செவ்வாய், 24 செப்டம்பர், 2024

கேள்வி பதில் பாகம்.8

 


முஹம்மது_றஸூலுல்லாஹ்

              #வினா_விடை.

                  #பாகம்_8


176 : கதீஜா அம்மையார் அவர்களின் முந்தைய கணவர்களின் பெயர்கள் என்ன?


*1 : அபூ ஹாலா பின் ஸுராரா*

*2 :அதீக் பின் ஆயித்*


177 : கதீஜா அம்மையார் அவர்கள் உயிருடன் இருந்த காலத்தில் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் வேறு திருமணம் செய்தார்களா?


*கதீஜா அம்மையார் அவர்கள் உயிருடன் இருந்த காலத்தில் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் வேறு திருமணம் செய்யவில்லை.அவர் மரணித்த பின்பே நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் வேறு திருமணம் செய்தார்கள்.*


178 : நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்கு அபுல் காஸிம் என்ற புனைப்

பெயர் ஏன் கூறப்படுகிறது?


*அன்னை கதீஜா அம்மையார் அவர்களுக்குபிறந்த முதல் குழந்தை காஸிம். இவருடன் இணைத்தே நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்கு " அபுல் காஸிம்" என்ற புனைப்பெயர் கூறப்படுகிறது.*


179 : கதீஜா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்கள் மூலமாக நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்கு பிறந்த பெண் மக்கள் எப்போது மரணமடைந்தார்கள்?


*ஜைனப், ருகைய்யா, உம்மு குல்ஸூம் (ரலியல்லாஹு அன்ஹும்) ஆகிய மூவரும் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் காலத்திலேயே மரணமடைந்தார்கள். நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின்மரணத்திற்கு பின் ஆறு மாதம் கழித்து அன்னை பாத்திமா பீவி அவர்கள் மரணமடைந்தார்கள்.* 


180 : கதீஜா பீவிக்கு ஜனாஸா தொழுகை நடைபெறவில்லை காரணம்?


*அன்று ஜனாஸா தொழுகை சட்ட ரீதியாக கடமையாக்கப்படவில்லை.*


181 : நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் குடும்பத்தினருக்கு என்ன சொல்லப்படும்?


   *அஹ்லு பைத்*


182 : முஹம்மது (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் பேரர்கள் யார்?


*1 : ஹஸன் (ரலியல்லாஹு அன்ஹு)*

*2 : ஹுஸைன் (ரலியல்லாஹு அன்ஹு)*


183 : முஹம்மது (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் கொள்ளு பேரர் பெயர் என்ன?


    *ஸைனுல் ஆபிதீன்*


184 : முஹம்மது (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் ஆண் மக்கள் யார்?


*1 : ஹழ்ரத் அப்துல்லா (ரலியல்லாஹு அன்ஹு)*


*2 :ஹழ்ரத் இப்ராஹிம் (ரலியல்லாஹு அன்ஹு)*


*3 : ஹழ்ரத் காஸிம் (ரலியல்லாஹு அன்ஹு)*


185 : நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுடைய குழந்தைகளில் முதலாவதாக பிறந்த பெண் குழந்தை யார்?


*ஸைனப் (ரலியல்லாஹு அன்ஹா) அவர்கள்*


186 : நபித்துவத்திற்கு பிறகு நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மக்காவில் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தார்கள்?


*சுமார் பதிமூன்று ஆண்டுகள் வாழ்ந்தார்கள்.*


187 : நபித்துவத்திற்கு பின் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மதீனாவில் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தார்கள்?


*சுமார் பத்து ஆண்டுகள்*


189 : ஹிஜ்ரத்தின் போது வழியில் எந்த பெண்மணியின் வீட்டில் பால் அருந்தி களைப்பாறிச் சென்றார்கள்.?


*உம்மு மஃபத் (ரலியல்லாஹு அன்ஹா) அவர்கள்.* 


190 : நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் அவைக் கவிஞர் யார்?


*ஹஸ்ஸான் இப்னு ஸாபித் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள்.*


191 : பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் முதல் முஅத்தின் யார்?


*பிலால் இப்னு ரபாஹ் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள்.*


192 : நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் குழந்தைகளில் இறுதியாக மரணமடைந்தவர் யார்?


*பாத்திமா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்கள். நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மரணமடைந்து ஆறு மாதம் கழித்து வஃபாத்தானார்கள்.*


193 : முஹம்மது (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் வளர்ப்பு மகனார் பெயர் என்ன?


 *ஹள்ரத் ஸைத் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள்.*


194 :முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்கு கல்வி ஞானம் பெருக இறைவன் கற்றுக் கொடுத்த துஆ எது?


*ரப்பி ஸித்னீ இல்மா! இறைவா எனக்கு கல்வி ஞானத்தை அதிகப்படுத்துவாயாக என்ற துஆவாகும்.*


195 : முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்கு எந்த போரில் பற்கள் உடைந்தன?


*உஹது போரில்*


196 : முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கடைசியாக செய்த ஹஜ்ஜுக்கு என்ன பெயர் சொல்லப்படும்?


*ஹஜ்ஜத்துல் விதா (விடை பெறும் ஹஜ்) என்று சொல்லப்படும்.*


197 :முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் போது மரணித்த மனைவி யார்?


*ஹழ்ரத் ஸைனப் (ரலியல்லாஹு அன்ஹா) அவர்கள்.*


198 : முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் திருக்குர்ஆனை கற்று பிறருக்கு கற்பித்து கொடுப்பவர் பற்றி எவ்விதம் புகழ்ந்தார்கள்?


*அவர்தான் உங்களில் சிறந்தவர் என்றார்கள்.*


199 : முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் எந்த மனைவியாரை அல்லாஹ்வின் கட்டளைப்படி திருமணம் செய்தார்கள்?


*அன்னை ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலியல்லாஹு அன்ஹா) அவர்கள்.*


200 : முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுடைய எந்த துணைவியாரை பரிசுத்தப்படுத்தி நூர் என்ற அத்தியாயத்தில் பத்து வசனங்கள் இறங்கியது?


*அன்னை ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்களை பரிசுத்தப்படுத்தி பத்து வசனங்கள் இறங்கியது.*


#ஆக்கம்.

M.#சிராஜுத்தீன்_அஹ்ஸனி.


#இயக்குனர்_

#மைமூன்_பப்ளிஷிங்_ஹவுஸ்.


#திருவிதாங்கோடு.


#குமரி_மாவட்டம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக