வியாழன், 16 ஜனவரி, 2020

பாடம். 5




அன்றாடம் ஓத வேண்டிய துஆக்கள்!

1) தூங்கும் போது ஓதும் துஆ:

اللَّهُمَّ بِاسْمِكَ أَمُوتُ وَأَحْيَا

அல்லாஹும்ம பி()ஸ்மி(க்) அமூ(த்)து வஅஹ்யா

பொருள்: இறைவா! உன் பெயரால் நான் மரணிக்கிறேன்; (தூங்குகிறேன்) உன் பெயரால் உயிர் பெறுகிறேன். (விழிக்கிறேன்) ஆதாரம்: புகாரி 6325, 6324, 6314

2) தூங்கி எழுந்தவுடன் ஓதும் துஆ:

الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَحْيَانَا بَعْدَ مَا أَمَاتَنَا وَإِلَيْهِ النُّشُورُ

அல்ஹம்து லில்லாஹில்லதீ அஹ்யானா ()ஃத மா அமா(த்)தனா இலைஹின் னுஷுர்

பொருள்: எங்களை மரணிக்கச் செய்த பின் உயிர்ப்பித்த அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். மேலும் அவனிடமே (நமது) திரும்பிச் செல்லுதல் உள்ளது.  (ஆதாரம்: புகாரி 6312, 6314, 6324, 6325, 7395)

3) கழிவறையில் நுழையும் போது ஓதும் துஆ:

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ الْخُبُثِ وَالْخَبَائِثِ

அல்லாஹும்ம இன்னீ அவூது பி()(க்) மினல் குபு()ஸி வல் கபா()யிஸி.  ஆதாரம்: புகாரி 6322

பொருள்: இறைவா! ஆண், பெண் ஷைத்தான்களிடமிருந்து உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.

4) கழிவறையிலிருந்து வெளியேறும் போது ஓதும் துஆ:

غُفْرَانَكَ
ஃகுப்ரான(க்)

பொருள்: உன்னிடம் மன்னிப்புத் தேடுகிறேன்.  ஆதாரம்: திர்மிதீ 7

5) வீட்டிலிருந்து வெளியே செல்லும் போது ஓதும் துஆ:

بِسْمِ اللَّهِ رَبِّ أَعُوذُ بِكَ مِنْ أَنْ أَزِلَّ أَوْ أَضِلَّ أَوْ أَظْلِمَ أَوْ أُظْلَمَ أَوْ أَجْهَلَ أَوْ يُجْهَلَ عَلَيَّ

பி()ஸ்மில்லாஹி ரப்பி() அவூது பி()(க்) மின் அன் அஸில்ல அவ் அளில்ல அவ் அள்ளம அவ் உள்லம அவ் அஜ்ஹல அவ் யுஜ்ஹல அலய்ய ஆதாரம்: நஸயீ 5391, 5444

பொருள்: அல்லாஹ்வின் பெயரால் (வெளியேறுகிறேன்.) என் இறைவா! நான் சறுகி விடாமலும், வழி தவறி விடாமலும், அநீதி இழைக்காமலும், அநீதி இழைக்கப்படாமலும், மூடனாகாமலும், (பிறரை) மூடராக்காமலும் இருக்க உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.

6) பள்ளிவாசலுக்குள் நுழையும் போது ஓதும் துஆ:

اللَّهُمَّ افْتَحْ لِي أَبْوَابَ رَحْمَتِكَ
அல்லாஹும்மப்()தஹ் லீ அப்()வாப() ரஹ்ம(த்)தி(க்)

பொருள்: இறைவா! உனது அருள் வாசல்களை எனக்காகத் திறப்பாயாக.  ஆதாரம்: முஸ்லிம் 1165

7 ) பாங்கு சப்தம் கேட்டால்

பாங்கு சொல்லும் சப்தம் கேட்டால் முஅத்தின் கூறுவதை நாமும் திருப்பிக் கூற வேண்டும் என்று நபிகள் நாயகம் (صلى الله عليه وسلم) அவர்கள் கூறினார்கள்.       ஆதாரம்:புகாரி 611

8 ) பள்ளிவாசலை விட்டு வெளியேறும் போது ஓதும் துஆ:

اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ مِنْ فَضْلِكَ
அல்லாஹும்ம இன்னீ அஸ்அலு(க்) மின் ()ழ்ளி(க்)

பொருள்: இறைவா! உனது அருளை வேண்டுகிறேன். ஆதாரம்: முஸ்லிம் 1165

9 ) சாப்பிடும் போதும், பருகும் போதும் ஓதும் துஆ:

بِسْمِ اللَّه وَعَلَى بَرَكَةِ الله اَللَّهُمَّ بَارِكْ لَنَا فِيْمَا رَزَقْتَنَا وَقِنَا عَذَابَ النَّارْ
பி()ஸ்மில்லாஹி வஅலா பரகத்தில்லாஹ். அல்லாஹும்ம பாரிக் லனா பீமா ரஸக்தனா வகினா அதாபன் நார்.

10 ) சாப்பிடும் போது பிஸ்மில்லாஹ் கூற மறந்து விட்டால் ஓதும் துஆ:

بِسْمِ اللَّهِ فِي أَوَّلِهِ وَآخِرِهِ
பிஸ்மில்லாஹி பீ() அவ்வலிஹி ஆகிரிஹி’ எனக் கூற வேண்டும்.  ஆதாரம்: திர்மிதீ 1781

11 ) சாப்பிட்ட பின்பும் பருகிய பின்பும் ஓதும் துஆ:
الْحَمْدُ لِلَّهِ
அல்ஹம்துலில்லாஹ்

பொருள்: அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்.   ஆதாரம்: முஸ்லிம் 4915

12 ) உணவளித்தவருக்காக ஓதும் துஆ:
اللَّهُمَّ بَارِكْ لَهُمْ فِي مَا رَزَقْتَهُمْ وَاغْفِرْ لَهُمْ وَارْحَمْهُمْ
அல்லாஹும்ம பா()ரிக் லஹும் பீ()மா ரஸக்தஹும் வஃக்பி()ர் லஹும் வர்ஹம்ஹும்.

பொருள்: இறைவா! இவர்களுக்கு நீ வழங்கியதில் பரகத் (மறைமுகமான பேரருள்) செய்வாயாக. இவர்களை மன்னிப்பாயாக! இவர்களுக்கு கருணை காட்டுவாயாக.  ஆதாரம்: முஸ்லிம் 3805

13 ) கண்ணாடி பார்க்கும் போது.
اَللَّهُمَّ اَحْسَنْتَ خَلْقِى فَاَ حْسِنْ خُلُقِى
அல்லாஹும்ம அஹ்ஸன்(த்) கல்(க்)கி ஃபஅஹ்ஸின் குலு(க்)கி.
நூல்:அஹ்மத்

பொருள்: இறைவா! நீ என் உருவத்தை அழகாக்கி வைத்ததைப் போல் என் குணத்தையும் அழகாக்கி வைப்பாயாக.

பயணத்தின் போது ஓதும் துஆ:

நபிகள் நாயகம் (صلى الله عليه وسلم) அவர்கள் பயணத்திற்காக தமது வாகனத்தில் எறி அமர்ந்ததும் மூன்று தடவை அல்லாஹு அக்ப()ர், அல்லாஹு அக்ப()ர், அல்லாஹு அக்ப()ர்எனக் கூறுவார்கள். பின்னர்

سُبْحَانَ الَّذِي سَخَّرَ لَنَا هَذَا وَمَا كُنَّا لَهُ مُقْرِنِينَ وَإِنَّا إِلَى رَبِّنَا لَمُنْقَلِبُونَ اللَّهُمَّ إِنَّا نَسْأَلُكَ فِي سَفَرِنَا هَذَا الْبِرَّ وَالتَّقْوَى وَمِنْ الْعَمَلِ مَا تَرْضَى اللَّهُمَّ هَوِّنْ عَلَيْنَا سَفَرَنَا هَذَا وَاطْوِ عَنَّا بُعْدَهُ اللَّهُمَّ أَنْتَ الصَّاحِبُ فِي السَّفَرِ وَالْخَلِيفَةُ فِي الْأَهْلِ اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ وَعْثَاءِ السَّفَرِ وَكَآبَةِ الْمَنْظَرِ وَسُوءِ الْمُنْقَلَبِ فِي الْمَالِ وَالْأَهْلِ

ஸுப்()ஹானல்லதீ ஸக்கர லனா ஹாதா வமா குன்னா லஹு முக்ரினீன். வஇன்னா இலா ரப்பி()னா லமுன்கலிபூன். அல்லா ஹும்ம இன்னா நஸ்அலு(க்) பீ() ஸப()ரினா ஹாதா அல்பி()ர்ர வத்தக்வா வமினல் அமலி மா(த்)தர்ளா. அல்லாஹும்ம ஹவ்வின் (அலை)னா ஸப()ரனா ஹாதா வத்வி அன்னா பு()ஃதஹு, அல்லாஹும்ம அன்(த்)தஸ் ஸாஹிபு() பி()ஸ்ஸப()ரி வல் கலீப()(த்)து பி()ல் அஹ்லி அல்லா ஹும்ம இன்னீ அவூது பி(க்) மின் வஃஸாயிஸ் ஸப()ரி வகாப ()தில் மன்ளரி வஸுயில் முன்கலபி() பி()ல் மாலி வல் அஹ்லி      எனக் கூறுவார்கள்.

பொருள்: அல்லாஹ் மிகப் பெரியவன். எங்களுக்கு இதை வசப்படுத்தித் தந்தவன் தூயவன். நாங்கள் இதன் மேல் சக்தி பெற்றவர்களாக இருக்கவில்லை. மேலும் நாங்கள் எங்கள் இறைவனிடமே திரும்பிச் செல்பவர்கள். இறைவா! எங்களின் இந்தப் பயணத்தில் நன்மையையும், இறையச்சத்தையும், நீ பொருந்திக் கொள்கின்ற நல்லறத்தையும் உன்னிடம் வேண்டுகிறோம். இறைவா! எங்களின் இந்தப் பயணத்தை எங்களுக்கு எளிதாக்கு! இதன் தொலைவை எங்களுக்குச் குறைத்து விடு! இறைவா! நீயே பயணத்தில் தோழனாக இருக்கிறாய். எங்கள் குடும்பத்தை நீயே காக்கிறாய். இறைவா! இப்பயணத்தின் சிரமத்திலிருந்தும், மோசமான தோற்றத்திலிருந்தும் செல்வத்திலும் குடும்பத்திலும் தீய விளைவுகள் ஏற்படுவதிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.    ஆதாரம்: முஸ்லிம் 2392

14 ) பயணத்திலிருந்து திரும்பும் போது ஓதும் துஆ:
மேற்கண்ட அதே துஆவை ஓத வேண்டும். அதைத் தொடர்ந்து
آيِبُونَ تَائِبُونَ عَابِدُونَ لِرَبِّنَا حَامِدُونَ
ஆயிபூ() தாயிபூ() ஆபி()தூன லிரப்பி()னா ஹாமிதூன்.

பொருள்: எங்கள் இறைவனை வணங்கியவர்களாகவும், புகழ்ந்தவர் களாகவும் மன்னிப்புக் கேட்பவர்களாகவும் திரும்புகிறோம்.  ஆதாரம்: முஸ்லிம் 2392

15 ) தும்மல் வந்தால் ஓதும் துஆ:
தும்மல் வந்தால் தும்மிய பின்
الْحَمْدُ لِلَّهِ
அல்ஹம்துலில்லாஹ்’       எனக் கூற வேண்டும்.
              பொருள் :  எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே.  

அல்ஹம்துலில்லாஹ்என தும்மியவர்  கூறுவதைக் கேட்டவர்
يَرْحَمُكَ اللَّهُ
யர்ஹமு(க்)கல்லாஹ்’  எனக் கூற வேண்டும்.

பொருள்: அல்லாஹ் உனக்கு அருள் புரிவானாக!
இதைக் கேட்டதும் தும்மியவர்
يَهْدِيكُمُ اللَّهُ وَيُصْلِحُ بَالَكُمْ
யஹ்தீ(க்)குமுல்லாஹு வயுஸ்லிஹு பா()(க்)கும்எனக் கூற வேண்டும்.

பொருள்: அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக! உங்கள் காரியத்தைச் சீராக்குவானாக!  ஆதாரம்: புகாரி 6224

16 ) பாவமன்னிப்பு கோருவதில் தலையாய துஆ:

கீழ்க்காணும் துஆவை ஒருவன் பகலில் ஓதிவிட்டு அன்றே மரணித்தால் அவன் சொர்க்கவாசியாவான். இரவில் ஓதி விட்டு இரவிலேயே மரணித்து விட்டால் அவனும் சொர்க்கவாசியாவான் என்று நபிகள் நாயகம் (صلى الله عليه وسلم) கூறினார்கள்.

اللَّهُمَّ أَنْتَ رَبِّي لَا إِلَهَ إِلَّا أَنْتَ خَلَقْتَنِي وَأَنَا عَبْدُكَ وَأَنَا عَلَى عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ أَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا صَنَعْتُ أَبُوءُ لَكَ بِنِعْمَتِكَ عَلَيَّ وَأَبُوءُ لَكَ بِذَنْبِي فَاغْفِرْ لِي فَإِنَّهُ لَا يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا أَنْتَ

 அல்லாஹும்ம அன்(த்) ரப்பீ() லாயிலாஹ இல்லா அன்(த்) கலக்(த்)தனீ வஅன அப்()து(க்) வஅன அலா அஹ்தி(க்) வவஃதி(க்) மஸ்ததஃ(த்)து அவூது பி()(க்) மின்ஷர்ரி மாஸனஃ(த்)து அபூ()வு (க்) பி()னிஃமதி(க்) அலய்ய, வஅபூ()வு (க்) பி()தன்பீ() ()க்பி()ர்லீ  ()இன்னஹு லா யஃக்பி()ருத் துனூப() இல்லா அன்(த்)

இதன் பொருள்: இறைவா! நீயே என் எஜமான். உன்னைத் தவிர வணக்கத்திற்குரி யவன் யாருமில்லை. என்னை நீயே படைத்தாய். நான் உனது அடிமை. உனது உடன்படிக்கையின்படியும் வாக்குறுதியின் படியும் என்னால் இயன்ற வரை நடப்பேன். நான் செய்த தீமையை விட்டு உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். நீ எனக்குச் செய்த அருளோடும் நான் செய்த பாவத்தோடும் உன்னிடம் மீள்கிறேன்.. எனவே என்னை மன்னிப்பாயாக! உன்னைத் தவிர யாரும் பாவங்களை மன்னிக்க முடியாது. ஆதாரம்: புகாரி 6306

பெற்றோருக்காக கேட்கும் துஆ.

رَبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَنِى صَغِيْرَا مَادَامَتِ الرَّحْمَةُ يَااَرْحَمَ الرَّحِمِيْنَ

எனது இரட்சகா,,, என்னையும் எனது பெற்றோரையும் மன்னிப்பாயாக.. எனது பெற்றோர் எனது சிறிய வயதில் என்மீது இரக்கம் காட்டி அருள்புரிந்ததை போல இரக்கம் காட்டுபவர்களுக்கெல்லாம் இரக்கம் கட்டுபவனே உன் அருள் பொழியும் காலமெல்லாம் அவ்விருவரின் மீது நீ அருள்புரிவாயாக.

நல்ல கனவு கண்டால்.

اَلْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَلَمِيْنَ
அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்.

தூங்கும் போது பயந்து திடுகிட்டெழுந்தால்.

اَعُوذُ بِكَلِمَاتِ اللهِ التَّامَّةِ مِنْ غَضَبِهِ وَعِقَابِهِ وَشَرِّعِبَادِهِ وَمِنْ هَمَزَاتِ الشَّيَاطِيْنَ وَاَنْ يَّحْضُرُوْنَ

அவூது பிகலிமாத்தில்லாஹித் தாம்மாத்தி மின் கலபிஹி வஇகாபிஹி வஷர்ரி இபாதிஹி வமின் ஹமஸாத்தி ஷயாத்தீன் வஅய் யஹ்லுரூன்.
பரிபூரணமான அல்லாஹ்வின் திருக்கலிமாவின் பொருட்டால் அவனுடைய கோபத்தை விட்டும், தண்டனையை விட்டும், அவனுடைய அடியார்களின் தீங்கை விட்டும், ஷைத்தான்களின் ஊசலாட்டங்களை விட்டும், அவை என்னிடம் வருவதை விட்டும் நான் பாதுகாப்பு தேடுகிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக