ஞாயிறு, 29 மே, 2011

வாக்குறுதி மீறுதல். எஃப். அர்ஷத் அலீ




வாக்குறுதி மீறுவதால் விளையும் பின்விளைவுகள்இன்று வாக்குறுதி மீறுதல் என்பது தாய்தகப்பன்,கணவன்மனைவி என்ற உறவு முறைகளிலும் தொழிலாளிமுதலாளிஏழைபணக்காரன்நண்பன் என்ற அனைத்து மட்டங்களிலும் சர்வ சாதாரணமாக எடுத்துக் கொள்ளப்படுகிறதுஅதை ஒரு பொருட்டாக யாரும் எடுத்துக் கொள்வதில்லை.
இதனால் ஏற்படும் விளைவுகள் ஏராளம்உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் நோயாளியைக் காப்பாற்ற மருத்துவர் வரவில்லையென்றால் நோயாளியின் உயிர் போகிறதுநேரம் தவறி பேருந்து நிலையத்திற்கோ இரயில்வே ஸ்டேஷனுக்கோ நாம் சென்றோம் என்றால் நாம் செல்ல வேண்டிய இடத்திற்குச் செல்ல முடியாமல் போகிறதுஇதனால் நம்மை நம்பிகாத்துக் கொண்டிருப்பவர்களின் நேரமும் காலமும் பொருளும் பணமும் விரையமாகிறதுஇதனால் நம்மீதுள்ள நம்பிக்கை பிறரிடத்தில் குறைந்துவிடுகிறது.
இந்த வாக்குறுதி மீறுவதால் நம்முடைய வாழ்வில் பல விளைவுகளைச் சந்திக்க நேரிடும்இன்னும் சொல்லப் போனால் தவ்ஹீதைப் பேசக்கூடிய நம்மவர்கள் வாக்கு மீறுவதை அல்வா சாப்பிடுவதைப் போல நினைக்கிறார்கள்ஆலோசனைக் குழு இத்தனை மணிக்கு நடக்கும் என அறிவித்துவிட்டு அவர்கள் இஷ்டத்திற்கு ஒரு நேரத்தில் வருவார்கள்ஒரு காரியத்திற்கு வாக்களித்து விட்டுஇதோ செய்து முடித்து தருகிறேன் என்பார்கள்ஆனால் ஒருக்காலும் அந்த வேலையை முடித்துத் தந்தபாடிருக்காதுஇவ்வாறு வாக்குறுதி கொடுத்து மாறு செய்பவர்களுக்கு நபியவர்கள் கடுமையான எச்சரிக்கையை விடுக்கிறார்கள்.
நயவஞ்சகனின் அடையாளங்கள்
நயவஞ்சகனின் அடையாளங்கள் மூன்றாகும்.
அவன் பேசும்போது பொய்பேசுவான்;
வாக்களித்தால் அதற்கு மாறுசெய்வான்;
அவனிடம் நம்பி (ஏதேனுமொன்றைஒப்படைத்தால் (அதில்மோசடி செய்வான் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹுநூல்புகாரி-33)
இன்னொரு அறிவிப்பில் இன்னும் சில விஷயங்களை சேர்த்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியுள்ளார்கள்.
நான்கு குணங்கள் எவனிடத்தில் உள்ளனவோ அவன் நயவஞ்சகனாவான்அல்லது அந்த நான்கு குணங்கல் ஒரு குணம் அவனிடம் குடி கொண்டிருந்தாலும் அவன் அதை விட்டுவிடும் வரை நயவஞ்சகத்தின் ஒரு குணம் அவனிடம் இருப்பதாகப் பொருள். (அந்த நான்கு குணங்கள் இவைதாம்:) அவன் பேசும் போது பொய் பேசுவான்வாக்களித்தால் மாறுசெய்வான்ஒப்பந்தம் செய்தால் மோசடி செய்வான்வழக்காடினால் அவமதிப்பான் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்:அப்துல்லாஹ் பின் அம்ரு ரளியல்லாஹு அன்ஹுநூல்புகாரி-2459)
இந்தப் பண்புகளில் ஒன்று இருந்தாலும் நயவஞ்சகத்தனத்தின் அடையாளம் என்று கூறியுள்ளார்கள்இந்தத் தவறான ஒரு பண்பு மட்டும் தான் நம்மிடத்தில் இருப்பதாக நினைத்துக் கொள்வோம்ஆனால் நயவஞ்சகத்தனத்தின் மற்ற பண்புகள் நம்மை அறியாமலே நம்மிடத்தில் வந்து விடும்எப்படியென்றால் ஒரு காரியத்தைச் செய்வதாக நாம் வாக்களித்துவிட்டு செய்யவில்லையென்றால் வாக்குறுதி மீறுகின்ற பண்பு நம்மிடத்தில் வந்துவிடும்.
வாக்குறுதி மீறுவதால் அதை மறைப்பதற்காகப் பொய்யான காரணங்களைக் கூறி பொய் பேசுவதற்கு நம்முடைய நாவு கூசாதுஇப்பொழுது பேசினால் பொய் பேசுதல் என்று பண்பும் நம்மிடத்தில் வந்துவிடுகிறதுஇதிலேயே நம்பிக்கை மோசடி செய்தவர்களாகவும் ஆவோம்இறுதியில் அல்லாஹ் காப்பாற்ற வேண்டும்கிட்டதட்ட நயவஞ்சகர்களின் ஒட்டுமொத்த குணங்களும் நம்மிடத்தில் வந்து விடும்.
எனவே நயவஞ்சகத்தனத்தின் ஒரு குணம் இருந்தாலும் புற்று நோயைப் போல ஊடுருவிநம்முடைய ஈமானை அழித்து விடும்உலக விஷயங்களில் இருந்த இந்த நயவஞ்சகத்தனம் வணக்க வழிபாடுகளிலும் சோம்பல் என்ற பெயரில் ஊடுருவுகிறதுசுப்ஹு தொழுகையை எட்டு மணிக்குத் தொழுவதை வழமையாகக் கொண்டிருக்கிறோமேஜமாத் தொழுகையை விடுகிறோமேஇதற்கெல்லாம் காரணம் உலக விஷயத்தில் நம்முடைய வாக்குறுதியை மீறி பழகிப் போன நாம் இங்கேயும் அதைத் தொடர்கிறோம்.
அல்லாஹ் முனாஃபிக்குகளின் தொழுகையைப் பற்றிக் குறிப்பிடும் போது....
''நயவஞ்சகர்கள் அல்லாஹ்வை ஏமாற்ற நினைக்கின்றனர்அவனோ அவர்களை ஏமாற்றவுள்ளான்.அவர்கள் தொழுகையில் நிற்கும் போது சோம்பேறிகளாகவும்மக்களுக்குக் காட்டுவோராகவும் நிற்கின்றனர்குறைவாகவே அல்லாஹ்வை நினைக்கின்றனர்.'' (அல்குர்ஆன் 4:142)
இன்னும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகிறார்கள்: ''நயவஞ்சகர்களுக்கு மிகச் சிரமமான தொழுகை இஷாவும் ஃபஜ்ரும் தான்அவற்றின் நன்மைகளை அறிந்திருந்தால் அவர்கள் தவழ்ந்தாவது வந்திருப்பார்கள்''. (அறிவிப்பவர்அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹுநூல்முஸ்லிம்-1041)
நரகத்தின் அடித்தட்டில்...
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காலத்தில் வாழ்ந்த நயவஞ்சகர்களின் மறுமை வேதனை பற்றி அல்லாஹ் குறிப்பிடும்....
''நயவஞ்சகர்கள் நரகத்தின் அடித்தட்டில் இருப்பார்கள்அவர்களுக்கு எந்த உதவியாளரையும் நீர் காண மாட்டீர்.'' (அல் குர்ஆன் 4:145)
காஃபிர்களின் வேதனையைக் குறிப்பிடும் போது கூட இறைவன் நரகத்தின் அடித்தட்டைக் குறிப்பிட்டுச் சொல்லவில்லை.
நயவஞ்சகர்களாக நாம் மாறாமல் இருப்பதற்கு நாம் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்முதலில் நம்மால் முடிந்தால் வாக்குக் கொடுக்க வேண்டும்நமக்குத் தகுதி இல்லையென்றால் வாக்கு கொடுக்கக் கூடாது.
வாக்குறுதி கொடுத்து நாம் அதைக் காப்பாற்றவில்லையென்றால் இந்த அளவுக்குப் பாவமாஎன்று கேட்டு விட்டுச் சிலர் பொறுப்பைக் கண்டு விரண்டு ஓடுகிறார்கள்.
அதுவும் ஒரு தவறான எண்ணமாகும்அப்படிப் பார்த்தால் யாரும் எந்தப் பொறுப்பையும் எடுத்துக் கொள்ளாமல் தான் இருக்க வேண்டும்மார்க்கத்திற்காக நாம் ஏற்றுக் கொள்ளும் பொறுப்பு பல நன்மைகளைப் பெற்றுத்தரக் கூடியதுநபியவர்களின் காலத்தில் நடந்த ஒரு சம்பவம்மதீனாவைச் சுற்றி வளைத்து எதிரிப் படைகள் நிற்கும் போதுநபியவர்கள் தோழர்களிடத்தில் எதிரிகளை உளவு பார்ப்பதைப் பற்றி கேட்டார்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்தில் நடந்த ஒரு சம்பவம்
''அனைத்துக் குலங்களும் நம்மை எதிர்த்துப் போரிடும் (இந்த அகழ்ப் போர்நான் அந்தக் குலத்தாரின் செய்தியை என்னிடம் (உளவறிந்துகொண்டு வருபவர் யார்?'' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்டார்கள்ஸுபைர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், ''நான் (உளவறிந்து கொண்டு வருகிறேன்)'' என்று கூறினார்கள்பிறகு (மீண்டும்நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ''அந்தக் குலத்தாரின் செய்தியை என்னிடம் (உளவறிந்துகொண்டு வருபவர் யார்?'' என்று கேட்கஸுபைர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், ''நான்'' என்று கூறினார்கள்உடனேநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ''ஒவ்வோர் இறைத் தூதருக்கும் பிரத்யேகமான தூய தோழர் ஒருவர் உண்டுஎன் பிரத்யேகமான தூய தோழர் ஸுபைர் ஆவார்'' என்று கூறினார்கள். (அறிவிப்பவர்ஜாபிர் ரளியல்லாஹு அன்ஹுநூல்புகாரி-2846)
அந்த காலத்தில் எதிரிப் படைகளிடத்தில் உளவு பார்ப்பது என்பது சாதாரண வேலையில்லைஇப்பொழுது இருப்பது போன்று சாட்டிலைட் வைத்துப் பார்க்கும் விஷயமில்லைஎதிரிப் படைகளுக்கு மிக அருகில் சென்று உயிரைப் பணயம் வைத்துப் பார்க்கும் மிகவும் இக்கட்டான வேலைதன்னுடைய உயிரையும் மதிக்காமல் அந்த நபித்தோழர் பொறுப்பேற்றுக் கொள்கிறார்அதற்கு நபியர்கள்அவருக்குக் கொடுக்கும் பட்டம் ஹவாரீஹவாரீ என்றால் நபிமார்களுக்கு மிகவும் நெருங்கிய உயிர்த்தோழர்கள் ஆவார்கள்.அவர்களின் பட்டியலில் மிகவும் நெருக்கமான தோழராக நபியர்கள் அவரை அறிவிக்கிறார்கள்எனவே மார்க்கத்திற்காக வாக்குறுதி கொடுத்து அதைச் சரியான முறையில் பேணும் போது செயல்களுக்கு ஏற்ற வகையில் கூலி கிடைக்கும்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்தில் நடந்த இன்னொரு சம்பவம்
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கைபர் நால் ''அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நேசிக்கின்றமேலும்,
அல்லாஹ்வினுடையவும் அவனுடைய தூதருடையவும் நேசத்தைப் பெற்ற ஒரு மனிதரிடம்நாளை(இஸ்லாமிய சேனையின்இந்தக் கொடியைத் தரப் போகிறேன் அல்லாஹ் அவருக்கு வெற்றியளிப்பான்''என்று கூறினார்கள்அந்தக் கொடி தங்கல் எவரிடம் தரப்படும் என்ற யோசனையில் மக்கள் அந்த இரவெல்லாம் மூழ்கியிருந்தனர்.
மறுநாள் காலையில் அவர்கல் ஒவ்வொருவரும் அது தம்மிடமே தரப்பட வேண்டுமென்று ஆசைப்பட்டவர்களாகஅல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்தனர்.
அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ''அலீ பின் அபீ தாலிப் எங்கே?'' என்று கேட்டார்கள். ''அல்லாஹ்வின் தூதரேஅவருக்குக் கண்வலி ஏற்பட்டுள்ளது'' என்று கூறப்பட்டதுநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ''(அவரை அழைத்து வரும்படிஅவரிடம் ஆளனுப்புங்கள்'' என்று கூறினார்கள்.
அலீ ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அழைத்து வரப்பட்ட போது அவர்களின் கண்களில் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்தமது உமிழ்நீரை உமிழ்ந்து அவருக்காக பிரார்த்தித்தார்கள்உடனே அன்னாரது கண்அதற்கு முன்பு எதுவுமே இல்லாதிருந்ததைப் போல் குணமாகி விட்டதுஅப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்அலீ ரளியல்லாஹு அன்ஹுஅவர்கடம் அந்தக் கொடியைக் கொடுத்தார்கள்உடனே அலீ ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், ''நம்மைப் போன்று அவர்களும் (ஒரே இறைவனுக்குக் கீழ்ப்படிந்தவர்களாய்ஆகும் வரை நான் அவர்களுடன் போரிடட்டுமா?'' என்று கேட்டார்கள்.
அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ''நிதானமாகச் சென்றுஅவர்களுடைய களத்தில் இறங்குங்கள்பிறகுஅவர்களை இஸ்லாத்திற்கு அழைத்து (அதை ஏற்கும் பட்சத்தில்அவர்கள் மீது கடமையாகின்றஅல்லாஹ்விற்குச் செய்ய வேண்டிய கடமைகளை அவர்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள்.
அல்லாஹ்வின் மீதாணையாகஉங்கள் மூலம் ஒரேயொருவருக்கு அல்லாஹ் நேர்வழி யப்பது (அரபுகன் உயரிய செல்வமானசிவப்பு ஒட்டகங்களை (சொந்தமாக்கிக் கொள்வதை விடஅல்லது அவற்றை தர்மம் செய்வதைவிட உங்களுக்குச் சிறந்ததாகும்'' என்று சொன்னார்கள். (அறிவிப்பவர்ஸஹ்ல் பின் ஸஅத் ரளியல்லாஹு அன்ஹுநூல்புகாரி-4210)அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நாம் விரும்புகிறோம்.அல்லாஹ்வும் அவனது தூதரும் நம்மை விரும்புவது தான் மிகப் பெரிய விஷயம்.
ஆனால் அலீ ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் ஏற்றுக் கொண்ட பொறுப்பினால் அல்லாஹ்வும் அவனது தூதரும் அவரை விரும்பும் மிகப் பெரும் பாக்கியம் அவருக்குக் கிடைத்திருக்கிறதுஇன்னும் இவ்வளவு பெரிய சிறப்புக்காக மற்ற நபித்தோழர்களும் போட்டி போடுவதையும் காண முடிகிறதுஇவ்வாறு பொறுப்பை ஏற்றுஅதை நிறைவேற்றுவதாக வாக்குறுதி கொடுத்துஅதை உரிய முறையில் பேணுவதால் இத்தகைய சிறப்புகளைப் பெறலாம்எனவே வாக்குறுதி விஷயத்தில் இது நாள் வரைக்கும் நாம் அலட்சியமாக இருந்தாலும் இதைப் படித்த பிறகாவது திருந்திக் கொள்வதற்கு அல்லாஹ் உதவி புரிவானாக!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக