சனி, 19 மே, 2012

சொர்கத்தின் தலைவாசலிலே......



மறுமையில் சொர்கத்தின் தலைவாசலுக்கு அருகில் நான்கு வகையினர் எவ்வித கேள்வி கணக்கும் தண்டணையுமில்லாமல் கொண்டு வரப்படுவார்கள்.


1. ஹஜ்ஜை முறிக்கும் காரியங்களை செய்யாமல் பூரணமாக ஹஜ்ஜை நிறைவேற்றிய ஹாஜி.

2.கற்றபடீ நடந்தொழுகிய ஆலிம்.

3.ஜிஹாத் அறப்போரில் உயிர் நீத்த ஷஹீத் (தியாகி)

4. ஹலாலான முறையில் பொருளை சம்பாதித்து அதை எவ்வித பெருமையுமின்றி அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்த கொடையாளி.


இந்த நால்வரும் முதலில் தாமே சொர்கத்தில் புகவேண்டுமென்று விரும்பி தார்கித்து கொள்வார்கள். அப்போது அல்லாஹ் அவர்களுக்கு மத்தியில் தீர்ப்பளிப்பதற்க்காக ஹஜ்ரத் ‍ஜிப்ரயீல் அலை அவர்களை அனுப்பி வைப்பான் 

அதன்படீ ஜிப்ரயீல் அலை அவர்கள்  அந்த நால்வரிடமும் வந்து முதலில் ஷஹீதிடம்  நீர் முதன் முதலில் சொரக்கத்தில் புக விரும்புகிறீரே அப்படீ என்ன அமல் செய்தீர்……? என்று கேட்பார்கள். அதற்கவர் நான் இறைவனின் பொருத்த்தையும் திருப்தியையும் நாடீப் போர்க்களம் சென்று எதிரிகளுடன் போர் புரிந்து இறைவனுக்காக என் உயிரையே தியாகம் செய்தேன் என்றுரைப்பார் அப்போது ஹஜ்ரத் ஜிப்ரயீல் அலை அவர்கள் ஷஹிதுக்குரிய பலாபலன்களை சிறப்பையும் நிர் எவ்வாறு அறிந்தீர்…..? என்று கேட்பார்கள் அதற்கவர் நான் அதை ஆலிம்களிடம் கேட்டு தெரிந்து கொண்டேன் என்பார்.  அப்படியானால் ஆலிமாகிறவர் உனக்கு உஸ்தாது ஆகிறார் ஆசிரியருக்கு முந்திச் செல்வது ஓழுக்கமல்ல...மரியாதையும் அல்ல..மரியாதைப் பேணி ஓதுங்கி நில் என்று ஹஜ்ரத் ஜிப்ரயீல் அலை அவர்கள் கூறுவார்கள்.

பின்பு ஹஜ்ரத் ஜிப்ரயீல் அலை அவர்கள் ஹாஜியை நோக்கி நிர்  முதலில் சொரக்கத்தில் புக விரும்புகிறீரே…! அப்படீ என்ன அமல் செய்தீர் என கேட்ப்பார்கள் அதற்க்கவர் நான் அல்லாஹ்வின் உத்தரவுப்படிப் பொருள் நஷ்டத்தையும் உடல் நஷ்த்தையும் பொருட்படுத்தாமல் கஃபத்துல்லாஹ்  சென்று ஹஜ்ஜூக் கடமையை நிறைவேற்றினேன் என்பார். அப்போது ஹஜ் செய்வது கடமை என்பதையும் அதற்க்குறிய நன்மைகளையும் எவ்வாறு அறிந்து கொண்டிர் என்று கேட்ப்பார்கள் அதற்க்கவர் நான் அதை ஆலிம்களிடம் கேட்டு தெரிந்து கொண்டேன் அப்படியானால் ஆலிமாகிறவர் உனக்கு உஸ்தாது ஆகிறார் ஆசிரியருக்கு முந்திச் செல்வது ஓழுக்கமல்ல...மரியாதையும் அல்ல..மரியாதைப் பேணி ஓதுங்கி நில் என்று ஹஜ்ரத் ஜிப்ரயீல் அலை அவர்கள் கூறுவார்கள்


பின்பு ஹஜ்ரத் ஜிப்ரயீல் அலை அவர்கள் கொடையாளியை நோக்கி நிர்  முதலில் சொரக்கத்தில் புக விரும்புகிறீரே அப்படீ என்ன அமல் செய்தீர்…? என கேட்ப்பார்கள். அதற்க்கவர் நான் ஹலாலான முறையில் பொருளைச் சம்பாதித்து அதை அல்லாஹ்வின் பாதையிலேயே அவனின் திருப்தியை நாடி அவனுக்கு பொருத்தமான அவன் வழியிலேயே செலவு செய்தேன் என்றுரைப்பார். அப்போது ஹஜ்ரத் ஜிப்ரயீல் அலை அவர்கள் அவ்வாறு செலவு செய்வதன் நன்மைகளை யாரிடம் அறிந்தீர் என கேட்ப்பார்கள் அதற்கவர் நான் அதை ஆலிம்களிடம் கேட்டு தெரிந்து கொண்டேன் என்பார். அப்படியானால் ஆலிமாகிறவர் உனக்கு உஸ்தாது ஆகிறார் ஆசிரியருக்கு முந்திச் செல்வது ஓழுக்கமல்ல...மரியாதையும் அல்ல..மரியாதைப் பேணி ஓதுங்கி நில் என்று ஹஜ்ரத் ஜிப்ரயீல் அலை அவர்கள் கூறுவார்கள்


இந்நிகழ்ச்சியை கண்ணுற்று கொன்டிருந்த ஆலிமாகிறவர் இறைவா.....!
நான் கொடையாளியின் தர்மத்தாலும் உபகாரத்தாலுமே உனது தீனுடைய கல்வியை கற்று ஆலிமானேன் ஆதலால் கொடையாளி முதலில் சொர்க்கத்தில் நுழைய அனுமதிப்பாயாக என்று ஷபாஅத் மன்றாடுவார்கள் அப்போது அல்லாஹ் சொர்க்கத்தின் காவலரை நோக்கி ஏ...ரிள்வானே..ஆலிமாகிறவர் உண்மையே சொல்கிறார். ஆதலால் சொர்க்கத்தின் வாயிலை திறந்து முதலில் கொடையாளியை நுழையச் செய்வீராக என்று உத்தரவிடுவான் அதன்படி முதலில் கொடையாளியும்..மற்றவர்கள் அவருக்கு பின்னும் சொர்க்கத்தில் புகுவார்கள். 


மறுமையில் நபிமார்கள் அதறக்கடுத்தபடி உலமாக்கள் அதன்பின் ஷூஹதாக்கள் ஆகிய மூவர்க்கத்தினரும் அவர்கள் நாடியவர்களுக்கு அல்லாஹ்விடம் ஷபாஅத் சொய்வார்கள் என்று பெருமானார் நபி ஸல் அவர்கள் கூறினார்கள்
இந்த ஹதிஸின் படி உலமாக்களுடைய ஷபாஅத்தால் கொடையாளி முதலில் சொர்க்கத்தில் புகுவார் என்பது தெரிகின்றதல்லவா...?
                                                                                       
துர்ருல் வாயிலீன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக