திங்கள், 7 அக்டோபர், 2024

நீ திருந்தவே மாட்டியா? (கதை)

 

”திரும்பத் திரும்ப பிக் பாக்கெட் அடிச்சிட்டு ஜெயிலுக்கு வர்ரியே, நீ திருந்தவே மாட்டியா?” என்றார் ஜட்ஜ் ..


“எவ்வளவு தரம் பிக் பாக்கெட் அடிச்சாலும் அதே தண்டனையே தர்ரீங்களே, நீங்க சட்டத்தைத் திருத்த மாட்டீங்களா?” என்றான் பிக் பாக்கெட் பக்கிரி.

புதன், 2 அக்டோபர், 2024

மரணம் வரும் முன்.. (கதை)

 


ஒரு பழைய சூபி கதை;


முன்னொரு காலத்தில் ..

குரங்கு ஒன்று இருந்தது ..


அதற்கு செர்ரிப் பழங்கள் என்றால் உயிர் ..


ஒருநாள் அது, அழகான செர்ரிப் பழத்தைக் கண்டது ..

செவ்வாய், 1 அக்டோபர், 2024

தம்பி வண்டி எடுப்பா.. (கதை)


ஒரு நகரத்திற்கு ஒரு சட்டமிருந்தது. அதன்படி யார் வேண்டுமென்றாலும் அந்த நகரத்திற்கு ராஜாவாக வரமுடியும். ஆனால், அந்தப் பதவி ஐந்தாண்டுகள் மட்டுமே! ஐந்தாண்டு முடிந்த அடுத்த நாளே மன்னனை ஆற்றின் கரைக்கு மறுபுறம் உள்ள காட்டில் விட்டுவிடுவார்கள்.

திங்கள், 30 செப்டம்பர், 2024

நன்றி Thanks சொல்லலாமா..?

உ தவிக்கு நன்றி செலுத்துவது மனிதனுடைய இயற்கை குணம். ஆனால், இன்று செய்யும் உதவிக்கு நன்றி தெரிவிக்காவிட்டா லும், அதைப் பற்றி குறைகூறாமல் இருந்தாலாவது பரவாயில்லை என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது.


மனிதனிடமிருந்து நன்றி விசுவாசம் எடுபட்டுப்போய்விட்டதால் நன்றியுள்ள பிராணி நாய்' என்று பாடம் சொல்லிக்கொடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். நன்றியுணர்வில் எல்லோருமே மனிதனைவிட மிருகத்திற்கு முதலிடம் கொடுத்திருப்பதுதான் நடைமுறை.


அமெரிக்கர்களுக்கு நன்றி:


குழந்தைகள் தினம். ஆசிரியர் தினம், எய்ட்ஸ் ஒழிப்புதினம். இவ்வாறு ஒவ்வொன்றுக்கும் ஒரு தினத்தை உண்டாக்கி வைத்திருப்போர், அமெரிக்கா வில் ஒவ்வொரு நவம்பர் மாதத்தின் நான்காவது வியாழக்கிழமையை Thanks Giving Day நன்றி தெரிவிக்கும் தினமாக கொண்டாடிவருகின்றனர்.


கடந்த ஆண்டுகளில், நன்றி தெரிவிக்கும் தினத்தில் அமெரிக்க அதிபர் இரகசியமாக ஈராக் சென்று அமெரிக்க இராணுவத்திற்கு நன்றி தெரிவித்து விட்டு வந்தார். ஆனால், இந்த ஆண்டின் நன்றி தெரிவிக்கும் தினத்தில் முழு உலகமும் சேர்ந்து அமெரிக்க மக்களுக்கு நன்றி சொல்லிக்கொண்டி ருக்கிறது.


உலக அமைதிக்கு அச்சுறுத்தலாக இருப்பவர்கள் யார். யார் என்று எடுக்கப்பட்ட ஒரு கருத்துக் கணிப்பில் இரண்டாம் (முதல்) இடத்தைப் பிடித்தவர் ஜார்ஜ் புஷ், உலகத்தின் போலீஸ்காரர்' என்ற கற்பனையில் ஈராக்கை அடுத்து அவரது இலக்கு ஈரானா? வடகொரியாவா என்றெல்லாம் கேள்விகள் எழுப்பிய உலக ஊடகங்கள், இப்போது புஷ் சர்வதேச தலைவர் என்ற அந்தஸ்தை இழந்துவிட்டார். அதிகாரத்தை இழந்து பொறுப்பற்றவராகிவிட்டார்' என்கின்றன.


ஏற்கனவே அமெரிக்க பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து முதலாளித்து வத்தின் அஸ்திவாரம் ஆடிப்போயுள்ளது. இந்நிலையில் சதாமுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட மறுநாள் நடந்த தேர்தலில் அப்பாவி முஸ்லிம் களை அநியாயமாக கொன்றுகுவித்த புஷ்ஷுக்கு மரண அடி கொடுத்திருக் கிறார்கள் அமெரிக்க மக்கள். புஷ்ஷின் சிறகுகளை வெட்டிவிட்ட அமெரிக்க மக்கள் உண்மையிலேயே நன்றிக்குரியவர்கள். பாரம்பர்யமிக்க பிரிட்டிஷ் பத்திரிகையான கார்டியன்' அமெரிக்கர்களை பாராட்டி 'தேங்க்யூ அமெரிக்கா' என தலையங்கம் எழுதியுள்ளது.


நன்றி செலுத்தும் விதம்


இஸ்லாத்தின் பார்வையில் 'நன்றி' என்பது ஒரு தினத்தோடு மட்டுமல்ல மனித வாழ்க்கையின் ஒவ்வொரு மணித் துளிகளோடும் சம்பந்தப்பட்டிருக் கிறது. இறைவேதத்துக்கு இணையான இறைபாக்கியம் வேறில்லை என்பதால், நோன்பின் மூலம் குர்ஆன் அருளப்பெற்ற காலத்தில் 'நன்றி செலுத்துவதை மார்க்கக் கடமையாக்கி உள்ளது இஸ்லாம்.


விண்ணையும் மண்ணையும் மனிதனுக்காகவே இயங்கவைத்த அனைத் துலகங்களின் இரட்சகனுக்கு நன்றி தெரிவிப்பதற்காக, 'அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன் இந்த அண்ட சராசரத்தைப் படைத்து பராமரிக்கக்கூடிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்" என்று கூறுவதை ஒவ்வொரு தொழுகை யிலும் அவசியமாக்கப்பட்டுள்ளது.


எவரேனும் ஒருவருக்கு கொடை வழங்கப்பட்டால், வசதியிருப்பின் அவரும் கொடையளித்தவருக்கு பகரமாக தானும் வழங்கட்டும். அப்படியில் லையானால், அவரை மனதார புகழட்டும்" என்றும், மற்றோர் அறிவிப்பில், உதவியவருக்கு ஜஸாக்கல்லாஹு கைரா - பகரத்தை வழங்குவானாக என்று கூறி விட்டால் அவரைப் புகழ வேண்டிய G அளவுக்கு புகழ்ந்தவராகிவிடுகிறார்' என்றும் நபி (ஸல்) அவர்கள் கூறினார் கள். (திர்மிதீ) (ஒழுங்காக)


அல்லாஹ் உங்களுக்கு சிறந்த


அப்துல்லாஹ் இப்னு அபீரபீஆவி டம் ஒரு முறை நபி (ஸல்) அவர்கள் கடன் வாங்கியிருந்தார்கள். கடளைத் திருப்பிச் செலுத்தும்போது. உங்களுக் கும் உங்களுடைய குடும்பத்திலும்


நிறைவேற்றுவதும் புகழ்வதும்தான் கடன் கொடுத்தவருக்கு செய்யும் பிரதி உபகாரம் என்று கூறினார்கள்.



செல்வத்திலும் அல்லாஹ் அருள்வளம் (பரக்கத்) அளிப்பாளாக' என்று துஆச் செய்துவிட்டு (ஒழுங்காக) நிறைவேற்றுவதும் புகழ்வதும்தான் கடன் கொடுத்தவருக்கு செய்யும் பிரதி உபகாரம் என்று கூறினார்கள்.


இந்தக் காலத்தில் கடன் கொடுத்தவர், 'தன்னைப் பாராட்டாவிட்டாலும் பரவாயில்லை, வாங்கிய கடனை உருப்படியாக திருப்பிக் கொடுத்துவிட்டால். நானே உன்னைப் பாராட்டுகிறேன்" என்ற நிலைதான் உள்ளது.


உதவிக்கு தகுந்த நன்றி


செய்யப்படும் உதவியின் முக்கியத்துவம் மற்றும் சிரமத்திற்கு தகுந்தவாறு நன்றியும் அமைய வேண்டும். நபி (ஸல்) அவர்கள் சுய தேவையை நிறை வேற்றுவதற்காக வெளியே சென்றிருந்தார்கள். திரும்பி வருவதற்குள், இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் உளூச் செய்வதற்கு தண்ணீர் எடுத்துவைத்தார்கள். நபி (ஸல்) அவர்கள் வந்து, இந்த தண்ணீரை வைத்தது யார்? என்று வினவி னார்கள்.'

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள்தான் வைத்தார்கள்' என்று தெரிவிக்கப் பட்டதும், யா அல்லாஹ்! அவருக்கு மார்க்க விஷயத்தில் நல்ல விளக்கத் தைக் கொடுப்பாயாக!" என்று துஆச் செய்தார்கள். இங்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் உதவி சாதாரணமானதுதான்.


ஆனால், நபியவர்களின் நன்றியுணர்வில் வெளிப்பட்ட பிரார்த்தனையோ மிகவும் உயர்ந்தது. ஏனெனில், எந்த நேரத்தில் எந்த வேலையை செய்ய வேண்டுமென்பதை யாரும் சொல்லாமல் தாங்களாகவே விளங்கி தண்ணீர் எடுத்து வைத்திருந்தார்கள்.


செய்த காரியம் சாதாரணமாக இருந்தாலும், அதற்காக செய்த சிந்தனை பாராட்டுக்குரியது. எனவேதான், நபி (ஸல்) அவர்கள் 'இந்த விளக்கம் மார்க்க விஷயத்திலும் பொங்கி வழியட்டும்" என்று பிரார்த்தனை செய்தார்கள்.


நபியவர்களின் தாடியிலிருந்த ஒரு பொருளை அபூஅய்யூப் அல்அன்ஸாரீ (ரலி) அவர்கள் தட்டிவிட்டதற்காக நீங்கள் வெறுக்கும் காரியத்தை அல்லாஹ் உங்களைவிட்டு நீக்குவானாக' என்று பிரார்த்தித் தார்கள். இப்படி சின்னத் சின்ன உதவிக்கும் உடனடி நன்றி தெரிவிக்கும் பழக்கத்தை நபி (ஸல்) அவர்கள் நமக்கு கற்றுத் தந்துள்ளார்கள்.



தேங்க்ஸ் (THANKS] சொல்லலாமா?


இன்று எல்லா இடங்களிலும் ஆங்கில வார்த்தைகளை உபயோகிப்பது தான் நாகரீகமாக கருதப்படுகிறது. நாம் பேசுவதில் பாதி வார்த்தை ஆங்கில கலப்புடன்தான் இருக்கிறது. 'கக்கூஸ்' என்பதைவிட டாய்லட் என்று சொல்லி விட்டால் புனிதமான இடத்திற்கு சென்றுவந்ததாக நினைப்பு.


எந்த மொழியின் மீதும் நமக்கு வெறுப்பில்லை. ஆனால், குர்ஆனுடைய மொழியை விரும்புவது இறைநம்பிக்கையாளரின் பண்பாடு. எனவே, 'தேங்க்ஸ்' என்று சொல்வதைவிட நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்த கருத்துச் செறிவுள்ள துஆவாகிய 'ஜஸாக்கல்லாஹு கைரா' என்று அரபியிலேயே சொல்வதை பரவலாக்க வேண்டும். அதையே கண்ணியமானதாகவும் “ நாகரீகமானதாகவும் கருதும் மனோ நிலை நம்மவர்களிடையே உருவாக வேண்டும். "மக்களுக்கு நன்றி செலுத்தாதவன் அல்லாஹ்வுக்கு நன்றி


நன்றி மறப்பது... தர்மம் செய்யுங்கள், அதிகமாக பாவமன்னிப்பு கோருங்கள். ஏனெனில், உங்களை நரகவாசிகளில் அதிகமாகப் பார்த்தேன்" என்று பெண்களை நோக்கி நபி (ஸல்) அவர்கள் கூறிய செலுத்தியவனாக மாட்டான்" என்று எச்சரித்தார்கள். போது, 'அதற்கு காரணம் என்ன?" என்று புத்திக்கூர்மையுள்ள ஒரு பெண் கேட்டார். நீங்கள் அதிகமாக சாபமிடுகிறீர்கள். கணவனிடம் நன்றிகெட்ட வர்களாக நடந்துகொள்கிறீர்கள் என்று நபி (ஸல்) அவர்கள் காரணம் கூறினார்கள்.


நன்றி மறப்பது நரகவாசியாக ஆக்கிவிடுமளவுக்கு கொடூரமானது. ஏளெனில், கணவனுக்கு நன்றி செலுத்தாதவர்கள் அல்லாஹ்வின் அருட் கொடைக்கு எப்படி நன்றி செலுத்துவார்கள் எனவேதான், நபி (ஸல்) அவர்கள். மக்களுக்கு நன்றி செலுத்தாதவன் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தியவளாக மாட்டான்" என்று எச்சரித்தார்கள்.


மெளலவி, எஸ்.ஏ. காஜா நிஜாமுத்தீன் யூசுஃபி,

திண்டுக்கல் -2.


மனாருல் ஹுதா 2006 டிசம்பர் இதழிலிருந்து.


ஞாயிறு, 29 செப்டம்பர், 2024

கேள்வி பதில் பாகம். 12

 


முஹம்மது_றஸூலுல்லாஹ்.

             #வினா_விடை.

                 #பாகம்_12.


276 : நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் விரும்பிய எண்ணெய்?


*ஸைத்தூன் எண்ணெய்*


277 : முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் நடக்கிற பொழுது நிழல் தறையில் பதியுமா?


*பதியாது.மேகம் அவர்களுக்கு நிழல் கொடுக்கும்.*


278 : காதிமுரஸூலுல்லாஹ் (நபி ஸல்லல்லாஹு அலைஹி அவர்களின் சேவகர்) என்ற பெயரில் அறியப்படும் நபித்தோழர் யார்?


*அனஸ் இப்னு மாலிக் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள்* 


279 : நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் ஹிஜ்றா செல்லும் வேளையில் தன் விரிப்பில் யாரை படுக்க செய்தார்கள்.?


*அலி (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள்*


280 : திரு நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் பயன்படுத்திய வாகனங்கள் எவை?


*குதிரை, ஒட்டகம், கழுதை, கோவேறு கழுதை*


281 : நாயகத்தின் ஹவாரியூன்கள் என்னும் தோழர்களில் ஒருவர் எனக் கூறப்பட்டவர் யார்?


*அஸ்ஸுபைரு இப்னுல் அவ்வாம் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள்* 


282 : உஸ்மான் இப்னு மள்வூன் (ரலியல்லாஹு அன்ஹு) யார்?


*நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் பால்குடி சகோதரர். உமர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் மாமா மகன். முஹாஜிர்களில் முதன் முதலாக மரணித்தவர்*


283 : நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின்தந்தை மரணிக்கும் போது அவர்களின் வயது எத்தனை?


    *18 வயது*


284 : அலி (ரலி) அவர்கள் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்கு என்ன உறவு?


*நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் பெரிய தந்தை அபூதாலிபின் மகன்தான் அலி (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள்.* 


285 : தமது சட்டையில் கபனிட்டு நபிகளால் அடக்கம் செய்யப்பட்ட பெண்மணி யார்?


*அபூதாலிபின் மனைவி ஃபாத்திமா பின்த் அஸத் இவர்கள் அலி (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் தாயார்.*


286 : முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மறைவுக்கு பிறகு இஸ்லாமிய ஆட்சியின் முதல் கலீஃபா யார்?


*ஹழ்ரத் அபூபக்கர் சித்தீக் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள்*


287 : முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மறைவுக்கு பின் இஸ்லாமிய ஆட்சியின் இரண்டாம் கலீஃபா யார்? 


*ஹழ்ரத் உமர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள்.* 


288 : முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மறைவுக்கு பிறகு இஸ்லாமிய ஆட்சியின் மூன்றாம் கலீஃபா யார்?


*ஹழ்ரத் உஸ்மான் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்.*


289 : முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின்மறைவுக்கு பிறகு இஸ்லாமிய ஆட்சியின் நான்காம் கலீஃபா யார்?


*ஹழ்ரத் அலி (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள்*


290 : முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் பயன்படுத்திய சுர்மா என்ன? 


*இஸ்மித் என்ற சுருமாவை பயன் படுத்தினார்கள்*


291 : நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் எந்த பொருட்களை தந்தால் மறுக்க கூடாது என்று சொன்னார்கள்?


*தலையணை , எண்ணெய், பால், நறுமண பொருட்கள்*


292 : இஸ்லாமிய அழைப்பு பணிக்காக தாயிஃப் சென்ற நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களை அந்த மக்கள் எவ்வாறு நடத்தினார்கள்?


*இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளாதது மட்டுமின்றி நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களை மிக மோசமாக நடத்தினார்கள்.நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்கு எதிராக சிறுவர்களை தூண்டினார்கள். அச்சிறுவர்கள் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களை கல்லால் எறிந்து இரு கணுக்கால்களில் இரத்தம் வரும் வரை காயப்படுத்தினார்கள்.*


293 : நஜ்ஜாஷி மன்னரால் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்கு திருமணம் செய்விக்கப்பட்ட பெண்மணி யார்?


*உம்மு ஹபீபா ரமலா பின்த் அபீ ஸுஃப்யான் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள்.*


294 : அர்ஷின் மேலிலிருந்து அல்லாஹ்வால் திருமணம் செய்விக்கப்பட்டவர் என தம் சக்களத்திகளிடம் பெருமைப்படும் பெருமானாரின் மனைவி யார்?


*உம்முல் முஃமினீன் அன்னை ஸைனப் பின்த் ஜஹ்ஷ்.*


295 : கிஸ்ரா மன்னரின் முத்து பதித்த காப்புகளை அணியும் பேறு பெற்றவர் யார்?


*ஸுராகத் இப்னு மாலிக்*


296 : நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் தந்தையுடன் பிறந்தவர்களில் ஆண்கள் எத்தனை பேர்? 


1 : ஹாரிஸ் 2 : ஸுபைர் 3 : அபூதாலிப் 4 : அப்துல்லாஹ் 5 : ஹம்ஸா 6 : அபூலஹப் 7 : முகவ்விம் 8 : ஸிஃபார் 9 : அப்பாஸ் 10 : கைதாக்...


297 : இவர்களில் இஸ்லாத்தை ஏற்றவர்கள் யார்?


*ஹம்ஸா (ரலி) அப்பாஸ் (ரலியல்லாஹு அன்ஹு)*


298 : நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் தாயுடன் பிறந்த பெண்கள் எத்தனை பேர்?


       *ஆறு பேர்*


*ஸஃபிய்யா, ஆத்திக்கா, அர்வா, உமைய்யா,பர்ரா,உம்மு ஹக்கீம், 

ஆகிய ஆறு நபர்கள்*


299 : இவர்களில் இஸ்லாத்தை ஏற்றவர்கள் யார்?


*ஸஃபிய்யா (ரலியல்லாஹு அன்ஹா)*


 *மற்றவர்களில் கருத்து வேறுபாடு உண்டு.*


300 :நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுடைய குழந்தைகளில் முதலாவதாக பிறந்த குழந்தை யார்?


*ஹழ்ரத் காஸிம் (ரலி) அவர்கள்* 


 

#நிறைவடைந்தது..

#இனி_அல்லாஹ்_நாடினால்_மீண்டும் #தொடரும்......

  


#ஆக்கம்.

#M_சிராஜுத்தீன்_அஹ்ஸனி..


#இயக்குனர்.

#மைமூன்_பப்ளிஷிங்_ஹவுஸ்.


#திருவிதாங்கோடு......

சனி, 28 செப்டம்பர், 2024

கேள்வி பதில் பாகம். 11

 


முஹம்மது_றஸூலுல்லாஹ்.

              #வினா_விடை.

                  #பாகம்_11  


251 : நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களை புகழ்ந்து அதிகமானவர்களால் பாடப்படும் கஸீதாவின் பெயர் என்ன?


*புர்தா ஷெரீஃப்*


252 :நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடம் சுவனத்தில் உங்களுடன் எனக்கும் இடம் வேண்டும் என்று கேட்ட சஹாபி யார்?


*ரபீஆ (ரலி) அவர்கள்*


253 : நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் திருமுடியை தனது தொப்பியில் வைத்து போர் களங்களில் கலந்து கொண்ட ஸஹாபி யார்?


*காலித் பின் வலீத் (ரலியல்லாஹு அன்ஹு)*


254 : நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களை புகழ்வதற்காக எந்த ஸஹாபிக்கு பள்ளிவாசலில் மிம்பர் உருவாக்கப்பட்டது.?


*ஹஸ்ஸான் இப்னு ஸாபித் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள்*


255 : உஹது போர் களத்தில் பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களை அரணாக காத்து நின்றோர்களில் ஒரு பெண்மணியும் இருந்தார் அவர் யார்?


(உம்மு உமாரா என்னும் நுஸைபா பின்த் கஃபில் மாஸினிய்யா

 (ரலியல்லாஹு அன்ஹா) அவர்கள்.*


256 : நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுடைய மனைவிமார்களில் உம்முல் மஸாக்கீன் என்றழைக்கப்பட்டவர் யார்?


உம்முல் முஃமினீன் ஸைனப் (ரலியல்லாஹு அன்ஹா) அவர்கள்.


257 : நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் அதிகம் விரும்பிய காய் எது?


      *சுரைக்காய்*


258 : முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கடைசியாக செய்த அமல் எது?


*மிஸ்வாக் குச்சியால் பல் துலக்கினார்கள்*


259 : முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் உம்மத்தாருக்கு ஸலாம் சொல்லி அனுப்பிய நபி யார்?


*மிஃராஜ் பயணத்தின் போது நபி இப்ராஹிம் (அலை) அவர்கள் ஸலாம் சொல்லி அனுப்பினார்கள்*


260 : முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் கப்ரை கட்டியது யார்?


*ஹழ்ரத் அபூதல்ஹா அன்ஸாரி ரலியல்லாஹு அன்ஹு அவர்களாகும்*


261 : முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் இந்த உம்மத்திற்காக செய்ய இருக்கிற மாபெரும் உபகாரம் எது?


*ஷஃபாஅத் என்னும் பரிந்துரை.*


262 : முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் அதிகம் விரும்பிய நறுமணம் எது?


*கஸ்தூரி மற்றும் ஊது ஆகும்*


263 : முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்கு பிடித்த மாமிசம் எது?


*ஆட்டின் முன்சப்பை கறியாகும்*


264 : முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்கு முதன் முதலில் இறங்கிய குர்ஆன் வசனம் எது?


*இக்ரஃ பிஸ்மி ரப்பிக்க என்பதாகும்*


265 : முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் சுத்தம் எப்படிப்பட்டது?


*தூய்மையான ஆடை அணிவார்கள், தினசரி மிஸ்வாக் செய்வார்கள், நறுமணம் பூசுவார்கள், சுர்மா இடுவார்கள், தலைமுடி மற்றும் தாடியை சீப்பினால் வாருவார்கள்.*


266 : நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் வியர்வை துளிகளின் மணம் எவ்வாறு இருக்கும்?


*நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுடைய வியர்வை துளிகளின் நறுமணம் மற்ற எல்லா உயர்ந்த நறுமணங்களையும் விட மேலானதாக இருந்தது.*


267 : முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் எப்போது ஹஜ் செய்தார்கள்?


*ஹிஜ்ரி 10_ம் ஆண்டு ஹஜ் செய்தார்கள்.*


268 : முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் தூங்கும் முன் என்ன செய்வார்கள்?


*நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் தூங்கும் முன் இஸ்மித் என்ற ஸுர்மாவை பயன் படுத்துவார்கள். ஏனெனில் அவை பார்வையை கூர்மையாக்கும். இமை முடியை வளரச் செய்யும்.*


269 : முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் பொன் மொழிகளுக்கு என்ன சொல்லப்படும்?


          *ஹதீஸ்*


270 : மறுமை நாளில் முதன் முதலாக எழுப்பப்படும் நபி யார்?


*முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள்*


271 : முத்தபிஃஉஸ்ஸுன்னா என்றழைக்கப்படும் ஸஹாபி யார்?


*அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள்* 


272 : நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடம் பெண்களின் தூதுவராகச் சென்ற நபித் தோழி யார்?


*அஸ்மா பின்த் யஸீது இப்னு ஸகன்*


273 : முஸ்தஜாபுத்தஃவா (துஆ அங்கீகரிக்கப்படுபவர்) என சிறப்பிக்கப்பட்ட நபித் தோழர் யார்?


*ஸஃது இப்னு அபீ வக்காஸ் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள்*


274 : நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் இறுதி நாட்களில் அவர்களை கைத்தாங்கலாக பள்ளிவாசலுக்கு அழைத்து சென்ற இரு நபித்தோழர்கள் யார்?


*ஃபழ்ல் இப்னு அப்பாஸ் (ரழியல்லாஹு அன்ஹு), அலி (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள்*


275 : நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மனைவியான அன்னை ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹா) விஷயத்தில் அவதூறு பேசப்பட்ட நபித்தோழர் யார்?


*ஸஃப்வான் இப்னுல் முஅத்தல் (ரலியல்லாஹு அன்ஹு) பின்னர் இவர்கள் நிரபராதி என இறை செய்தி வந்தது.

அவதூறு கூறியோருக்கு கசையடியும் வழங்கப்பட்டது.*


            ......#ஆக்கம்......... 


M.#சிராஜுத்தீன்_அஹ்ஸனி..


#இயக்குனர்_

#மைமூன்_பப்ளிஷிங்_ஹவுஸ்


#திருவிதாங்கோடு.

#குமரி_மாவட்டம்..

வெள்ளி, 27 செப்டம்பர், 2024

கேள்வி பதில் பாகம்.10

 


#முஹம்மது_றஸூலுல்லாஹ்

              #வினா_விடை.

                  #பாகம்_10


226 : நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீதுள்ள நேசத்தால் நாற்பது வருடம் வாகனத்தில் ஏறாமல் பயணம் செய்த இமாம் யார்?


*இமாம் மாலிக் (ரஹ்மத்துல்லாஹி அலைஹி) அவர்கள்.*


227 : தொழுகையின் கடைசி அத்தஹிய்யாத்தில் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீது ஸலவாத் சொல்வதின் சட்டம் என்ன?


          *ஃபர்ள்*


228 : பூமியில் எந்த இடத்திலும் தொழுவதற்கு அனுமதி வழங்கப்பட்ட சமுதாயம்?


*முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுடைய சமுதாயம்*


229 : மண் கொண்டு சுத்தம் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்ட சமுதாயம்?


*முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுடைய சமுதாயம்.*


230 : நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்கு மிகவும் அதிகம் கஷ்டங்கள் கொடுத்த உறவினர் யார்?


      *அபூலஹப்*


231 : நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீது ஸலவாத் சொல்வதற்கு சத்திய விசுவாசிகளோடு கட்டளை பிறப்பிக்கும் குர்ஆனின் வசனம்?


         *3 : 56*


232 : மக்காவை வென்றடுத்த நேரத்தில் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கஃபாவின் சாவியை யாரிடத்தில் கொடுத்தார்கள்?


*உஸ்மான் இப்னு தல்ஹா*


233 : இந்த சமுதாயத்தின் " ஃபிர்அவ்ன்" என்று நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் யாரை கூறினார்கள்.?


       *அபூ ஜஹ்ல்*


234 : ஹம்ஸா (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களுக்கும் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்கும் பால் கொடுத்த பெண்மணி?


*ஸுவைபத்துல் அஸ்லமிய்யா (ரலியல்லாஹு அன்ஹு).*


235 நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் அநாதையாக வளர்ந்தார்கள் என்று சுட்டிக் காட்டும் குர்ஆன் வசனம்?


  *ஸூரத்துள்ளுஹா.*


236 : மிஃராஜில் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் அதிகமான மலக்குமார்களை பார்த்த இடம் யாது?


*ஸித்ரத்துல் முன்தஹா*


237 : நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் சுவனத்தையும் நரகத்தையும் கண்ட தினம் யாது?


   *மிஃராஜ் தினம்*


238 : நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் காலத்தில் விபச்சார குற்றத்திற்காக கல் எறிந்து கொல்லப்பட்ட நபர் யார்?


      *மாயிஸ்*


239 : நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்கு எதிராக விமர்சன காவியங்கள் எழுதிய யூதக் கவிஞர் யார்?


*கஃப் இப்னு அஷ்ரஃப்*


240 : திருநபியின் கரத்தால் கொலை செய்யப்பட்ட நபர் யார்?


*அப்துல்லாஹ் இப்னு உபய்யிப்னு ஸுலூல்*


241 : நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் வெளிப்படையாக தஃவா பணி ஆரம்பிக்கும் முன் எத்தனை பேர் இஸ்லாத்தில் இணைந்தனர்?


      *முப்பது*


242 : மரணிக்கும் போது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் போர் கவசம் யார் கைவசம் இருந்தது?


*ஒரு யூதனின் கைவசம் இருந்தது*


243 : ஸைத் இப்னு ஹாரிஸ் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களை நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் எத்தனை போர்களில் தலைவராக நியமித்தார்கள்?


       *ஒன்பது*


244 : நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மடியிலிருந்து மரணித்த பெருமானாரின் வாரிசு?


*இப்ராஹிம் (ரலியல்லாஹு அன்ஹு)*


245 : மதீனாவுக்கு ஹிஜ்ரா சென்ற நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களை தஃப் கொட்டி வரவேற்றது யார்?


*பனூ நஜ்ஜார் வம்சத்தை சேர்ந்த சிறுமிகள்.*


246 : தாருந்நத்வாவில் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களை கொலை செய்ய வேண்டுமென்ற கருத்தை சொன்னவர் யார்?


        *அபூ ஜஹ்ல்*


247 : இஸ்ராஃ இரவில் நபிமார்களுக்கு இமாமாக நின்று தொழுகை நடத்திய நபி யார்?


*முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள்.*


248 சுவர்க்கத்தில் பெண்மணிகளின் தலைவி யார்?


*நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மகள் பாத்திமா பீவி அவர்கள்*


249 : மிகவும் பரிசுத்தமான மகத்தான தண்ணீர் எது?


*நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் கை விரல்களுக்கிடையில் உருவெடுத்த தண்ணீர்.*


250 : நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் முதல் பேரக்குழந்தை யார்?


*ஸைனப் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களுடைய மகள் உமாமா பின்த் அபுல் ஆஸ்.*


ஆக்கம்.M.#

சிராஜுத்தீன்_அஹ்ஸனி..


#இயக்குனர். 

#மைமூன்_பப்ளிஷிங்_ஹவுஸ்


#திருவிதாங்கோடு.

#குமரி_மாவட்டம்.

தமிழ்நாடு