புதன், 20 மார்ச், 2024

கலங்கிய குட்டை. (கதை)

 


புத்தர் ஒரு முறை தன் சீடர்களுடன் பயணம் சென்று கொண்டிருந்தார். செல்லும் வழியில், ஒரு சிறு நீர்நிலையைக் கண்டார் ஒரு சீடனிடம் அங்கிருந்து குடிக்க நீர் கொண்டுவருமாறு சொன்னார்.

நீ ஒரு முட்டாள். (கதை)

 

ஒரு பழைய கதை 

எனக்கு இந்த கதை எப்போதும் மிகவும் பிடிக்கும். 


ஒரு விறகுவெட்டி வயதானவன், ஏழை, அனாதை. 


அவன் சாப்பாட்டிற்கு ஒரே வழி நாள்தோறும் காட்டிற்கு வந்து விறகு வெட்டி கொண்டு சென்று விற்று வரும் பணத்தில் சாப்பிடுவதுதான்.


 காட்டிற்குள் நுழையும் இடத்தில் ஒரு அழகிய அரசமரம் இருந்தது. 


கௌதம புத்தர் ஞானமடைந்த மரம் அதுதான். 


அதனால்தான் அது அரசமரம் என்றழைக்கப் படுகிறது.


ஒரு விஷயம் தெரியுமா உனக்கு?


 மரங்களிலேயே அரசமரம்தான் மிகவும் உணர்வுபூர்வமானதும் மிக புத்திசாலியான மரமும் கூட. 


அந்த மரத்தில் மற்ற மரங்களில் இல்லாத ஒருவகையான அமிலம் சுரக்கிறது. 


அந்த அமிலம் புத்திசாலித்தனம் வளர மிக அத்தியாவசியமான ஒன்று என்பதை மிக சமீபத்தில்தான் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர் என்பதை அறிந்தால் நீ மிகவும் வியப்படையக்கூடும். 


புத்தர் அந்த மரத்தின் கீழ் ஞானம் பெற்றது ஒரு தற்செயலான நிகழ்வு அல்ல!


இந்த விறகுவெட்டி அந்த மரத்தின் கீழ் ஒரு வயதான ஞானி உட்கார்ந்திருப்பதை பார்ப்பான்.


 அவர் இரவு, பகல், வெயி்ல், மழை, குளிர் என எல்லாநேரங்களிலும் எல்லா காலங்களிலும் அங்கே இருப்பதை பார்ப்பான். 


அதனால் காட்டிற்குள் நுழையும் முன் அவர் காலில் விழுந்து வணங்குவான். 


அவன் வணக்கம் சொல்லும் ஒவ்வொரு முறையும் அவர் அவனைப் பார்த்து, சிரித்தபடி, ‘நீ ஒரு முட்டாள்’ எனக் கூறுவார்.


விறகுவெட்டி ஆச்சரியமடைவான்.


 ஒவ்வொரு முறை வணங்கும்போதும் அவர் ஆசி கூறுவதற்கு பதிலாக முட்டாள் எனக் கூறுகிறாரே என நினைத்துக் கொண்டு போவான்.


ஒருநாள் தைரியத்தை வளர்த்துக் கொண்டு அவரிடம், “ஏன் இப்படி கூறுகிறீர்கள்?” என்று கேட்டான்.


அதற்கு அவர், “நீ தினமும் இந்த காட்டினுள் சென்று விறகு வெட்டி கொண்டு வருகிறாய். 


ஆனால் இதனுள் இன்னும் சிறிது தூரம் சென்றால் செம்பு சுரங்கம் உள்ளது.


 அங்கு சென்று செம்பு எடுத்து சென்றால் ஏழு நாட்களுக்கு கவலையில்லாமல் உட்கார்ந்து சாப்பிடலாம். 


ஒரு முட்டாளுக்கு மட்டுமே அது தெரியாமல் போகும். 


உனது வாழ்நாள் முழுவதும் நீ இந்த காட்டினுள் சுற்றிக் கொண்டு இருக்கிறாய். 


நீ அதை பார்த்திருந்தால் இப்படி தினமும் வந்து விறகு வெட்டிகொண்டு செல்ல வேண்டிய அவசியம் நேர்ந்திருக்காது.” என்றார்.


விறகுவெட்டியால் அவர் சொல்வதை நம்ப முடியவில்லை.


 ஏனெனில் அவனுக்கு அந்த காடு முழுவதும் நன்றாகத் தெரியும். 


அவர் ஏதோ கேலி செய்கிறார் என நினைத்தான். 


ஆனாலும் அவர் சொல்வதில் ஏதேனும் உண்மை இருக்குமானால்


சரி, சிறிதுதூரம் போய் தேடுவதால் என்ன தீங்கு வந்துவிடப் போகிறது என நினைத்துகொண்டு இன்னும் சிறிது தூரம் காட்டினுள் சென்று ஏதேனும் செம்பு சுரங்கம் இருக்கிறதா என்று கவனமாகவும் விழிப்போடும் தேடினான்.


அங்கே அவன் செம்பு சுரங்கத்தை கண்டான். 


அவர் எப்போதும் நீ ஒரு முட்டாள், தேவையில்லாமல் இந்த வயதான காலத்திலும் தினமும் வேலை செய்துகொண்டிருக்கிறாய் என ஏன் சொல்லிக் கொண்டு இருந்தார் என்பது இப்போது அவனுக்கு புரிந்தது.


இப்போது அவன் வாரத்திற்கு ஒருமுறைதான் சென்றான்.


 ஆனாலும் அந்த பழைய வழக்கம் தொடர்ந்தது. 


அவர் காலை தொட்டு வணங்கினான். 


அவர் மறுபடியும் அதேபோலவே சிரித்தபடி, “நீ ஒரு முட்டாளேதான்” என்றார்.


அவனுக்கு குழப்பமாக இருந்தது.


 “ஏன்? நான்தான் செம்பு சுரங்கத்தை கண்டுபிடித்து விட்டேனே! 


பிறகும் ஏன் இப்படி கூறுகிறீர்கள்?” எனக் கேட்டான்.


அவர் இன்னும் சிறிது தூரம் சென்றால் வெள்ளி சுரங்கம் இருக்கிறது என்று கூறினார்.


விறகுவெட்டி அதிர்ச்சியுற்றான்.


 “ஏன் இதை முதலிலேயே கூறவில்லை?”

 எனக் கேட்டான். 


அதற்கு அவர், “ செம்பு சுரங்கம் பற்றி கூறியபோதே நீ என்னை நம்பவில்லை. 


பிறகு எப்படி வெள்ளி சுரங்கம் பற்றி கூறினால் நம்புவாய்? 


இன்னும் சிறிது தூரம் உள்ளே செல்” எனக் கூறினார்.


அது எப்படி இருக்கும் என்ற சந்தேகம் தோன்றினாலும் 


இந்த தடவை ஒருவிதமான நம்பிக்கையுணர்வு அவனுள் தோன்றியிருந்ததால் 


அவன் இன்னும் சிறிது தூரம் உள்ளே தேடிச் சென்ற போது வெள்ளி சுரங்கத்தை கண்டறிந்தான்.


வெள்ளியை எடுத்துக் கொண்டு அவரிடம் திரும்பி வந்து, “இப்போது மாதத்திற்கு ஒருமுறை வந்தால் எனக்கு போதும். 


ஆனால் எனக்கு உங்களை பிரிவது மிகவும் கடினமானதாக இருக்கிறது.


 உங்களை பார்க்காமல் நான் எப்படி இருக்கப் போகிறேன் என்று எனக்குத் தெரியவில்லை. 


உங்களிடமிருந்து நீ ஒரு முட்டாள் என்பதை இனி நான் கேட்க முடிய போவதில்லை என்பது எனக்கு மிகவும் வருத்தமானதாக இருக்கிறது. 


நீங்கள் என்னை நீ ஒரு முட்டாள் என்று கூறுவதை நான் விரும்ப தொடங்கி விட்டேன்.” என்றான்.


அதற்கு அவர், “நீ சர்வ நிச்சயமாக முட்டாளேதான். 


அதில் எந்த சந்தேகமும் இல்லை” என்றார்.


அதற்கு அவன், “நான் வெள்ளி சுரங்கத்தை கண்டு விட்டபிறகுமா இப்படிக் கூறுகிறீர்கள்?” எனக் கேட்டான். 


“ஆம், இதன் பின்னும் நீ முட்டாள்தான்! 


அதைத் தவிர வேறில்லை.


ஏனெனில் இன்னும் சிறிது தூரம் சென்றால் அங்கு தங்க சுரங்கம் இருக்கிறது. 


அதனால் இன்னும் ஒரு மாதம் வரை காத்திருக்கத் தேவையில்லை.


 நாளையே வா.” என்றார்.


இந்த முறை அவர் நிச்சயமாக கிணடல் செய்கிறார் எனத் தோன்றியது. 


ஏனெனில் அப்படி அங்கே தங்கம் இருந்திருக்குமானால் இவர் ஏன் இப்படி இந்த மரத்தடியில் மற்றவர்கள் கொண்டு

மற்றவர்கள் வந்து தரும் உணவை நம்பி இருக்க போகிறார்


அவர்கள் சில தடவை கொண்டு வருகிறார்கள் பலதடவை கொண்டு வருவதில்லை.- 


இதுபோல வெயிலுக்கு ஒரு மறைப்பின்றி, மழைக்கு குடையின்றி குளிருக்கு போதுமான கம்பளியின்றி கஷ்டப் பட வேண்டும். 


அதனால் அவர் இந்த தடவை கேலிதான் செய்கிறார். 


ஆனால் அவர் சொல்வது எப்போதும் உண்மையாகத் தான் இருந்திருக்கிறது. 


மேலும் இதில் என்ன தீங்கு இருக்கிறது.


 யாருக்குத் தெரியும்? இந்த கிழவன் ஒரு புதிரான ஆளாகத் தான் இருக்கிறார்!


இன்னும் சிறிது தூரம் சென்றபின் அங்கே மிகப் பெரிய தங்க சுரங்கத்தைக் கண்டான். 


அவனால் தன் கண்களையே நம்ப முடியவில்லை. 


இந்த காட்டில்தான் அவன் தன் வாழ்நாள் முழுவதும் விறகுவெட்டி வந்தான். 


அந்த கிழவன் இந்த காட்டின் ஆரம்பத்தில் உள்ள மரத்தடியில் உட்கார்ந்துகொண்டு இருக்கிறான்.


 ஆனால் அவனுக்குத் தெரிந்தது, தனக்குத் தெரியவில்லை.


