வியாழன், 15 பிப்ரவரி, 2024

சில கேள்விகள் கேட்கலாமா ?

 ஒரு கிராமவாசி நபி (ஸல்) அவர்களிடம் வந்து கேட்டார்கள். யாரசூல்ல்லாஹ் தங்களிடம் சில கேள்விகள் கேட்கலாமா ? என்றவுடன் நபியவர்கள் கேளுங்கள்என்றார்கள்.


1.
நான் பணக்காரனாக என்ன செய்ய வேண்டும் ?

·
நீங்கள் போதுமென்ற தன்மையை பெற்றுக் கொள்ளுங்கள். பணக்கார்ராகிவிடுவீர்கள்.

2.
மிகப்பெரிய ஆலிமாக என்ன வழி ?

·
தக்வாவை கடைப்பிடித்துக் கொள்ளுங்கள். ஆலிமாகி விடுவீர்கள்.

3.
நான் கண்ணியமுடையவனாக வாழ வழி என்ன ?

·
ஜனங்களிடம் கையேந்துவதை விட்டும் தவிர்த்துக் கொள்ளுங்கள்



4.
நான் ஒரு நல்ல மனிதராக ஆக விரும்புகிறேன்.

·
ஜனங்களுக்கு உங்களை கொண்டு பிரயோஜனம் ஏற்படட்டும். நல்ல மனிதராக ஆகி விடுவீர்கள்.

5.
நான் நீதியுள்ளவனாக விரும்புகிறேன் ?

·
நீங்கள் எதை விரும்புகிறீர்களோ, அதை மற்றவருக்கும் விரும்புங்கள்

6.
நான் சக்தியுடையவனாக ஆக என்ன வழி ?

·
அல்லாஹ்வின் மீது நம்பிக்கையை ஏற்படுத்துங்கள்

7.
அல்லாஹ்வுடைய தர்பாரில் விசேஷ அந்தஸ்து கிடைக்க விரும்புகிறேன் ?

·
அதிகமாக திக்ரு ( தியானம் ) செய்யுங்கள்

8.
ரிஸ்கில் அபிவிருத்தி ஏற்பட என்ன வழி ?

·
எப்பொழுதும் நிரந்தரமாக ஒழுவுடன் இருங்கள்

9.
துஆ அங்கீகரிக்கப்பட என்ன வழி ?

·
ஹராமான பொருளாதாரத்தை உண்பதை விட்டும் தவிர்த்துக் கொள்ளுங்கள்.

10.
முழுமையான ஈமானுடையவராக என்ன வழி ?

·
நற்குணமுடையவராக ஆகி விடுங்கள்

11.
கியாமத்தில் அல்லாஹ்விடன் பாவமற்றவனாக பரிசுத்த நிலையில் சந்திக்க விரும்புகிறேன் ?

·
குளிப்பு கடமையானவுடன் குளித்து விடுங்கள்

12.
பாவங்கள் குறைய வழி என்ன ?

·
அதிகமாக அல்லாஹ்விடன் பாவ மன்னிப்புத் தேடுங்கள்

13.
கியாமத் நாளில் எனக்கு பிரகாசம் ஏற்பட வழி என்ன ?

·
அநீதம் செய்வதை விட்டு விடுங்கள். பிரகாசம் கிடைக்கும்

14.
அல்லாஹ் என் குறைகளை மறைக்க வழி என்ன ?

·
பிறருடைய குறைகளை இவ்வுலகில் மறைத்து விடுங்கள்

15.
உலகத்தில் இழிவடைவதை விட்டும் பாதுகாப்பு எதில் உள்ளது ?

·
விபச்சாரம் செய்வதை விட்டும் தவிர்ந்து கொள்ளுங்கள். இழிவடையாமல் பாதுகாக்கப்படுவீர்

16.
அல்லாஹ், ரசூல் உடைய பிரியனாக வழி என்ன ?

·
அல்லாஹ், ரசூல் பிரியப்படக்கூடியவர்களை பிரியபடுங்கள்

17.
அல்லாஹ், ரசூலுக்கு வழிப்பட்டவனாக ஆக வழி என்ன ?

· (F)
பர்ளை பேணுதலாக கடைப்பிடியுங்கள்

18.
நான் இறைத் தொடர்புடையவனாக ஆக வழி என்ன ?

·
அல்லாஹ்வை பார்ப்பதாக என்ணி வணங்குங்கள் ( அல்லது ) அல்லாஹ் உங்களை பார்ப்பதாக எண்ணி வணங்குங்கள்

19.
பாவத்தை விட்டும் மன்னிப்பளிக்கக்கூடிய வஸ்த்துக்கள் என்ன ?

·
கண்ணீர், பலஹீனம், நோய்

20.
நரகத்தின் நெருப்பை குளிர வைக்கக் கூடியது எது ?

·
இவ்வுலகில் ஏற்படும் முஸிபத்தின் மீது பொறுமையாக இருப்பது

21.
அல்லாஹ்வுடைய கோபத்தை எது குளிர வைக்கும் ?

·
மறைவான நிலையில் தர்மம் செய்வது சொந்த பந்தங்களை ஆதரிப்பது

22.
எல்லாவற்றிலும் மிகப்பெரிய தீமை எது ?

·
கெட்ட குணம் கஞ்சத்தனம்

23.
எல்லாவற்றிலும் மிகப்பெரிய நன்மை எது ?

·
நற்குணம் பொறுமை பணிவு

24.
அல்லாஹ்வுடைய கோபத்தை விட்டும் தவிர்த்துக் கொள்ள வழி என்ன ?

·
மனிதர்களிடம் கோபப்படுவதை விட்டு விடுங்கள்

(
ஆதாரம் : முஸ்னது அஹ்மது கன்ஸுல் உம்மால் )

1 கருத்து: