திங்கள், 30 செப்டம்பர், 2024

நன்றி Thanks சொல்லலாமா..?

உ தவிக்கு நன்றி செலுத்துவது மனிதனுடைய இயற்கை குணம். ஆனால், இன்று செய்யும் உதவிக்கு நன்றி தெரிவிக்காவிட்டா லும், அதைப் பற்றி குறைகூறாமல் இருந்தாலாவது பரவாயில்லை என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது.


மனிதனிடமிருந்து நன்றி விசுவாசம் எடுபட்டுப்போய்விட்டதால் நன்றியுள்ள பிராணி நாய்' என்று பாடம் சொல்லிக்கொடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். நன்றியுணர்வில் எல்லோருமே மனிதனைவிட மிருகத்திற்கு முதலிடம் கொடுத்திருப்பதுதான் நடைமுறை.


அமெரிக்கர்களுக்கு நன்றி:


குழந்தைகள் தினம். ஆசிரியர் தினம், எய்ட்ஸ் ஒழிப்புதினம். இவ்வாறு ஒவ்வொன்றுக்கும் ஒரு தினத்தை உண்டாக்கி வைத்திருப்போர், அமெரிக்கா வில் ஒவ்வொரு நவம்பர் மாதத்தின் நான்காவது வியாழக்கிழமையை Thanks Giving Day நன்றி தெரிவிக்கும் தினமாக கொண்டாடிவருகின்றனர்.


கடந்த ஆண்டுகளில், நன்றி தெரிவிக்கும் தினத்தில் அமெரிக்க அதிபர் இரகசியமாக ஈராக் சென்று அமெரிக்க இராணுவத்திற்கு நன்றி தெரிவித்து விட்டு வந்தார். ஆனால், இந்த ஆண்டின் நன்றி தெரிவிக்கும் தினத்தில் முழு உலகமும் சேர்ந்து அமெரிக்க மக்களுக்கு நன்றி சொல்லிக்கொண்டி ருக்கிறது.


உலக அமைதிக்கு அச்சுறுத்தலாக இருப்பவர்கள் யார். யார் என்று எடுக்கப்பட்ட ஒரு கருத்துக் கணிப்பில் இரண்டாம் (முதல்) இடத்தைப் பிடித்தவர் ஜார்ஜ் புஷ், உலகத்தின் போலீஸ்காரர்' என்ற கற்பனையில் ஈராக்கை அடுத்து அவரது இலக்கு ஈரானா? வடகொரியாவா என்றெல்லாம் கேள்விகள் எழுப்பிய உலக ஊடகங்கள், இப்போது புஷ் சர்வதேச தலைவர் என்ற அந்தஸ்தை இழந்துவிட்டார். அதிகாரத்தை இழந்து பொறுப்பற்றவராகிவிட்டார்' என்கின்றன.


ஏற்கனவே அமெரிக்க பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து முதலாளித்து வத்தின் அஸ்திவாரம் ஆடிப்போயுள்ளது. இந்நிலையில் சதாமுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட மறுநாள் நடந்த தேர்தலில் அப்பாவி முஸ்லிம் களை அநியாயமாக கொன்றுகுவித்த புஷ்ஷுக்கு மரண அடி கொடுத்திருக் கிறார்கள் அமெரிக்க மக்கள். புஷ்ஷின் சிறகுகளை வெட்டிவிட்ட அமெரிக்க மக்கள் உண்மையிலேயே நன்றிக்குரியவர்கள். பாரம்பர்யமிக்க பிரிட்டிஷ் பத்திரிகையான கார்டியன்' அமெரிக்கர்களை பாராட்டி 'தேங்க்யூ அமெரிக்கா' என தலையங்கம் எழுதியுள்ளது.


நன்றி செலுத்தும் விதம்


இஸ்லாத்தின் பார்வையில் 'நன்றி' என்பது ஒரு தினத்தோடு மட்டுமல்ல மனித வாழ்க்கையின் ஒவ்வொரு மணித் துளிகளோடும் சம்பந்தப்பட்டிருக் கிறது. இறைவேதத்துக்கு இணையான இறைபாக்கியம் வேறில்லை என்பதால், நோன்பின் மூலம் குர்ஆன் அருளப்பெற்ற காலத்தில் 'நன்றி செலுத்துவதை மார்க்கக் கடமையாக்கி உள்ளது இஸ்லாம்.