பை நிறைய தங்கத்தை எடுத்துக் கொண்டுவந்தவன் ஞானியிடம் வந்து, “இனிமேலும் நீ ஒரு முட்டாள் என்று சொல்ல மாட்டீர்கள் என நினைக்கிறேன்.” என்றான்.


அதற்கு அவர், “அப்படியேதான் தொடர்ந்து சொல்லுவேன். 


இது ஆரம்பம்தான். முடிவல்ல, அதனால் நாளை வா.” என்றார்.


அவன், “என்னது தங்கம் கிடைத்தது முடிவல்லவா, ஆரம்பம்தானா! 

என வியந்தான். 


அதற்கு அவர், “ஆம், நாளை இன்னும் சிறிது தூரம் உள்ளே சென்றால் அங்கே வைரங்களைக் காண்பாய்.


 ஆனால் அதுவும் முடிவல்ல, 


ஆனால் நான் உனக்கு அதிகப்படியாக எதுவும் சொல்லமாட்டேன்.


 ஏனெனில் சொல்லிவிட்டால் உன்னால் இன்று இரவு தூங்க முடியாது. 


அதனால் வீட்டிற்குப் போ. 


நாளை காலை முதலில் காட்டிற்குள் போய் வைரங்களை எடுத்துக் கொண்டு பின் வந்து என்னை சந்தி.” என்றார்.


அவனால் இரவு முழுவதும் தூங்கவே முடியவில்லை. 


ஒரு ஏழை விறகுவெட்டி அவனுக்கு செம்பு, வெள்ளி, தங்கம், மற்றும் வைர சுரங்கமும் கூட சொந்தமாகப் போகிறது என்பதை அவனால் நம்பவே முடியவில்லை. 


ஆனால் அவர் இதை ஆரம்பம் என்றல்லவோ கூறுகிறார்,


 வைரத்திற்கு மேல் என்ன இருக்கமுடியும் என்பது அவனுக்கு புரியவில்லை. 


யோசித்து, யோசித்து பார்த்தபோதும் அவனுக்கு விளங்கவேயில்லை.


அடுத்தநாள் காலை அதிகாலையிலேயே அவன் அங்கே வந்துவிட்டான். 


அவர் உறங்கிக் கொண்டு இருந்தார்.


 அவர் காலைத் தொட்டு வணங்கினான். 


அவர் கண் விழித்து அவனைப் பார்த்தார். 


“வந்து விட்டாயா? 

எனக்குத் தெரியும். 


உன்னால் இரவு முழுவதும் உறங்கியிருக்க முடியாது. 


போய் அந்த வைரங்களை பார்த்துவிட்டு வா.” என்றார்.


அவன் “வைரங்களை விட உயர்வானவையாக என்ன இருக்க முடியும் எனச் சொல்லுங்கள்.” எனக் கேட்டான். 


அதற்கு அவர் முதலில் வைரங்கள், பின்பு அடுத்து, ஒன்றன் பின் ஒன்று!


 இல்லாவிடில் உனக்கு பைத்தியம் பிடித்துவிடும்.” என்றார்.


அவன் சென்று வைரங்களை எடுத்துக் கொண்டு சந்தோஷத்தில் நடனமாடிக் கொண்டே வந்து அவரிடம், “நான் வைரங்களை கணடுவிட்டேன், 


இப்போது நீங்கள் என்னை முட்டாள் என சொல்லமுடியாது.” என்றான்.


அவர் சிரித்துக் கொண்டே, “இன்னும் நீ முட்டாள்தான்.” என்றார்.


அவன், “இதை நீங்கள் விளக்கிச் சொல்லாவிட்டால் நான் இங்கிருந்து போகப் போவதில்லை” என்றான்.


 அதற்கு அவர், இந்த செம்பு, வெள்ளி, தங்க, வைர சுரங்கங்களைப் பற்றி எனக்குத் தெரியும். 


ஆனால் நான் அவைகளைத் தேடி போவதில்லை. 


நான் அவைகளைப் பற்றி கவலைப்படுவதில்லை. 


ஏனெனில் அவைகளை விட மதிப்புள்ள விஷயம் உள்ளது. 


வெளியே அல்ல உள்ளே


அதை நான் எனக்குள் கண்டு விட்டதால் வெளியே உள்ள வைரங்களைப் பற்றி கவலைப் படுவதில்லை.


 இப்போது நீதான் முடிவெடுக்க வேண்டு்ம். 


உன்னுடைய பயணம் இந்த வைரங்களோடு முடிவடைந்து விட்டது என்றால் என்னைப் பொறுத்தவரை நீ இன்னும் முட்டாள்தான்.


 எனக்கு இந்த சுரங்கங்களைப் பற்றித் தெரியும், ஆனால் நான் அவற்றைப் பற்றிக் கவலைப் படவில்லை. 


எவ்வளவுதூரம் வெளியே போனாலும் கிடைக்காத ஏதோ ஒன்று உள்ளே கிடைக்கிறது என்பதற்கு நானே சிறந்த சாட்சி. 


அது உன் உள்ளேதான் உனக்குக் கிடைக்கும்,” என்றார்.


அவன் வைரங்களை கீழே போட்டான்.


 “நான் உங்கள் அருகே உட்காரப் போகிறேன். 


நான் ஒரு முட்டாள் என்ற உங்களுடைய எண்ணத்தை நீங்கள் மாற்றிக் கொள்ளும்வரை நான் இங்கிருந்து நகரப் போவதில்லை.” என்றான்.


அவன் ஒரு அப்பாவி, வெகுளித்தனமான விறகுவெட்டி.


தகவல் அறிவுநிரம்பிய ஆசாமிகளுக்கு உள்ளே செல்வது கடினம்.


 அந்த விறகு வெட்டிக்கு அது கடினம் அல்ல.


விரைவிலேயே அவன் ஒரு ஆழ்ந்த அமைதிக்கு, ஒரு ஆனந்தத்திற்கு, ஒரு உள்ளார்ந்த மௌனத்திற்கு ஆளானான்.


ஞானி அவனை உலுக்கி, “இதுதான் அது!


 இனி நீ காட்டிற்குள் போக வேண்டிய அவசியம் இல்லை. 


நான் உன்னை சொன்ன முட்டாள் என்ற வார்த்தைகளை விலக்கிக் கொள்கிறேன். 


நீ ஒரு விவேகி. இப்போது நீ உன் கண்களைத் திறக்கலாம். 


இந்த உலகம் முன்பு எப்படி எந்த கலரில் இருந்ததோ, அப்படி இல்லாமல் புது விதமாக புது மாதிரியாக, தோன்றுவதைப் பார்க்கலாம். 


மக்கள் என்பு தோல் போர்த்திய உடம்பாக இல்லாமல், அவர்களும் ஒளிவிடும் ஆன்மீக உயிர்களாக

இந்த பிரபஞ்சமே விழிப்புணர்வு எனும் கடலாக பார்க்கலாம்.” என்றார்.


விறகுவெட்டி கண்களைத் திறந்தான்.


அவன் ஞானியைப் பார்த்து, “நீங்கள் மிகவும் வித்தியாசமானவர். 


இதை நீங்கள் முன்பே கூறியிருக்க வேண்டும். 


நான் கிட்டதட்ட என் வாழ்நாள் முழுவதும் இந்த காட்டிற்கு வந்து கொண்டு இருக்கிறேன்.. 


நீங்கள் இந்த மரத்தடியில் உட்கார்ந்து கொண்டு இருப்பதை நான் பார்த்திருக்கிறேன். 


ஏன் இவ்வளவு நாள் காத்திருந்தீர்கள்?” என்று கேட்டான்.


அதற்கு அவர். “நான் சரியான தருணத்திற்கு காத்திருந்தேன்.


 காலம் கனிவது என்பதன் பொருள், கேட்பது மட்டுமல்லாமல் புரிந்து கொள்ளப்படவும் வேண்டும். 


பயணம் மிகச் சிறியதுதான். 


ஆனால் ஒவ்வொரு அடியும் ஒரு சென்றடைதல்தான். 


அதையும் தாண்டி செல்லலாம் என்பதை கற்பனைகூட செய்து பார்க்க முடியாத அளவிற்கு அந்த சென்றடைதல் மிகவும் நிறைவானதாக இருக்கும்.


 எனவே சரியான காலம் முக்கியம்”

திங்கள், 18 மார்ச், 2024

ஒரே ஒரு வரம் மட்டும் தான் (கதை)

 

👌ஒரு ஊரில் ஏழை மீனவன் ஒருவன் இருந்தான். அவனுடைய அம்மாவிற்குக் கண்பார்வை இல்லை. அவனுக்கு வெகு நாட்களாகக் குழந்தையும் இல்லை. ஒரு நாள் அவன் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றான். அப்போது, கரையில் ஒதுங்கிக் கிடந்த பெரிய மீனொன்று அவனைப் பார்த்துக் கெஞ்சியது:

மூன்று அரசியல்வாதிகள். (கதை)

 

மூன்று அரசியல் வாதிகள் நன்றாக வாழ்ந்து வந்தார்கள். அவர்கள் மக்களுக்கு தொண்டு செய்து கொண்டு வந்தார்கள். அவர்கள் மூவரும் தீடிரென்று ஒரு நாள் இறந்து விட்டார்கள்.

மக்களுக்கு சோகம் தொண்டையை அடைத்தது.

இது என்னுடையதல்ல (கதை)

 

"என்னால் நிம்மதியாக இருக்க முடியவில்லை" என்றான் ஒரு அரசன்,  ஞானியிடம்.


'உன் கடமையை நீ சரியாக செய்கிறாயா.?" என்று ஞானி கேட்டார்.


"என் நாட்டிற்கு அன்னியர் பகை இல்லை. 


கள்வர் பயம் இல்லை. 

எதிர்மறை உணர்வுகள் (கதை)

 

கவலையை விடுங்க சந்தோஷமாக இருங்கள்..

ஒரு ஊரில் ஒரு சிட்டுக் குருவி இருந்தது. அதற்கு வினோதமான பொழுதுபோக்கு...

ஒவ்வொருவரும் ஒவ்வொன்றை சேகரிப்பது போல, தனக்குப் பின்னால் ஒரு பை-யை கட்டிக் கொண்டு, வினோதமான உணர்வுகளை மனித இனத்திலிருந்து சேகரிக்க ஆரம்பித்தது.

பஞ்சவர்ணக்கிளி (கதை)


 ஒரு ராஜாவுக்கு 2 பஞ்சவர்ண கிளி குஞ்சுகள் வெகுமதியாக வந்தன.


ராஜா அந்த ரெண்டையும் பறக்க வைத்து பேசப் பயிற்சி கொடுக்கச் சொன்னாரு.


அதில் ஒரு கிளி நல்லா பறந்து, வார்த்தைகளும் கத்துக்க ஆரம்பிச்சது.


ஆனால் இன்னொரு கிளி பறக்க கூடத் தெரியாம ஒரு கிளையில் உட்கார்ந்தது உட்கார்ந்தபடியே இருந்தது.

நான் ரொம்ப பெரிய ஆள் (கதை)

 

ஒரு நரி அதிகாலை எழுந்து மேற்கு நோக்கி வேட்டைக்குப் புறப்பட்டது. கிழக்கே இருந்து எழுந்த சூரிய ஒளியில் அதன் நிழல் வெகு நீளமாய் வெகு பிரமாண்டமாய்த் தெரிந்தது.

நரிக்கு ஏக குஷி…


“நான் ரொம்பப் பெரிய ஆளாக்கும். இவ்வளவு பெரிய எனக்குப் பசி தீர வேண்டும் என்றால் குறைந்தபட்சம் ஒரு யானை அல்லது ஒட்டகமாவது கிடைத்தால் தான் கட்டுப் படியாகும்!’ என்று ஊளையிட்டது.

ஞாயிறு, 17 மார்ச், 2024

வாக்குறுதியின் பலம்: (கதை)

 

ஒரு குளிர் நாள் இரவில் ஒரு கோடீஸ்வரர் ஒரு வயதான ஏழையை அவரது வீட்டிற்கு வெளியில் வெளியில் சந்தித்தார். அவர் அவரிடம், "வெளியில் குளிர் அதிகமாக இருக்கிறதே..உங்களுக்கு குளிரவில்லையா?என்று கட்டர்..அதோடு உங்களிடம் போர்வை, கம்பளி எதுவும் இல்லையா?" என்று கேட்டார்.

அனைத்தும் அல்லாஹ்வினுடையதே. (கதை)

 

வெளியூர் சென்றிருந்த ஒரு மனிதர் திரும்பிவந்து பார்த்த போது தனது அழகிய வீடு நெருப்பில் எரிந்துகொண்டிருப்பதைப் பார்த்தார்.


ஊரிலேயே அழகான வீடு அது. தனது வீட்டை அந்த மனிதர் மிகவும் விரும்பினார். ஊரில் பலரும் அந்த வீட்டுக்கு இரட்டை விலை கொடுத்துப் பெறத் தயாராக இருந்தனர்.

ஐயா இது முயல் கறி. (கதை)

 

ஒரு பணக்காரன் தெருவில் நடக்கும் போது 

ஏழையின் வீட்டில் இருந்து இறைச்சி கறி சமைக்கும் மணம் வந்தது.


அந்த வாசனையை அவனால் கடந்து போகவே முடியவில்லை. அப்படியே 

நின்று விட்டான். 


தற்செயலாக ஏழை வெளியே வர பணக்காரன் அங்கே நிற்பதைப் 

பார்த்து வரவேற்றான். 

வெள்ளி, 1 மார்ச், 2024

இனிமே தொழப் போக மாட்டேன் ( உரையாடல்.)


 

அத்தா அக்பர்

அம்மா ஆயிஷா

மகன் அன்வர் 

 

அக்பர் அஸ்ஸலாமு அலைக்கும் யாஅல்லாஹ்....என்னா வெயிலு தாங்க முடியல மண்டைய பொழக்குது ஜும்மா தொழுதுட்டு வீட்டுக்கு வற்றதுக்குள்ள ஒருமாதிரியா ஆயிருது.

ஆயிஷா வஅலைக்கும் ஸலாம் வாங்கங்க உக்காருங்க. இந்தாங்க தண்ணீ

அக்பர் தண்ணீ கொஞ்சம் ஜில்லுன்னு கொண்டு வாமா

ஆயிஷா இந்தா கொண்டு வறேன்.

அக்பர் அன்வர் எங்க போனான்.

ஞாயிறு, 25 பிப்ரவரி, 2024

ஆடம்பரம் ஆடும் பம்பரம்!


 ஆடம்பரம் என்பது நமக்கு நாமே

தேடிக் கொள்ளும் வறுமை! - சாக்ரடீஸ்

ஆடம்பரச் செலவு என்பது தரித்திரத்தை
விலை கொடுத்து வாங்குவது போல. - தந்தை பெரியார்

வாழ்வில் ஆடம்பரம் அதிகரிக்க அதிகரிக்க ஒழுக்கம் மறையத் தொடங்கும். ஆகவே, ஆடம்பரம் ஆபத்து. எளிமையான வாழ்வே உண்மையான வாழ்வு. - ஜனாதிபதி அப்துல் கலாம்.

பணம் வந்ததும் குணத்தை மாற்றாதே!
பதவி வந்ததும் அதிகாரத்தைக் காட்டாதே!
ஆடம்பரம் வந்ததும் ஆணவத்துடன் ஆடாதே! ஏனெனில், இந்த உலகில் எதுவும் யாருக்கும் நிரந்தரமில்லை.

அண்டை வீடு சண்டை வீடாகாமலிருக்க.

 

அண்டை வீடு சண்டை வீடாகாமலிருக்க

அன்றே அண்ணல் நபி நாயகம் ஸல் அவர்கள் நமக்கு

அறிவுறுத்திய  அழகிய 20 அறிவுரைகள்!

------------------------------------------------

01. அண்டை வீட்டார்

பொருளாதார உதவி நாடினால்,

அவருக்கு உதவிசெய்ய வேண்டும்.

 

02. அவர் ஆதரவை நாடினால்,

அவருக்கு துணை நிற்க வேண்டும்.

 

03. அவர் நோய்வாய்ப்பட்டால்,

நலம் விசாரிக்க வேண்டும்.

வாழ்க்கை என்பது இரு முனைகள் கொண்ட வாள்.

 

1.  ADULT என்பது  ஐந்து எழுத்துக்கள்

     அதே போல YOUTH என்பதும் ஐந்து எழுத்துக்கள்

 

2.  PERMANENT ஒன்பது எழுத்துக்கள்

     அதே போல TEMPORARY. என்பதும் ஒன்பது எழுத்துக்கள்

 

3.  GOOD என்பது நான்கு எழுத்துக்கள்

     அதே போல EVIL என்பதும் நான்கு எழுத்துக்கள்

 

4.  BLACK  என்பது ஐந்து எழுத்துக்கள்.

     அதே போல WHITE. என்பதும் ஐந்து எழுத்துக்கள்

 

6. LIFE என்பது நான்கு எழுத்துக்கள்

    அதே போல DEAD என்பதும் நான்கு எழுத்துக்கள்

துஆ ஏற்கப்படும் நேரங்கள்.

 

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

நஹ்மதுஹு வநுஸல்லி அலா ரசூலிஹில் கரீம் அம்மா பஃத்.

ஃபகத் காலல்லாலாஹு தஆலா ஃபில் குர்ஆனில் மஜீத் வல் ஃபுர்கானில் மஜீத் அவூது பில்லாஹி மினஷ் ஷெய்தானிர் ரஜீம். பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

 

நமது உயிரினும் கண்மணி நாயகம் ஸல் அவர்கள் மீதும் அவர்களின் தோழர்கள் மீதும் நாதாக்கள் நல்லோர்கள் அனைவரின் மீதும் குறிப்பாக இந்த மீலாது /  எங்கள் மதரஸாவின் ஆண்டு விழா நிகழ்வில் பங்கொண்டு அல்லாஹ்வையும் ரசூலையும் நினைவு கூர்ந்து நன்மையை அடைந்து கொள்ள இங்கு வந்திருக்கும் நம் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் அன்பும் அருளும் என்றும் நின்று நிலவட்டுமாக. ஆமீன்.

எனது பெயர் .................................................

நான் இங்கு துஆ ஏற்கப்படும் நேரங்கள் என்ற தலைப்பில் பேச வந்திருக்கிறேன்.

வெள்ளி, 23 பிப்ரவரி, 2024

சவப்பெட்டி உணர்த்தும் பாடம் (கதை)


 ஒரு ஆசிரியர் இருந்தார். அவரிடத்தில் பல மாணவர்கள் படித்து வந்தனர். ஒவ்வொருவருமே  நல்ல அறிவாளிகளாக இருந்தனர் .

 

         அதில் ஒரு மாணவன் எல்லோரையும் விட மிருந்த புத்திசாலியாக விளங்கினான். ஓயாத ஆர்வத்தோடு ஒவ்வொரு நாளிலும் புதிய புதிய காரியங்களைக் கற்றுக் கொண்டான் .  இதனால் அங்கிருந்த அனைத்து மாணவர்களிலும் அவனே சிறந்தவனாகத் திகழ்ந்தான் .

புதன், 21 பிப்ரவரி, 2024

பொறுமை வேண்டும்.

 


செய்யும் செயல்களிலும்
செய்யப்படும் முயற்சிகளிலும்
பொறுமை வேண்டும்.


வாழ்வில் வெற்றிக்கு
பொறுமை வேண்டும்.


தோல்வி கண்ட பின்பும்
பொறுமை வேண்டும்.


துன்பத்திலிருந்து மீள
துரோகியை கண்ட பின்பும்
பொறுமை வேண்டும்.

குரங்கு சேட்டை (கதை)

அது ஒரு புத்த மடாலயம். அந்த மடாலயத்தின் தலைமை துறவியாக இருந்தவர், மிகவும் அனுபவம் வாய்ந்தவர். அவரிடம் பலரும் துன்பங்களை கடக்கும் வழி உள்ளிட்ட பலவற்றை அறிந்துகொள்வதற்காக வருவார்கள். அன்றும் அவரைப் பார்க்க ஒரு வியாபாரி வந்திருந்தார்.

அவர் அந்த துறவியிடம், “சுவாமி.. என்னுடைய மனம் என்னுடைய பேச்சைக் கேட்பதே இல்லை. அதை நான் எவ்வளவு கட்டுப்படுத்தினாலும் அதற்கு பலன் கிடைப்பதில்லை” என்று கூறி அங்கலாய்த்துக் கொண்டார்.

“இந்த நாவல்பழம் சுவையாக உள்ளது. ( கதை )

 

முதிய ஜென் குரு ஒருவர் மரணப் படுக்கையில் இருந்தார். "இன்று மாலைக்குள் இறந்துவிடுவேன்" என்று தன் சீடர்களிடம் தெரிவித்துவிட்டார். இதைக் கேள்விப்பட்ட அவர் நண்பர்கள் பலரும், சிஷ்யர்களும் ஆசிரமத்தை வந்தடைந்தனர்.

மூத்த சீடர் ஒருவர் திடீரென கடைவீதிக்குப் புறப்பட்டார். "ஏய்... என்ன மடத்தனம் பண்ணுகிறாய்.. குரு மரணப்படுக்கையில் கிடக்கும்போது அப்படி என்ன அவசரமாக வாங்க வேண்டியிருக்கு?” என்றனர் மற்றவர்கள்.

மூத்த சீடர். "குருநாதருக்கு நாவல்பழம் என்றால் அத்தனை பிரியம். அதை வாங்கத்தான் போகிறேன்!" என்று சொல்லிவிட்டுக் கிளம்பினார்.

நான் சாதித்து விட்டேன். (கதை)


 " அன்று பெளர்ணமி.

இரவு நேரம்.

முல்லா வீதியில் நடந்து போய் கொண்டிருந்தார்.

வழியில் ஒரு கிணறு.

அனைவருக்கும் வருகிற ஆசை,
முல்லாவுக்கும் வந்தது.
உடனே
கிணற்றை எட்டிப்பார்த்தார்.

அதிர்ச்சியடைந்தார்.

'அடப்பாவமே !
நிலா,
வானத்திலிருந்து வழுக்கி கிணற்று நீரில் விழுந்து விட்டதே.

கழிவறை ஒழுங்குகள்

 


உலகில் எந்த மதமும், மார்க்கமும் சொல்லித் தராத
கழிவறை ஒழுங்குகள் பற்றி இஸ்லாம்


‌ وَاللّٰهُ يُحِبُّ الْمُطَّهِّرِيْنَ‏


அல்லாஹ் தூய்மையுடையோரையே விரும்புகிறான்.

(அல்குர்ஆன் : 9:108)

முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
அவர்கள் நமக்குக் கற்றுத் தந்த கழிப்பறை ஒழுக்கங்கள் பல உள்ளன.

* கழிவறையில் நுழையும்போது முதலில் இடது காலை வைத்து நுழைய வேண்டும். கழிவறையில் இரு பாதங்கள் வைக்குமிடத்தில் முதலில் வலது காலை வைத்து உட்கார வேண்டும். எழுந்திருக்கும்போது இடது காலை எடுத்து வைத்து வர வேண்டும்.

(நூல்:இப்னு மாஜா)

அதிகமாக குர்ஆன் ஓதுவோம்

 

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

நஹ்மதுஹு வநுஸல்லி அலா ரசூலிஹில் கரீம் அம்மா பஃத்.

ஃபகத் காலல்லாலாஹு தஆலா ஃபில் குர்ஆனில் மஜீத் வல் ஃபுர்கானில் மஜீத் அவூது பில்லாஹி மினஷ் ஷெய்தானிர் ரஜீம். பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

 

நமது உயிரினும் கண்மணி நாயகம் ஸல் அவர்கள் மீதும் அவர்களின் தோழர்கள் மீதும் நாதாக்கள் நல்லோர்கள் அனைவரின் மீதும் குறிப்பாக இந்த மீலாது /  எங்கள் மதரஸாவின் ஆண்டு விழா நிகழ்வில் பங்கொண்டு அல்லாஹ்வையும் ரசூலையும் நினைவு கூர்ந்து நன்மையை அடைந்து கொள்ள இங்கு வந்திருக்கும் நம் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் அன்பும் அருளும் என்றும் நின்று நிலவட்டுமாக. ஆமீன்.

எனது பெயர் .................................................

நான் இங்கு அதிகமாக குர்ஆன் ஓதுவோம் என்ற தலைப்பில் பேச வந்திருக்கிறேன்.

அல்லாஹ்வின் நல்லடியார்களே....

ஞாயிறு, 18 பிப்ரவரி, 2024

நபி (ஸல்) அவர்கள் தடுத்தவைகள்.

 

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

நஹ்மதுஹு வநுஸல்லி அலா ரசூலிஹில் கரீம் அம்மா பஃத்.

ஃபகத் காலல்லாலாஹு தஆலா ஃபில் குர்ஆனில் மஜீத் வல் ஃபுர்கானில் மஜீத் அவூது பில்லாஹி மினஷ் ஷெய்தானிர் ரஜீம். பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

 

நமது உயிரினும் கண்மணி நாயகம் ஸல் அவர்கள் மீதும் அவர்களின் தோழர்கள் மீதும் நாதாக்கள் நல்லோர்கள் அனைவரின் மீதும் குறிப்பாக இந்த மீலாது /  எங்கள் மதரஸாவின் ஆண்டு விழா நிகழ்வில் பங்கொண்டு அல்லாஹ்வையும் ரசூலையும் நினைவு கூர்ந்து நன்மையை அடைந்து கொள்ள இங்கு வந்திருக்கும் நம் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் அன்பும் அருளும் என்றும் நின்று நிலவட்டுமாக. ஆமீன்.

எனது பெயர் .................................................

நான் இங்கு நபி (ஸல்) அவர்கள் தடுத்தவைகள் என்ற தலைப்பில் பேச வந்திருக்கிறேன்.

 

நமது மன்னர் நபி ஸல் அவர்கள் நம் வாழ்வில் செய்யாதீர்கள் என்று சொன்ன விசயங்களை என்னவென்றால்...

வெள்ளி, 16 பிப்ரவரி, 2024

நான் தான், பெரியவன் (கதை பகுதி )

 

ஒருவருக்கு  தேதி குறித்துவிட்டால், அந்த தேதியில் உயிரை எமன் எடுத்துவிடுவார் என்று சொல்லுவார்கள். அப்படி ஒரு சிற்பிக்கு தேதி குறித்துவிட்டார் எமன். அந்த தேதி பற்றி சிற்பிக்கும் எப்படியோ தெரியவந்துவிட்டது. சிற்பிக்கு இறக்க விருப்பமில்லை. எமன் ஒருமுறைதான் பாசக்கயிற்றை வீசுவார். அதில் தவறிவிட்டால், மீண்டும் வீசி உயிரைப் பறிக்கும் அதிகாரம் எமனுக்கு இல்லை என்பதும் சிற்பிக்கு தெரியும்.

அதனைப் பயன்படுத்திக்கொள்ள ஒரு யுக்தி செய்தார்.

வியாழன், 15 பிப்ரவரி, 2024

25 நபிமார்களுடைய தந்தை பெயர்கள்

 


25 நபிமார்களுடைய தந்தைமார்களின் பெயர்கள் பின்வருமாறு.

1)
நபி ஆதம் (அலை)" இவர்கள் மனித குலத்தின் தந்தையாவார்.

2)
நபி இத்ரீஸ் (அலை) அவர்களின்
தந்தை யர்த்

3)
நபி நூஹ் (அலை) அவர்களின்
தந்தை லாமக்

4)
நபி இப்ராஹீம் (அலை) அவர்களின்
தந்தை தாறஃ

5)
நபி இஸ்மாயில் (அலை) அவர்களின்
தந்தை இப்ராஹீம் (அலை)

அல்லாஹ்விடம் உனது நிலை என்ன..?

 



அருளாளன் அல்லாஹ் உம்மை வைத்திருக்கும் இடமே உமது நிலையாகும்.

அல்லாஹ்விடம் உனது மதிப்பு என்ன என்பதை அறிய விரும்பினால்
அவன் எந்த நிலையில் உன்னை வைத்திருக்கிறான் என்று கவனித்துப் பார்
தெரிந்து கொள்ளலாம்.

1)
திக்ரில் உன்னை அவன் ஈடுபடுத்தினால்

உன்னை நினைக்க அவன் விரும்புகிறான்
என விளங்கிக்கொள்.

2)
குர்ஆன் ஓதுவதில் உன்னை அவன் பிசியாக்கினால்

உன்னிடம் பேச அவன் ஆசைப்படுகிறான் எனப் புரிந்து கொள்.

சில கேள்விகள் கேட்கலாமா ?

 ஒரு கிராமவாசி நபி (ஸல்) அவர்களிடம் வந்து கேட்டார்கள். யாரசூல்ல்லாஹ் தங்களிடம் சில கேள்விகள் கேட்கலாமா ? என்றவுடன் நபியவர்கள் கேளுங்கள்என்றார்கள்.


1.
நான் பணக்காரனாக என்ன செய்ய வேண்டும் ?

·
நீங்கள் போதுமென்ற தன்மையை பெற்றுக் கொள்ளுங்கள். பணக்கார்ராகிவிடுவீர்கள்.

2.
மிகப்பெரிய ஆலிமாக என்ன வழி ?

·
தக்வாவை கடைப்பிடித்துக் கொள்ளுங்கள். ஆலிமாகி விடுவீர்கள்.

3.
நான் கண்ணியமுடையவனாக வாழ வழி என்ன ?

·
ஜனங்களிடம் கையேந்துவதை விட்டும் தவிர்த்துக் கொள்ளுங்கள்

புதன், 14 பிப்ரவரி, 2024

தொந்தி வியாதிக்கு தந்தி ! (உரையாடல்)

 


மாப்புள : அஸ்ஸலாமு அலைக்கும் மச்சான்!

 

மச்சான் : அலைக்குமுஸ் ஸலாம் மாப்புள!

 

மாப்புள : மச்சான்? மாசமா இருக்கீங்களா? இல்ல... வவுத்துல தலைவாணி எதுவும் வச்சு கட்டி இருக்கீங்களா? வவுறு இம்மாம் பெரிசா இருக்கு!

 

மச்சான் : மாப்புள! என்ன கிண்டல் பண்றீயா, மச்சானோட வவுத்தப் பாத்து?

 

மாப்புள : வாய்லே கொழுப்பு இருந்தாலும் பரவாயில்ல

மச்சான்! எப்படியாவது ஒரு வழியா சமாளிச்சுறலாம்! ஆனா... வயித்துலே மட்டும் கொழுப்பு இருக்கவே கூடாது. அப்படி இருந்தா அதை அலட்சியமாவும் விட்டுறக்கூடாது!

செவ்வாய், 13 பிப்ரவரி, 2024

பிரச்சனைகள்.

 


ஈராக் ஞானி ஒருவர் அந்த ஊருக்கு வந்திருந்தார். அந்த ஊரைச் சேர்ந்த ஒருவன், அவரிடம் வந்து, “ எனக்குப் பிரச்சனைகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. வீட்டில் பல பிரச்னைகள், தெருவில், ஊரில், வேலை செய்யும் இடத்தில் எல்லா இடத்திலும் எனக்குப் பிரச்னைகள்தான். படுத்தால் என்னால் தூங்கவே முடியவில்லை. எனக்கு ஒரு நல்ல தீர்வு சொல்லுங்கள்" என்றான்.

அதைக் கேட்ட அந்த ஞானி, “மாலையில் வா...என்றார்.