திங்கள், 24 ஜூலை, 2023

தஜ்ஜால் பற்றிய கேள்வி பதில்.

கியாமத்து நாளின் அடையாளங்களில் ஒன்றான தஜ்ஜாலை பற்றி கேள்வி பதிலாக சொல்வதற்கு .......... ………… வருகிறார்கள்.


கேள்வி : கியாமத்து நாளில் மக்களிடையே குழப்பத்தை விளைவிக்க வருபவன் யார்

பதில் : தஜ்ஜால்.

கேள்வி: அவனது புனைப்பெயர் என்ன.

பதில் : மஸீஹ் தஜ்ஜால்

கேள்வி: அவனுக்கு குடும்பம் இருக்கிறதா..

பதில் : அவன் குழந்தை பிறக்காத மலடன்.

கேள்வி: அவன் எப்போது தோன்றுவான்.

பதில்: கியாமத்து நாளின் நெருக்கத்தில் தோன்றுவான்.

கேள்வி : அவன் எங்கு தோன்றுவான்.

பதில் : மதீனா நகரின்

கீழ்த்திசையில் ஈராக், சிரியா

நாடுக்களுக்கிடையே உள்ள குரஸான்

(ஆப்கானிஸ்தான்) என்னும் பகுதியில் தோன்றுவான்.

கேள்வி : அவன் என்ன இனத்தைச் சார்ந்தவன்

பதில் : அவன் யூத இனத்தைச் சார்ந்தவன்

கேள்வி : அவன் எவ்வளவு காலம் இவ்வுலகத்தில் வாழ்வான்

பதில் : 40 நாட்கள் அவன் உயிர் வாழ்வான்

ஆனால் அவன் வாழும் நாற்பது

நாளில் ஒரு நாள் ஒரு வருடம் போன்றும், இன்னொரு நாள் ஒரு மாதம்

போன்றும், மற்றொரு நாள் ஒரு வாரம்

போன்றும் இருக்கும். மீதமுள்ள நாட்கள்

சாதாரண நாட்களைப் போன்றும் இருக்கும் .

கேள்வி :அவனது தோற்றம் எப்படி இருக்கும்.

பதில் :

1. திடகாத்திரமான சிவப்பான இளைஞனாக இருப்பான்,

2. மரக்கிளை போன்று அடர்த்தியான

சுருட்டை முடி உடையவன் .

3. ஒரு கண் ஊனமுற்று, மற்றொரு கண்

நிலை குத்திய நிலையில் பச்சை நிறக்

கண்ணாடி போன்று பார்வை உடையவன்.

4. குட்டையானவன், குண்டானவன் .

5.அதிக இடைவெளி உள்ள கால்களைக்

கொண்டவன்.

6. நெற்றியில் காஃபீர் என எழுதப்பட்டவன்


கேள்வி : அவன் இவ்வுலகில் எங்கெல்லாம் செல்வான்.

பதில் ; மக்கா, மதீனா,தூர் சீனா மலை, பைத்துல்

முகத்தஸ் ஆகிய நான்கு இடங்களைத்

தவிர உலகின் அனைத்து பகுதிகளுக்கும் அவன் செல்வான்.

கேள்வி : அவன் என்னென்ன அதிசயங்களை வித்தைகளை மக்களுக்கு மத்தியில் செய்து காட்டுவான்.

1. பொய்யான சுவனம் நரகம் வைத்திருப்பான் .

2. சுவையான நீர் நதிகளும் நெருப்பு

நதிகளும் வைத்திருப்பான் .

3. மலை போன்ற ரொட்டிகளை

(உணவுப்பொருட்களை) வைத்திருப்பான்.

4. மழை பொழிய வைப்பான்.

5. பிறவிக் குருடு மற்றும்

வெண்குஷ்ட நோய்களை குணப்படுத்துவான்.

6. ஒருவனை ஒரு முறை மட்டும்

கொன்று விட்டு மீண்டும் உயிர்ப்பிப்பான்(மறுமுறை

செய்ய இயலாது)

7. மேய செல்லும் கால்நடைகளை ஒரே

பகலில்

கொழுக்க வைப்பான்.

8. பூமியில் புதையல் உள்ள இடங்களை

அறிந்திருப்பான்.

கேள்வி : அவன் என்ன கொள்கை உடையவன்.

பதில் : அவனது கொள்கை தானே இறைவன்

என வாதிட்டு, மக்களை ஈமான் கொள்ளச்

செய்வான்.

கேள்வி அவன் எங்கே எப்போது இறப்பான்.

பதில் : அவனது மரணம் இஸ்ரேலின் தலைநகரான

டெல்அவிவ்வுக்கு அருகில் உள்ள

லுத்து என்னும் இடத்தில் வைத்து

மர்யம் (அலை) அவர்களின் மகன் ஈஸா நபி அலை

அவர்கள் அவனைக் கொள்வார்கள்.

அல்லாஹ் நம் அனைவரையும் தஜ்ஜாலின் தீங்கிலிருந்து பாதுகாப்பானாக நமது ஈமானை உறுதியானதாக அல்லாஹ் ஆக்குவானாக சோதனையான காலத்தை விட்டு அல்லாஹ் நம்மை அனைவரையும் பாதுகாப்பானாக.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக