சனி, 11 ஏப்ரல், 2020

காந்தமும் நெருப்பும் கற்பிக்கும் கல்வி


ஒரு சிலர் தான் எங்கு சேர்ந்து பழகுகிறார்களோ அந்த இயல்புக்கு ஏற்ப அப்படியே மாறிவிடுகின்றனர். சிலர் தன்னைப்போல பிறரை மாற்றுவார்களே தவிர பிறரைப் போல் தான் மாறமாட்டார்கள். சிலர் எந்தச் சூழலில் வாழ்ந்தாலும், எப்படிப்பட்டவர்களுடன் சேர்ந்து பழகினாலும், தன் இயல்பிலிருந்து சிறிதும் மாறாமல் அவர் அவராகவே இருப்பார்



கரித்துண்டை மண்ணில் போட்டு அது எந்த மண்ணில் உருட்டினால் அது எந்த மண்ணில் உருட்டப்படுகிறதோ அந்த மண்ணின் தன் மீது ஓட்டிக் கொண்டு உருமாறும். நீரானது எம் மண்ணில் சேருகிறதோ அந்த நிறத்தைப் பெறும். ஆனால்நெருப்பில் எதைப்போட்டாலும் அது போடப் பட்டதையும் தன்னைப் போல புழுதியைத் நெருப் பாகவே மாற்றும்

காந்தம் இருக்கிறதே அதை எந்த மண்ணில் புரட்டினாலும் அது மண்ணில் உள்ள இரும்பைத்தவிர, இரும்புத் துகளைத் தவிர வேறு எதையும் ஈர்க்காது. காந்தமாக நாம் இருந்து எந்தச் சூழலில் யாருடன் பழகினாலும், அங்குள்ள நல்லதைத் தவிர வேறு எதையும் எடுத்துக் கொள்ளக்கூடாது. அல்லது நெருப்பாய் நாம் நின்று நம்மைப் போன்று நம்முடன் சேர்கின்றவர்களையும் நம்மைப்போன்று நல்ல இயல்புடையவர்களாக மாற்ற வேண்டும்

நீர் சேருகின்ற மண்ணின் நிறத்தைப் போன்று தன் நிறத்தை சுவையை மாற்றிக் கொள்வது போல் நாமும் சேர்கின்றவர்களின் குணங்களைப் பெறக் கூடாது. நெருப்பாக சுடர்விட வேண்டும். அல்லது காந்தமாக நின்று நம் தனித்தன்மையைக் காத்துக் கொள்ள வேண்டும்.


மதிப்பிற்குரிய மஞ்சை வசந்தன் அவர்கள் எழுதிய சுற்றியுள்ளவை கற்றுத் தருபவை புத்தகத்தில் இச்செய்தி இடம் பெற்றுள்ளது. படிக்கும் மாணவர்களுக்கு உபதேசம் செய்வதற்கு இச்செய்தியை பயன்படுத்திக் கொள்ளவும்.


மேலும் விபரங்களுக்கு...
A.காதிர் மீரான் மஸ்லஹி. 
ஜாமிஆ பள்ளிவாசல்.
அசநெல்லி குப்பம்.
அரக்கோணம்.
9952129706.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக