வெள்ளி, 3 மார்ச், 2023

நம் உடலைப் பற்றி அறிவோம்...


 

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

நஹ்மதுஹு வநுஸல்லி அலா ரசூலிஹில் கரீம் அம்மா பஃத்.

ஃபகத் காலல்லாலாஹு தஆலா ஃபில் குர்ஆனில் மஜீத் வல் ஃபுர்கானில் மஜீத் அவூது பில்லாஹி மினஷ் ஷெய்தானிர் ரஜீம். பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

 وَاِنْ تَعُدُّوْا نِعْمَةَ اللّٰهِ لَا تُحْصُوْهَاؕ اِنَّ اللّٰهَ لَـغَفُوْرٌ رَّحِيْمٌ‏

நமது உயிரினும் கண்மணி நாயகம் ஸல் அவர்கள் மீதும் அவர்களின் தோழர்கள் மீதும் நாதாக்கள் நல்லோர்கள் அனைவரின் மீதும் குறிப்பாக இந்த மீலாது /  எங்கள் மதரஸாவின் ஆண்டு விழா நிகழ்வில் பங்கொண்டு அல்லாஹ்வையும் ரசூலையும் நினைவு கூர்ந்து நன்மையை அடைந்து கொள்ள இங்கு வந்திருக்கும் நம் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் அன்பும் அருளும் என்றும் நின்று நிலவட்டுமாக. ஆமீன்.

எனது பெயர் .................................................

நான் இங்கு நம் உடலைப் பற்றி அறிவோம் என்ற தலைப்பில் பேச வந்திருக்கிறேன்.

 

என் அன்பிற்கினிய அல்லாஹ்வின் நல்லடியார்களே..

வல்லோன் அல்லாஹ் தன் அருள்மறையாம் திருகுர்ஆனில் ஒரு இடத்தில் இப்படி கூறுகிறான்.

 وَاِنْ تَعُدُّوْا نِعْمَةَ اللّٰهِ لَا تُحْصُوْهَاؕ اِنَّ اللّٰهَ لَـغَفُوْرٌ رَّحِيْمٌ‏

. இன்னும் அல்லாஹ்வின் அரு(ட் கொடைக)ளை நீங்கள் கணக்கிட்டால், அவற்றை (வரையறை செய்து) நீங்கள் எண்ணி முடியாது! நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவனாகவும், மிகக் கருணையுடையோனாகவும் இருக்கின்றான். 16:18.

என்பதாக கூறுகிறான்.

மேற்கூறிய வசனத்தில் அல்லாஹ் நமக்கு கணக்கிட முடியாத நிஃமத்துகளை வழங்கியுள்ளதாக கூறுகிறான்.

அந்த வகையில் நமது உடலில் அல்லாஹ் நமக்கு வழங்கியுள்ள நிஃமத்துகளை நாம் சற்று நினைத்துப் பார்க்க வேண்டும்ய

ஒரு மனிதனின் பூரண ஆயுள் என்பது 120 ஆண்டுகள் ஆரோக்கியமாக வாழ்வதாகும்.

அல்லாஹ்வின் நல்லடியார்களே...

 

மனிதனின் ஒரு தலைமுறை என்பது 33 ஆண்டுகளைக் குறிக்கும்.

 

மனித முகத்தில் 14 எலும்புகள் உள்ளன.

 

மனித மூளையில் 6 கிராம் அளவிற்கு தாமிரம் உள்ளது.

 

ஒரு மனிதனின் உடலிலுள்ள நரம்புகளின் மொத்த நீளம் சுமார் 72 மீட்டராகும்.

 

நமது ரத்தம் ஒரு நாளில் 30 கோடி கி.மீ பயணம் செய்கிறது.

 

நுரையீரல் ஒரு நாளைக்கு 23,040 முறை சுவாசத்தை உள்ளெடுத்து வெளியே செலுத்துகிறது.

 

நமது இதயம் ஒரு நாளில் 1,03,689 முறை துடிக்கிறது.

 

மனிதனின் நாக்கில் உள்ள சுவை அறியும் செல்களின் எண்ணிக்கை மூன்று ஆயிரமாகும்

 

உடலில் உள்ள மின்சாரத்தின் அளவு 25 வாட்ஸாகும்

 

ஒரு சராசரி மனிதனின் உடலில் ஓடும் ரத்தத்தின் அளவு 5 லிட்டர்.

 

கைரேகையைப் போலவே நாக்கில் உள்ள வரிகளும் ஒவ்வொருவருக்கும் வேறுபடும்.

 

மனித உடலில் சதை அழுத்தம் அதிகம் உள்ள பகுதி நாக்காகும்

 

கண் தானத்தில் கறுப்பு விழிகள் மட்டுமே அடுத்தவருக்குப் பொருத்தப்படுகின்றன.

 

900 பென்சில்களைத் தயாரிக்கும் அளவிற்கு மனித உடலில் கார்பன் சத்து இருக்கிறது.

 

மனித உடலில் மிகவும் பலமான பகுதி விரல் நகங்களாகும். அதில் கெராடின் சத்து உள்ளது, இது காண்டா மிருகத்தின் கொம்புகளில் உள்ளதாகும்.

 

மரணத்திற்கு பிறகும் கூட மனிதனின் நகத்திற்கு ஒன்றுமே ஆகாது....

 

அதிசயங்கள் நிறைந்த உடல் மனித உடலாகும்...

 

மனிதன் தூங்கிக் கொண்டிருக்கும் போது அவருடைய உயரம் 8 mm அதிகரிக்கும், தூங்கி எழுந்தப் பிறகு மீண்டும் பழைய உயரமே இருப்பார்.

 

இதற்கு காரணம் மனிதன் உட்காரும் போது அல்லது நிற்கும் போது புவி ஈர்ப்பு விசையின் காரணமாக எலும்புகளின் மீது ஏற்படும் அழுத்தமாகும்.

 

 நமது உடல் எடையில் 14 சதவிகிதம் எலும்புகளால் ஆனது, 7 சதவிகிதம் ரத்தம் ஆகும்.

 

 நுரையீரலில் 300,00 மில்லியன் ரத்த நாளங்கள் உள்ளன. இவை அனைத்தும் ஒன்று சேர்க்கப்பட்டால் அதன் நீளம் 2400 கிலோமீட்டராக இருக்கும்.

 

ஒவ்வொரு சிறுநீரகமும் ஒரு மில்லியன் வடிகட்டிகளை (Filters) கொண்டுள்ளது. அவைகள் ஒரு நிமிடத்திற்கு 1.3 லிட்டர் ரத்தத்தை வடிகட்டுகிறது. மேலும் ஒரு நாளில் 1.4 லிட்டர் சிறுநீரை வெளியேற்றுகிறது.

 

மனிதனின் ஒரு தனித்த ரத்த அணு, உடல் முழுவதையும் சுற்றிவர 60 வினாடிகள் மட்டுமே எடுத்துக் கொள்ளும்.

 

மனித உடலின் மிகப் பெரிய செல் பெண்ணின் கருமுட்டையாகும், மிகச் சிறிய செல் ஆணின் விந்தாகும்.

 

நமது உடலில் உள்ள ரத்தக் குழாய்களின் நீளம் சுமார் 600,000 மைல்கள். அதாவது இந்த தொலைவில் நாம் இரண்டு முறை உலகத்தைச் சுற்றி வந்து விடலாம்.

 

கண்களின் தசையானது ஒருநாளில் 100,000 முறை அசைகிறது, அதற்கு சமமான வேலையை உங்கள் கால்களுக்குக் கொடுக்க வேண்டும் என்றால் தினமும் 80 கிலோமீட்டர் தூரம் நடக்க வேண்டும்.

 

மனிதன் ஒரு அடி எடுத்து வைக்க 200 தசைகள் பயன்படுத்தப்படுகின்றன.

 

காலின் பெருவிரல் இரண்டு எலும்புகளைக் கொண்டிருக்கும், ஆனால் மற்ற விரல்கள் ஒவ்வொன்றும் மூன்று எலும்புகளைக் கொண்டிருக்கும்.

 

கட்டை விரலின் நீளமும், மூக்கின் நீளமும் சமமாகும்.

 

மனித கால்களில் ஒரு ட்ரில்லியன் வரையிலான பக்டீரியாக்கள் இருக்கும்.

 

நமது கண்களின் எடை சராசரியாக 28 கிராம், 500 விதமாக ஒளிகளைப் பிரித்தெரியும் சக்தி அதற்கு உள்ளது

 

மனித மூளையில் சுமார் 100 பில்லியன் நரம்பு செல்கள் உள்ளன, 35 வயது அடைந்தது முதல் மூளையில் தினமும் 7000 நரம்பு செல்கள் இறக்கின்றன.

 

நாம் சுவாசிக்கும் மொத்த ஆக்சிஜனில் 20 சதவிகிதம் மூளைக்குச் செல்கிறது.

 

நமது மூளை 80 சதவிகிதம் நீரால் ஆனது, மூளையின் செயல்திறன் பகலை விட இரவில் அதிகமாக இருக்கும்.

 

மனிதன் உயிரிழந்தப் பின்பு அவனது உறுப்புகள் எவ்வளவு நேரத்தில் செயல் இழக்கும் என்றால்

 

கண்கள்- 31 நிமிடங்களில் செயழிலக்கும்.

மூளை- 10 நிமிடங்களில் செயழிலக்கும்.

கால்கள்- 4 மணிநேரங்களில் செயழிலக்கும்.

தசைகள்- 5 நாட்களில் செயழிலக்கும்.

இதயம்- சில நிமிடங்களில் செயழிலக்கும்.

 

இப்படி நமது உடலைப் பற்றி சொல்வதென்றால் சொல்லிக் கொண்டே செல்லலாம். இப்படிபட்ட உடலை நமக்கு வழங்கிய வல்லோன் அல்லாஹ்வுக்கு அனுதினமும் நன்றி செலுத்தும் நல்லோர்களில் ஒருவராக நம் அனைவரையும் அல்லாஹ் ஆக்கி அருள்புரிவானாக.

 

எனக்கு இங்கு பேச வாய்ப்பளித்த எனது ஹஸ்ரத் அவர்களுக்கும் ஜமாத்தார்களுக்கும் உங்கள் அனைவருக்கும் ஸலாத்தைக் கூறி விடை பெறுகிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

2 கருத்துகள்: