அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…
எனது பெயர்……
இன்றைய சமுதாயம் மொபைல் ஃபோனுக்கு அடிமையாகி அவர்களின் வாழ்க்கை எவ்வளவு சிக்குண்டு இருக்கிறது என்பதை சொல்ல நான் இங்கு வந்துள்ளேன்.
அன்பிற்கினிய அல்லாஹ்வின் நல்லடியார்களே….
இன்று ஒருவர் இல்லையென்றால் அவரைச் சார்ந்தவர் அழுது, கவலைபட்டு வாழ்க்கை என்னவாகுமோ என்று எண்ணும் காலம் மாறிவிட்டது.
காரணம் 🤔🤔🤔
மனிதர்களுக்கு மதிப்பு இல்லை,
உறவினர்களுக்கு உரிமை இல்லை,
ஆசை மனைவியிடன் அன்பாய் பேச நேரம் இல்லை,
தான் பெற்ற பிள்ளைகளோடு மகிழ்ச்சியாய் விளையாட ஆர்வம் இல்லை
மெஷின் போன்ற வாழ்க்கை,
மெஷின்னுடன்📲 தான் வாழ்க்கை,
மனைவி இல்லையென்றாலும் பரவாயில்லை மொபைல் இருக்கிறது,
உறவினர்கள் இல்லையென்றாலும் பரவாயில்லை பேஸ்புக் இருக்கிறது,
நண்பர்கள் இல்லையென்றாலும் பரவாயில்லை வாட்ஸ்அப் இருக்கிறது.
அக்காலத்தில் கிடைத்த சந்தோஷத்தில் இப்போழுது 75% சந்தோஷம் கிடைக்காதற்கு காரணம் மொபைல் தான்.
உலகில் மிக பெரிய ஏமாற்றம் போர் அடிக்கும் நேரத்தில் மொபைல்ல சார்ஜ் இல்லை என்றால் தான்.
நாம் வாழும் வாழ்க்கை மிக குருகிய காலமே
நேரத்தை மொபைல் என்ற மெஷினுடன் போக்காமல்
சந்தோஷமாக வாழ வழி தேடுவோம்
தேடுவது கூகுளிலில் அல்ல
குடும்பதார்களிடம் நண்பர்களிடம் பேசுவதின் மூலம்,சிந்திப்பதின் மூலம், விளையாடுவதின் மூலம்,
நம் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.
ஒரு நாளைக்கு 1 மணி நேரமாவது உயிரற்ற பொருட்களை தூக்கி எறிந்து விட்டு உயிருள்ள பொருட்களுக்கு மதிப்பு கொடுப்போம்.
எப்போதும் போல இது பார்வேர்ட் மெஸெஜ் தானே என்று அலட்சிய படுத்தாமல் நம் வாழ்க்கையை அழகாக்குவோம்.
*உன் வாழ்க்கை உன் மொபைலில் இல்லை
உன் அன்பு பேச்சில் இருக்கிறது!!
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தம் மட்டும் நஞ்சல்ல ஆண்ட்ராய்டு போனும் நஞ்சுதான்.
எனவே….. இறையச்சத்தின் ஒளியில் இடரி விடாமல் இன்றைய நவீன கண்டுபிடிப்புகளை அளவோடு பயன்படுத்தி அல்லாஹ்வின் பொருத்தத்தை பெற்ற வாழ்க்கை வாழக்கூடிய நல்லோர்களாக வல்லோன் அல்லாஹ் நம் அனைவரையும் திகழ செய்வானாக
பழைய குறிப்புகள் வாசிக்க 👇🏻 கிளிக் செய்யவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக