சனி, 29 டிசம்பர், 2012

நபிமார்கள். part.2




1.)    கேள்வி நபி என்பவர் யார்..?


பதில். நபி எனபவர் வஹி அறிவிக்கப்பட்டவர். பழைய வேதத்தின் படி மக்களை வழி நடத்துபவர்.

வியாழன், 27 டிசம்பர், 2012

நிலவில் முதலில் கால் வைத்திருக்க வேண்டியவர் யார் தெரியுமா??????




நிலவில் முதன் முதலில் கால் வைத்தவர் யார்? இந்தக் கேள்விக்கு யாராயிருந்தாலும் உடனே பதில் சொல்லிவிடுவீர்கள்.நீல்ஆம்ஸ்ட்ராங் என்று. நிலவில் முதன் முதலில் கால் வைத்திருக்க வேண்டியவர் யார் தெரியுமா? பல பேருக்கு தெரியாது அவர் எட்வின் சி ஆல்ட்ரின்.

புதன், 26 டிசம்பர், 2012

ஒன்பது வகை பெண்கள்.

   

    ஒன்பது வகை பெண்கள்.





1.பன்றி. 2.குரங்கு 3.நாய் 4.கோவேறுக் கழுதை 5.தேள் 6.எலி 7.பறவை 8.குள்ள நரி. 9.ஆடு. ஆகிய ஓன்பது வகை பிராணிகளுடைய குணங்களில் பெண்கள் அமைந்துள்ளனர்.

திங்கள், 24 டிசம்பர், 2012

ஜின்கள்




கேள்வி. ஜின்கள் என்றால் யார்..?


பதில். ஜின்கள் நெருப்பினால் படைக்கப் பட்ட அல்லாஹ்வின் படைப்பினங்கள். நாய், பன்றி, உருவங்களிலும் உருவெடுப்பார்கள்.

வியாழன், 6 டிசம்பர், 2012

கருவியல் ஆராய்ச்சியாளரான ராபர்ட் கில்ஹாம் ஒரு யூதர்.


அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாதுஹு!
கருவியல் ஆராய்ச்சியாளரான ராபர்ட் கில்ஹாம் ஒரு யூதர். இவர் அண்மையில் இஸ்லாத்தைத் தழுவினார். இவரது மனமாற்றத்திற்கு
வழி செய்தது திருக்குர்ஆனின் ஒரு வசனம்.

திங்கள், 22 அக்டோபர், 2012

தீனே இலாஹி மதமும்,அழிந்த விதமும்


‘தீனே இலாஹி’ இந்தியாவை ஆண்ட முகலாய மன்னர் அக்பரால் உருவாக்கப்பட்டு அக்பர் இருந்தவரை உயிரோடு இருந்து அவர் இறந்தபோது அந்த புதிய மதமும் சேர்ந்தே இறந்து போனது. இறந்து போன மதத்தைப் பற்றி இப்போது என்ன பேச்சு,எழுத்து வேண்டிகிடக்கு என்ற கேள்வி உங்களுக்கு எழுகிறதா? சத்திய மார்க்கத்திற்கு எதிராக எழுந்த அசத்தியக் கொள்கைகள் எப்படித்தோற்று போயின என்பதை தெரிந்துக் கொள்வது முக்கியமானதல்லவா?

என் கேள்விக்கு இறைவனின் பதில்!

என் கேள்விக்கு இறைவனின் பதில்!
அருளாளன் அன்பாளன் அல்லாஹ்வின் அழகிய திருப்பெயரால்!
துபாய் காயல் நல மன்றத் தலைவர் ஜனாப் ஜே.எஸ்.ஏ. புகாரீ காக்கா அவர்கள் கருத்தாழமிக்க நல்ல பல மின்னஞ்சல்களை அவ்வப்பொழுது அனுப்பி வைப்பார்கள். அதில் சமீபத்தில் வந்த ஒரு மின்னஞ்சல் என்னை மிகவும் ஈர்த்தது.

வெள்ளி, 13 ஜூலை, 2012

பேராசை பெருநஷ்டம்





நபி ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய ஓரு பிரயாணத்தின் போது ஓரு மனிதன் தானும் அவர்களுடன் வருவதாகக் கூறிச் சேர்ந்து கொண்டான். இருவரும் ஓரு ஆற்றங்கரையோரமாகச் சென்று கொண்டிருந்த போது ஓரு இடத்தில் சாப்பிட அமர்ந்தனர். இருவரிடத்திலும் மூன்று ரொட்டிகள் இருந்தன. இருவரும் ஆளுக்கொரு ரொட்டியைச் சாப்பிட்டனர். ஓரு ரொட்டி மீதி இருந்தது.

செவ்வாய், 10 ஜூலை, 2012

ஜமாத்துடன் தொழுவது தனித்துத் தொழுதை விட 27.மடங்கு அதிக நன்மை என அறிவிக்கப்பட்டுள்ள ஹதீஸிற்க்கு விளக்கம்


ஜமாத்துடன் தொழுவது தனித்துத் தொழுதை விட 27.மடங்கு அதிக நன்மை என அறிவிக்கப்பட்டுள்ள ஹதீஸிற்க்கு விளக்கம்  

1. பாங்கு சொல்லும் பொழுது தொழுகையை ஜமாத்துடன் தொழு வேண்டும்மென்ற எண்ணத்தில் பாங்குக்கு பதில் சொல்வது.


2. முதல் நேரத்திலேயே அத்தொழுகைக்குப் போய்ச் சேர்வது.

புதிரான வினா தெளிவான விடை



ஓரு மனிதர் இப்னு அப்பாஸ் ரலி அவர்களிடம் வந்து, பின்வரும் கேள்விகளைக் கேட்டார்.

வெள்ளி, 6 ஜூலை, 2012

இங்கேயே இரும்





அல்லாஹ்வின் அருட்திருத்தூதர்  அஹ்மத் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் ஓரு நாள் தோழர் அபூதர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுடன் சேர்ந்து வெளியில் புறப்பட்டுச் சென்றார்கள்.

செவ்வாய், 3 ஜூலை, 2012

ஜும்ஆவும் - 1 வருடத்தில் 145 கோடி நன்மைகளும



அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்தஹீ

அன்பிற்கினிய என் அருமை சகோதர சகோதறிகளே!

ஜும்ஆ நாளன்று உங்களுக்கு கிடைக்கும் நன்மைகள் ஒவ்வொரு ஜும்ஆ நாளன்றும்பள்ளி (தொழுமிடங்)களின் வாயில்களின் ஒவ்வொரு வாசலிலும் மலக்குமார்கள்அமர்ந்து முதல் நேரத்தில் வருபவர்கள், அதற்கடுத்த நேரத்தில் வருபவார்களைவறிசையாக எழுதுகிறார்கள். இமாம் (மிம்பறில்) அமர்ந்து விட்டால் (எழுதிய)தங்களது ஏடுகளை சுருட்டிக்கொள்கின்றனார்.

சனி, 30 ஜூன், 2012

இன்னலைப் போக்கிய இமாம்.



ஹஸ்ரத் ஹாஜி காரி அப்துல் பாரி பாகவி. வேலூர்.   


கணவன் மனைவி இருவர் இருந்தனர். கணவன் மனைவியை மிகவும் நேசித்தான். ஆனால் மனைவிக்கோ கணவனைக் கொஞ்சமும் பிடிக்கவில்லை. ஆகவே எப்படியேனும் அவனைப் பிரிந்து சென்று விட வேண்டும். என ஆசைப்பட்டாள். தலாக் திருமண விடுதலை செய்து விடு என்று கேட்டாள்…?


கணவன் தலாக் கொடுப்பானா....?  அவன் தான் அவளை நேசிக்கிறானே.? அவளை அவன் கஷ்டப்படுத்துவதில்லை. அவன். தன் அன்பை பலவகையிலும். வெளிப்படுத்தியும் கூட அவள் அறுத்துக் கொண்டு ஓடிவிடவே விரும்பினாள்.


ஓரு நாள் இருவரும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தனர். மனைவி என்னவோ கோபமாய்க் கூறினாள். அதற்க்கு பதிலளிக்கும் வகையில் கணவனும் கடிந்துரைத்தான். அவளுக்கு கோபம் வந்தது விட்டது. பேச்சை நிறுத்திக் கொண்டாள். அவன் எவ்வளவோ பேசியும் வாய் திறப்பதாயில்லை.


கணவனுக்கு கோபத்தின் அளவு கூடியது. நாளை சுபுஹ் சாதிக் (அதிகாலை) நேரம் வருவதற்க்கு நீ என்னிடம் பேசிவிட வேண்டும். உன் மீது தலாக் நிகழ்ந்து விடும். என்று வெடித்தான். இந்தப் பேச்சினால் விளையவிருக்கும் அவன் அப்போது அறிந்து கொள்ளவில்லை.

கணவனின் இந்தப் பேச்சைக் கேட்ட மனைவி மனதிற்க்குள் சிரித்துக் கொண்டாள். எந்த விடுதலைக்காக அவள் ஏங்கிக் கொண்டிருந்தாளோ அந்த விடுதலை, நாளை அதிகாலை வரை அவனிடம் பேசாமல் இருந்தால் போதும் அது தானாக கிடைத்துவிடும். என்று கணித்து வாயைக் கெட்டியாக மூடிக் கொண்டாள். அவன் வந்த போதெல்லாம் முகத்தைத் திருப்பிக் கொண்டாள். அவள் மனதிலும் முகத்திலும் மகிழ்ச்சி.
நேரம் செல்லச் செல்லக் கணவன் மிரட்ச்சியடைந்தான். விவேகம் இல்லாமல் பேசி விட்டோமே. மனைவியை இழக்க நேர்திடும் போல் இருக்கிறதே என்று கலங்கினான். 


மனைவியைக் காப்பாற்றிக் கொள்ள வழிதேடி ஆலிம்களிடம் ஓடினான். நடந்ததைச் சொல்லி ஏதாவது வழி கூறுங்களேன் என்று வேண்டி நின்றான். அழுது கெஞ்சினான்.

ஆலிம்கள் அனைவரும் கைகளை விரித்துவிட்டார்கள் எப்படியாவது அவளை நாளை அதிகாலை பஜ்ருக்கு பாங்கு சொல்வதற்க்கு முன் பேச வைத்துவிடு. தவறினால்.....நாளை பஜ்ருக்குப் பாங்கு சொல்ல ஆரம்பித்ததும். கூண்டைத் திறந்த்தும் பறக்கும் கிளீ போல் உன் மனைவியும் உன் வீட்டை விட்டு மூட்டைக் கட்டிக் கொண்டு புறப்பட்டு விடுவாள் என்றார்கள். 


கையைத் தலையில் வைத்துக் கொண்டு கண்ணீருடன் திரும்பிக் கொண்டிருந்தவனுக்கு திடிரென பெரிய ஹஜ்ரத் இமாமுல் அஃலம் அபூஹனிபா (ரஹ்) அவர்களின் நினைவு வந்தது. எதற்க்கும் கடைசி முயற்ச்சியாக அவர்களிடமும் ஓரு பேச்சி கேட்டுப் பார்த்து விடுவோம். என்று முடிவு செய்து கொண்டு அவர்களின் வீட்டை நோக்கி ஓடினான்.


அவனுடைய நல்ல நேரம் ஹஜ்ரத் அவர்கள் வெளியே அமர்ந்திருந்தார்கள். ஓடிச் சென்று அவர்களின் கைகளைப் பிடித்துக் கொண்டு அழுது கெஞ்சினான். ஹஜ்ரத்….!    நான் மோசம் போனேன். ஆத்திரத்தில் அறிவிழந்தேன். என்னைக் காப்பாற்றுங்கள். என்றான்.



சிறிது நேரம் சிந்தனையில் ஆழ்ந்த இமாமுல் அஃலம் ரஹ் அவர்கள், பிடிக்காத மனைவியிடம் பிடி கொடுக்காமல்லவா பேச வேண்டும். நீ ஏன் அப்படி பேசினாய் என்று கேட்டுவிட்டு  சரி கவலைப்படாமல் வீட்டிற்க்கு போ. உன் மனைவி மேல் தலாக் நிகழாது. என்றார்கள்.



மகிழ்ச்சியுடன் புறப்பட்ட அம்மனிதன் பாதையில் முன்பு கண்டு பேசிய ஆலிம்கள் சிலரை சந்தித்தான். அவர்கள் இமாமுல் அஃலம் என்ன சொன்னார்கள். என்றுகேட்டார்கள்.  என்ன இருந்தாலும் பெரிய ஹஜ்ரத், பெரிய ஹஜ்ரத் தான். தலாக் ஆகாது எனக் கூறிவிட்டார்கள். என்றான்.

இமாமுல் அஃலம் அறிவித்த முடிவை அறிந்து உலமாக்கள் வியந்தார்கள். சட்டத்தில் சிக்கல் ஏதும் இல்லை. மனைவி பேசாவிட்டால் தலாக் நிகழ்ந்து விடும். பொழுது விடிந்தால் தெரியும் ஹஜ்ரத் அவர்களின் பேச்சி என்று ஆலிம்கள் ஓருவருக்கொருவர் பேசிக்கொண்டனர்.



அவர் விட்டாலும் இவங்க விட மாட்டாங்க போல இருக்கே என கவலையடைந்த கணவன். அன்றிரவெல்லாம் எவ்வளவோ முயற்ச்சிகள் செய்துப் பார்த்தான். அவளைப் பேச வைக்க அவனால் முடியவில்லை. அயர்ந்து உறங்கிப் போனான். பாங்கு ஓலி எப்போது கேட்க்கும் என்று காதுகளைத் தீட்டிக் கொண்டு பொய்த் தூக்கம் தூங்கிக் கொண்டிருந்தாள் மனைவி.


அன்று அதிகாலை சுப்ஹுக்கு அரைமணி நேரம் முந்தி இமாமுல்அஃலம் ரஹ் இல்லத்திலிருந்து எழுந்து அருகிலிருக்கும் மஸ்ஜிதுக்குச் சென்று தஹஜ்ஜுத் தொழுகைக்கான பாங்கை உரத்துக் குரலில் உரைத்தார்கள். வின்னில் விரிந்து வலம் வந்தது பாங்கொலி.


குதித்தெழுந்த மனைவி கணவனை அழைத்து தலாக் ஆகிவிட்டது. நான் உன்னிடமிருந்து விடுதலைப் பெற்றுவிட்டேன் என்றாள்எக்களிப்புடன்.  அடுத்து சிறிது நேரத்திற்க்குப் பிறகு சுப்ஹு வேளை வந்த பிறகு பஜ்ர் தொழுகைக்கான பாங்கு கூறப்பட்டது.



பஜ்ர் தொழுகை முடிந்தது. கணவன் இமாம்களுக்கு முன் வந்து சோர்தவனாக நின்றான். இமாமவர்கள் என்னவென்பது போல் ஏறிட்டுப் பார்த்தார்கள். பாங்கு சப்தம் கேட்டதும் தலாக் ஆகிவிட்டது என்று என்னிடம் கூறினாள் மனைவி என்றான்.



இமாமவர்கள் கேட்டார்கள். இன்று எத்தனை பாங்குகள் ஓலித்தன... இரண்டு அவன் பதில். முதல் பாங்கைக் கேட்டதும் மனைவி உன்னிடம் பேசினாளா...? இரண்டாவது பாங்கு கேட்ட பிறகு பேசினாளா...? இமாம்.  முதல் பாங்குக்குப்  பின் பேசினாள் அவன் பதில். முதல் பாங்கு சுப்ஹு சாதிக் நேரமல்ல தஹஜ்ஜுத் நேரம் அது சுப்ஹு சாதிக்குக்கு முன்பே அவள் உன்னிடம் பேசிவிட்டாள். ஆகவே தலாக் ஆகவில்லை எனக் கூறி அவனை அனுப்பினார்கள் இமாமுல் அஃலம் அபூஹனிபா ரஹ்


இமாமுல் அஃலம் அவர்களின் செயல்பாட்டை அறிந்து ஆலிம்கள் அதிசயித்துப் போனார்கள்.


                            
                           (மஜாலிஸே ஹகீமுல் இஸ்லாம்.)

ஞாயிறு, 24 ஜூன், 2012

ஈமானின் மணம்.





          ஹஸ்ரத் காரி அப்துல் பாரி பாகவி.வேலூர். 


இந்தியாவில் நடந்த ஓர் நிகழ்ச்சி:-  ஓரு அறிஞர் தம் நண்பர் குழுவைக் கண்டார். அவர்கள் ஊரை விட்டு வெகுதூரம் சென்றிருந்திருந்தனர். பசியால் பெரிதும் அவதியுற்றனர். அவர்களுக்கு அறிஞர் ஆலோசனைக் கூறினார்  நண்பர்களே...இங்கு யானைக் குட்டிகள் காணப்படுகின்றன. அவைகளில் எதையும் வேட்டையாடி விடாதீர்கள். யானை எங்கோ சென்றிருக்கிறது, அது திரும்பி வந்தால் உங்களை உயிருடன் விட்டு விடாது. எச்சரிக்கிறேன்.

சனி, 23 ஜூன், 2012

எளிமையும் துறவும்



கேள்வி கேட்க்கப்படாத மூவர்!


ஹஜ்ரத் அபூஹுரைரா ரலி அவர்கள் கூறியுள்ளார்கள்.
மூன்றுபேர் கேள்விகேட்க்கப்படாத நிலையில் சுவனம் புகுவார்கள். ஓருவர் துவைத்துக்கட்ட மாற்றுத் துணியில்லாதவர். அடுத்தவர். அடுப்பில் வைக்க இரண்டு சட்டியில்லாதவர். மூன்றாமவர்.தாகம் தீர தண்ணீர் இருக்கிறதா எனக் கேட்டு எப்பதிலையும் பெறாதவர்.

வெள்ளி, 22 ஜூன், 2012

எப்படியெல்லாம் பேசக்கூடாது?






இறைவனையும் இறுதி நாளையும் (தான் இறந்த பிறகு இறைவன் தன்னை கேள்வி கேட்பான் என்று) நம்பும் மனிதன்
பேசினால் நல்லதையே பேசட்டும் இல்லையென்றால் வாய் மூடி மெளனமாக இருக்கட்டும் - Prophet Muhammadh(Sal)

புதன், 20 ஜூன், 2012

நல்ல பாடம் தந்தாய் இறைவா....உனக்கு நன்றிகள் கோடி...!



அபூ யஜீதுல் புஸ்தாமி ரஹ் அவர்கள் ஓரு மலைச் சரிவில் அமர்ந்து மனதில் எழும் கேள்விகளுக்கெல்லாம் விடை காண முயன்றார்கள். அந்த முயற்சியில் மூழ்கியிருந்த அவர்களுக்கு காற்றும். மழையும். கடுமையான கதிரவனின் கனலும். இருளும். ஓளியும். ஓன்றாகவே தெரிந்தது.  தவத்தின் உச்சகட்டத்தை எட்டிய போது  பசி  அவர்களை அலைகழித்தது. ஓரு நாள் பசியல்ல..... இரண்டு நாள் பசியல்ல...... பதினைந்து நாள் பசியோடு இருந்து தவமியற்றிய அவர்கள் பசியின் தாக்கத்தால் பலமிழந்து சாய்ந்தார்கள்.

செவ்வாய், 19 ஜூன், 2012

பா யஜீத் புஸ்தாம் (ரஹ்)



புஸ்தாம் நகர எல்லையில் மக்கள் கூடி நின்று அவர்களின் திருவருகைக்காக காத்து நின்றார்கள். ஊருக்கு செல்வது என்ற வார்த்தையே இனிக்கும் வார்த்தை. அதிலும் தனக்கு அங்கு வரவேற்ப்புடன் செல்வது என்றால் கேட்க்கவும் வேண்டுமா....?

திங்கள், 18 ஜூன், 2012

மது அருந்த இஸ்லாத்தில் தடை இருப்பது ஏன்?





மனிதனுக்கு நினைவு தெரிந்த நாள் முதலாய் சமுதாயத்தின் கொள்ளைநோயாக இருந்து வருவது போதை தரும் இந்த மது பானங்கள். உலகம் முழுவதும் உள்ள மனித சமுதாயத்தின் அழிவு என்னும் பெருந்துயருக்கு காரணமாக அமைந்திருப்பது இந்த மது பானங்கள்.
இன்று மனித சமுதாயம் சந்தித்துக் கொண்டிருக்கும் ஒட்டு மொத்த பிரச்னைகளுக்கும் ஆணிவேராக அமைந்திருப்பது இந்த மது பானங்கள். உலகில் பல்கிப் பெருகி வரும் குற்றங்களுக்கு காரணமாகவும் மக்களை நடுத் தெருவுக்கு கொண்டு வருவதும் மக்களின் உளச்சோர்வுக்கு காரணியாகவும் அமைந்திருப்பது இந்த மதுபானங்களின் அழிக்கும் சக்திதான்.

வியாழன், 14 ஜூன், 2012

திரும்பிப் பார்......!




الم يجدك يتيما فاوى   ووجدك ضال فهدى ا  ووجدك عايلا
فاغنى  فما اليتيم فلا تقهر  واماالساءل فلا تنهر

மனித வாழ்கை என்பது ஏற்றத் தாழ்வுகளைக் கொண்ட ஓரு பாதையாகும் வாழ்வின் அடிக்கோட்டில் இருப்பவர்கள் எப்போதும் அடிக் கோட்டிலேயே இருப்பதில்லை.ஓரு நேரம் இல்லா விட்டாலும் மற்றொரு நேரம் உயர்நிலையை அடைவார்கள்.

ஞாயிறு, 10 ஜூன், 2012

நமது நபி (ஸல்) அவர்களை பற்றிய சிறு குறிப்புகள்.



1. நபி (ஸல்) அவர்களின் வாப்பா பெயர்.
  அப்துல்லா.


2. நபி(ஸல்) அவர்களின் தாயார் பெயர்.
  ஆமீனா


3. நபி (ஸல்) அவர்களின் வம்சத்தின் பெயர்.
   குரைஷி


4. நபி (ஸல்) அவர்களின் குடும்பத்தின் பெயர்.
  காசிம்.


5. நபி (ஸல்) அவர்கள் பிறந்த இடம்.
   மக்கா


6. நபி(ஸல்) அவர்கள் இறந்த இடம்
   மதினா.

சனி, 9 ஜூன், 2012

"யாராவது காப்பாத்துங்க.....'

 
ஒரு காட்டில் ஒரு இளைஞன் நடந்து போய்க் கொண்டிருந்தான். 
அவனுக்குப் பசியெடுத்தது. ஒரு மரத்தில் உயரத்தில் கனிந்த பழங்கள் இருப்பதைக் கண்டான்.

வியாழன், 7 ஜூன், 2012

மனவளம் மிகுந்த வள்ளல்!



தோட்டத்துக்குள் நுழைந்தது ஒரு நாய். காவலுக்கு உள்ளே நின்றிருந்த கருநிற அடிமையின் கண்களும் கவனித்தன அந் நாயை. ஆனாலும் அதனை விரட்டியடிக்கவில்லை அந்தக் காவலாளி. ஒட்டி உலர்ந்த அதன் வயிறும், வாடிச் சோர்ந்திருந்த முகமும் பார்க்கப் பரிதாபகரமாயிருந்தன.

திங்கள், 4 ஜூன், 2012

அவர்கள் எங்கே......நாமெங்கே.....?




முயலை விரட்டும் வேட்டை நாய்கள் போல். விரன்டோடும் அந்த குரைஷிக் காபிர்களில் ஓருவனை தடுத்து நிறுத்தினான் மற்றவன்...எங்கே ஓடுகின்றீர்கள்....?  மக்காவின் எல்லைக்கு...!  ஏன் நீயும் வாயேன் பங்கு போட்டுக் கொள்ளலாம். ஓடிக் கொண்டிருந்தவன் சொல்லி விட்டு மீண்டும் ஓடத் துவங்கினான்.

ஞாயிறு, 3 ஜூன், 2012

வேண்டாம் நம் பிள்ளைக்கு





 
சேர்ந்து வாழும் காலத்தில்
சோர்ந்துப் போய்
தனிமையில் நீயும் நானும்;
அங்கலாய்க்கும் 
வயதின் கதறலை
வாய் மூடி விழிப்பிதிங்கி;
வழியனுப்புவிட்டேன்! 

வெள்ளி, 1 ஜூன், 2012

சமீபத்தில் படித்து ரசித்தவை..



சிந்திக்க சில விஷயங்கள்... {கேவலமான உண்மைகள்.}


 
1.அத்தியாவசிய தேவையான அரிசியின் விலை கிலோ 30 லிருந்து 40 ரூபாய். ஆனால் சிம்கார்டு இலவசமாகக் கிடைக்கிறது..!!

2.
பொது வினியோகத்தில் விற்கப்படும் அரிசியின் விலை கிலோ ஒரு ரூபாய். ஆனால் பொதுக்கழிப்பறையின் கட்டணம் மூன்று ரூபாய்..!!

புதன், 30 மே, 2012

இரவு வணக்கத்தை அனைவரும் சுவைக்க முயற்சி செய்வோம்.









இரவு வணக்கமென்பது நாம் அனைவரும் சுவைக்க வேண்டிய ஒன்றாகும். அதற்கான ஆசை எம்மனைவரிலும் இன்னும் இன்னுமின்னும் வளர வேண்டும். நாம் எமது முன்னைய சமுதாயத் தவர்களோடு நன்மைகளால் போட்டுபோடுவதற்கான மிகப் பெரும் சந்தர்ப்பம் இந்த இரவு வணக்கமாகும்.

திங்கள், 28 மே, 2012

அன்னையின் ரோஷம்.....!



அண்ணல் நபி (ஸல்) அவர்கள் ஓரு துணைவியரின் இல்லத்தில் அன்று இருந்து கொண்டிருக்கின்றர்கள்..அப்போது மற்றொரு மனைவியின் இல்லத்திலிருந்து ஓருத் தட்டைப் பாத்திரம் வருகின்றது. அதிலே சுவை மிக்க உணவும் இருந்த்து. அந்த அன்னை தமது வீட்டில் சமைத்திருந்த உணவை நபியவர்கள் இருக்கும் இடத்துக்கு அனுப்பி வைத்தார்கள். ஆனால் இந்த அனனைக்கு யாருடைய வீட்டில் நபியவர்கள் இருக்கிறார்களோ அந்த அன்னைக்கு இது பிடிக்கவில்லை.

வியாழன், 24 மே, 2012

நோன்பில் சூரியன் மறையாவிட்டால்.......?






இமாம் அபூயுசுப் (ரஹ்) ஓர் நாள் மாணவர்களுக்கு பாடம் நடத்திக் கொண்டிருந்தார்கள். ஓரு மாணவரைக் கவனித்த இமாமவர்கள் கூறினார்கள்...மாணவரே...!   உன் வகுப்பு மாணவர்கள் அவ்வப்போது கேளவி கேட்டு விளக்கம் பெறுகிறார்கள். ஆனால் நீ மட்டும் எதுவும் கேடப்பதில்லை.உனக்கு சந்தேகம் எதுவும் தோன்றுவதில்லையா..
எனக்கேட்டார்கள்…?

புதன், 23 மே, 2012

திருடர்கள் பெற்ற தலாக்.



ஓரு வீட்டில் சில திருடர்கள் புகுந்தனர்.  வீட்டுக்காரனை பிடித்து கட்டிப் போட்டனார். வீட்டில் இருந்த பொருட்களையெல்லாம் பொறுக்கி மூட்டை கட்டிக் கொண்டனர். நாடிய பொருட்கள் கிடைத்தது. ரொம்ப மகிழ்ந்தனர்.

ஓயாது முழங்குவோம் ஓப்பற்ற ஸலவாத்தை..



ஹஜரத் அலி ரலி அவர்கள் கூறுவது. நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.
ஓருவனிடத்தில் என்னைப்பற்றி கூறப்பட்டு அவன் என் மீது உடனே ஸலவாத்துக் கூறவில்லை என்றால் அவன் தான் மகா வடிகட்டிய கஞ்சனாவான்.                        
                                                   திர்மிதி

நல்லவர்களின் நாவில் விழுகாதே…! என்று நமது பெரியவர்கள் அடிக்கடி கூறுவதை கேட்டிருக்கிறோம்.

செவ்வாய், 22 மே, 2012

அன்னை ராபிஆவின் எதிர் கேள்வி



ஹஜ்ரத் ராபியத்துல் பஸரிய்யா ரஹ் அவர்கள் வரலாற்றில் வரும் ஓரு நிகழ்ச்சி.......
அவர்கள் மறைவெய்தி மண்ணறையில் அடக்கம் செய்யப்பட்டதும் வானவர்கள் முன்கர் நகீர் வந்து கேள்வி கேட்டார்கள்.

வானவர்கள் மன் ரப்புக..? .வமா தீனுக்க.?.உன் இறைவன் யார்..?
             .உனது மார்க்கம்  என்ன...?.

திங்கள், 21 மே, 2012

ஓரு கல்லின் கண்ணீர்






நபி மூஸா (அலை) அவர்கள் கல் ஓன்று அழுவதைக்கண்டு ஏன் அழுகிறாய்..?  என்று கேட்டார்கள். ( வகூதுஹன்னாசு வல் ஹிஜாரா) (2:24) நரகத்திற்க்கு மனிதர்களும் கற்களும் இரையாவார்கள். என்ற இந்த வசனத்தை கேட்டது முதல் அச்சம் கொண்டு அழுது கொண்டிருக்கிறேன். என்றது கல்.

எறும்பு புகட்டும் பாடங்கள் எத்தனை.....!



ஓரு முறை சுலைமான் அலை அவர்களும் ஓர் எறும்பும் பின் வருமாறு உரையாடுகிறார்கள்....

சுலைமான் அலை::  அஸ்ஸலாமு அலைக்கும்

எறும்பு:: வ அலைக்கும் ஸலாம்...

ஞாயிறு, 20 மே, 2012

முஸ்லீம்கள் இறைச்சியுண்பது நியாயமா?


கால்நடைகளை கொல்வது இரக்கமற்ற செயல். ஆனால் இஸ்லாமியர்கள் அந்த கால்நடைகளை இரக்கமற்ற முறையில் கொன்று அதன் இறைச்சியை உண்கிறார்களே. ஏன்?



டாக்டர் ஜாகிர் நாயக் பதில்: 

உயில்மொழி






ன்னுயிர்
பிரியும் வேளையில்
தலைமாட்டிலும்
கால்மாட்டிலும்
நின்றவர்கள்
நீங்கள்தானா?

சனி, 19 மே, 2012

சொர்கத்தின் தலைவாசலிலே......



மறுமையில் சொர்கத்தின் தலைவாசலுக்கு அருகில் நான்கு வகையினர் எவ்வித கேள்வி கணக்கும் தண்டணையுமில்லாமல் கொண்டு வரப்படுவார்கள்.

வெள்ளி, 18 மே, 2012

அன்னையர் தினம்





ஈரைந்து மாதங்கள் எனை சுமந்தாய்
உன் கருவறை என் அரன்மணை
உன் மடி தான் என் சொர்க்கம்.
இம்மையில்...
உயிரை ஊணாக்கி
என் உடல் வளர்த்தாய்!

செவ்வாய், 15 மே, 2012

எட்டு சவால்கள்....எதிர்கொள்ளும் வழி!





உலகின் விலைமதிப்பில்லாத ஆதாரம், மிகச்சிறந்த நம்பிக்கை, எதிர்காலம்... குழந்தைகள்தான்! இன்றைய குழந்தைகள்... முன் எப்போதும் இல்லாத அளவுக்கு வாய்ப்புகளைப் பெற்றுள்ளார்கள், அதிநவீன வசதிகளை அனுபவிக்கிறார்கள். ஆனால், அவர்கள் குழந்தைகளாக, குழந்தைமைக்கே உரிய சந்தோஷங்களோடு இருக்கிறார்களா என்ற கேள்வியை எழுப்புகிறது, அவர்களுக்கு முன்னால் நிற்கும் சவால்கள்.

வியாழன், 19 ஜனவரி, 2012

மனிதக் கறி தின்னும் கார்ப்பரேட் மருத்துவர்கள்


தூத்துக்குடி சேதுலட்சுமி படுகொலை மற்றும் அப்பாவி பொதுமக்கள் மீது அரசு மருத்துவர்கள் காட்டும் அயோக்கியத்தனம் ஆகியவற்றை முன்வைத்து இக்கட்டுரை பதியப்படுகிறது. ஏற்றுக்கொள்பவர்கள் share செய்யுங்கள். நாட்டு மக்கள் தெரிந்துகொள்ளட்டும்.



“சாலை விபத்தில் சிக்கிய வாலிபரின் உடல் உறுப்புகள் தானம்.” “மூளைச் சாவு ஏற்பட்ட இளைஞரின் உறுப்புகள் தானம்’’  -இது போன்ற செய்திகளை மாதம் ஒருமுறையேனும் நீங்கள் படித்திருப்பீர்கள்.

செவ்வாய், 10 ஜனவரி, 2012

அறியாத சில விசயங்களை தெரிந்து கொள்வோம் வாங்க!


இரு கண்களுக்கு நடுவில் நெற்றிப் பொட்டில் அவ்வப்போது விரல்களால் அழுத்துவதால் நமக்கு நினைவாற்றல் அதிகரிக்கும். மறந்து போன விஷயங்களை ஞாபகத்துக்கு கொண்டுவர இது உதவும். இந்த இடத்தில்தான் நினைவாற்றலுக்கான அக்குப் புள்ளிகள் உள்ளன. இதனால்தான் மறந்துபோன விஷயங்களை நினைவுக்குக் கொண்டுவர நெற்றியில் விரல் வைத்து தட்டுகிறார்கள். இது முன்னோர்கள் வழியாக நமக்கும் வந்தது.

*வலது கைப்பழக்கம் உள்ளவர் என்றால் சாப்பிடும்போது வாயின் வலது புறத்தில்தான் உணவை மென்று சுவைத்துச் சாப்பிடுவார்கள். அதே சமயம் இடதுகைப் பழக்கம் உள்ளவர்கள் சாப்பிடும்போது வாயின் இடது புறத்தை உபயோகித்து உணவை ருசிப்பது வழக்கம்.

*வெங்காயம் உரிக்கும்போது நமக்கு கண்ணீர் வரும். காரணம் அதில் உள்ள அமிலத்தன்மை. வெங்காயத்தினை உரிக்கும்போது அதில் உள்ள அமிலம் வெளிப்பட்டு காற்றில் கரைந்து உரிப்பவர் மற்றும் அருகில் இருப்பவர் கண்களில் இருந்து கண்ணீரை வரவழைத்து விடுகிறது. வெங்காயம் உரிக்கும்போது சூயிங்கம் மென்றால் கண்களில் இருந்து கண்ணீர் வெளிவராது.

*உங்கள் நாக்கு இளம் சிவப்பு நிறத்தில் இருந்தால் உங்கள் நாக்கு பாக்டீரியா தொல்லையில்லாமல் சுத்தமாக இருக்கிறது என்று அர்த்தம். வெண்மை நிறத்தில் இருந்தால் பாக்டீரியா பாதிப்பு உள்ளது என்று பொருள்.

*வியப்பால் அவள் விழி விரிந்தது என்று கவிஞர்கள் கவிதை புனைவார்கள். விஞ்ஞான ரீதியில் இது உண்மை. அதாவது ஒரு மனிதன் மகிழ்ச்சியான ஒன்றை அல்லது ஆச்சர்யம் தரும் ஒன்றைப் பார்க்கும்போது அவனது கருவிழி 45 விழுக்காடு விரிவடைகிறது என்கின்றனர் விஞ்ஞானிகள்.

*கடலில் கிடைக்கும் சங்கை எடுத்து காதில் வைத்துக் கேட்டால் அதில் இருந்து அலை ஓசை சத்தம் வருவதுபோல கேட்கும். அதனை சிலர் கடல் அலையின் ஓசை என்று நினைப்பார்கள். ஆனால் உண்மை அதுவல்ல. காதுகளில் உள்ள ரத்தக் குழாயில் ரத்தம் பாய்ந்து செல்லும் சத்தம்தான் சங்கில் எதிரொலித்து நமக்கு கடலலை ஓசையாகக் கேட்கிறது.

*கேரள மாநிலம் நீலாம்பூர் என்னும் காடுகளில் ஆதிவாசி மக்களின் சில பிரிவினரில் வினோதமான பழக்கம் நிலவுகிறது. இவர்கள் பிறக்கும் குழந்தை களுக்கு உடனடியாக பெயர் வைத்துவிடுவதில்லை. 15 வருடங்கள் ஆன பிறகே பெயர் சூட்டுகிறார்கள். அதுவரை தங்களது குழந்தைகளை மோளே (மகள்), மோனே (மகன்) என்று மலையாளத்தில் அழைக்கி றார்கள். 15 வயதாகும்போது அந்தக் குழந்தையின் தந்தையின் கனவில் கடவுள் தோன்றி `இந்தப் பெயரை உன் குழந்தைக்கு வை' என்று சொல்வாராம். அதன் பிறகே பெயர் சூட்டும் படலம் நடக்கும்.

*ஆயிரக்கணக்கான சிட்டுக்குருவிகளை அறிவியல் ரீதியில் ஆராய்ச்சி செய்ததில் அவைகள் அனைத்தும் கசக்கும் சுபாவமுடைய வேப்பமரத்து இலை-குச்சிகளால் நேர்த்தியாக கட்டியிருப்பது கண்டறியப்பட்டது. மகத்தான மருத்துவ குணம் கொண்ட வேப்பிலையின் கசப்பான நெடிக்கு முட்டைகளையோ, குஞ்சுகளையோ வைரஸ் கிருமிகள் நெருங்குவது கிடையாது. ஆகவேதான் சிட்டுக்குருவிகள் வேப்பிலையால் கூடுகளை கட்டுகின்றன.

*நீரிலும் நிலத்திலும் வாழும் இயல்புடைய தவளைகள் தமது கண்களால் கேட்கவும் செய்கின்றன. தவளைகளின் கண்களே காதுகளாகவும் இயங்குகிறது. தவளைகளுக்கு அதனுடைய கண்களுக்குப் பின்புறம் மூளையிலிருந்து வரும் நுண்ணிய நரம்பு அமைந்துள்ளது. அதன் காதுகளின் பணியிணைச்செய்கிறது.

*கொடிய விஷத்தைக் கொண்ட தேள்கள் சேர்ந்தாற்போல் ஆறு மாதம் கூட உணவு உண்ணாமலே வாழக் கூடிய வல்லமை பெற்றது. விலங்கியல் ஆராய்ச்சியின் போது ஒரு தேள் 420 நாட்கள் எந்த வித ஆகாரமும் இல்லாமல் வாழ்ந்து சாதனை புரிந்தது.

*கண்கவர் நீலகிரி மலைக் காடுகளில் ஒரு வகை பச்சோந்தி வாழ்கிறது. இதனுடைய உடல் நீளம் 5 செ.மீட்டர் தான். இதில் ஒரு வியப்பான செய்தி என்னவென்றால், இதன் நாக்கின் நீளம் 1.25 மீட்டர். இதன் நாக்கு எப்போதும் சுருட்டிய நிலையிலேயே இருக்கும். இது ஒரு மரக்கிளையில் ஒய்யாரமாக உட்கார்ந்தபடியே தனது நீண்ட நாக்கினை நீட்டி மற்ற கிளைகளில் உள்ள புழு, பூச்சிகளை அதில் ஒட்ட வைத்து தின்றுவிடும்

*முதன் முதலில் நீர்மூழ்கி கப்பலுக்கான வரைபடத்தை உருவாக்கியவர் வில்லியம் போர்னே என்னும் இங்கிலாந்துக்காரர். இவர், 1578-ம் ஆண்டு நீர்மூழ்கி கப்பலுக்கான வரைபடத்தை வரைந்தார். எனினும் கார்னிலியூஸ் வான் டிரெப்பல் என்னும் நெதர்லாந்து நாட்டுக் காரர் 1620-ம் ஆண்டு முறையான நீர்மூழ்கிக் கப்பலை வடிவமைத்தவர். நீரில் மூழ்கக் கூடிய ஒரு படகைத் தயாரித்த அவர் அதில் பிராண வாயு கிடைப்பதற்காக நீண்ட குழாயை இணைத்திருந்தார். நீருக்குள் மூழ்கியிருப்பவர் துடுப்பு மூலம் படகை இயக்கவேண்டும். 12 படகோட்டிகளுடன் தான் வடிவமைத்த நீர்மூழ்கிக் கப்பலை அவர் லண்டன் தேம்ஸ் நதியில் இயக்கிக் காட்டினார். 3 மணி நேரம் இந்தக் கப்பல் நீருக்கடியில் இருந்தது.


*ராணுவத்திற்கான நீர்மூழ்கிக் கப்பலை 1776-ம் ஆண்டு டேவிட் புஷ்னல் என்னும் அமெரிக்கர் வடிவமைத்தார். எனினும் சகல வசதிகளுடனும் கூடிய முதல் நீர்மூழ்கிக் கப்பல் ஜான் பி.ஹாலண்ட் மற்றும் சைமன் லேக் என்னும் இருவர் 1890-ம் ஆண்டு ஒரே நேரத்தில் தயாரித்தனர். ஜானின் நீர்மூழ்கிக் கப்பலின் டிசைனை அமெரிக்காவும் சைமன் லேக்கின் வடிவமைத்ததை ரஷியா-ஜப்பான் நாடுகளும் ஏற்றுக்கொண்டு தயாரிக்க ஆரம்பித்தன.

*ஒரு மனிதன் தினமும் சராசரியாக ஒரு மணி நேரம் 6 நிமிடங்களை பயணத்தில் கழிக்கிறான். வருடத்திற்கு ஒவ்வொருவரும் சராசரியாக 12 ஆயிரம் கிலோ மீட்டர்கள் பயணம் செய்கிறார்கள்.உலக அளவில் 53 சதவீதம் பேர் கார்களிலும், 26 சதவீதம் பேர் பஸ்சிலும், 9 சதவீதம் பேர் ரெயிலிலும் இன்னொரு 9 சதவீதம் பேர் விமானங்களிலும் பயணிக்கிறார்கள். சைக்கிள் பயணம் வெறும் 3 சதவீதம்தான். 2050-ம் ஆண்டு அதிகவேக வாகனங்களின் எண்ணிக்கை பல்கிப் பெருகி விடும் என்பதால், அப்போது ஒரு நாளில் ஒருவர் பயணம் செய்யும் நேரம் 12 நிமிடங்களாகக் குறைந்து விடுமாம். அப்போது கார்களில் பயணம் செய்வோர் 35 சதவீதம் பேரும், பஸ்சில் 20 சதவீதம் பேரும் அதிகவேக வாகனங்களில் 41 சதவீதம் பேரும் ரெயிலில் 4 சதவீதம் பேரும் பயணம் செய்வார்கள் என்று மதிப்பிட்டிருக்கிறார்கள࠯?.

*உலகின் முதல் போக்குவரத்து சிக்னல் 1890-ம் ஆண்டு லண்டன் நகரில் பயன் படுத்தப் பட்டது. இதில் ஒரு ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால் அப்போது பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருளில் இயங்கும் வாகனங்கள் லண்டனில் எதுவும் கிடையாது. குதிரைகள் இழுத்துச் செல்லும் பஸ்கள் மட்டுமே இயங்கின. அமெரிக்காவில் 1890ம் ஆண்டு இறுதி வாக்கில் தான் கார்கள் அறிமுகமாயின. முதல் தானியங்கி போக்குவரத்து சிக்னல் ஓகியோ மாகாணத்தில் உள்ள கிளீவ்லாண்ட் நகரில் 1920-ம் ஆண்டு பொருத்தப்பட்டது.

*வங்கி முறையிலான கடன் கொடுக்கும் பழக்கம் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஏற்பட்டு விட்டது. பணக் கடன் வழங்கியது, கடனை அடைத்தது போன்றதற்கான ஆதார ரசீதுகள் 14-ம் நூற்றாண்டில் ஏற்பட்டதாகும். காகிதப் பணம் கடன் தருவது 17-ம் நூற்றாண்டில் வேகமாக பரவியது. தானியங்கி பணம் பட்டுவாடா செய்யும் எந்திரங்களில் பணம் எடுப்பதற்கு அட்டை வழங்குவது நமது நாட்டில் 2000-ம் ஆண்டுக்குப் பின்னர்தான் வேகமாக வளர்ச்சி கண்டது. எனினும் அமெரிக்காவில் 1951-ம் ஆண்டிலேயே பணம் எடுக்கும் அட்டைகள் புழக்கத்திற்கு வந்து விட்டன. டைனர்ஸ் கிளப் தனது உணவக வாடிக்கையாளர்கள் 200 பேருக்கு நிïயார்க் நகரில் உள்ள தங்களின் 27 உணவகங்களில் எங்கு வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்ளும் கிரடிட் கார்டுகளை வழங்கியது. காந்த பட்டைகளுடன் கூடிய கிரடிட் கார்டு 1970-ம் ஆண்டு புழக்கத்திற்கு வந்தது.

*வாலாட்டிக் குருவி எப்போதும் ஏன் வாலை ஆட்டிக் கொண்டே இருக்கிறது தெரியுமா?...

அது சுவாச உறுப்பாக பெற்றிருப்பது வாலைத்தான். எனவேதான் சுவாசிப்பதற்காக தனது வாலை இடைவிடாது ஆட்டிக் கொண்டே இருக்கிறது

சனி, 7 ஜனவரி, 2012

இதயமில்லாதவர்களா டாக்டர்கள்? -ஹெச்.ஷேக் மைதீன்-



அரசு டாக்டர் ஒருவர், நோயாளியின் உறவினர்களால் கொல்லப்பட்டதைக் கண்டித்து, டாக்டர்கள் போராட்டம் நடக்கிறது. குழப்பங்களைத் தவிர்க்க, அரசு டாக்டர்களுக்கான விதிமுறைகளை, அரசு கடுமையாக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

சிகிச்சை சரியா?தூத்துக்குடி அரசு டாக்டர் சேதுலட்சுமி கொலையைக் கண்டித்து, அரசு மற்றும் தனியார் டாக்டர்கள் ஒற்றுமையோடு போராட்டத்தில் இறங்கியுள்ளனர். டாக்டர் சேதுலட்சுமி எம்.பி.பி.எஸ்., பட்டப்படிப்பும், மயக்க மருந்தியலுக்கான டிப்ளமோ படிப்பும் முடித்துள்ளார். அவரை பொறுத்தவரை, மயக்க மருந்தியல் டாக்டராகவும், பொது வியாதிகளுக்கான முதற்கட்ட சிகிச்சை தரும் மருத்துவராகவும் மட்டுமே சிகிச்சை தர முடியும்.ஆனால், விதிகளை மீறி, கர்ப்பிணிகளுக்கு, ஒரு மகப்பேறு (கைனகாலஜிஸ்ட்) டாக்டர் பார்க்க வேண்டிய சிகிச்சையை பார்த்திருக்கிறார். மேலும், இறந்த சிசுவை வயிற்றிலிருந்து எடுப்பதற்கு, தானே அறுவை சிகிச்சை செய்துள்ளார். இந்த இடத்தில், மயக்க மருந்தியல் நிபுணரான டாக்டர் சேதுலட்சுமி, ஒரு அறுவை சிகிச்சை (சர்ஜன்) நிபுணராக மாறியிருக்கிறார். இதுவும் மருத்துவ விதிமீறல் என்பது குற்றச்சாட்டு.இதுமட்டுமின்றி, "தன்னிடமே பல முறை, வழக்கமான பரிசோதனை செய்து வந்த கர்ப்பிணிக்கு, அறுவை சிகிச்சை செய்ய, பணம் கொண்டு வரும் வரை காத்திருந்தார்' என்பது, கர்ப்பிணி குடும்பத்தாரின் குற்றச்சாட்டு. இந்த இடத்தில், உயிருக்கு முன், பணம் பிரதானமாக இருந்துள்ளது.

கிளினிக் நடத்தலாமா?அரசு டாக்டர்கள் தனியாக கிளினிக் நடத்த, அரசு தடை விதிக்கவில்லை. ஆனால், தனியாக கிளினிக் நடத்த மாட்டோம், தனியார் மருத்துவமனையில் பணிபுரிய மாட்டோம் என்று, அரசிடம் உறுதி கொடுத்தால், கூடுதல் ஊதியம் தரப்படுகிறது. இதில், குறிப்பிட்ட துறை நிபுணர்களாக இருக்கும் பலர், இந்த உறுதி கொடுக்காமல், தனியாக கிளினிக் நடத்துகின்றனர்.அதேநேரம், பெரும்பாலான டாக்டர்கள், காலையில் மருத்துவமனைக்கு வந்து கையெழுத்து போட்டு விட்டு, பெயரளவில் நோயாளிகளைக் கவனித்து விட்டு, தனியார் மருத்துவமனைகளுக்கு சென்று விடும் நிலை உள்ளது. ஸ்டான்லி மருத்துவமனையில், கடந்த ஆண்டு இப்படி சென்றவர்களுக்கு, மருத்துவமனை முதல்வர் கிடுக்கிப்பிடி போட்டதால், அவரை மாற்றக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்திய சம்பவமும் நடந்தது.

இதுதான் உதாரணம்:அரசு மருத்துவமனையில், டாக்டர்கள் சரியாக வருகிறார்களா, வரவில்லையா என்பதற்கு உதாரணமாக, கடந்த வாரம், "தினமலர்' நாளிதழில், கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் டாக்டர்களின் வருகைப் பதிவேட்டில் குளறுபடி இருப்பதாகவும், டாக்டர்கள் சரியாக பணிக்கு வருவதில்லை என்றும், ஆதாரத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து, தடயவியல் பிரிவு டாக்டர்கள் கூண்டோடு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.இதேபோல், கடந்த வாரம் சுகாதாரத் துறை அமைச்சர் விஜய், அரசு பொது மருத்துவமனையில் நடத்திய ஆய்வில், வருகைப் பதிவேட்டில் பல டாக்டர்களின் கையெழுத்து இல்லாததை கண்டுபிடித்து, தாமத வருகைப் பதிவு வைக்க உத்தரவிட்டார். இப்படி, அரசு டாக்டர்களின் குளறுபடிகளுக்கு, காலங்காலமாக பல உதாரணங்கள் உள்ளன.

கொலையும் போராட்டமும்...:இந்த நிலையில் தான், டாக்டரின் கொலையை கண்டித்து, மாநிலம் தழுவிய வேலை நிறுத்தம் செய்துள்ளனர். டாக்டரின் கொலையும், கர்ப்பிணி இறந்ததும் மன்னிக்க முடியாதது என்றாலும், ஒரு உயிர் கொல்லப்பட்டதற்கு, மருத்துவமனைகளில் இவர்களை நம்பி சிகிச்சை பெறும் பல லட்சம் உயிர்களை பணயம் வைத்து, வேலை நிறுத்தம் செய்வது நியாயமா? ஒரு கொலைக்கு, பல உயிர்களை பழிவாங்கத் துடிக்கலாமா என்பது, ஸ்டிரைக் செய்த டாக்டர்களுக்கும், டாக்டர்களாக படிப்போருக்கும் மட்டுமே வெளிச்சம்.அரசு மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர்களில் பெரும்பாலானோர், அரசு மருத்துவக் கல்லூரிகளில் படித்தவர்கள். மக்களால், மக்கள் வரிப் பணத்தால் கட்டப்பட்ட அரசுக் கல்லூரியில், தனியார் மருத்துவக் கல்லூரியை விட குறைந்த கட்டணத்தில் படித்து விட்டு, தாங்கள் எந்த மக்களுக்கு சொந்தமான கல்லூரியில் படித்தனரோ, அந்த மக்களுக்கே சிகிச்சை தருவதில் தயக்கம் காட்டுகின்றனர்.

இதுகுறித்து, சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத் தலைவர் டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் கூறியதாவது:நோயாளிகளின் பாதுகாப்பு தான் டாக்டர்களின் பாதுகாப்பு. அரசு டாக்டர்களுக்கும், பொது சுகாதாரத் துறைக்கும் அரசு சரியான விதிகளை வகுத்து, கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும். மத்திய அரசிற்கு இணையாக, அரசு டாக்டர்களுக்கு சம்பளம் தந்தால், அவர்கள் தனியாக கிளினிக் நடத்தவோ, பணி புரியவோ செல்ல மாட்டார்கள்.அதேபோல், விதிகளையும் கடுமையாக்க வேண்டும். நோயாளிகளுக்கு நுகர்வோர் சட்டப்படியும், டாக்டர்களுக்கு டாக்டர்கள் பாதுகாப்பு சட்டப்படியும், நிவாரணம் கிடைக்க வேண்டும். தவறு செய்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது அரசின் கடமை.இவ்வாறு ஜி.ஆர்.ரவீந்திரநாத் கூறினார்."அரசு ஊழியர்கள் தனியார் நிறுவனத்தில் பணிபுரியக் கூடாது' என்ற சட்டம், அரசு டாக்டர்களுக்கும் வர வேண்டுமென்பது, நடுநிலையாளர் கோரிக்கை. அரசும், டாக்டர்களும் மனிதாபிமான எண்ணத்துடன், தாங்கள் வாழும் சமூகத்தை காப்பாற்ற வேண்டுமென்ற நல்லெண்ணத்தில், விதிகளை கடுமையாக அமல்படுத்தவும், பின்பற்றவும் தயாரானால் மட்டுமே, நோயாளிகளுக்கும் பாதுகாப்பு, டாக்டர்களுக்கும் பாதுகாப்பு. இல்லையென்றால், "இதயமில்லாதவர்களா டாக்டர்கள்' என்ற மக்களின் மன நிலையை மாற்ற முடியாது.

பொது பிரச்னைக்கு வராதது ஏன்?ஒரு டாக்டர் கொலையுண்டதற்கு, டாக்டர்கள் கண்டனமும், வேதனையும் தெரிவித்துள்ளது நியாயமானது. ஆனால், அதற்காக ஒட்டுமொத்தமாக மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தி, அரசு மருத்துவமனைகளை டாக்டர்கள் ஸ்தம்பிக்கச் செய்து விட்டனர்.இதேபோல், @கால்கட்டாவில், ஏ.எம்.ஆர்.ஐ., தனியார் மருத்துவமனையில், தீ விபத்து ஏற்பட்டு, 90 உயிர்கள் பலியானது. இதற்கு, ஒட்டுமொத்த டாக்டர்கள் இணைந்து, ஒற்றுமையுடன் ஒரு கண்ணீர் அஞ்சலி கூட செலுத்தவில்லையே. தமிழகத்தின் வாழ்வாதாரமான உணவு உற்பத்தியை பாதிக்கும் வகையிலான, முல்லைப் பெரியாறு பிரச்னைக்கு, டாக்டர்கள் ஒற்றுமையுடன் சங்கத்தின் துணையுடன் போராடவில்லையே."தானே' புயல் பாதித்த பகுதிகளில், மக்களின் உதவிக்கு, அரசுடன் தனியார் தொண்டு அமைப்புகள் களமிறங்கியுள்ள நிலையில், டாக்டர்கள் சங்கங்கள் என்ன நிவாரணம் தந்தார்கள் என்பது, அவர்களுக்கே வெளிச்சம்.இப்படி பொது மக்களின் பிரச்னைகளுக்கு ஒதுங்கி விட்டு, தங்கள் தொழில் சார்ந்தவர்களுக்கு மட்டும் வருவது, சமூக நல்லெண்ணமா என்பதை டாக்டர்களே விளக்க வேண்டும்.