விண்ணையும் மண்ணையும் மனிதனுக்காகவே இயங்கவைத்த அனைத் துலகங்களின் இரட்சகனுக்கு நன்றி தெரிவிப்பதற்காக, 'அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன் இந்த அண்ட சராசரத்தைப் படைத்து பராமரிக்கக்கூடிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்" என்று கூறுவதை ஒவ்வொரு தொழுகை யிலும் அவசியமாக்கப்பட்டுள்ளது.


எவரேனும் ஒருவருக்கு கொடை வழங்கப்பட்டால், வசதியிருப்பின் அவரும் கொடையளித்தவருக்கு பகரமாக தானும் வழங்கட்டும். அப்படியில் லையானால், அவரை மனதார புகழட்டும்" என்றும், மற்றோர் அறிவிப்பில், உதவியவருக்கு ஜஸாக்கல்லாஹு கைரா - பகரத்தை வழங்குவானாக என்று கூறி விட்டால் அவரைப் புகழ வேண்டிய G அளவுக்கு புகழ்ந்தவராகிவிடுகிறார்' என்றும் நபி (ஸல்) அவர்கள் கூறினார் கள். (திர்மிதீ) (ஒழுங்காக)


அல்லாஹ் உங்களுக்கு சிறந்த


அப்துல்லாஹ் இப்னு அபீரபீஆவி டம் ஒரு முறை நபி (ஸல்) அவர்கள் கடன் வாங்கியிருந்தார்கள். கடளைத் திருப்பிச் செலுத்தும்போது. உங்களுக் கும் உங்களுடைய குடும்பத்திலும்


நிறைவேற்றுவதும் புகழ்வதும்தான் கடன் கொடுத்தவருக்கு செய்யும் பிரதி உபகாரம் என்று கூறினார்கள்.



செல்வத்திலும் அல்லாஹ் அருள்வளம் (பரக்கத்) அளிப்பாளாக' என்று துஆச் செய்துவிட்டு (ஒழுங்காக) நிறைவேற்றுவதும் புகழ்வதும்தான் கடன் கொடுத்தவருக்கு செய்யும் பிரதி உபகாரம் என்று கூறினார்கள்.


இந்தக் காலத்தில் கடன் கொடுத்தவர், 'தன்னைப் பாராட்டாவிட்டாலும் பரவாயில்லை, வாங்கிய கடனை உருப்படியாக திருப்பிக் கொடுத்துவிட்டால். நானே உன்னைப் பாராட்டுகிறேன்" என்ற நிலைதான் உள்ளது.


உதவிக்கு தகுந்த நன்றி


செய்யப்படும் உதவியின் முக்கியத்துவம் மற்றும் சிரமத்திற்கு தகுந்தவாறு நன்றியும் அமைய வேண்டும். நபி (ஸல்) அவர்கள் சுய தேவையை நிறை வேற்றுவதற்காக வெளியே சென்றிருந்தார்கள். திரும்பி வருவதற்குள், இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் உளூச் செய்வதற்கு தண்ணீர் எடுத்துவைத்தார்கள். நபி (ஸல்) அவர்கள் வந்து, இந்த தண்ணீரை வைத்தது யார்? என்று வினவி னார்கள்.'

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள்தான் வைத்தார்கள்' என்று தெரிவிக்கப் பட்டதும், யா அல்லாஹ்! அவருக்கு மார்க்க விஷயத்தில் நல்ல விளக்கத் தைக் கொடுப்பாயாக!" என்று துஆச் செய்தார்கள். இங்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் உதவி சாதாரணமானதுதான்.


ஆனால், நபியவர்களின் நன்றியுணர்வில் வெளிப்பட்ட பிரார்த்தனையோ மிகவும் உயர்ந்தது. ஏனெனில், எந்த நேரத்தில் எந்த வேலையை செய்ய வேண்டுமென்பதை யாரும் சொல்லாமல் தாங்களாகவே விளங்கி தண்ணீர் எடுத்து வைத்திருந்தார்கள்.


செய்த காரியம் சாதாரணமாக இருந்தாலும், அதற்காக செய்த சிந்தனை பாராட்டுக்குரியது. எனவேதான், நபி (ஸல்) அவர்கள் 'இந்த விளக்கம் மார்க்க விஷயத்திலும் பொங்கி வழியட்டும்" என்று பிரார்த்தனை செய்தார்கள்.


நபியவர்களின் தாடியிலிருந்த ஒரு பொருளை அபூஅய்யூப் அல்அன்ஸாரீ (ரலி) அவர்கள் தட்டிவிட்டதற்காக நீங்கள் வெறுக்கும் காரியத்தை அல்லாஹ் உங்களைவிட்டு நீக்குவானாக' என்று பிரார்த்தித் தார்கள். இப்படி சின்னத் சின்ன உதவிக்கும் உடனடி நன்றி தெரிவிக்கும் பழக்கத்தை நபி (ஸல்) அவர்கள் நமக்கு கற்றுத் தந்துள்ளார்கள்.



தேங்க்ஸ் (THANKS] சொல்லலாமா?


இன்று எல்லா இடங்களிலும் ஆங்கில வார்த்தைகளை உபயோகிப்பது தான் நாகரீகமாக கருதப்படுகிறது. நாம் பேசுவதில் பாதி வார்த்தை ஆங்கில கலப்புடன்தான் இருக்கிறது. 'கக்கூஸ்' என்பதைவிட டாய்லட் என்று சொல்லி விட்டால் புனிதமான இடத்திற்கு சென்றுவந்ததாக நினைப்பு.


எந்த மொழியின் மீதும் நமக்கு வெறுப்பில்லை. ஆனால், குர்ஆனுடைய மொழியை விரும்புவது இறைநம்பிக்கையாளரின் பண்பாடு. எனவே, 'தேங்க்ஸ்' என்று சொல்வதைவிட நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்த கருத்துச் செறிவுள்ள துஆவாகிய 'ஜஸாக்கல்லாஹு கைரா' என்று அரபியிலேயே சொல்வதை பரவலாக்க வேண்டும். அதையே கண்ணியமானதாகவும் “ நாகரீகமானதாகவும் கருதும் மனோ நிலை நம்மவர்களிடையே உருவாக வேண்டும். "மக்களுக்கு நன்றி செலுத்தாதவன் அல்லாஹ்வுக்கு நன்றி


நன்றி மறப்பது... தர்மம் செய்யுங்கள், அதிகமாக பாவமன்னிப்பு கோருங்கள். ஏனெனில், உங்களை நரகவாசிகளில் அதிகமாகப் பார்த்தேன்" என்று பெண்களை நோக்கி நபி (ஸல்) அவர்கள் கூறிய செலுத்தியவனாக மாட்டான்" என்று எச்சரித்தார்கள். போது, 'அதற்கு காரணம் என்ன?" என்று புத்திக்கூர்மையுள்ள ஒரு பெண் கேட்டார். நீங்கள் அதிகமாக சாபமிடுகிறீர்கள். கணவனிடம் நன்றிகெட்ட வர்களாக நடந்துகொள்கிறீர்கள் என்று நபி (ஸல்) அவர்கள் காரணம் கூறினார்கள்.


நன்றி மறப்பது நரகவாசியாக ஆக்கிவிடுமளவுக்கு கொடூரமானது. ஏளெனில், கணவனுக்கு நன்றி செலுத்தாதவர்கள் அல்லாஹ்வின் அருட் கொடைக்கு எப்படி நன்றி செலுத்துவார்கள் எனவேதான், நபி (ஸல்) அவர்கள். மக்களுக்கு நன்றி செலுத்தாதவன் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தியவளாக மாட்டான்" என்று எச்சரித்தார்கள்.


மெளலவி, எஸ்.ஏ. காஜா நிஜாமுத்தீன் யூசுஃபி,

திண்டுக்கல் -2.


மனாருல் ஹுதா 2006 டிசம்பர் இதழிலிருந்து.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக