சனி, 30 ஜூலை, 2011

தராவிஹ் 20 ரக்அத்கள்



ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் அன்னவர்கள் ரமலானில் வித்ரைத் தவிர 20 ரக்அத்கள் தொழுபவர்களாக இருந்தார்கள்.

இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு 
பைஹகி 2-499, ஷரஹுன்னியாயா 1-104


உமர் (ரலியல்லாஹு அன்ஹு) அன்னவர்கள் காலத்தில் மக்கள் 23 ரக்அத்கள் தொழுபவர்களாக இருந்தனர்.

யஸீத் இப்னு ரூமான் 
முஅத்தா, பைஹகி 1-496, ஷரஹுன்னியாயா 1-104



ஹஸ்ரத் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் காலத்தில் மக்கள் (சஹாபாக்கள்) 20 ரகஅத்துக்கள் தொழுபவர்களாக இருந்துள்ளனர். 

சாயிப் இப்னு யஸீத் 
ஸுனன் பைஹகி , பத்ஹுல் பாரி , 5 - 157, ஐனி (புகாரி விரிவுரை) 11 - 127 



அமீருல் முஹ்மினீன் ஹஸ்ரத் அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் காரிகளை அழைத்து அவர்களில் ஒருவரை மக்களுக்கு 20 ரகஅத்துகள் தொழுவிக்கும் படி பணித்தார்கள். வித்ரை ஹஸ்ரத் அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தொழுவித்தார்கள்.

அப்துர் ரஹ்மான் சலமி 
சுனன் பைஹகி 



கலீபா உமர் (ரலியல்லாஹு அன்ஹு) , கலீபா உதுமான் (ரலியல்லாஹு அன்ஹு), கலீபா அலி (ரலியல்லாஹு அன்ஹு) ஆகியோரின் காலத்தில் தராவிஹ் 20 ரகஅத்துக்களே நடைமுறையிலிருந்து இமாம் ஷாபி (ரஹ்மதுல்லாஹி அலைஹி) மக்காவில் தராவிஹ் இருபது ரகஅத் நடைமுறையிலிருப்பதை நான் கண்டேன் என்றும் கூறியுள்ளார்கள். 

ஜாமிஉத் திர்மிதி


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக