வியாழன், 18 செப்டம்பர், 2014

பகட்டு வாழ்க்கை...





இரண்டு பெண் நண்டுகள். நல்ல தோழிகள். ஆனால், இரண்டு பேரில் யார் சிறந்தவர் என்ற மனோபாவம் இருவருக்குமே உண்டு. அதில் ஒரு நண்டு அழகான, பலமான, திறமையான ஒரு ஆண் நண்டை காதலித்துக் கல்யாணம் செய்து கொண்டது. தன் தோழியை விட சிறப்பான ஒருவரை தேர்வு செய்து திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்பது இன்னொரு நண்டின் ஆசை.

வெள்ளி, 12 செப்டம்பர், 2014

இப்படி சொன்னா கல்யாணமாகி ஆறுமாதம் என்று அர்த்தம்.





1.கணவன்: என்னம்மா இத்தன தொட்டுக்க இருக்கும்போது இப்ப போய் சின்ன வெங்காயம் வெட்டி ஆம்லெட் போட்டுகிட்டு இருக்க வாம்மா வந்து உட்கார்.எவ்ளோதான் நீ செய்வ, வா சேர்ந்து சாப்பிடலாம்! 

ஞாயிறு, 10 ஆகஸ்ட், 2014

" காந்தமும் நெருப்பும் வழங்கும் பாடம் "





ஒரு சிலர் தான் எங்கு சேர்ந்து பழகுகிறார்களோ அதே இயல்பிற்கு ஏற்ப அப்படியே மாறிவிடுகின்றனர் . சிலர் தன்னைப் போல் பிறரை மாற்றுவார்களே ஒழிய பிறரைப் போல் தான் மாற மாட்டார்கள் . எந்த சூழலில் வாழ்ந்தாலும் எப்படிப் பட்டவர்களுடன் பழகினாலும் தன் இயல்பிலிருந்து சிறிதும் மாறாமல் அவர் அவராகவே இருப்பார் .

ஞாயிறு, 3 ஆகஸ்ட், 2014

அர்த்தமுள்ள கேள்விகளும்...... அற்புதமான பதில்களும்...




ஒரு கிராமவாசி நபி (ஸல்) அவர்களிடம் வந்து கேட்டார்கள். யாரசூல்ல்லாஹ் தங்களிடம் சில கேள்விகள் கேட்கலாமா ? என்றவுடன் நபியவர்கள் கேளுங்கள்என்றார்கள்.

வியாழன், 24 ஜூலை, 2014

மனித நேயம் வாழ்கிறது....!



அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி தஆலா வபரகாத்துஹு.
ஆரம்பமாக மின்னல் F.M நேயர்களாகிய உங்கள் அனைவருக்கும் ஈகை திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதில் மிகவும் மகிழ்சியடைகிறேன்.

புதன், 9 ஜூலை, 2014

குருவுக்கே போதித்த குதிரைக்காரன்



ஒரு குரு இருந்தார். முற்றும் துறந்தவர். எல்லாம் கற்றவர். அவரை பிரசங்கம் செய்ய ஒரு ஊரில் கூப்பிட்டிருந்தார்கள். கூட்டத்திற்கு ஆயிரம் பேர் வருவார்கள் எனச் சொன்னார்கள். குறிப்பிட்ட தேதியில் குருவும் அவ்வூருக்கு வந்தார்.அன்று நல்ல மழை. கூட்டத்திற்கு வந்தவர்களும் கலைந்து சென்று விட்டார்கள்.

புதன், 2 ஜூலை, 2014

பிரச்னைகளை ஆராயாமல் பயப்படக் கூடாது!



ஒரு பஸ் கண்டக்டர் இருந்தார்.. தினமும் அவருக்கு ஒரே ரூட் தான்.
ஒரு நாள் வழக்கமான பாதையில் பஸ் பயணித்துக் கொண்டிருந்தது.
நிறுத்தங்களில் நிறுத்தி பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்றது.. ஒரு நிறுத்தத்தில் முரட்டுத்தனமான மனிதன் ஒருவன் ஏறினான். பெரிய மீசையும் தடித்த உருவமுமாய் இருந்தவனைப் பார்த்த எல்லோரு க்குமே கொஞ்சம் அச்சமாய் தான் இருந்தது.
கண்டக்டர் அவனிடம் சென்று, “டிக்கெட்என்று கேட்டார். அவன் உடனே, “எனக்கு டிக்கெட் வேண்டாம்என்று சொல்லி சட்டென்று முகத்தை ஜன்னல் பக்கம் திருப்பிக் கொண்டான்.
ஏன் டிக்கெட் வேண்டாம்என்று கேட்க கண்டக்டருக்கு பயம், தள்ளி வந்து விட்டார்.
மறுநாளும் இதே கதை. எனக்கு டிக்கெட் வேண்டாம்என்று முறைத்தக் கொண்டோ சொல்லக் கண்டக்டர் வந்து விட்டார். இப்படியே ஒரு வாரம் கழிந்தது..
கண்டக்டருக்கு எரிச்சல் அதிகரித்தக் கொண்டே இருந்தது.. இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று எண்ணினார்.