ஞாயிறு, 17 ஜூலை, 2022

ஆடை இல்லா மனிதன் அரை மனிதன்

 


அன்னாசு பில்லிபாஸ் الناس باللباس ஆடையை வைத்தே மனிதர்கள் மதிக்கப்படுகிறார்கள்


அன்றொருநாள் முல்லா ஒரு விருந்துக்கு அழைக்கப்பட்டிருந்தார்..குறித்த நேரத்தில் விருந்துக்கு சென்றார். எளிமையான உடையில் இருந்ததால் வாட்ச்மேன் உள்ளே விடவில்லை. எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அனுமதிக்கவில்லை. 

முல்லா திரும்பி சென்றார்; கடைக்குச் சென்று ஒரு அழகான டிப்டாப்பான உடையை வாடகைக்கு வாங்கி அணிந்துகொண்டு மீண்டும் விருந்துக்கு வந்தார். இப்பொழுது வாட்ச்மேன் வாயெல்லாம் பல்லாக வாங்க வாங்க என்று வரவேற்றான். உள்ளே சென்ற முல்லா விருந்தை எடுத்து தன் சட்டைப் பைக்குள் போட்டு சட்டையே ! இந்தா தின்னுஎன்று சொல்லிக் கொண்டிருந்தார். அங்கிருந்த மக்கள் எல்லோரும் என்ன முல்லா.. என்னாச்சு உங்களுக்கு?” என கேலியாக கேட்டனர். முல்லா சொன்னார்; ரொம்ப நல்லா சொன்னார்: ஆமா.. முதலில் எளிமையா வந்தேன்; எதுவும் கிடைக்கல.. டிப்டாப்பா வந்தேன்; எல்லாமே கிடச்சது. அப்படின்னா இந்த விருந்து எனக்கா? இந்த சட்டைக்கா?” என்றார்.


அல்லாஹ்வின் நல்லடியார்களே....

ஆடையழகு அவசியம்தான்; அதற்காக ஆடையில் அனாச்சாரத்தைப் புகுத்தி கலாச்சாரத்தை மாற்றக்கூடாது
தற்போதைய மாறி வரும் சூழ்நிலையால், இளைஞர்களையும் மற்றும் இளைஞிகளையும் டீ சர்ட் புரட்சியானது அவர்களின் நெஞ்சங்களை கொள்ளை கொண்டு விட்டது. டீ சர்ட் எங்கிருந்து வந்தது, எப்படி வந்தது என்று ஆராய்ந்தால் மேலைநாட்டு கலாச்சாரம் என்று கூறலாம்.

டீ சர்ட் சாதாரணமாக இருந்தால் பரவாயில்லை.. அதில் கூட என்னனென்ன அலங்கோலங்கள் இருக்கிறது என்பதினை நாம் பார்த்தால் கண்றாவியாக இருக்கும். பார்ப்பவர்களின் கண்களை கூசச்செய்யும் அளவிற்கு பல கலர்கள், பல கெட்ட கெட்ட வாசகங்கள், ஸ்பைடர் மேன், சூப்பர் மேன், ரஸ்ஸிலின் போட்டோக்கள், பாலிவுட், ஹாலிவுட், கோலிவுட் என்று எல்லா நட்சத்திரங்களின் படங்கள் போட்டதாக இருக்கும். இது ஆண்கள் உடுத்தும் டீ சர்ட் என்பது மட்டுமில்லை, பெண்கள் உடுத்தும் டீ சர்ட்டிலும் இத்தகைய அலங்கோலங்கள் இருக்கத்தான் செய்யும்.
அது போல் ஜீன்ஸை எடுத்து கொண்டால், பல வண்ணங்கள்..பல வடிவங்கள்..

ஒரு பக்கம் கிழிந்து போய் இருக்கும் ஒரு பக்கம் கலர் மங்கிப்போய் இருக்கும். ஒரு வயதான முதியவர் தன்னுடைய பேரனிடம் இப்படி கேட்டார்.. (அவருக்கு ஜீன்ஸ் என்று சொல்ல தெரியவில்லை..) என்ன பேரான்டீ. நீ வாங்கிட்டு வந்த பேண்ட் துணி  கிழிஞ்சி தொங்குது.. என்று கேட்டார் அதற்கு பேரனின் போங்க.. தாத்தா.. உங்களுக்கு எப்பவும் ஒரு கிண்டல் தான்.. இது தான் இப்போது ஃபேஷன் தாத்தா என்றான்.


ஒரு இளைஞியிடம் ஒரு முதியோர்.. என்னபுள்ளை  நீ.. ஆம்பிளை புள்ளை போடுற பேண்டை போட்டுக்கொண்டு திரிகிறாய்.. அந்த பெண் கூறினாள்.. போங்க பெரிசு.. உங்க காலத்தில் இதுவெல்லாம் எங்கே கிடைச்சது.. எங்க காலம் வேற.. நாங்க நாகரீக காலத்தில் மாறிட்டோம்.. இப்பவெல்லாம் இது தான் எங்களுக்கு பிடிச்சு இருக்குது.. வேணும் என்றால் உங்களுக்கும் வாங்கி தரட்டா.. என்றுசொன்னாள்.. 

அல்லாஹ்வின் நல்லடியார்களே....

காலங்கள் மாறிவிட்டது.. மாற்றங்கள் அவசியமானது தான். ஆனால் அது மனிதனை நாகரீகம் என்ற பெயரில் குப்பைக்கு கொண்டு சென்றால் என்ன செய்வது..?..!


இதுமட்டுமல்லாமல், தற்போது பல கடைகளில் ஷார்ட்ஸ் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் அரைக்கால் டவுசர்கள் விற்பனைக்கு வந்து விட்டது. அதனையும் விரும்பி அணியக்கூடிய பலரை நாம் பார்த்து இருக்கலாம். அந்த ஆடையானது முழங்கால் தெரியக்கூடிய அளவிலும் மற்றும் தொடைகள் தெரியக்கூடிய அளவிலும் தான் இருக்கும்.

ஆனால் இஸ்லாம் மார்க்கமோ இத்தகைய ஆடைகளை அணிவதை தடை செய்து உள்ளது. நாம் அணியும் ஆடையானது, நம்முடைய கணுக்கால் மேல் இருக்கவேண்டுமே தவிர கணுக்காலுக்கு கீழே இருக்கக்கூடாது என்றும், மற்றும் தொடைப்பகுதிகளையும் காலின் மற்ற பகுதிகளையும் மறைக்கக்கூடிய அளவிலும் தான் இருக்க வேண்டும். மானத்தை மறைக்கத்தான் ஆடையே தவிர மானத்தினை காற்றில் பறக்கவிடுவதற்கல்ல.

يٰبَنِىْۤ اٰدَمَ قَدْ اَنْزَلْنَا عَلَيْكُمْ لِبَاسًا يُّوَارِىْ سَوْاٰتِكُمْ وَرِيْشًا‌ وَلِبَاسُ التَّقْوٰى ۙ ذٰ لِكَ خَيْرٌ‌ ذٰ لِكَ مِنْ اٰيٰتِ اللّٰهِ لَعَلَّهُمْ يَذَّكَّرُوْنَ‏
ஆதமுடைய மக்களே! மெய்யாகவே, நாம் உங்களுக்கு உங்களுடைய மானத்தை மறைக்கவும், உங்களுக்கு அலங்காரமாகவும், ஆடையை அளித்துள்ளோம். ஆயினும் தக்வா (பயபக்தி) எனும் ஆடையே (அதைவிட) மேலானது. இது அல்லாஹ்வுடைய (அருளின்) அடையாளங்களில் (ஒன்றாக) உள்ளதாகும் – (இதைக் கொண்டு) நல்லுணர்வு பெறுவார்களாக.
(
அல்குர்ஆன் : 7:26)

அல்லாஹ்வின் நல்லடியார்களே....

இந்த வசனத்தில் ஆடை யென்பது
1.
மானத்தை மறைக்க வேண்டும்
2.
ஓரளவு அழகாக இருக்கவேண்டும்
3.
இதை விட மேலாக இறையச்சத்தை உண்டாக்க வேண்டும்
என்று கூறி இறையச்சம் என்ற ஆடைதான் சிறந்தது என்கிறான் இறைவன்.


எனவே ஆடை என்பது வெறும் அலங்காரம் மட்டுமல்ல; அது நமது உடலில் உள்ளத்தில் குணத்தில் சிந்தனையில் வாழ்வில் ஒரு மாபெரும் பிரதிபலிப்பை மாற்றத்தை ஏற்படுத்தக் கூடியது.


வாய்ப்பு அளித்தமைக்கு நன்றி கூறி விடை பெறுகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…..


இத் தகவலை நமக்கு தொகுத்து தந்தவர் : 

மதிப்பிற்குரிய மவ்லானா மவ்லவி B. முஹம்மது ராஃபி ரஷீதி 

ஹழ்ரத் அவர்கள்.  

ஆசிரியர் ஹிதாயத்துல் இஸ்லாம் மதரஸா. அரக்கோணம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக