செவ்வாய், 30 டிசம்பர், 2014

அண்ணல் நபி ஸல் அவர்களின் அழகிய பதில்.







அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் அடிமையாயிருந்த ஸவ்கான் (ரலி) அவர்கள் கூறியதாவது.


ஒரு நாள் நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அருகில் நின்று கொண்டிருந்தேன். அப்போது யூத அறிஞர் ஒருவர் வந்து முஹம்மதே...! அஸ்ஸலாமு அலைக்க..! என்று கூறினார். உடனே நான் அவரை பிடித்து ஒரு தள்ளு தள்ளினேன். அவர் நிலை தடுமாறி விழப்போனார். அவர் ஏன் என்னை தள்ளுகிறாய்..? என்று கேட்டார்.

வியாழன், 25 டிசம்பர், 2014

சமுதாய காவலர் சர்தார் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்



لقد جاءكم رسول من انفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رءوف رحيم




இறை நம்பிக்கையாளர்களே... நிச்சயமாக உஙகளிலிருந்தே ஒரு தூதர் உங்களிடம் வந்திருக்கிறார். நீங்கள் துன்பத்திற்குள்ளாகி விட்டால் அது அவருக்கு மிக்க வருத்தத்தை கொடுக்கிறது. அன்றி உங் (கள் நன்மைக) ளையே பெரிதும் விரும்புகிறார். இன்னும் இறை நம்பிக்கையாளார்கள் மீது மிக்க அன்பும், இரக்கமும் உடையோராகவும் இருக்கிறார்.
                                         ( திருக்குர்ஆன். 9-128.)

செவ்வாய், 9 டிசம்பர், 2014

ஆடை அழுக்கிலும் பாடம் அறியலாம்





ஆடைகளில் அழுக்கு படியும். சிலர் அன்றாடம் தூய்மை செய்து அணிவர் , சிலர் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை தூய்மை செய்வர் , சிலர் வாரம் ஒருமுறை தூய்மை செய்வர்.

 
அன்றாடம் தூய்மை செய்யும் ஆடையில் அழுக்கு எளிதில் நீங்கிவிடும் . இரண்டு நாட்களுக்கு ஒருமுறை சலவை செய்கிற துணியில் அழுக்கு நீங்க சற்று கூடுதல் முயற்சி செய்ய வேண்டும் , வாரம் ஒருமுறை துவைத்தால் மிகவும் சிரமப்பட்டே அழுக்கை நீக்க முடியும் அளவுக்கு மீறி முயற்சி செய்தால் ஆடை கிழி யுமே தவிர அழுக்கு நீங்காது.

வெள்ளி, 21 நவம்பர், 2014

கடனில் பேணுதல்







ஹழ்ரத் அபூஹுரைரா ரலி அவர்கள் கூறுகிறார்கள்.
பனூ இஸ்ராயிலின் சந்ததியினரில் ஒருவர் மற்றொருவரிடம் ஆயிரம் பொற்காசுகள் கடன் கேட்டார். அதற்கு அவர் சாட்சிக்காக எவரையாவது அழைத்து வாரும். நான் அவரை சாட்சியாக்கி பணமே தருகிறேன் எனக்கூறினார். அதற்கு (கடன் கேட்பவர்) அல்லாஹ் சாட்சியாக போதுமானவன் என்று கூறினார்.

வியாழன், 18 செப்டம்பர், 2014

பகட்டு வாழ்க்கை...





இரண்டு பெண் நண்டுகள். நல்ல தோழிகள். ஆனால், இரண்டு பேரில் யார் சிறந்தவர் என்ற மனோபாவம் இருவருக்குமே உண்டு. அதில் ஒரு நண்டு அழகான, பலமான, திறமையான ஒரு ஆண் நண்டை காதலித்துக் கல்யாணம் செய்து கொண்டது. தன் தோழியை விட சிறப்பான ஒருவரை தேர்வு செய்து திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்பது இன்னொரு நண்டின் ஆசை.

வெள்ளி, 12 செப்டம்பர், 2014

இப்படி சொன்னா கல்யாணமாகி ஆறுமாதம் என்று அர்த்தம்.





1.கணவன்: என்னம்மா இத்தன தொட்டுக்க இருக்கும்போது இப்ப போய் சின்ன வெங்காயம் வெட்டி ஆம்லெட் போட்டுகிட்டு இருக்க வாம்மா வந்து உட்கார்.எவ்ளோதான் நீ செய்வ, வா சேர்ந்து சாப்பிடலாம்! 

ஞாயிறு, 10 ஆகஸ்ட், 2014

" காந்தமும் நெருப்பும் வழங்கும் பாடம் "





ஒரு சிலர் தான் எங்கு சேர்ந்து பழகுகிறார்களோ அதே இயல்பிற்கு ஏற்ப அப்படியே மாறிவிடுகின்றனர் . சிலர் தன்னைப் போல் பிறரை மாற்றுவார்களே ஒழிய பிறரைப் போல் தான் மாற மாட்டார்கள் . எந்த சூழலில் வாழ்ந்தாலும் எப்படிப் பட்டவர்களுடன் பழகினாலும் தன் இயல்பிலிருந்து சிறிதும் மாறாமல் அவர் அவராகவே இருப்பார் .