வரலாறு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வரலாறு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 9 ஏப்ரல், 2026

ஒற்றுமை உம்மத்தின் உயிர்நாடி”

 


“ஒற்றுமை உம்மத்தின் உயிர்நாடி”


الْحَمْدُ لِلَّهِ الَّذِي هَدَانَا لِلْإِيمَانِ، وَجَعَلَنَا مِنْ أُمَّةِ سَيِّدِ الْأَنَامِ. نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ وَنَسْتَغْفِرُهُ، وَنَعُوذُ بِاللَّهِ مِنْ شُرُورِ أَنْفُسِنَا وَمِنْ سَيِّئَاتِ أَعْمَالِنَا.

قال الله تعالى في القرآن العظيم بسم الله الرحمن الرحيم وَاعْتَصِمُوا بِحَبْلِ اللَّهِ جَمِيعًا وَلَا تَفَرَّقُوا 

قال رسول الله صلى الله عليه وسلم لَا يَحِلُّ لِمُسْلِمٍ أَنْ يَهْجُرَ أَخَاهُ فَوْقَ ثَلَاثِ لَيَالٍ


அல்லாஹ்வின் நல்லடியார்களே ! இன்று நாம் வாழக்கூடிய சூழலை சற்று நிதானமாகச் சிந்தித்துப் பாருங்கள். 

காலையில் கண்விழித்து இரவு உறங்கச் செல்லும் வரை, செய்தித்தாள்களைத் திறந்தாலும் சரி, சமூக ஊடகங்களைப் பார்த்தாலும் சரி அல்லது நம்முடைய தெருக்களில் இறங்கி நடந்தாலும் சரி... எங்கு பார்த்தாலும் சண்டை, சச்சரவு, ஒருவரை ஒருவர் வீழ்த்தத் துடிக்கும் குரோத மனப்பான்மை - இதுதான் இன்று எங்கும் நிறைந்து கிடக்கிறது.

வியாழன், 12 பிப்ரவரி, 2026

தராவீஹ் தொழுகை தஸ்பீஹ்.


தஸ்பீஹ் தொழுகை (ஷாஃபி )

 


*முந்நூறு தஸ்பீஹ்களை நான்கு ரக்அத்துகள் இரண்டு ஸலாமில் (இரண்டு இரண்டு ரக்அத்துகளாக) குறிப்பிட்ட முறையில் தொழுவதுதான் தஸ்பீஹ் தொழுகையாகும்.*



*தினமும் தொழுகுங்கள் இயலாவிட்டால் வாரம் ஒரு முறை தொழுவீராக!* 


*ஒரு வாரத்தில் ஒரு முறை தொழ இயலாவிட்டால் ஒரு மாதத்தில் ஒரு தடவை தொழுவீராக!' இவ்வாறு சொல்லிக் கொண்டே வந்து ஒரு வருடத்தில் ஒரு தடவை செய்யுமாறு கூறினார்கள்.*

புதன், 29 ஜனவரி, 2025

சந்தூக்.

 


ஃபாத்திமா ரழியழ்ழாஹு அன்ஹா அவர்கள் ஸக்கராத்தில் இருக்கிறார்கள். அன்னாரின் நெருங்கிய தோழி அஸ்மா பின்த் உமைஸ் ரழியழ்ழாஹு அன்ஹா அவர்கள் அருகே அமர்ந்து ஆறுதல் கூறிக் கொண்டிருக்கிறார்கள்.

செவ்வாய், 28 ஜனவரி, 2025

அஹ்மத் முஹம்மத்

 


ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்.. 


நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு ஏராளமான பெயர்கள் உண்டு. 

அதில் சிலது குர்ஆனிலும், 

ஹதீஸிலும் வந்துள்ளது. 

மற்று சிலது பண்டைய கால அறிஞர்களின் நூல்களில் காணக்கூடியவையாகும்.

சனி, 11 ஜனவரி, 2025

உணரப்படாத தண்டனையும் பாக்கியமும்…


மனிதன் சுவையான உணவையும், கவரும் ஆடையையும் சொகுசான இருப்பிடத்தையும் மிகவும் நேசிக்கிறான். இதைச் சிறந்த இன்பங்களாகக் கருதுகிறான். ஆனால் இவையெல்லாம் நமக்கு இன்பமாக இருக்க வேண்டும் என்றால் இன்னொரு பாக்கியத்தை நாம் அவசியம் பெற்றிருக்க வேண்டும் நம்மைச் சுற்றி இருப்பவர்களின் அன்பும் அரவணைப்பும் தான் அந்தப் பாக்கியம்.

சனி, 26 அக்டோபர், 2024

நம்பிக்கையே வாழ்க்கை.

நம்பிக்கையின் அடிப்படையில் தான் மனித வாழ்வு இயங்கிக் கொண்டிருக் கிறது. இரண விஷயத்திலும் நம்பிக்கை முக்கிய பங்கை வகிக்கிறது. யானைக்கு தும் பிக்கை எவ்வளவு முக்கியமோ மனிதனுக்கு நம்பிக்கை அதை விட முக்கியம். அது இறை நம்பிக்கையாக பரிணமிக்கின்ற போது மனித வாழ்வு இலங்கத் துவங்குகிறது.

திங்கள், 1 ஜூலை, 2024

குர்பானியின் சட்டங்கள்.

 


*( உழ்ஹிய்யா )குர்பானியின் சட்டங்கள்*:  

         # *ஷாஃபிஈ - ஹனஃபி* #

===========================


       உழ்ஹிய்யா *சுன்னத்தா* ? *வாஜிபா* ?


       ஷாஃபிஈ மத்ஹப் : *சுன்னத் முஅக்கதா* 

    ( வலியுறுத்தப்பட்ட சுன்னத் ) 


       ஹனஃபி மத்ஹப் : *வாஜிப்*

            (கடமை)

ஞாயிறு, 30 ஜூன், 2024

கிரகணத் தொழுகை முறை.

 

*கிரகணமும் கிரகணத் தொழுகையும்*

######################₹₹₹₹₹₹₹₹#

*சந்திர, சூரிய கிரகணம் என்றால் என்ன?*
-----------------------------------------------------------

சந்திரனும் பூமியம் தன்னைத் தானே சுற்றுவதுடன் சூரியனைச் சுற்றுகின்றன.

 அவ்வாறு சுற்றும்போது சூரியனுக்கும் சந்திரனுக்கும் நடுவே பூமி வரும்போது, பூமியின் நிழல் சந்திரன்மீது படும்.

டியூப் லைட்டுக்குக் கீழே நாம் அமர்ந்து படிக்கும்போது வெளிச்சம் நம் தலையில் பட்டு தலையின் நிழல் புத்தகத்தில் படுவதை இதற்கு எடுத்துக்காட்டாகச் சொல்லலாம்.

அதாவது சந்திரன், பூமியின் பின்னால் கடந்து செல்லும்போது பூமியானது சூரியனின் கதிர்களைச் சந்திரன்மீது படுவதிலிருந்து மறைத்துவிடும்.

சனி, 29 ஜூன், 2024

குடிகார கவிஞன்.

 

அபு நவாஸ் என்பவன் அப்பாஸிய பேரரசு காலத்தில் வாழ்ந்து வந்த, ஒரு குடிகார கவிஞனாவான். மதுவுக்கு அடிமைப்பட்டு 

மானக்கேடான கவிதைகளை பாடி வந்ததால் குடிகார கவிஞன் என்று அழைக்கப்பட்டான்.


அவன் பாடியதாக சொல்லப்படும் 

சில கவிதை வரிகளில்...

வெள்ளி, 30 ஜூன், 2023

*ஸஜ்தா திலாவத் பற்றிய விளக்கம்*

 


*ஸஜ்தா திலாவத் பற்றிய விளக்கம்*


*الجواب بعون الله الملك الوهاب 👇*


தொழுகையிலும் தொழுகைக்கு வெளியிலும் குர்ஆனின் ஒரு சில குறிப்பிட்ட வசனங்களை ஓதும் போது ஸஜ்தா செய்கின்றோம். 


இதை ஸஜ்தா திலாவத் என்றழைக்கின்றோம்.

குர்பானியின் சட்டங்கள்.

*( உழ்ஹிய்யா )குர்பானியின் சட்டங்கள்*:  

         # *ஷாஃபிஈ - ஹனஃபி* #

===========================

       உழ்ஹிய்யா *சுன்னத்தா* ? *வாஜிபா* ?


       ஷாஃபிஈ மத்ஹப் : *சுன்னத் முஅக்கதா* 

    ( வலியுறுத்தப்பட்ட சுன்னத் ) 


       ஹனஃபி மத்ஹப் : *வாஜிப்*

            (கடமை)


       ஷாஃபிஈ மத்ஹபில் *யாருக்கு சுன்னத்?*

       பெருநாள் தினத்தன்று ஒருவருக்கு தனக்கும் தன் பொறுப்பில் உள்ளவர்களுக்கும் உணவு மற்றும் உடைக்குப் போக வசதியிருந்தால் *உழ்ஹிய்யா கொடுப்பது சுன்னத்து*.

       ( பொறுப்பில் உள்ளவர்கள் ஸ: மனைவி ,பிள்ளைகள் மற்றும்  பெற்றோர். )

புதன், 30 டிசம்பர், 2015

பாத்திமா நாயகியின்(ரழியல்லாஹூ அன்ஹா )





ஒரு நாள் அண்ணல் நபி ஸல்லல்லாஹூஅலைஹிவ ஸல்லம் அவர்கள் தமது அருமை மகளார் பாத்திமா (ரழியல்லாஹூ அன்ஹா ) அவர்கள் வீட்டுற்கு வந்தார்கள். வீட்டில் பாத்திமா( ரழியல்லாஹூ அன்ஹா ) அவர்கள் சோகமாக காணப்பட்டார்கள். துடிதுடித்துப்போன நபி ஸல்லல்லாஹூஅலைஹிவ ஸல்லம் அவர்கள் எனதருமை மகளே! ஏன்  சோகமாக உள்ளாய்?       என்ன நடந்து விட்டது? சொல்லம்மா என்று  கேட்டார்கள்.

செவ்வாய், 30 டிசம்பர், 2014

அண்ணல் நபி ஸல் அவர்களின் அழகிய பதில்.







அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் அடிமையாயிருந்த ஸவ்கான் (ரலி) அவர்கள் கூறியதாவது.


ஒரு நாள் நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அருகில் நின்று கொண்டிருந்தேன். அப்போது யூத அறிஞர் ஒருவர் வந்து முஹம்மதே...! அஸ்ஸலாமு அலைக்க..! என்று கூறினார். உடனே நான் அவரை பிடித்து ஒரு தள்ளு தள்ளினேன். அவர் நிலை தடுமாறி விழப்போனார். அவர் ஏன் என்னை தள்ளுகிறாய்..? என்று கேட்டார்.

வியாழன், 25 டிசம்பர், 2014

சமுதாய காவலர் சர்தார் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்



لقد جاءكم رسول من انفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رءوف رحيم




இறை நம்பிக்கையாளர்களே... நிச்சயமாக உஙகளிலிருந்தே ஒரு தூதர் உங்களிடம் வந்திருக்கிறார். நீங்கள் துன்பத்திற்குள்ளாகி விட்டால் அது அவருக்கு மிக்க வருத்தத்தை கொடுக்கிறது. அன்றி உங் (கள் நன்மைக) ளையே பெரிதும் விரும்புகிறார். இன்னும் இறை நம்பிக்கையாளார்கள் மீது மிக்க அன்பும், இரக்கமும் உடையோராகவும் இருக்கிறார்.
                                         ( திருக்குர்ஆன். 9-128.)

வெள்ளி, 21 நவம்பர், 2014

கடனில் பேணுதல்







ஹழ்ரத் அபூஹுரைரா ரலி அவர்கள் கூறுகிறார்கள்.
பனூ இஸ்ராயிலின் சந்ததியினரில் ஒருவர் மற்றொருவரிடம் ஆயிரம் பொற்காசுகள் கடன் கேட்டார். அதற்கு அவர் சாட்சிக்காக எவரையாவது அழைத்து வாரும். நான் அவரை சாட்சியாக்கி பணமே தருகிறேன் எனக்கூறினார். அதற்கு (கடன் கேட்பவர்) அல்லாஹ் சாட்சியாக போதுமானவன் என்று கூறினார்.

வியாழன், 6 பிப்ரவரி, 2014

வலிமார்களின் வழிகாட்டுதல்



இப்ராஹிம் இப்னு அத்ஹம் ரஹ் அறிவிக்கிறார்கள்.


நான் காடு வனங்களில் சுற்றித் திரிகையில் ஜபல் லுப்னா என்ற மலையில் இருந்த வலிமார்களை கண்டு அவர்களுடன் சேர்ந்திருந்தேன். அந்த வலிமார்கள் என்னிடம் நான்கு உபதேசம் செய்து அந்நான்கினையும் மக்களுக்கு அறிவிக்கும் படி சொன்னார்கள்.

வெள்ளி, 1 நவம்பர், 2013

அபூபக்ர் அஸ்ஸித்தீக் (ரலி) அவர் களின் சிறப்புகள் !!



 அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: அபூபக்ர் (ரலி) அவர்கள் என்னிடம் கூறினார்கள்: நாங்கள் (இருவரும் "ஸவ்ர்எனும்) குகையில் (ஒளிந்துகொண்டு) இருந்த போது, (எங்களைத் தேடிக்கொண்டிருந்த) இணைவைப்பாளர்களின் கால் பாதங்களை எங்கள் தலைக்கு அருகில் நான் கண்டேன். உடனே நான், "அல்லாஹ்வின் தூதரே! இவர்களில் ஒருவன் தன் கால் பாதங்களைக் கண்டால் அவற்றுக்குக் கீழே (ஒளிந்திருக்கும்) நம்மைப் பார்த்துவிடுவான்'' என்று (அச்சத்து டன்) சொன்னேன்.

வியாழன், 7 ஜூன், 2012

மனவளம் மிகுந்த வள்ளல்!



தோட்டத்துக்குள் நுழைந்தது ஒரு நாய். காவலுக்கு உள்ளே நின்றிருந்த கருநிற அடிமையின் கண்களும் கவனித்தன அந் நாயை. ஆனாலும் அதனை விரட்டியடிக்கவில்லை அந்தக் காவலாளி. ஒட்டி உலர்ந்த அதன் வயிறும், வாடிச் சோர்ந்திருந்த முகமும் பார்க்கப் பரிதாபகரமாயிருந்தன.

திங்கள், 4 ஜூன், 2012

அவர்கள் எங்கே......நாமெங்கே.....?




முயலை விரட்டும் வேட்டை நாய்கள் போல். விரன்டோடும் அந்த குரைஷிக் காபிர்களில் ஓருவனை தடுத்து நிறுத்தினான் மற்றவன்...எங்கே ஓடுகின்றீர்கள்....?  மக்காவின் எல்லைக்கு...!  ஏன் நீயும் வாயேன் பங்கு போட்டுக் கொள்ளலாம். ஓடிக் கொண்டிருந்தவன் சொல்லி விட்டு மீண்டும் ஓடத் துவங்கினான்.