பக்கங்கள்

செவ்வாய், 28 ஜனவரி, 2025

அஹ்மத் முஹம்மத்

 


ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்.. 


நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு ஏராளமான பெயர்கள் உண்டு. 

அதில் சிலது குர்ஆனிலும், 

ஹதீஸிலும் வந்துள்ளது. 

மற்று சிலது பண்டைய கால அறிஞர்களின் நூல்களில் காணக்கூடியவையாகும்.

அதில் மிகவும் முக்கியத்துவம் பெற்றதும், மகத்துவம் உள்ளதும் முஹம்மது, அஹ்மத் என்ற இரண்டு பெயர்களாகும். 

அந்த இரு பெயர்களைப் பற்றிய செய்திகள், மற்றும் அவற்றின் சிறப்புக்களைக் குறித்து இந்த நூலில் தொகுத்து வழங்கி உள்ளோம்.. 


  முஹம்மது எனும் பெயர் குர்ஆனில். 

___________


திருநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய முஹம்மது என்ற பெயர் குர்ஆனில் நான்கு இடங்களில் சொல்லப்பட்டுள்ளது... 


وَمَا مُحَمَّدٌ اِلَّا رَسُوْلٌ  ۚ قَدْ خَلَتْ مِنْ قَبْلِهِ الرُّسُلُ‌ؕ اَفَا۟ٮِٕنْ مَّاتَ اَوْ قُتِلَ انْقَلَبْتُمْ عَلٰٓى اَعْقَابِكُمْ‌ؕ وَمَنْ يَّنْقَلِبْ عَلٰى عَقِبَيْهِ فَلَنْ يَّضُرَّ اللّٰهَ شَيْئًا‌ ؕ وَسَيَجْزِى اللّٰهُ الشّٰكِرِيْنَ‏


1 : முஹம்மது(ஸல்) (இறைவனின்) தூதரே அன்றி(வேறு) அல்லர்; அவருக்கு முன்னரும் (அல்லாஹ்வின்) தூதர்கள் பலர் (காலம்) சென்றுவிட்டார்கள்;

(ஆலு இம்ரான். 144) 


مَا كَانَ مُحَمَّدٌ اَبَآ اَحَدٍ مِّنْ رِّجَالِكُمْ وَلٰـكِنْ رَّسُوْلَ اللّٰهِ وَخَاتَمَ النَّبِيّٖنَ ؕ وَكَانَ اللّٰهُ بِكُلِّ شَىْءٍ عَلِيْمًا‏


2 : முஹம்மது(ஸல்) உங்கள் ஆடவர்களில் எவர் ஒருவருக்கும் தந்தையாக இருக்கவில்லை; ஆனால் அவரோ அல்லாஹ்வின் தூதராகவும், நபிமார்களுக்கெல்லாம் இறுதி (முத்திரை)யாகவும் இருக்கின்றார்; மேலும் அல்லாஹ் எல்லாப் பொருள்கள் பற்றியும் நன்கறிந்தவன். 

(அல் அஹ்ஸாப்_40) 



وَالَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ وَاٰمَنُوْا بِمَا نُزِّلَ عَلٰى مُحَمَّدٍ وَّهُوَ الْحَقُّ مِنْ رَّبِّهِمْ‌ۙ كَفَّرَ عَنْهُمْ سَيِّاٰتِهِمْ وَاَصْلَحَ بَالَهُمْ


3 : ஆனால், எவர்கள் ஈமான் கொண்டு, ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து, முஹம்மது மீது இறக்கி அருளப்பட்ட (வேதத்)தின் மீது - இது அவர்களுடைய இறைவனிடமிருந்து (வந்து)ள்ள உண்மையாக இருக்கிறது என்று நம்பிக்கை கொள்கிறார்களோ, அவர்களுடைய தீமைகளை அவர்களை விட்டும் போக்கி, அவர்களுடைய நிலையையும் சீராக்குகின்றான்.

(முஹம்மது_2) 


مُحَمَّدٌ رَّسُوْلُ اللّٰهِ‌ ؕ وَالَّذِيْنَ مَعَهٗۤ اَشِدَّآءُ عَلَى الْكُفَّارِ رُحَمَآءُ بَيْنَهُمْ ‌ تَرٰٮهُمْ رُكَّعًا سُجَّدًا يَّبْتَغُوْنَ فَضْلًا مِّنَ اللّٰهِ وَرِضْوَانًا‌سِيْمَاهُمْ فِىْ وُجُوْهِهِمْ مِّنْ اَثَرِ السُّجُوْدِ‌ ؕ ذٰ لِكَ مَثَلُهُمْ فِى التَّوْرٰٮةِ ۛ ۖۚ وَمَثَلُهُمْ فِى الْاِنْجِيْلِ ۛۚ كَزَرْعٍ اَخْرَجَ شَطْئَـهٗ فَاٰزَرَهٗ فَاسْتَغْلَظَ فَاسْتَوٰى عَلٰى سُوْقِهٖ يُعْجِبُ الزُّرَّاعَ لِيَـغِيْظَ بِهِمُ الْكُفَّارَ‌ ؕ وَعَدَ اللّٰهُ الَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ مِنْهُمْ مَّغْفِرَةً وَّاَجْرًا عَظِيْمًا


4 : முஹம்மது(ஸல்) அல்லாஹ்வின் தூதராகவே இருக்கின்றார்;

(அல் ஃபத்ஹ்_29)


அல்லாஹ் தனது திருமறையில் நபிமார்களை அழைக்கும் போது அவர்களின் பெயர்களைக் கொண்டு கூப்பிடுகிறான். 

ஆனால் நபி (ஸல்) அவர்களை அழைக்கும் போது அவர்களை தூதரே, நபியே என்று அழைக்கிறான்.


மா நபியின் பெயரைக் கொண்டு அல்லாஹ் ஓரு இடத்திலும் அழைக்கவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும்.. 


    ஒருவர் தனக்கு கீழ் உள்ளவரை அழைக்கும் போது அவரின் பெயரைச்சொல்லி அழைப்பதும் உண்டு. பெரும்பாலும் அவரிடம் இருக்கும் மிக உயர்ந்த தன்மைகளைச் சொல்லி அழைப்பதும் உண்டு. இப்படித்தான் நபி (ஸல்) அவர்களை அழைக்கும் போது அவர்களிடம் இருந்த மிக உயர்ந்த பண்பான நபித்துவத்தையும், தூதுத்துவத்தையும் சொல்லி அழைக்கிறான்.

    அத்தோடு மனிதர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அழைக்கும் போது சாதரண மக்களை அவர்களின் பெயரைச் சொல்லி அழைப்பது போன்று அழைக்க கூடாது என்றும் தடுத்திருக்கிறான்.



لَا تَجْعَلُوْا دُعَآءَ الرَّسُوْلِ بَيْنَكُمْ كَدُعَآءِ بَعْضِكُمْ بَعْضًا‌ ؕ قَدْ يَعْلَمُ اللّٰهُ الَّذِيْنَ يَتَسَلَّلُوْنَ مِنْكُمْ لِوَاذًا‌ ۚ فَلْيَحْذَرِ الَّذِيْنَ يُخَالِفُوْنَ عَنْ اَمْرِهٖۤ اَنْ تُصِيْبَهُمْ فِتْنَةٌ اَوْ يُصِيْبَهُمْ عَذَابٌ اَ لِيْمٌ


    உங்களில் ஒருவர் மற்றவரை அழைப்பதைப் போல் இத்தூதரை அழைக்காதீர்கள்! உங்களில் மறைந்து நழுவி விடுவோரை அல்லாஹ் நன்கறிவான். அவருடைய கட்டளைக்கு மாறு செய்வோர் தமக்குத் துன்பம் ஏற்படுவதையோ, துன்புறுத்தும் வேதனை ஏற்படுவதையோ அஞ்சிக் கொள்ளவும்.

அல் குர்ஆன் (24 : 63).


ஹம்து என்ற சொல்லின் உருமாற்றம் தான் முஹம்மது. 

ஹம்து என்றால் புகழ் என்று அர்த்தம். 

முஹம்மது என்ற சொல்லுக்கு இரண்டு அர்த்தங்களை பார்க்க முடியும். 


புகழப்பட்ட நபர் என்ற ஒரு அர்த்தம் இதற்கு உண்டு. 

திரு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் புகழ்ந்து பேசுவதற்கு காரணமாக இருக்கும் செயல்கள் மூலம் உலக மக்கள் அனைவரும் நபியை புகழ்கிறார்கள் என்று சுருக்கம். 


இந்த பெயரை வைப்பதற்கு தாயார் ஆமீனா பீவியிடம் ஏவப்பட்டது. 

பிரபல வரலாற்று அறிஞர் இப்னு அறிவிக்கிறார்கள்


ஆமீனா பீவிக்கு பிரசவம் நடந்த வேளையில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பாட்டனார் அப்துல் முத்தலிபிடம் ஒரு தூதரை அனுப்பி இவ்விதம் கூறினார்கள். 


ஓ அப்துல் முத்தலிப். 

உங்களுக்கு ஒரு குழந்தை பிறந்துள்ளது. 

சீக்கிரம் நீங்கள் இங்கே வாருங்கள்.. 


அப்துல் முத்தலிப் மிக்க மகிழ்ச்சி பெருத்து ஆமீனா பீவியை நோக்கி விரைந்தார்கள். 

குழந்தையைக் கண்டு ஆச்சரியத்தை வெளிப்படுத்தினார்கள். 

பிரசவ வேளையில் நடந்த அற்புத காரியங்கள் அனைத்தையும் ஆமீனா பீவி அப்துல் முத்தலிபிடம் சொல்லி ஆனந்தமடைந்தார்கள். 

குழந்தைக்கு வைக்க வேண்டிய பெயர் கூட ஆமீனா பீவியிடம் சொல்லப்பட்டு இருந்தது. 

அந்த அடிப்படையில் அப்துல் முத்தலிப் முஹம்மது என்ற பெயரை வைத்தார்கள்.

 

(ஸீறத்து இப்னு ஹிஷாம் 1/160) 


அப்துல் ஹகம் ரழியல்லாஹு அன்ஹு அறிவிப்பு செய்கிறார்கள்.


திருநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிறந்த ஏழாம் தினம் பாட்டனார் அப்துல் முத்தலிப் ஜனங்களை வீட்டிற்கு விருந்துக்கு அழைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். 

அனைவரும் உணவு அருந்திய பின்னர் கேட்டனர்


ஓ அப்துல் முத்தலிப்

தாங்கள் குழந்தைக்கு என்ன பெயர் சூட்டினீர்கள்.. 


அப்துல் முத்தலிப். 

முஹம்மது என்று பதிலுரைத்தார். 


முஹம்மதா..? 

உங்களுடைய குடும்பத்தில் யாருக்கும் இல்லாத பெயர் அல்லவா இது..? 

என்று ஆச்சரியத்துடன் அவர்கள் கேட்டனர்..



ஆமாம்.... 

வான பூமியிலுள்ளவர்கள் இந்த குழந்தையின் பெயரை சொல்வதின் மூலம் தன்னை புகழ்த்தப்படுவதற்க்காக இந்த பெயரை சூட்டினேன் என அப்துல் முத்தலிப் விளக்கம் அளித்தார்கள்.. 


அதிகமான அளவில் அல்லாஹ்வை புகழும் நபர் என்ற ஒரு அர்த்தமும் இந்த பெயருக்கு உள்ளது. 

உலகில் மிக அதிகம் அல்லாஹ்வை புகழ்த்திய, ஸ்துக்கிற நபர் நாயகத்தை தவிர வேறு யாராவது உண்டா..?


    முஸ்லிமும் முஹம்மதும்.

________ 


முஸ்லிமல்லாதவர் இஸ்லாத்தில் நுழையும் போது இரண்டு ஷஹாதத் கலிமா மனதால் உறுதி செய்து நாவால் மொழிய வேண்டும். 


لا اله الا الله محمد الرسول الله.

 

என்பதுதான் ஷஹாதத் கலிமா. 

அல்லாஹ்விலுள்ள நம்பிக்கையும், தூதரிலுள்ள 

நம்பிக்கையும் இதன் பொருள். 

இந்த ஷஹாதத் கலிமா விலும் நாயகத்தின் பெயரான முஹம்மத் என்ற பெயர் சொல்லப்பட்டிருப்பது மிகவும் கவனிக்கத்தக்கது. 

இங்கே முஹம்மத் என்ற பெயருக்கு பதிலாக வேறு பெயர்களை மொழிந்தால் அது ஷஹாதத் கலிமாவாக ஏற்கபடாது என ஃபிக்ஹ் நூற்களில் பார்க்க முடியும்.. 


முஹம்மத் என்ற பெயருக்கு மற்ற பெயர்களை விட சிறப்புகள் உண்டு என்பதை இதிலிருந்து புரிந்து கொள்ள முடியும்.. 


அத்தஹிய்யாத்தும் முஹம்மதும்.. 

________


தொழுகையின் ஃபர்ளுகளில் உட்பட்டது தான் அத்தஹிய்யாத். 

இதன் எழுத்துக்களை கவனமாக உச்சரித்தும்,

தவறுதல் இல்லாமல் சொன்னால் மட்டுமே

தொழுகை ஏற்றுக் கொள்ளப்படும். 

அத்தஹிய்யாத்திலும் ஷஹாதத் கலிமாவின் வசனங்கள் இருக்கிறது. 

இங்கேயும் முஹம்மத் என்ற பெயரைத்தான் கொண்டு வரப்பட்டுள்ளது. 

இதிலும் முஹம்மத் என்ற பெயருக்கு பதிலாக மற்ற பெயர்களை பயன்படுத்தினால் அத்தஹிய்யாத் சரியாகாது என்று இமாம் நவவி ரஹ்மத்துல்லாஹ் கூறியுள்ளார்கள்.. 


        அர்ஷும்_ முஹம்மதும்.. 

___________


அல்லாஹ்வின் படைப்புகளில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு படைப்பு தான் அர்ஷ்

அர்ஷைப் பற்றி குர்ஆனில் பல இடங்களில் கூறப்பட்டுள்ளது. 

குர்ஆன் 25 தடவை சொன்னதில் ஒரு வசனம் இப்படி இருக்கிறது.. 


அர்ஷின் மேல் அல்லாஹ் மற்றும் திருத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆகியோர் நாமம் பொறிக்கப்பட்டிருப்பதாக இமாம் ஹாகீம் ரழியல்லாஹு அன்ஹு மற்றும் அறிவிப்பு செய்யும் ஹதீஸ்களில் பார்க்க முடியும்.. 

அதில் 

எழுதப்பட்டிருப்பதும் முஹம்மத் என்ற பெயராகும். 

மற்ற பெயர்கள் ஒன்றும் அதில் எழுதப்படவில்லை. 

இதுவும் முஹம்மத் என்ற பெயருக்கு இருக்கும் மகத்துவத்தை வெளிப்படுத்துகிறது. 

ஆதம் நபி அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு சில பிழைகள் ஏற்பட்ட போது அர்ஷின் மேல் எழுதப்பட்ட நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பெயரை முன்னிறுத்தி பிரார்த்தித்தார்கள் என்று அறிவிப்புகளில் பார்க்க முடியும்.. 


   ஆதம் நபியும் முஹம்மதும்... 

___________


முதல் மனிதனும், முதல் நபியும் ஆதம் நபி அலைஹிஸ்ஸலாம் அவர்களல்லவா..? 

சுவனத்தில் வைத்து தான் அவர்களை படைக்கப்பட்டது.. 

ஆதம் நபி அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு அல்லாஹ் பல்வேறு வெகுமதிகளை வழங்கியுள்ளான். 

அதனால் தான் மலக்குகள் அனைவரும் ஆதம் நபிக்கு சிரம் பணிந்ததும், இறைக் கட்டளையை அங்கீகரிக்காத ஷைத்தான் சுவனத்திலிருந்து வெளியேற்றப்பட்டதும்.


ஆதம் நபி அலைஹிஸ்ஸலாம் அவர்கள் சுவனத்தில் அபூ முஹம்மத் என்ற சிறப்பு பெயரில் அழைக்கப்பட்டார்கள். 

முஹம்மதின் தந்தை என்பதுதான் இதன் அர்த்தம். 

ஆதம் நபி அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு எண்ணிலடங்கா சந்ததியினர் இருந்தும் இந்த பெயரில் அழைப்பது மூலம் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மகத்துவமும் முஹம்மத் என்ற பெயரின் சிறப்பையும் புரிந்து கொள்ள முடியும். 


நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் திருப்பிறவி நிகழ்வதற்கு முன்னரே 

அவர்களின் முஹம்மத் என்ற பெயர் அறிவிக்கப்பட்டுவிட்டது என்பதை இதிலிருந்து புரிந்து கொள்ள இயலும். 

அல்லாஹ்வின் அறிவுறுத்தலின்படி தான் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு முஹம்மத் என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது..


தமிழில்:M. சிராஜுத்தீன்_அஹ்ஸனி.


பழைய கட்டுரைகள் வாசிக்க 👇🏻 கிளிக் செய்யவும்.

கட்டுரைகள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக