செவ்வாய், 10 ஜனவரி, 2012

அறியாத சில விசயங்களை தெரிந்து கொள்வோம் வாங்க!


இரு கண்களுக்கு நடுவில் நெற்றிப் பொட்டில் அவ்வப்போது விரல்களால் அழுத்துவதால் நமக்கு நினைவாற்றல் அதிகரிக்கும். மறந்து போன விஷயங்களை ஞாபகத்துக்கு கொண்டுவர இது உதவும். இந்த இடத்தில்தான் நினைவாற்றலுக்கான அக்குப் புள்ளிகள் உள்ளன. இதனால்தான் மறந்துபோன விஷயங்களை நினைவுக்குக் கொண்டுவர நெற்றியில் விரல் வைத்து தட்டுகிறார்கள். இது முன்னோர்கள் வழியாக நமக்கும் வந்தது.

*வலது கைப்பழக்கம் உள்ளவர் என்றால் சாப்பிடும்போது வாயின் வலது புறத்தில்தான் உணவை மென்று சுவைத்துச் சாப்பிடுவார்கள். அதே சமயம் இடதுகைப் பழக்கம் உள்ளவர்கள் சாப்பிடும்போது வாயின் இடது புறத்தை உபயோகித்து உணவை ருசிப்பது வழக்கம்.

*வெங்காயம் உரிக்கும்போது நமக்கு கண்ணீர் வரும். காரணம் அதில் உள்ள அமிலத்தன்மை. வெங்காயத்தினை உரிக்கும்போது அதில் உள்ள அமிலம் வெளிப்பட்டு காற்றில் கரைந்து உரிப்பவர் மற்றும் அருகில் இருப்பவர் கண்களில் இருந்து கண்ணீரை வரவழைத்து விடுகிறது. வெங்காயம் உரிக்கும்போது சூயிங்கம் மென்றால் கண்களில் இருந்து கண்ணீர் வெளிவராது.

*உங்கள் நாக்கு இளம் சிவப்பு நிறத்தில் இருந்தால் உங்கள் நாக்கு பாக்டீரியா தொல்லையில்லாமல் சுத்தமாக இருக்கிறது என்று அர்த்தம். வெண்மை நிறத்தில் இருந்தால் பாக்டீரியா பாதிப்பு உள்ளது என்று பொருள்.

*வியப்பால் அவள் விழி விரிந்தது என்று கவிஞர்கள் கவிதை புனைவார்கள். விஞ்ஞான ரீதியில் இது உண்மை. அதாவது ஒரு மனிதன் மகிழ்ச்சியான ஒன்றை அல்லது ஆச்சர்யம் தரும் ஒன்றைப் பார்க்கும்போது அவனது கருவிழி 45 விழுக்காடு விரிவடைகிறது என்கின்றனர் விஞ்ஞானிகள்.

*கடலில் கிடைக்கும் சங்கை எடுத்து காதில் வைத்துக் கேட்டால் அதில் இருந்து அலை ஓசை சத்தம் வருவதுபோல கேட்கும். அதனை சிலர் கடல் அலையின் ஓசை என்று நினைப்பார்கள். ஆனால் உண்மை அதுவல்ல. காதுகளில் உள்ள ரத்தக் குழாயில் ரத்தம் பாய்ந்து செல்லும் சத்தம்தான் சங்கில் எதிரொலித்து நமக்கு கடலலை ஓசையாகக் கேட்கிறது.

*கேரள மாநிலம் நீலாம்பூர் என்னும் காடுகளில் ஆதிவாசி மக்களின் சில பிரிவினரில் வினோதமான பழக்கம் நிலவுகிறது. இவர்கள் பிறக்கும் குழந்தை களுக்கு உடனடியாக பெயர் வைத்துவிடுவதில்லை. 15 வருடங்கள் ஆன பிறகே பெயர் சூட்டுகிறார்கள். அதுவரை தங்களது குழந்தைகளை மோளே (மகள்), மோனே (மகன்) என்று மலையாளத்தில் அழைக்கி றார்கள். 15 வயதாகும்போது அந்தக் குழந்தையின் தந்தையின் கனவில் கடவுள் தோன்றி `இந்தப் பெயரை உன் குழந்தைக்கு வை' என்று சொல்வாராம். அதன் பிறகே பெயர் சூட்டும் படலம் நடக்கும்.

*ஆயிரக்கணக்கான சிட்டுக்குருவிகளை அறிவியல் ரீதியில் ஆராய்ச்சி செய்ததில் அவைகள் அனைத்தும் கசக்கும் சுபாவமுடைய வேப்பமரத்து இலை-குச்சிகளால் நேர்த்தியாக கட்டியிருப்பது கண்டறியப்பட்டது. மகத்தான மருத்துவ குணம் கொண்ட வேப்பிலையின் கசப்பான நெடிக்கு முட்டைகளையோ, குஞ்சுகளையோ வைரஸ் கிருமிகள் நெருங்குவது கிடையாது. ஆகவேதான் சிட்டுக்குருவிகள் வேப்பிலையால் கூடுகளை கட்டுகின்றன.

*நீரிலும் நிலத்திலும் வாழும் இயல்புடைய தவளைகள் தமது கண்களால் கேட்கவும் செய்கின்றன. தவளைகளின் கண்களே காதுகளாகவும் இயங்குகிறது. தவளைகளுக்கு அதனுடைய கண்களுக்குப் பின்புறம் மூளையிலிருந்து வரும் நுண்ணிய நரம்பு அமைந்துள்ளது. அதன் காதுகளின் பணியிணைச்செய்கிறது.

*கொடிய விஷத்தைக் கொண்ட தேள்கள் சேர்ந்தாற்போல் ஆறு மாதம் கூட உணவு உண்ணாமலே வாழக் கூடிய வல்லமை பெற்றது. விலங்கியல் ஆராய்ச்சியின் போது ஒரு தேள் 420 நாட்கள் எந்த வித ஆகாரமும் இல்லாமல் வாழ்ந்து சாதனை புரிந்தது.

*கண்கவர் நீலகிரி மலைக் காடுகளில் ஒரு வகை பச்சோந்தி வாழ்கிறது. இதனுடைய உடல் நீளம் 5 செ.மீட்டர் தான். இதில் ஒரு வியப்பான செய்தி என்னவென்றால், இதன் நாக்கின் நீளம் 1.25 மீட்டர். இதன் நாக்கு எப்போதும் சுருட்டிய நிலையிலேயே இருக்கும். இது ஒரு மரக்கிளையில் ஒய்யாரமாக உட்கார்ந்தபடியே தனது நீண்ட நாக்கினை நீட்டி மற்ற கிளைகளில் உள்ள புழு, பூச்சிகளை அதில் ஒட்ட வைத்து தின்றுவிடும்

*முதன் முதலில் நீர்மூழ்கி கப்பலுக்கான வரைபடத்தை உருவாக்கியவர் வில்லியம் போர்னே என்னும் இங்கிலாந்துக்காரர். இவர், 1578-ம் ஆண்டு நீர்மூழ்கி கப்பலுக்கான வரைபடத்தை வரைந்தார். எனினும் கார்னிலியூஸ் வான் டிரெப்பல் என்னும் நெதர்லாந்து நாட்டுக் காரர் 1620-ம் ஆண்டு முறையான நீர்மூழ்கிக் கப்பலை வடிவமைத்தவர். நீரில் மூழ்கக் கூடிய ஒரு படகைத் தயாரித்த அவர் அதில் பிராண வாயு கிடைப்பதற்காக நீண்ட குழாயை இணைத்திருந்தார். நீருக்குள் மூழ்கியிருப்பவர் துடுப்பு மூலம் படகை இயக்கவேண்டும். 12 படகோட்டிகளுடன் தான் வடிவமைத்த நீர்மூழ்கிக் கப்பலை அவர் லண்டன் தேம்ஸ் நதியில் இயக்கிக் காட்டினார். 3 மணி நேரம் இந்தக் கப்பல் நீருக்கடியில் இருந்தது.


*ராணுவத்திற்கான நீர்மூழ்கிக் கப்பலை 1776-ம் ஆண்டு டேவிட் புஷ்னல் என்னும் அமெரிக்கர் வடிவமைத்தார். எனினும் சகல வசதிகளுடனும் கூடிய முதல் நீர்மூழ்கிக் கப்பல் ஜான் பி.ஹாலண்ட் மற்றும் சைமன் லேக் என்னும் இருவர் 1890-ம் ஆண்டு ஒரே நேரத்தில் தயாரித்தனர். ஜானின் நீர்மூழ்கிக் கப்பலின் டிசைனை அமெரிக்காவும் சைமன் லேக்கின் வடிவமைத்ததை ரஷியா-ஜப்பான் நாடுகளும் ஏற்றுக்கொண்டு தயாரிக்க ஆரம்பித்தன.

*ஒரு மனிதன் தினமும் சராசரியாக ஒரு மணி நேரம் 6 நிமிடங்களை பயணத்தில் கழிக்கிறான். வருடத்திற்கு ஒவ்வொருவரும் சராசரியாக 12 ஆயிரம் கிலோ மீட்டர்கள் பயணம் செய்கிறார்கள்.உலக அளவில் 53 சதவீதம் பேர் கார்களிலும், 26 சதவீதம் பேர் பஸ்சிலும், 9 சதவீதம் பேர் ரெயிலிலும் இன்னொரு 9 சதவீதம் பேர் விமானங்களிலும் பயணிக்கிறார்கள். சைக்கிள் பயணம் வெறும் 3 சதவீதம்தான். 2050-ம் ஆண்டு அதிகவேக வாகனங்களின் எண்ணிக்கை பல்கிப் பெருகி விடும் என்பதால், அப்போது ஒரு நாளில் ஒருவர் பயணம் செய்யும் நேரம் 12 நிமிடங்களாகக் குறைந்து விடுமாம். அப்போது கார்களில் பயணம் செய்வோர் 35 சதவீதம் பேரும், பஸ்சில் 20 சதவீதம் பேரும் அதிகவேக வாகனங்களில் 41 சதவீதம் பேரும் ரெயிலில் 4 சதவீதம் பேரும் பயணம் செய்வார்கள் என்று மதிப்பிட்டிருக்கிறார்கள࠯?.

*உலகின் முதல் போக்குவரத்து சிக்னல் 1890-ம் ஆண்டு லண்டன் நகரில் பயன் படுத்தப் பட்டது. இதில் ஒரு ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால் அப்போது பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருளில் இயங்கும் வாகனங்கள் லண்டனில் எதுவும் கிடையாது. குதிரைகள் இழுத்துச் செல்லும் பஸ்கள் மட்டுமே இயங்கின. அமெரிக்காவில் 1890ம் ஆண்டு இறுதி வாக்கில் தான் கார்கள் அறிமுகமாயின. முதல் தானியங்கி போக்குவரத்து சிக்னல் ஓகியோ மாகாணத்தில் உள்ள கிளீவ்லாண்ட் நகரில் 1920-ம் ஆண்டு பொருத்தப்பட்டது.

*வங்கி முறையிலான கடன் கொடுக்கும் பழக்கம் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஏற்பட்டு விட்டது. பணக் கடன் வழங்கியது, கடனை அடைத்தது போன்றதற்கான ஆதார ரசீதுகள் 14-ம் நூற்றாண்டில் ஏற்பட்டதாகும். காகிதப் பணம் கடன் தருவது 17-ம் நூற்றாண்டில் வேகமாக பரவியது. தானியங்கி பணம் பட்டுவாடா செய்யும் எந்திரங்களில் பணம் எடுப்பதற்கு அட்டை வழங்குவது நமது நாட்டில் 2000-ம் ஆண்டுக்குப் பின்னர்தான் வேகமாக வளர்ச்சி கண்டது. எனினும் அமெரிக்காவில் 1951-ம் ஆண்டிலேயே பணம் எடுக்கும் அட்டைகள் புழக்கத்திற்கு வந்து விட்டன. டைனர்ஸ் கிளப் தனது உணவக வாடிக்கையாளர்கள் 200 பேருக்கு நிïயார்க் நகரில் உள்ள தங்களின் 27 உணவகங்களில் எங்கு வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்ளும் கிரடிட் கார்டுகளை வழங்கியது. காந்த பட்டைகளுடன் கூடிய கிரடிட் கார்டு 1970-ம் ஆண்டு புழக்கத்திற்கு வந்தது.

*வாலாட்டிக் குருவி எப்போதும் ஏன் வாலை ஆட்டிக் கொண்டே இருக்கிறது தெரியுமா?...

அது சுவாச உறுப்பாக பெற்றிருப்பது வாலைத்தான். எனவேதான் சுவாசிப்பதற்காக தனது வாலை இடைவிடாது ஆட்டிக் கொண்டே இருக்கிறது

வியாழன், 29 டிசம்பர், 2011

நயவஞ்சகர்களின் குணங்களும் தண்டனைகளும்



நயவஞ்சகர்களின் குணங்களும் தண்டனைகளும்


இனிமையாகப் பழகித் தீங்கு விளைவிப்பதையும், பழகிக் கெடுக்கும் சூழ்ச்சியையும் செய்பவரை நயவஞ்சகன் என்கிறோம். அரபி மொழியில் இந்த தீய செயல்கள் உள்ளவர்களை முனாஃபிக் என்று கூறுவர். இவர்கள் வெளித்தோற்றத்தில் முஸ்லிம்களைப் போன்று நடித்துக் கொண்டு, அந்தரங்கத்தில் மறுப்பாளனாக வாழ்பவர்கள்.

சனி, 17 டிசம்பர், 2011

மாபெரும் அடையாளங்கள்


மகளின் தயவில் தாய்

ஒரு பெண் தனது எஜமானியைப் பெற்றெடுத்தால் அது யுக முடிவு நாளின்
அடையாளங்களில் ஒன்றாகும் என்பது நபிமொழி.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 4777, 50

புதன், 14 டிசம்பர், 2011

சனியனைப் பிடிச்சு பனியனுக்குள்ள போட்டா...?

தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கி வேதாளத்தைத் தூக்கி இன்னோவாவில் போட்டு வண்டியை ஸ்டார்ட் செய்ய, ""நண்பா, ஒரு நல்ல டீ சாப்பிடணும்; வண்டிய நேரா "சீ மெரிடியன்' ஓட்டலுக்கு ஓட்டு, அங்க வெச்சு உனக்கு ஒரு கதை சொல்றேன்''என்றது வேதாளம். விக்கியின் இன்னோவா "சீ மெரிடியனை' நோக்கிச் சீறியது.

ஞாயிறு, 11 டிசம்பர், 2011

அம்மார் பின் யாஸிர் ரளியல்லாஹு அன்ஹு



தாயார் பெயர் சுமைய்யா ரளியல்லாஹு அன்ஹா தந்தை பெயர் யாஸிர் ரளியல்லாஹு அன்ஹு.

யாஸிர் ரளியல்லாஹு அன்ஹு தன் தொலைந்து விட்ட சகோதரரைத் தேடியலைந்து மக்கா வந்து சேர்கிறார். மக்ஸுமி கோத்திரத்தில் அடிமைப் பெண்ணாயிருந்த சுமையா ரளியல்லாஹு அன்ஹா அவர்களை அபூஹுதைஃபா அவர்கள் யாஸிர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு மனமுடித்து வைக்கிறார். இவர்களின் புதல்வரே அம்மார் ரளியல்லாஹு அன்ஹு.

புதன், 7 டிசம்பர், 2011

நலிவை ஏற்படுத்தும் நகைக்கடன்!



தமிழகத்தில் அண்மைக்காலமாக புற்றீசல்கள் போல தனியார் நிதி நிறுவனங்கள் முளைத்து வருகின்றன. இதில் முன்னணியில் இருப்பவை நகைக்கடன் வழங்கும் நிறுவனங்கள்தான். மற்ற மாநிலங்களை விட தமிழகத்தைக் குறி வைத்து இந்நிறுவனங்கள் களம் இறங்குகின்றன. காரணம், தமிழக மக்கள் கடன் தொல்லையில் சிக்கித் தவிக்கிறார்கள் என்பதாலோ என்னவோ?.
குறிப்பாக, நகைக்கடன் என்ற பெயரில் ஏழைகளையும், வறுமையில் வாடுபவர்களையும் இந்நிறுவனங்கள் பிழிந்து எடுத்து விடுகின்றன. இதில் வேதனையான விஷயம் என்னவென்றால், தமிழகத்தை ஒரு பொருட்டாகவே மதிக்காத கேரளத்தைச் சேர்ந்தவர்கள்தான் நகைக்கடனில் முதலிடத்தில் உள்ளனர்.
கிட்டத்தட்ட 100 ஆண்டுகள் பெருமை மிக்கவை என்ற பீடிகையுடன் இந்த வியாபாரத்தில் தந்திரமாக சில நிதி நிறுவனங்கள் கொடி நாட்டியுள்ளன. பெரும்பாலும் இந்த வங்கிகளில் நகைக்கடன் பெறுவதில் ஒன்றும் சிரமமே கிடையாது. காரணம், அத்தனை விரைவாக கைமேல் காசு. போதாக்குறைக்கு தமிழக நடிகர்களின் விளம்பர படங்களும் இந்த வங்கிகளுக்கு மேலும் பலம் சேர்ப்பதாக அமைந்துள்ளன.
தமிழர்களுக்கு தண்ணீர் தரமுடியாது என்ற எதிரான போக்கை தொடர்ந்து கடைப்பிடிக்கிறது கேரளம். ஆனால், அம் மாநிலத்தவரின் மொத்த வர்த்தகம் தமிழகத்தை நம்பியே உள்ளது. ஏன், நம் மாநிலத்தில் இச்சேவைக்கு ஆளே கிடையாதா? அல்லது மக்கள் மீது நம்பிக்கை இல்லையா என்ற கேள்விதான் எழுகிறது. கந்துவட்டி, மீட்டர் வட்டி, ஸ்பீடு வட்டி என்ற பெயரில் ஏற்கெனவே இங்கு தனியாக வட்டி வழங்கும் வியாபாரம் நடந்து வருவது
தனிக்கதை.
இந்நிலையில் பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி குறைந்தபட்சம் ஒரு சதவிகிதம் முதல் 3 சதவிகிதம் வரை தங்க நகைகளின் பெயரில் பணம் வழங்கப்படுகிறது. இந்த நிறுவனங்களின் பின்னணி, பாதுகாப்பு போன்றவற்றை யாரும் கவனத்தில் கொள்வாரில்லை.
இதற்கு உதாரணம், அண்மையில் கரூரில் நடைபெற்ற பெரும் கொள்ளை. போலீஸôரின் கடும் நடவடிக்கைக்குப் பிறகு கொள்ளையர்கள் பிடிபட்டனர். கடைசியில் நகைகளை இழந்தவர்களுக்கு கொஞ்சம் கொஞ்சமாக வழங்கப்படுவதாகக் கூறப்படுகிறது. அங்கு போதிய பாதுகாப்பு இல்லாததால் இச்சம்பவம் நடைபெற்றதாகக் கூறப்பட்டது. உண்மையில் தமிழகத்தில் பல்வேறு நகரங்களில் செயல்பட்டு வரும் இதுபோன்ற நிதி நிறுவனங்கள் ஒரு சிறிய அறையில் நடத்தப்படுகின்றன.
மேலும் ஏராளமான நகைகள் இங்கு பெறப்பட்டு பணம் வழங்கப்படுகிறது. சுலபமான நடைமுறை இருப்பதால் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதற்கு காரணம், நம்மூர் வங்கிகளின் சோம்பேறித்தனமும், பொறுப்பற்ற தன்மையும்தான். ஒரு விவசாயி அல்லது நடுத்தர நபர் தேசியமயமாக்கப்பட்ட வங்கிக் கிளைகளில் நகைகளை அடகு வைக்கச் சென்றால் அங்கு கேட்கப்படும் ஆவணங்கள், சான்றுகள் இதர விவரங்களைக் கேட்டதும் மயக்கம்போட்டு விழாத குறையாகப் பலர் ஓடிவந்து விடுகின்றனர்.
மதிப்புமிக்க நகையை வைத்துப் பணம் பெற இத்தனை விதிமுறைகள் தேவையா என்பதே பலரின் கேள்வி. வெறுமனே சான்றிதழ்களை வைத்து பணம் கேட்டால்தான் வங்கிகள் யோசிக்க வேண்டும். ஆனால் வங்கியில் கணக்கு இருக்க வேண்டும். மற்றொருவர் அறிமுகம், தரம்பரிசோதனை செய்பவருக்கு கட்டணம் அப்படி, இப்படி என்று கிட்டத்தட்ட அரைநாள் முழுவதும் நகையையும் கொடுத்துவிட்டு பணத்துக்குக் காத்துக்கிடக்க வேண்டும். அத்துடன் வட்டி விகிதம் குறைவு என்றாலும், கிடைக்கும் தொகையும் குறைவு என்பதால், பலரும் தனியார் நிதி நிறுவனங்களை நாட வேண்டிய நிலை உள்ளது.
தேசியமயமாக்கப்பட்ட வங்கியாகட்டும், கூட்டுறவு வங்கிகளாகட்டும் விதிமுறைகளில் தளர்வு, விரைவு போன்றவற்றில் கவனம் செலுத்த வேண்டும். நகைக்கு, பாதுகாப்பு என்பதால்தான் மக்கள் வங்கிகளை நாடி வருகிறார்கள். எனவே, அதை முறையாகச் செயல்படுத்த வங்கி நிர்வாகங்கள் முன்வருவதுடன், மக்களைக் காத தொலைவுக்கு ஓட வைக்கக் கூடாது.
எனவே, தனியார் நிதி நிறுவனங்களுக்கு பாதுகாப்பு அம்சங்கள், குறைந்த வட்டி போன்ற நிபந்தனைகளை விதித்து கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அரசு வங்கிகளில் மக்கள் சுலபமாக நகைக்கடன் பெற வழி செய்ய வேண்டும்.
இல்லையேல் நகைக்கடனால் நாளுக்குநாள் மக்கள் நலிவடைய நேரிடும்.


செவ்வாய், 6 டிசம்பர், 2011

பொக்கிஷங்கள் 32



1. பேசும்முன் கேளுங்கள்! எழுதும்முன் யோசியுங்கள்! செலவழிக்கும்முன் சம்பாதியுங்கள்!
2. சில சமயங்களில் இழப்புதான் பெரிய ஆதாயமாக இருக்கும்!
3. யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர். கற்றுக்கொடுப்பவரெல்லாம் ஆசிரியர் அல்லர்.
4. நான் மாறும்போது தானும் மாறியும், நான் தலையசைக்கும்போது தானும் தலையசைக்கும் நண்பன் எனக்குத் தேவையில்லை. அதற்கு என் நிழலே போதும்!