக தரப்படும்.*

15 *அவர் தர்மமாக எவ்வளவு அதிகம் கொடுத்தாலும் அவை அனைத்தும் அழிந்துவிடாமல் அல்லாஹ்விடத்தில் அவருக்கான மறுமையின் சேமிப்பாக இருக்கும்.*

16 *உண்ணும் உணவையே தர்மமாக கொடுத்தால் உள்ளத்தில் இலகுவான குணம் ஏற்படும்.*

17 *தர்மம் செய்வது இறையச்ச முடையவர்களின் குணங்களில் ஒன்றாகும்.*

18 *அவர் கொடுக்கும் தர்மத்தை பொருத்து அல்லாஹ்வும் அவர் செல்வத்தில் வளத்தை கொடுப்பான்.*

இப்படிப்பட்ட நன்மைகளை தர்மம் செய்பவருக்கு அல்லாஹு தஆலா வழங்குகிறான். எனவே நாம்  தர்மம் செய்து இந்த பதினெட்டு சிறப்புகளையும் அடைவதற்கு அல்லாஹ் அருள்புரிவானாக...  ஆமீன்.

இதற்கெல்லாம் ஆதாராம் இருக்கா ஹஸ்ரத் என்று உங்களிடம் யாராவது கேட்டால் இதை அவர்களுக்கு காண்பிக்கவும்.

*தர்மம் செய்பவருக்கு அல்லாஹ் கொடுக்கும் பதினெட்டு விதமான சிறப்புகள்*

1 *அவர் நோய் வாய்ப்பட்டு இருந்தால் அந்த நோயில் இருந்து நிவாரணம் கொடுக்கப்படும்*
ஆதாரம்: நூல்: மராஸீலு அபீ தாவூது: ஹதீஸ் எண்: 105

2 *அவர் செய்த சிறு பாவங்கள் மன்னிக்கப்படும்*
ஆதாரம்: சூரத்துல் பகரா: வசனம்: 271

3 *கஷ்டங்கள், முஸீபத்கள் இருந்தால் அவை நீங்கிவிடும்*
ஆதாரம்: நூல்: சுனனு திர்மிதீ: ஹதீஸ் எண்: 2863

4 *அவருடைய செல்வத்தை ஷைத்தானுடைய சூழ்ச்சியிலிருந்து அல்லாஹ் பாதுகாத்துவிட்டான் எனவே தான் தர்மம் கொடுக்கும் வாய்ப்பு கிடைத்தது*
ஆதாரம்: நூல்: முஸ்னத் அஹ்மது: ஹதீஸ் எண்: 22962

5 *அவருக்காக ஒரு மலக்கு துஆ செய்கிறார்.*
ஆதாரம்: நூல்: ஸஹீஹுல் புகாரி: ஹதீஸ் எண்: 1442

6 *கெட்ட மரணத்தை விட்டும் அவர் பாதுகாக்கப்படுவார்.*
ஆதாரம்: நூல்: சுனனு திர்மிதி: ஹதீஸ் எண்: 664

7 *கப்ருடைய உஷ்னம் (அதாவது: வேதனை) முற்றிலும் நீக்கப்படும்.*
ஆதாரம்: நூல்: அல் முஃஜமுல் கபீர்: ஹதீஸ் எண்: 787

8 *அவருடைய ஏதேனும் ஒரு பாவம் அல்லாஹ்வை கோபம் அடைய செய்து இருந்தால் அவரின் தர்மம் அந்த கோபத்தை அறவே தனித்துவிடும்.*
ஆதாரம்: நூல்: சுனனு திர்மிதீ: ஹதீஸ் எண்: 664

9 *திடுக்கிட செய்யும் மறுமை நாளில் அவர் எந்த பயமும் கவலையும் இல்லாமல் மிகவும் நிம்மதியான நிலையில் இருப்பார்.*
ஆதாரம்: சூரத்துல் பகரா: வசனம் எண்: 262

10 *ரகசியமாக தர்மம் செய்தால் நிழலே இல்லாத அந்த மறுமை நாளில் அல்லாஹுடைய அர்ஷ் அந்த நல்லடியாருக்கு நிழல் கொடுக்கும்*
ஆதாரம்: நூல்: ஸஹீஹுல் புகாரி: ஹதீஸ் எண்: 660

11 *அவருக்கு நரகிலிருந்து விடுதலை கிடைக்கிறது.*
ஆதாரம்: நூல்: ஸஹீஹ் முஸ்லிம்: ஹதீஸ் எண்: 1016

12 *ஒரே விதமாக இருக்கும் பொருட்களிலிருந்து இரண்டு பொருளை* 
*(எ.கா: இரண்டு ஆடை) தர்மம் செய்தால் அவர் சொர்க்கத்தில் விசேஷ வாசல் வழியாக உள்ளே செல்வார்.*
ஆதாரம்: நூல்: ஸஹீஹுல் புகாரி: ஹதீஸ் எண்: 1897

13 *அவருக்கு மகத்தான நன்மை கொடுக்கப்படும்.*
ஆதாரம்: சூரத்துல் ஹதீத்: வசனம் எண்: 7

14 *அந்த நன்மைகளும் பல மடங்காக தரப்படும்.*
சூரத்துல் பகரா: வசனம் எண்: 245

15 *அவர் தர்மமாக எவ்வளவு அதிகம் கொடுத்தாலும் அவை அனைத்தும் அழிந்துவிடாமல் அல்லாஹ்விடத்தில் அவருக்கான மறுமையின் சேமிப்பாக இருக்கும்.*
ஆதாரம்: நூல்: ஸஹீஹ் முஸ்லிம் : ஹதீஸ் எண்: 2959

16 *உண்ணும் உணவையே தர்மமாக கொடுத்தால் உள்ளத்தில் இலகுவான குணம் ஏற்படும்.*
ஆதாரம்: நூல்: முஸ்னத் அஹ்மது: ஹதீஸ் எண்: 7576

17 *தர்மம் செய்வது இறையச்ச முடையவர்களின் குணங்களில் ஒன்றாகும்.*
ஆதாரம்: சூரத்துல் பகரா: வசனம் எண்: 3

18 *அவர் கொடுக்கும் தர்மத்தை பொருத்து அல்லாஹ்வும் அவர் செல்வத்தில் வளத்தை கொடுப்பான்.*
ஆதாரம்: நூல்: ஸஹீஹ் முஸ்லிம்: ஹதீஸ் எண்: 1029

அல்லாஹு தஆலா நமக்கும் இந்த பதினெட்டு சிறப்புகளையும் அடையச் செய்வானாக...  ஆமீன்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக