திங்கள், 24 டிசம்பர், 2018

இவர்களை அல்லாஹ் ஏறெடுத்தும் பார்க்கமாட்டான்.


அல்லாஹ் மறுமை நாளில் இவர்களையெல்லாம் ஏறெடுத்தும் பார்க்க மாட்டான் என்று நபி ஸல் அவர்கள் கூறிய நபர்கள் யாரென்றால்...



கணவனுக்கு நன்றி செலுத்தாத மனைவியை அல்லாஹ் ஏறெடுத்தும் பார்க்க மாட்டான்.
  
                                 ( நூல் பைஹகி 7 : 294. )


1 ) மறுமை நாளில் மூன்று நபர்களை அல்லாஹ் பார்க்க மாட்டான்.
2 ) பெற்றோர்களுக்கு மாறு செய்பவன்.
3 ) மது அருந்துபவன்.
4 ) கொடுத்ததை சொல்லிக்காட்டுபவன்.
  
                                      ( நூல் ஹாகிம் 7344. )


1 ) சொந்தத்தை முறித்து வாழ்பவன்.
2 ) மோசமான அண்டை வீட்டுக்காரன்.
ஆகிய இருவரை மறுமை நாளில் அல்லாஹ் ஏறெடுத்தும் பார்க்கமாட்டான்

                                        ( நூல் கன்ஜுல் உம்மால் 6975. )


முடிகளுக்கு கறுப்பு நிறத்தில் சாயம் பூசுபவர்களை அல்லாஹ் ஏறெடுத்தும் பார்க்க மாட்டான்.

                                 ( நூல் மஜ்மவுல் ஸவாயித் 8793. )


மூன்று நபர்களை அல்லாஹ் பார்க்கவும் மாட்டான் அவர்களை பரிசுத்தப்படுத்தவும் மாட்டான் அவர்களுக்கு கடுமையான  வேதனையுமுண்டு.

1 ) அநாதையை சக்திக்கு மீறி கஷ்டப்படுத்தும் ஆசிரியர்.

2 ) யாசகம் கேட்பதை விட்டும் தேவையற்றிருந்தும் யாசகம் கேட்பவன்.

3 ) அரசனிடம் அமர்ந்து அரசனின் மனோ இச்சைக்கு தோதுவாக பேசுபவன்.

                                        ( நூல் கன்ஜுல் உம்மால் 43938  )

1 ) ஜகாத்தை தர மறுப்பவன்.

2 ) எதீமின் பொருளை அனுபவிப்பன்.

3 ) சூனியக்காரன்.

4 ) ஏமாற்றுபவன்.

ஆகியோரை அல்லாஹ் ஏறெடுத்தும் பார்க்க மாட்டான்.

                               ( நூல் கன்ஜுல் உம்மால் 44001 )


உடலும் உள்ளமும் சேராத தொழுகையின் பக்கம் அல்லாஹ் ஏறெடுத்தும் பார்க்க மாட்டான்

                                      ( நூல் இஹ்யா உலூமித்தீன். )

பெருமைக்காக ஆடையை தரையில் இழுத்துக்கொண்டு செல்பவனின் பக்கம் அல்லாஹ் ஏறெடுத்தும் பார்க்க மாட்டான்

                                                   ( நூல் புகாரி 5446. )


1 ) பெற்றோருக்கு மாறு செய்பவன்.

2 ) ஆண்களை போன்று அலங்கரித்துக் கொள்ளும் பெண்.

3 ) மனைவியைக் கூட்டிக் கொடுப்பவன்.

ஆகியோரின் பக்கம் அல்லாஹ் ஏறெடுத்தும் பார்க்க மாட்டான்.

                                 ( நூல் முஸ்னது அஹ்மது 6180 )


ருகூவுக்கும், சுஜுதுக்கும் மத்தியில் இஃதிதாலில் முதுகை நேராக நிப்பாட்டாதவனின் தொழுகையின் பால் அல்லாஹ் ஏறெடுத்தும் பார்க்க மாட்டான்.

                                          ( நூல் முஸ்னது அஹ்மது. )

இவை நமது வாழ்வில் சாதாரணமாக நடக்கும் காரியங்கள். ஆனால் அதன் விளைவுகள் மிகக் கடுமையானது.

அல்லாஹ் நம்மை இறைபார்வையும், இறை நெருக்கத்தையும் பெற்ற மக்களாக ஆக்கி வைப்பானாக. ஆமீன்.

1 கருத்து:

  1. சுப்ஹானல்லாஹ். பல வாரங்களுக்கு உண்டான ஜுமுஆ குறிப்பு அல்ஹம்து லில்லாஹ்

    பதிலளிநீக்கு