“ஒற்றுமை உம்மத்தின் உயிர்நாடி”
الْحَمْدُ لِلَّهِ الَّذِي هَدَانَا لِلْإِيمَانِ، وَجَعَلَنَا مِنْ أُمَّةِ سَيِّدِ الْأَنَامِ. نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ وَنَسْتَغْفِرُهُ، وَنَعُوذُ بِاللَّهِ مِنْ شُرُورِ أَنْفُسِنَا وَمِنْ سَيِّئَاتِ أَعْمَالِنَا.
قال الله تعالى في القرآن العظيم بسم الله الرحمن الرحيم وَاعْتَصِمُوا بِحَبْلِ اللَّهِ جَمِيعًا وَلَا تَفَرَّقُوا
قال رسول الله صلى الله عليه وسلم لَا يَحِلُّ لِمُسْلِمٍ أَنْ يَهْجُرَ أَخَاهُ فَوْقَ ثَلَاثِ لَيَالٍ
அல்லாஹ்வின் நல்லடியார்களே ! இன்று நாம் வாழக்கூடிய சூழலை சற்று நிதானமாகச் சிந்தித்துப் பாருங்கள்.
காலையில் கண்விழித்து இரவு உறங்கச் செல்லும் வரை, செய்தித்தாள்களைத் திறந்தாலும் சரி, சமூக ஊடகங்களைப் பார்த்தாலும் சரி அல்லது நம்முடைய தெருக்களில் இறங்கி நடந்தாலும் சரி... எங்கு பார்த்தாலும் சண்டை, சச்சரவு, ஒருவரை ஒருவர் வீழ்த்தத் துடிக்கும் குரோத மனப்பான்மை - இதுதான் இன்று எங்கும் நிறைந்து கிடக்கிறது.













