சனி, 9 டிசம்பர், 2017

#பெற்றோரை_மறக்காதீர்கள்..

நபிகள் நாயகம் (ஸல்) பிறக்குமுன்பே தந்தையை இழுந்து தாயின் அரவனைப்பில் வளர்ந்து வந்தார்..அவருக்கு 6வயதானபோது தாயார் ஆமினா அவர்கள் "மகனே! மதீனாவிலுள்ள நமது சொந்தங்களை உனக்கு அறிமுகப்படுத்தித் தரட்டுமா!"எனக்கூறி மதினாவுக்கு அழைத்து செல்கிறார்..

       அங்கு ஒருமாதம் தங்கியப்பிறகு மீண்டும் மக்கா நோக்கி பயணிக்கிறார்கள்..அவர்களோடு பராக்கா(உம்மு அய்மன் )..
அப்துல்லாஹ் தம் சொத்து என்று ஆமினாவுக்கு விட்டுச் சென்றவை ஐந்து ஒட்டகங்கள்; ஆட்டு மந்தை; இவற்றோடு அடிமைப் பெண் பரக்கா..
  மக்காவை நெருங்க இரண்டு இரவுகளே உள்ள நிலையில் தாயார் ஆமினாவுக்கு காய்ச்சல் முற்றுகிறது..


ஆறு வயதேஆன நபி(ஸல்)அவர்களுக்கு தெரியவில்லை அது தாயின் ஷக்கராத்தென்று..அந்த குழந்தை பார்க்கபோகும் முதல் மரணம் அது..
ஆனால் அந்த தாயிக்கு புரிந்துவிட்டது இது தன் கடைசி நேரமென்று..தன் மகனின் மடியில் படுத்தவாறே அவர் கண்ணத்தை தடவியபடியே கூறுகிறார்.."மகனே! பொறுமையாக இரு..இவ்வுலகில் வந்த ஒவ்வொரு உயிரும் மரணமடைந்தே தீரும்..அல்லாஹ் யாரையும் விடமாட்டான்..ஒவ்வொரு வாலிபமும் வயோதிகமாகும்..ஒவ்வொரு இன்பமும் அழியும்..மகனே! பொறுமையாக இரு!" எனக்கூறி தனது அடிமைபெண் பராக்காவிடம்
"“பரக்கா! எனது இவ்வுலக வாழ்க்கை முடியப்போகிறது. என் மகன் முஹம்மதை உன் பொறுப்பில் அளிக்கிறேன். என் வயிற்றில் இருக்கும்போதே தன் தந்தையை இழந்த சிறுவன் இதோ இப்போது தன் கண்ணெதிரே தாயையும் இழக்கப்போகிறான். ஒரு தாயாய் அவனைக் கவனித்துக்கொள் பரக்கா. அவனை விட்டு விலகாதே.”


அதை பரக்காவால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. நெஞ்சம் வெடித்துவிடும் போலிருந்தது அவருக்கு. புலம்பி அழ ஆரம்பித்துவிட்டார். அதைக் கண்ட சிறுவர் முஹம்மது விஷயம் முழுதாய்ப் புரியாவிட்டாலும் ஏதோ துக்கம் என்று தெரிந்துகொண்டு விம்ம ஆரம்பித்துவிட்டார். தம் அன்னையின் கைகளுக்குள் புதைந்து கழுத்தை இறுக கட்டிக்கொண்டார். அன்னை ஆமினாவிடமிருந்து ஓர் இறுதி முனகல் வெளிப்பட்டு அடங்கியது. ஆறு வயதுப் பாலகன் முற்றிலும் நிராதரவரானார்..(இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஹூன்)


துக்கத்தை அடக்க முடியாமல் அழுதார் பரக்கா. உடலும் கண்களும் களைத்துப் போகும் வரை அழுதார். அந்த காட்டில்..அந்த சிறிய மலைகுன்றில் யாருமின்றி..பிறகு தம் கையாலேயே குழிதோண்டி, தம் எசமானி ஆமினாவை நல்லடக்கம் செய்துவிட்டு, அழுது கொண்டிருக்கும் சிறுவர் முஹம்மது(ஸல்) அவர்களின் கைகளை பற்றிக்கொண்டு மக்காநோக்கி நடக்கிறார்..சிறிது தூரம்கூட செல்லவில்லை..அவர் கைகளை உதறிவிட்டு ஓடிச்சென்று தனது தாயின் கபுரின் மேல்படுத்து அழுகிறார் சிறுவரான நபி(ஸல்)
"அம்மா!உன்னைவிட்டு போகமாட்டேன்..நீங்க எனக்கு தேவை"என தேம்பிதேம்பி அழுகிறார்..மக்காவரை அழுதுகொண்டே செல்கிறார்.......


பிறகு அப்படியே காலம் செல்கிறது..இப்போது நபி(ஸல்)அவர்களுக்கு வயது 63.. தனது முதலும் கடைசிமான ஹஜ்ஜை நிறைவேற்ற மக்கா நோக்கி புறப்படுகிறார்..தனது தாய் அடக்கியுள்ள அபுவா குன்றின் வழியாக தனது பயணத்தை அமைத்துகொண்டு..
அந்த இடம் வந்ததும் பயணக்கூட்டத்தை அன்று இரவு அங்கேயே தங்கச்சொல்லிவிட்டு தான்மட்டும் மலைக்கு மேல்ஏறி தனது தாயின் கபுரின் முன்பு இருகால்களையும் கைகளால் கட்டிக்கொண்டு அமருகிறார்..


6வயதில் விட்டுசென்ற தாயை  63வயது ஆனபோதும் தாயை மறக்கல..இடையில் 57வருடங்களில் நபிபட்டம் கிடைத்தது தன் தாயை மறக்கல..பத்ர் உட்பட பல போர்களின் வெற்றி- தன் தாயை மறக்கல..சித்ரத்துல் முன்தஹா  வரை விண்ணுலக பயணம் போய்ட்டு வந்தாங்க நபி(ஸல்)அவர்கள் தாயை மறக்கல..தனது தாயின் கபுரை பார்த்து அழுது கொண்டே சொல்கிறார் "அம்மா ! நீங்க உயிரோடு இருந்திருந்தா..உங்களுக்கு எவ்வளவு பணிவிடை செய்திருப்பேன் தெரியுமா! நான் தொழுகையில் இருக்கும்போது..நீங்க முஹம்மது! முஹம்மது! என்று அழைத்திருந்தால்! இதோ..வந்துவிட்டேன் தாயே! என்று  தொழுகையை விட்டுவிட்டு உங்களுக்கு பணிவிடை செய்யவந்திருப்பேனே! அந்த பாக்கியம் எனக்கு கிடைக்கவில்லையே" என அழுது அழுது மனம் வருந்தினார்...


*இதன்மூலம் யுக முடிவுநாள்வரையுள்ள அனைத்து மனிதர்களுக்கும் நபி(ஸல்)அவர்கள் ஒரு செய்தியை தருகிறார்: நீ எத்தனை ஹஜ்ஜுக்கு போனாலும்.. எவ்வளவு தானதர்மங்கள் செய்தாலும்.. எத்தனை அமல்கள் செய்தாலும்..ஒரு நபியாகவே இருந்தாலும்கூட பெற்றோர் உயிரோடு இருந்து அவர்களை கண்ணியப்படுத்தாவரை அவரின் எந்த அமலும் ஏற்றுக்கொள்ளப்படாது...


தாய் – தந்தையரிடம் மிக கண்ணியமான முறையில் நடந்து கொள்ளுங்கள். பெற்றோரில் ஒருவரோ இருவருமோ முதுமை அடைந்துவிட்ட நிலையில் உம்மிடம் இருந்தால் அவர்களை ‘சீ’ என்றுகூடக் கூராதீர். மேலும் அவர்களைக் கடிந்து பேசாதீர். மாறாக அவர்களிடம் கண்ணியமாகப் பேசுவீராக ( திருக்குர் ஆன் 17:23 ).


 பொதுவாக வயசு கூடக்கூட டென்ஷன் அதிகமாகும்.
இதுமாதிரி முதுமைப் பருவத்தில் பெற்றோர் நம் மனம் புண்படும் விதத்தில் நம்மைப் பேசிடலாம், ஏசிவிடலாம். ஆனாலும்கூட அதற்குப்பகரமாக நாம் பேசிடும் ஒவ்வொரு வார்த்தையிலும் கண்ணியம் இழையோட வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் பெற்றோரின் மறியாதையைக் குதறிவிடக்கூடாது. ‘பெற்றோரைத் திட்டுவது பெரும் பாவங்களில் ஒன்று’ என நபிகள்நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கண்டிக்கிறார்கள். நீ நேரடியாகத் திட்டுவது ஒருபுறம் இருக்கட்டும், நீ ஒருவனின் தந்தையைத் திட்ட அவன் பதிலுக்கு உன் தந்தையைத் திட்டக்கூடிய சூழலைக்கூட உருவாக்கி விடாதே என்று உணர்த்துகிறார்கள். ( முஸ்லிம் )


#பெற்றோரை_மறக்காதீர்கள்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக